இடுகைகள்

அமிஷ் திரிபாதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்துத்துவாவிற்கு ஆதரவை திரட்டுகிற நூல்- நிலைத்த புகழ் இந்தியா - அமிஷ் திரிபாதி

படம்
  நிலைத்த புகழ் இந்தியா அமிஷ் திரிபாதி கட்டுரை நூல் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் தமிழில் மிஸ்டிக் ரைட் இருநூற்று பதினெட்டு பக்கங்களைக் கொண்ட நூலில் அமிஷ், வேதகால இந்தியாவை நவீன காலத்தில் நிதானமாக உருவாக்கவேண்டும் என நயந்து வேண்டியிருக்கிறார். வேதங்களை படிக்கவேண்டும், அதைப்பற்றி தற்பெருமை கொள்ள வேண்டும். மனு ஸ்மிருதிகள் காலத்திற்கேற்ற விதிகளை சட்டங்களை சொல்கின்றன. அதனால் அனைத்து ஸ்மிருதிகளும் தவறில்லை. தலித் மாணவர் ரோஹித் தற்கொலை செய்துகொள்ளப்பட தூண்டிய விவகாரம் பற்றிய கட்டுரையில், தலித்துகள் மட்டுமல்ல பெண்கள் கூட வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என அப்படியே தாவி வேறு மையப்பொருளுக்கு சென்று விடுகிறார். பின்னே யார் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்று சொன்னால் வீட்டுக்கு வருமானவரித்துறை சோதனைக்கு வருமே? அமிஷ், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தொன்மை உலகை தனது புனைவெழுத்தில் உருவாக்கினார். அவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு அதில் லாபம் சம்பாதித்தார். அதோடு நிற்காமல், புனைவாக எழுதியதை பலரையும் நம்ப வைக்க முயன்று வருகிறார். வெறும் எழுத்து மட்டுமல்ல, அரசியல் அதிகாரத்தையும் பெற இந்துத்துவ ஆதரவ...

தனது நண்பனைக் கொன்றதற்கு பழிவாங்க நாகர்களை தேடி பயணிக்கும் சிவன்! - நாகர்களின் ரகசியம் - சிவா முத்தொகுதி 2

படம்
  நாகர்களின் ரகசியம் அமிஷ் திரிபாதி பவித்ரா ஸ்ரீனிவாசன் வெஸ்ட்லேண்ட் அமிஷ் திரிபாதி குணாக்களின் பிரதிநிதியான சிவா, நீலகண்டராக மெலூகா நாட்டினரால் வணங்கப்படுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு அவர் செய்யும் செயல்பாடுகளை விளக்க கோவிலில் வாசுதேவர்கள் உதவுகின்றனர். இவர்கள் சிவாவின் மனதில் எழும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்லும் வல்லமை பெற்றவர்கள். இந்த நேரத்தில் ப்ரஹஸ்பதி என்ற ஞானி ஒருவரை சிவா சந்திக்கிறார். இவர்தான் மந்த்ரமலை என்ற இடத்தில் சோமரஸத்தை ஆய்வு செய்து தயாரிக்கிறார். அதை மேம்படுத்த முயன்றுவருகிறார்.  சதியை மணம் செய்துகொள்ள சிவன் விரும்புகிறார். இதற்கான வழிமுறையை வாசுதேவர் தான் சொல்லித் தருகிறார். அதன்படி சிவா சதியின் மனத்தை வெல்கிறார். திருமணம் நடைபெறுகிறது. விகர்மாவான சதியை மணந்துகொள்ள மெலூகாவில் உள்ள விகர்மா சட்டத்தை மாற்றுகிறார். சட்டத்தை எப்போதும் மீறாத சதி, காதல் வந்தபிறகு அவளால் சிவனை தவிர்க்க முடியாமல் போகிறது.  இந்த நூலில் முக்கியமான விஷயம் நாகர்கள் யார் என்பதுதான். நாகர்களை மெலூகர்கள், ஸ்த்பவ நாட்டைச் சேர்ந்த மக்கள், காசி மக்கள் என பலரும் நாகர்களை வெறுக்கிறார்கள...
படம்
  சிவா முத்தொகுதி -  மெலூகாவின் அமரர்கள் அமிஷ் திரிபாதி தமிழில்  - பவித்ரா ஸ்ரீனிவாசன் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் ராமர் இறந்தபிறகு நடக்கும் கதை. அயோத்யா, தேவகிரி ஆகிய நாடுகளை சந்திரவம்சி, சூரியவம்சி ஆகியோர் ஆளுகின்றனர். இதில் சூரியவம்சி ஆண்மைய சமூகம். சந்திர வம்சி, பெண் மைய சமூகம். இவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அவதரிப்பவரே நீலகண்டவர். ஆனால் இவரை இரு இனத்தாரும்தான் கண்டுபிடிக்கவேண்டும். யாராவது ஒருவர் புறம் நீலகண்டர் நின்றால், மற்றொரு சமூகம் அழிந்துவிடும்.  இது  முத்தொகுதியின் அடிப்படையான கதை.  மெலூகாவின் அமரர்கள் கதை, மானசரோவரில் வாழும் ழங்குடி இனமான குணாக்களிலிருந்து சிவன் என்பவர் மெலூகர்களின் நகரிற்கு வருவதில் தொடங்குகிறது. குணாக்களை வழிநடத்தும் இனக்குழு தலைவன் சிவா. இவர்களை ஒழித்துக்கட்ட நினைக்கும் எதிரிகளை எதிர்த்து போரிட்டுக்கொண்டே மெலூகாவிற்கு வந்து சேர்கிறார்கள். பழங்குடிகள் என்றால் எப்படி, வேட்டையாடிய விலங்குகளின் தோலைத்தான் அணிந்திருக்கிறார்கள். மது, மரிஜூவானா ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இவர்களை மெலூகாவிற்கு நந்தி ராணுவ தளபதி அழைத்து வருகிறார். எத...

புராணம் உண்மையல்ல என்று கூறுவது சிறுமைத்தனமானது! - எழுத்தாளர் அமிஷ் திரிபாதி

படம்
  எழுத்தாளர் அமிஷ் திரிபாதி அமிஷ் திரிபாதி எழுத்தாளர்  லெஜண்ட்ஸ் ஆப் ராமாயணா - அமிஷ் திரிபாதி அமிஷ் தற்போது டிஸ்கவரி பிளஸ்சில் தி லெஜண்ட்ஸ் ஆப் ராமாயணா என்ற டாக் - சீரீஸை தொகுத்து வழங்கி வருகிறார்.  வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் மூடப்படப்போகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது. அவர்கள்தான் உங்களது நூல்களை பதிப்பித்தவர்கள் அல்லவா? எனது மனம் உடைந்து போய்விட்டது. வெஸ்ட்லேண்ட் நிறுவனம் மட்டுமே பிறர் பிரசுரிக்க மறுத்த எனது நாவல்களை பிரசுரித்த நிறுவனம். இம்மார்டல் என்ற வரிசை நூல்களை அவர்கள் தான் பிரசுரத்திற்கு ஏற்றனர். வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தின் இயக்குநர் கௌதம் பத்மநாபன் சிறந்த நபர் என இதற்கு எழுதிய எழுத்தாளர்கள் அனைவருமே கூறுவார்கள். அவரது அப்பாதான் இந்த தொழிலை உருவாகி நடத்தினார். அவரது மகனான கௌதம் மனம் எப்படிப்பட்ட வலியை அனுபவித்திருக்கும் என நினைத்துப் பாருங்கள்.  டாக் சீரிசில் ராமனுக்கு சகோதரி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது.. ஆனால் இதுபற்றி மக்கள் பலருக்கும் தெரியாதே? ராமாயணம் என்ற புராணத்திற்கு பல வெர்ஷன்கள் உண்டு. இந்த சீரிசின் நோக்கம் நகரத்திலு...

பருந்து காப்பாற்றும் குழந்தை போர்மங்கையாக மாறும் கதை! - சீதா - மிதிலையின் போர்மங்கை- அமிஷ்

படம்
  சீதா மிதிலையின் போர்மங்கை சீதா  மிதிலை போர்மங்கை அமிஷ் திரிபாதி வெஸ்லேண்ட் பதிப்பகம் தமிழில் - பவித்ரா ஸ்ரீனிவாசன் அமிஷ் எழுதிய ராமாயணம் நான்கு நூல்களைக் கொண்டது. நான்காவது நூல் இன்னும் வெளியாகவில்லை. ராமன், சீதை, ராவணன் இந்த மூன்று நூல்களுமே நிறைய இடங்களில் சந்தித்து மீள்கின்றன. அவற்றை கச்சிதமாக நூலில் பொருத்திப் பார்த்து செம்மை செய்திருக்கிறார்கள். மூன்று நூல்களுமே வாசிப்பில் சிறப்பாகவே இருக்கின்றன.  இப்போது நாம் சீதாவைப் பார்ப்போம். ராமன், சீதை, ராவணன் என்ற மூன்று நாவல்களின் அடிப்படையும் அவர்களின் பிறப்பு, அதற்குப் பிறகு நடைபெறும் சில சிக்கலான சம்பவங்கள் அவர்களை எப்படி வடிவமைக்கின்றன, அதன் பொருட்டு அவர்கள் நடந்துகொள்ளும் விதம் என செல்கிறது.  சீதாவைப் பொறுத்தவரை அவள் யார் என்பது மூன்றாவது நூலான ராவணனைப் படித்தால் தான் தெரியும். இதிலும் நிறைய திருப்பங்களை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். குறிப்பாக ஸமீச்சி பாத்திரம். இது ஆண்களின் மீதான வெறுப்பு கொண்ட பெண் தளபதி பாத்திரம். இவள், தானாகவே முன்வந்து சீதாவுக்கு உதவுகிறாள். சிறுவயதில் நடந்த விபத்தில் சேரியில் வாழும் போக்கிரிக...