இடுகைகள்

பகவான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எது எப்படியோ அப்படியே.... நடந்தது - மா ஆனந்த் ஷீலா -

படம்
         மா ஷீலா   இந்தியாவிலுள்ள புனேவில் பிறந்த ரஜ்னீஷ் எனும் ஓஷோவை யாரும் மறக்க முடியாது . அவர் 1981 இல் அமெரிக்காவின் ஒரேகான் நகருக்கு செல்ல விரும்பினார் . இதற்கு பின்னணியில் அவரது உதவியாளர் மா ஆனந்த் ஷீலா இருந்தார் . இவர் அங்கு ரஜ்னீஷ்புரத்தை உருவாக்கினார் . பின்னாளில் பல்வேறு புகார்கள் குவிய , ஷீலாவுக்கு சிறைதண்டனை கிடைத்தது . அதிலிருந்து மீண்டு தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார் . இவரைப் பற்றி நெட்பிளிக்சில் சர்ச்சிங் ஷீலா என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டு வருகிறது . இதற்காக 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கிறார் ஷீலா . அவரிடம் பேசினோம் . இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வரும் நோக்கம் என்ன ? இறைவனின் விருப்பம் என்று கூறலாம் . இதற்கு முன்னரும் நான் நிறைய முறை இந்தியாவுக்கு வர விரு்ம்பினேன் . குஜராத் அல்லது பரோடாவுக்கு செல்ல மட்டும் விரும்பவில்லை . எனது வேருக்கு நான் செல்ல விரும்பினேன் . இதை சொல்வது வேடிக்கையாக இருக்கலாம் . இதனை நீங்கள் ஆவணப்படத்தில் பார்ப்பீர்கள் . இங்கு சந்தித்த மனிதர்கள் சுவிட்சர்லாந்தில் சந்தித்த மனிதர்களை விட வேறுபட்

ஓஷோ சொன்னால் என் தலையைக் கூட வெட்டக்கொடுத்திருப்பேன்! -மா.ஆ.ஷீலா

படம்
ஓஷோ சொன்னால் தலையைக்கூட வெட்டக் கொடுத்திருப்பேன்! மா ஆனந்த் ஷீலா 1981 இல் ஓஷோ ஆசிரமம் பூனாவிலிருந்து எப்படி மாற்றப்பட்டது? அப்போது இந்தியாவில் அவசரகாலநிலை அமலில் இருந்தது. நாங்கள் பக்தர்களுக்காக நிலம் வாங்கும் முனைப்பில் இருந்தோம் அதற்கு அரசு தடைவிதித்து விட்டது. ஆசிரமத்தில் இருந்த வெளிநாட்டுக்காரர்கள், இந்தியர்கள் என அனைவரும் பகவானோடு தங்கியிருக்க விரும்பினார்கள். அவர்களைத் தங்க வைக்க ஆசிரமம் வேண்டுமே? தோட்டத்தின் பாதையில் கூட பல நாட்கள் நான் படுத்து தூங்கியுள்ளேன். காரணம் பகவானின் மீது கொண்ட அன்புதான். பின்னர் ஒரு நாள் பகவானிடம், இந்த நெருக்கடி நிலையைப் பொறுக்க முடியவில்லை. நாம் அமெரிக்காவுச்செல்வோம். அங்கு உங்களுக்கான இடத்தை தேடுவோம் என்றேன். அவரும் அந்த யோசனையை உடனே ஏற்றார். பாஸ்போர்ட் வாங்குவதற்கு ஏற்பாடு செய் என்றார். ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பிறகு ஓஷோ உங்களை வேசி என்று அழைத்தார் என்கிறார்கள். அப்போது உங்களுக்கு எப்படி இருந்தது? அப்போது எனக்கு ஏற்பட்ட சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் விலகியதால் ஏற்பட்ட விரக்தியால் அவர் அப்படி கூறியிருக்கலாம