இடுகைகள்

மக்களவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீதிபதி ரமணா தெரிவித்த கருத்து சரியானது அல்ல! - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

படம்
  மக்களவை சபாநாயகர்  ஓம் பிர்லா சபாநாயகராக உங்களது சாதனை என்ன? கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் விவகாரங்கள் பற்றிய விவாதங்கள்தான். நாட்டின் முக்கியமான விவாதங்களில் நிறைய மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசியிருக்கிறார்கள். 4648 விஷயங்களை மூன்று ஆண்டுகளில் விவாதித்திருக்கிறோம். மேலும் கேள்வி நேரத்தில் முதலில் நான்கு கேள்விகள் தான்கேட்க வேண்டும். அந்த எண்ணிக்கை கூடி ஆறாக உயர்ந்துள்ளது. சட்டம் 377 படி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான எதிர்வினைகளும் அதிகரித்துள்ளன.  மக்களவையில் அமைச்சர்கள் சரிவர பதில் சொல்லுவதில்லை என்று புகார்கள் கூறப்படுகின்றனவே? என்னளவில் மக்களவை உறுப்பினர் கூறும் பதில், கேள்வி கேட்பவரை திருப்தி செய்யவேண்டுமெனவே நினைக்கிறேன். அரசு செய்யும் செயல்பாட்டில் திருப்தி என்று தான் இதற்கு பொருளைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் உறுப்பினரை முறையாக சரியான பதிலை வழங்குங்கள் என்று அறிவுறுத்தலாம். நான் அப்படித்தான் செயல்படுகிறேன்.  முக்கியமான அரசு அமைப்பு என்ற பெருமையை நாடாளுமன்றம் இழந்துவருகிறதா? நான் உங்களுக்கு முன்னமே பதில் கூறிவிட்டேன். நாடாளுமன்றத்தில் உற்பத்தித்திறன் தொடர்ச்சியாக

விவாதம் நடத்தி மசோதாக்களை நடைமுறைப்படுத்தவே விரும்புகிறேன்! -ஓம் பிர்லா

படம்
ஓம் பிர்லா மக்களை சபாநாயகர் முன்னர் உங்களது பங்களிப்பால் மக்களைவில் உற்பத்தித்திறன் 100 சதவீதம் இருந்தது. ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் உற்பத்தித்திறன் 22 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. இதுபற்றி தங்கள் கருத்தென்ன? கடந்த ஐந்து முறையாக கூட்டத்தொடர் சிறப்பாக நடைபெற்றது. எம்பிக்கள் தங்களு டைய கடமையை சரியாக நிறைவேற்றினர். மக்களவை அதிக பிரச்னையின்றி நடைபெற்றது. சில சமயங்களில் அவை நள்ளிரவு வரை கூட நடைபெற்றது. அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றபோதுதான் பெகாசஸ் பிரச்னை வெடித்தது. இதனால் எதிர்க்கட்சிகள் இதுபற்றி விவாதிக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட அமளியை சரிசெய்யவே முடியவில்லை. நான் என்னளவில் இப்பிரச்னையை சரிசெய்ய முயன்றேன்.  நாடாளுமன்றம், ஜனநாயக முறையில் நாட்டின் பிரச்னையை விவாதிக்கும் இடமாக மக்கள் கருதிவருகின்றனர். இது நேர்மறையான பிம்பத்தைக் கொண்டுள்ளது. பிற ஜனநாயக அமைப்புகளுக்கு முன்னோடியாக உள்ளது.  இப்படி மக்களவை முடக்கப்பட யார் காரணம் என நினைக்கிறீர்கள்? நான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு யாரை காரணம் சொல்லுவது? ஆளும் அரசு, எதிர்கட்சிகள் சில விஷயங்களில் ஒற்றுமை கொண்டால் மட்டுமே சபை நடக்கும். இதி

அதிக மசோதாக்கள் தாக்கலாகியுள்ளது எனது சாதனை! - ஒம் பிர்லா மக்களவை சபாநாயகர்

படம்
                  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்றோடு நீங்கள் மக்களவை சபாநாயகராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது . உங்கள் அனுபவத்தை பகிருங்களேன் . எனது அனுபவம் நன்றாக இருக்கிறது . அவையில் பிரதமர் , உறுப்பினர்கள் என அனைவருமே ஜனநாயகத்தின் நம்பிக்கை வைத்து அதனை காப்பாற்றவே செயல்பட்டு வருகிறார்கள் . அவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் பேசுவதற்கு வா்ய்ப்பு கொடுக்க முயன்று வருகிறேன் . இரண்டு ஆண்டுகளில் 107 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன . மேலும் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளில் 90 சதவீதம் டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளது . முதலில் இதன் அளவு 40 சதவீதமாக இருந்தது . உறுப்பினர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளது . இது மக்களவையின் சிறப்பான செயல்பாட்டைக் காட்டுகிறது . புதிய உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தீர்கள் . இதுதொடர்பான உங்கள் அனுபவம் என்ன ? முதல் கூட்டத்தொடர் 27 நாட்கள் நடைபெற்றது . இதில் 35 மசோதாக்கள் நிறைவேறின . இதுதான் உற்பத்தி திறனுக்கு அடையாளம் . ஒருநாளில் ஜீரோ ஹவரில் 161 பேர் பேசினார்கள் . இது முக்கியமான சாதனையா

நிகழ்காலத்தின் வாளின் முனையில் நாம் நிற்கிறோம்! - ஜவாகர்லால் நேரு - வின்சென்ட் காபோ

படம்
          குறிக்கோள்களை பின்பற்றுதல் ! மக்களவையில் தீர்மானங்களை பற்றி பேசுவதற்கு நான் முன்னமே ஆறு வாரங்களுக்கு முன்னமே தயாராகத் தொடங்கிவிட்டேன் . இதனை உங்களிடம் பெருமையாக கூறிக்கொள்கிறேன் . இந்த தருணம் தன்னகத்தே தனித்துவத்தையும் எடையையும் ஒரு்ங்கே கொண்டுள்ளது . இந்த தீர்மானத்தின் காரணமாக நான் கூறும் வார்த்தைகள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம் . நான் இங்கு மக்களின் முன்னே நிற்பது அவர்களின் எதிர்காலத்தை சரியான முறையில் வடிவமைப்பதற்கான பணி காரணமாகத்தான் . நிகழ்காலத்தின் வாளின் முனை போன்ற முனையில் நாம் நிற்கிறோம் . பல கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக நான் இங்கு நிற்கிறேன் . நமது முன்னோர்கள் நாம் எதிர்பார்த்து நிற்கும் எதிர்காலத்தை உழைத்து பெறுவதற்கான ஆசிர்வாதத்தை வழங்குவார்கள் என நம்பலாம் . நான் கூறியுள்ள தீர்மானம் , மாநிலங்களிலுள்ள ஆட்சியாளர்களை குறிப்பிடவில்லை என்று புதுமையான் விமர்சனங்களும் , மறுப்புகளும் எழுந்துள்ளன . இதுபோன்ற மறுப்பான கருத்தை மாநில ஆட்சியாளரான ராஜா அல்லது மக்களின் பிரதிநிதிகள் எழுப்பலாம் . இவற்றைப் பற்றி மக்களவையில் கூட விவாதிக்கலாம் .