இடுகைகள்

திருச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவும் ஆனந்த்! - திருச்சி தன்னார்வத் தொண்டர் கதை!

படம்
  சூரியன் வானில் வெளிச்சம் காட்டியபோதும் கூட சிகே ஆனந்தின் பணி நிற்கவில்லை.  அவரது போன் அழைப்புகள் வந்துகொண்டு இருந்தன. மழைப்பொழிவால் நீரில் மூழ்கிய பல்வேறு இடங்களிலிருந்து உதவி கேட்டு அழைக்கும் அழைப்புகள்தான் அவை. படகு வேண்டும், உணவுக்காக காய்கறிகள் வேண்டும் என குரல்கள் ஏதேனும் உதவிகளை கோரியபடி இருந்தன.  அத்தனை அழைப்புகளையும் சமாளித்து காய்கறிகளை தேவையான உதவிகளை ஆனந்த் வழங்கிக்கொண்டே இருந்தார். முப்பது வயதான ஆனந்த், தன்னையொத்த உதவும் மனம் கொண்ட தன்னார்வலர்களின் குழுவை ஒருங்கிணைத்து மேற்சொன்ன அழைப்புகளுக்கு வரும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். வெள்ள பாதிப்பு பிரச்னை ஏற்பட்டபோது காலை ஏழுமணி தொடங்கி நள்ளிரவு வரை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது இக்குழு.  கருமேகங்கள் திருச்சி நகரை சூழ்ந்தபோது, லிங்கம் நகர், அருள் நகர், செல்வம் நகர், ராஜலட்சுமி நகர் ஆகிய இடங்களிலிருந்து உதவி கோரி அழைப்புகள் வந்தன. உடனே தன்னுடைய பகுதியை சேர்ந்த சில இளைஞர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றார் ஆனந்த். முதலில் முக்கொம்பு பகுதிக்கு போனவர், அங்கு மக்களுக்கு தேவையான தினசரி வாழ்க்கைக்க

தலைமுறைகளை காப்பாற்றும் கலை ஐடியா!- துணிக்கழிவுகளிலிருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் பெண்மணி!

படம்
  2017ஆம் ஆண்டு ஸ்ரீநிதி உமாநாதன் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்திற்கு சுற்றுப்பயணமாக சென்றார். போகும் வழியில் மேல காலகண்டர் கோட்டை அருகே நிறைய கழிவுகள் கிடப்பதைப் பார்த்தார். அவற்றில் பெரும்பாலானவை துணிக்கழிவுகள்தான்.  அப்போது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த 23 வயது பெண்தான் அவர். அப்போதே முடிவு செய்துவிட்டார். இனி பேஷன் டிசைனராக மாறினாலும் கூட கழிவுகளை முடிந்தளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என முடிவு செய்துகொண்டார். இப்போதுவரை துணிகளை மறுசுழற்சி செய்வது பற்றியும், சூழலுக்கு ஆபத்தில்லாமல் வாழ்வதும் பற்றியும் பிரசாரம் செய்.து வருகிறார்.  இரண்டாவது ஆண்டு படிப்பின்போது, ரீடெய்லர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதில் பயன்படுத்திய துணிவகைகளைப் பயன்படுத்தி பைகள், தலையணை உறைகள், ஸ்க்ரீன்கள், சிறு பைகள், கால் மிதியடிகள் என நிறைய பொருட்களை தயாரிக்கத் தொடங்கினார். மாற்றுத்திறனாளியான தனது சகோதரரிடமிருந்து, துணிகளை எப்படி கலைப்பொருளாக மாற்றவேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டார். பிறகு இப்படி தயாரித்த பொருட்களை திருச்சியில் உள்ள என்எஸ்பி சாலையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு