இடுகைகள்

சத்தீஸ்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காற்றிலெங்கும் மரணத்தின் வாசனை!

படம்
              காற்றிலெங்கும் மரணத்தின் வாசனை! சத்தீஸ் மாநிலத்திலுள்ள ராய்பூர் விமானநிலையம். இங்கு ஆதிவாசிகளின் கலையை பிறருக்கு உணர்த்தும் வண்ணம் சிலைகள், ஓவியங்கள் உள்ளன. ஆனால், நிஜத்தில் மாநிலத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் மீது மாநில, ஒன்றிய அரசுக்கு அக்கறை உள்ளதா என்றால் கிஞ்சித்தும் இல்லை என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு ஆதிவாசி மக்கள் காவல்துறை, மத்திய ரிசர்வ் படையினரால் தாக்கப்பட்டு, வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். நக்சலைட்டுகளுக்கும், அரசுக்குமான போர் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. எப்போதும்போல, பாதிக்கப்படுவது இருவருக்கும் இடையில் சிக்கியுள்ள மக்கள்தான். கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் முதல் பழங்குடி முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரில் பதவி ஏற்றார். அந்த நொடி முதலே நக்சலைட்டுகளின் மீதான தாக்குதல், ஆதிவாசி மக்களை கைது செய்யப்படுவது ஆகிய சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின. ஆபரேஷன் பிரகார் என்ற பெயரில் நக்சலைட்டுகளின் மீதான தாக்குதல் தீவிரமாகியுள்ளது. இதற்கிடையில் துணை முதல்வர் அமைதி பேச்சுவார்த்தை என்று வினோதமான சொல்லாடலை ஊடகங்கள...

நிலம், நீர், காடு நக்சலைட்டுகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல - விஜய் சர்மா, துணைமுதல்வர், சத்தீஸ்கர்

படம்
            நேர்காணல் விஜய் சர்மா, துணை முதல்வர், சத்தீஸ்கர் மாநிலம் பேச்சுவார்த்தை மூலம் நக்சலைட் பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று கூறியிருக்கிறீர்கள். அந்த முயற்சி எந்த நிலையில் உள்ளது? எதிர்தரப்பிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. அவர்கள் நேரடியாக சந்திக்க விரும்பவில்லை என்றால் வீடியோ அல்லது போன் அழைப்பு மூலம் பிரச்னைகளை விவாதிக்க நினைக்கிறேன். கூடுதலாக, சரணடைவது, மறுவாழ்வு ஆகிய திட்டங்கள் பற்றியும் பேச விரும்புகிறேன். இணையத்தில் க்யூஆர் கோட், கூகுள் ஃபார்ம்ஸ், மின்னஞ்சல் வழியாக சில எதிர்வினைகள் கிடைத்திருக்கின்றன. இவற்றை நக்சலைட்டுகள்தான் அனுப்பினார்களா என்று முழுமையாக கண்டறியமுடியவில்லை. குடிமை அமைப்புகள், மக்களிடமும் இதுபற்றி கருத்துக்களைக் கேட்டிருக்கிறோம். நக்சலைட்டுகள் தவிர்த்து, அவர்களது செயல்பாட்டால் வீடுகளை இழந்தவர்கள், காயமுற்றவர்கள், பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னை சிக்கலானது, கவனமாக புரிந்துகொள்ள முயலவேண்டும். இதில், சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் எங்களது கடமையாக உள்ளது. கடந்த ஆண்...

புரட்சி, அரச பயங்கரவாதம் என இரண்டுக்கும் இடையில் உயிர்பிழைக்கப் போராடும் ஆதிவாசிகள்!

படம்
  வாழும் பிணங்களாகிவிட்ட ஆதிவாசி மக்களின் கதை மரணத்தின் கதை ஆசுதோஷ் பரத்வாஜ் தமிழில் அரவிந்தன் காலச்சுவடு பக்கம் 333. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர், தண்டகாரண்யம் ஆகிய காட்டுப்பகுதியில் வாழும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை எப்படி, மரணத்தின் கதையாக மாறியது என்பதை நூல் விரிவாக விளக்குகிறது. இந்த நூல், அபுனைவு வகையைச் சேர்ந்தது. ஆனால் நூலை வாசிக்கும்போது அதை உணர முடியாது. புனைவு நூலின் மொழியில் அபுனைவு நூல் என புரிந்துகொள்ளுங்கள். தமிழில் அரவிந்தன் நூலை சிறப்புற மொழிபெயர்த்திருக்கிறார். ஆசுதோஷ் பரத்வாஜ், நேரடியாக களத்திற்கு சென்று செய்திக்கட்டுரைகளை எழுதி அனுப்பி பத்திரிகைக்கு அனுப்பியிருக்கிறார். அதோடு,  ஏராளமான வெளிநாட்டு எழுத்தாளர்களின் மேற்கோள்கள், நூல்களை சுட்டிக்காட்டி கட்டுரை நூலாக தொகுத்து எழுதியிருக்கிறார். அதுவே நூலுக்கு தனித்த தன்மையை அளிக்கிறது. 2000 தொடங்கி 2021 வரை ஆதிவாசிகளின் கிராமங்களுக்கு சென்று வந்த அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். இவர் ஒரு பத்திரிகையாளர் என்றாலும் அதில் நடைபெறும் செயல்கள், துரோகங்கள், நக்சல் பெண்களை இழிவுபடுத்தும் செய்திகள், கிராமத்து செய்தியாளர்...

இரண்டாவது அலையை கணிக்க தவறியது மத்திய அரசின் குற்றம்தான்! - பூபேந்திரசிங் பாதல் -சத்தீஸ்கர் முதல்வர்

படம்
              பூபேந்திரசிங் பாதல் சத்தீஸ்கர் முதல்வர் - காங்கிரஸ் உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு உள்ளதா ? நாங்கள் இரண்டு நாட்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம் . 45 முதல் 60 வயது கொண்ட 63 சதவீத மக்களுக்கு நாங்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளோம் . அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வயது வரம்பை தளர்த்த மத்திய அரசிடம் கூறியுள்ளோம் . கொரோனா நோய்த்தொற்று வயது வரம்பின்றி அனைத்து மக்களையும் பாதித்துள்ளது . தற்போது உள்ள இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே வைத்து மக்களை பாதுகாக்க முடியாது . முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் கூறியபடி வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதோடு , உ்ள்நாட்டு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யவேண்டும் . அப்போதுதான் தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் வழங்க முடியும் . மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தைக்கூட நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் . அவருடைய கடிதத்திற்கு ஹர்ஷ்வர்த்தன் காங்கிரஸ் தலைவர்கள் , முதல்வர்களை தாக்கி பதில் கூறியிருக்கிறாரே ? இங்கே பாருங்கள் . ஹர்ஷ்வர்த்தன் மரியாதைக்...

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களை கொன்ற மாவோயிஸ்ட் தலைவர்! - ஹிட்மா

படம்
                  மாவோயிஸ்ட் தலைவர் ஹிட்மா சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர் . இதில் மூளையாக செயல்பட்டவர் கமாண்டர் ஹிட்மா என்று அறிய வந்துள்ளது . இவரது ராணுவப்படைதான் அரசின் படைகளை தாக்கி வீழ்த்தியுள்ளது . ஹிட்மா , வெளியே தெரியாத கமாண்டர் தலைவராக மக்கள் விடுதலை கொரில்லா படைபிரிவை நடத்தி வந்தவர் ஆவார் . தண்டகாரண்யா சிறப்பு பகுதி அமைப்பின் உறுப்பினருமாவார் . தெற்கு பஸ்தர் , பிஜாபூர் , சுக்மா ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்ட் அமைப்பு இயங்கி வருகிறது . 2010 இல் சிஆர்பிஎப் படைப்பிரிவைச் சேர்ந்த 76 வீரர்களைக் கொன்றது . 2013 இல் மாநில காங்கிரஸ் தலைவரை கொன்றது , பேஜி , புர்காபால் , மின்பா , டாரம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது மாவோயிஸ்ட் அமைப்பு . இவரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 25 லட்சம் பரிசு கொடுப்பதாக சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது . பிற மாநில அரசு அமைப்புகள் ரூ .20 லட்சம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர் . ஹிட்மா என்று சுருக்கமாக குறிப்பிடப்படும்...

முதலைகளைப் பாதுகாக்கும் பூசாரி!- முதலையால் ஒற்றைக்கையை இழந்தும் குறையாத அன்பு!

படம்
                  முதலைகளைப் பாதுகாக்கும் பூசாரி ! சத்தீஸ்கர் மாநிலத்தில் கோட்மி சோனார் எனும் குளத்தில் உள்ள மக்கர் வகை முதலைகளை பாதுகாக்கும் பணியை 2006 ஆம் ஆண்டிலிருந்து செய்துவருகிறார் . சீத்தாராம் தாஸ் என்பதுதான் அவரின் பெயர் . ஆனால் கிராமத்தினர் ஒற்றைக்கை இல்லாத அவரின் பணிகளைப் பார்த்து பாபாஜி என்று அழைக்கின்றனர் . துன்பம் செய்தவருக்கும் நன்மை நினைத்து நல்லது செய்யவேண்டும் என்று சொல்வார்கள் . திருக்குறளிலும் கூட இப்படி சொல்லப்படுவதுண்டு . உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்தால் அவரை நாம் சந்திக்க நேர்ந்தால் எப்படியிருக்கும் ? பாபாஜியும் அப்படித்தான் . 2006 ஆம் ஆண்டு குளத்திலுள்ள முதலை முட்டைகளை காப்பாற்ற முயன்றார் . இதில் கோபமுற்ற பெண் முதலை அவரது இடதுகையை கடித்துவிட்டது . முற்றாக சேதமடைந்த கையை அகற்ற வேண்டியதாகிவிட்டது . அப்படி ஒரு கொடுமை நடந்தபோதும் பாபாஜிக்கு முதலைகள் மீது கருணை குறையவில்லை . இப்போதும் அவர் காப்பாற்ற நினைத்த மூன்று முதலைகளை வந்து பார்த்துவிட்டு செல்கிறார் . தினசரி மூன்று முறை அதனை அழைக்கிறார் . அவையும் யா...