இடுகைகள்

நிலக்கரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு

படம்
  காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு காலநிலை மாற்றம் என்பதைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் ஒருவிதமாகவும், வளரும் நாடுகள் ஒருவிதமாகவும் நடந்துகொள்கின்றன. வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்ற விதிகளை பயன்படுத்தி வளரும் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயல்கின்றன. வளரும் நாடுகள், பணக்கார நாடுகளின் விதிகள் தங்களுக்கு பொருந்தாது. நாங்கள் இன்னும் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்று கூறி பசுமை விதிகளை அமல் செய்ய மறுக்கின்றன. எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை அமல்படுத்த குறிப்பிட்ட தொகையை வளர்ந்த நாடுகள் தர வேண்டியிருக்கும். இதற்கான அடித்தளத்தை காப்29, அசர்பைஜானில் நடக்கும் மாநாடு அமைக்கும் என நம்பலாம்.  துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற காலநிலை மாநாட்டில், 2030ஆம் ஆண்டிற்குள் தூய ஆற்றல் வளங்களை மூன்று மடங்கு வளர்ச்சி கொண்டதாக மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நடப்பு ஆண்டில், இலக்கு என்பது நாடுகள் அளிக்க வேண்டிய நிதியாக இருக்கும். இதை என்சிக்யூஜி என சுருக்கமாக குறிப்பிடுகிறார்கள். புதிய ஒருங்கிணைந்த கூட்டு இலக்கு என தமிழில் கூறலாம்.  2025ஆம் ஆண்டு தொடங்கி வளர்ந்த நாடுகள், வளரும்

பேராசை பூதம் 2 - ஹிண்டன்பர்க் அறிக்கையின் தமிழாக்கம் - மின்னூல் வெளியீடு

படம்
  இன்று இந்தியாவில் மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை  பலம் வாய்ந்த தொழில் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. அரசின் கொள்கை மாற்றங்களை பெருநிறுவனங்கள் முடிவு செய்து அறிவிக்கச்செய்து பயன் பெறுகின்றன. நாட்டின் பிரதமர் தொழில்நிறுவனங்களோடு நெருக்கமாக இருப்பது, அணுக்க முதலாளித்துவம் என்று கூறப்படுகிறது. இப்படி இருப்பதால் அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நன்மை உண்டு. வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது. தொழிலதிபரின் வாராக்கடன்களுக்கு, வரிச்சுமையை சுமக்க வேண்டியது மக்கள்தான்.  அதானி குழுமம், பல்லாண்டுகளாக திட்டமிட்டு செய்த மோசடிகளை பேராசை பூதம் 3 நூல் விவரிக்கிறது. இதைப் படிக்கும்போது இப்படியெல்லாம் யோசித்து நிதி மோசடிகளை செய்ய முடியுமா என பிரமித்து அதிர்ச்சியடைவீர்கள்.  அந்தளவு நேர்த்தியாக திட்டமிட்டு இந்தியாவை மட்டுமல்ல வரி கட்டும் அத்தனை குடிமக்களையும் ஏமாற்றியுள்ளது அதானி குழுமம். மோசடிக்கு கௌதம் அதானியின் மொத்த உறுப்பினர்களுமே காய்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.   பங்குச்சந்தை நிதியை மடைமாற்றி தனது இஷ்டம்போல நிறுவனத்தின் மதிப்பை மாற்றிக் காண்பித்து அதை அடையாளம் கண

16. நிலக்கரி மதிப்பை உயர்த்திக்காட்டி, மின்கட்டணத்தை ஏற்றிய அதானி - மோசடி மன்னன் அதானி

படம்
  மின் நிறுவனங்களின்கொண்டாட்டம்  அரசும், அதானி குழுமமும் விசாரணையின்போது அரசு... அதானி குழுமம் மீது போடப்பட்ட வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் வழக்கு விசாரணை, அந்த அமைப்பின் அதிகாரிகளாலேயே நிறுத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசாரணையில் கிடைத்த உண்மையான ஆதாரங்களை புறக்கணித்து அதானி குழுமத்தின் மின் உற்பத்தி சார்ந்த பொருட்களை வாங்கியதில் எந்த மோசடியுமில்லை என கூறப்பட்டது. முழுமையான ஆதாரம் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறினர். ‘’இஐஎஃப், ஏபிஆர்எல் ஆகிய நிறுவனங்கள் வினோத் அதானிக்கு தொடர்புடையவை என்றாலும் அதன் மதிப்பு, விலை என்பது பாதிக்கப்படவில்லை. பொருட்களின் விலை மதிப்பு ஏற்றம் பற்றிய குற்றச்சாட்டு எழுந்தாலும் அது உண்மையல்ல’’ (ப.278) என்று தீர்ப்பில் கூறப்பட்டது. வழக்கில் தொடர்புடைய, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். (ப.279) வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் மற்றொரு பிரிவு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். ஆனால் மேல்முறையீடு அமைப்பான செஸ்டாட், அதானி குழுமத்திற்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்று தீர்மானமாக கூறிவிட்டது. (ப.87)  

பசுமை ஸ்டீல் உற்பத்தியை தொடங்கிய ஸ்வீடன்!

படம்
  சோதனை முறையில் பசுமை ஸ்டீலை உருவாக்கும் ஸ்வீடன்! ஸ்டீல் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடு சீனா. பெருமளவில் நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்புத்தாதுவைப் பிரித்தெடுத்து ஸ்டீல் உற்பத்தி செய்துவருகிறது. இந்த முறையில் சூழலை மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்சைடு அதிகளவில் வெளியாகிறது. இதைத் தடுக்க ஸ்வீடனில் ஹைபிரிட் (HYBRIT) எனும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில், கார்பன் வெளியீடே இன்றி ஸ்டீல் உற்பத்தி செய்ய முடியும்.   எஸ்எஸ்ஏபி (SSAB) என்ற ஸ்வீடன் நாட்டு தனியார் நிறுவனம், அரசின்  சுரங்கநிறுவனம் (LKAB), அரசு மின்சார நிறுவனமான வான்டர்ஃபால் ஆகியவற்றுடன் கூட்டாக இணைந்து, மாசில்லாத ஸ்டீல் தயாரிப்பை செயல்படுத்துகிறது. இப்படி ஸ்டீலை, உருவாக்குவது சோதனை முறை தான். இம்முறை வெற்றியடைந்தால் தொழிற்சாலை விரிவுபடுத்தப்பட்டு பெரிதாக அமையும்.  பொதுவாக, இரும்புத்தாதுவைப் பிரித்தெடுக்க கோக் (Coke) எனும் கரிம எரிபொருளைப் பயன்படுத்துகின்றனர். புதிய ஹைபிரிட் முறையில் நீரிலிருந்து ஹைட்ரஜனைத் தனியாகப் பிரித்தெடுத்து கரிம எரிபொருளுக்கு பதிலாகப் பயன்படுத்துகின்றனர். ஹைட்ரஜனை 871 டிகிரி செல்சியசிற்கு, இரும்புத்த

மரம் நடுவது கார்பனைக் குறைக்காது - புதிய ஆய்வு என்ன சொல்கிறது?

படம்
மரம் நடுவது மட்டுமே தீர்வல்ல! செய்தி: வெப்பமயமாதல் விளைவால் 2050 ஆம் ஆண்டு 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மரக்கன்றுகள் நடுவதைக் கடந்து கார்பன் அளவைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கத் தொடங்கியுள்ளனர்.  நீராதாரம் பெருகவும், வெப்பநிலை பாதிப்பைக் குறைக்கவும் சூழலியலாளர்கள் சொல்லும் ஒரே தீர்வு, மரக்கன்றுகளை நடுவதுதான். ஆனால் உலகில் வெளியாகும் டன் கணக்கிலான கார்பன் வெளியீட்டுக்கு மரக்கன்றுகள் நடுவது தீர்வாகுமா என ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். காரணம், வெப்பமயமாதலின் விளைவாக ஐரோப்பாவில் வெப்ப அலை பாதிப்புகள் தொடங்கிவிட்டன. விவசாயம், விமானத்துறை, இரும்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தி ஆகியவை மூலமாக வெளியேறும் கார்பன் வெளியீடு அதிகம். இதனைக் குறைந்த விலையில் சமாளிக்க மரங்கள் உதவலாம். இதற்கு மாற்றாக சூழலியலாளர்கள் சொல்லும் யோசனை, மரங்களை வளர்த்து, வெட்டி மின்சாரத்திற்கு பயன்படுத்தலாம். பின்னர், அதிலிருந்து வரும் கார்பனை சேகரித்துவைக்கும் இம்முறைக்கு பயோஎனர்ஜி கார்பன் கேப்சர் அண்ட் ஸ்டோரேஜ் (BECCS) என்று