இடுகைகள்

யோகி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளின் இறப்பை மறைத்தவர்களுக்கு பரிசுகள் கிடைத்தன! - மருத்துவர் காஃபீல் கான்

படம்
  மருத்துவர் காஃபீல் கான் மருத்துவர் காஃபீல் கான் உத்தரப் பிரதேசத்தில் பணிபுரிந்த மருத்துவர். ஆக்சிஜன் இல்லாமல் தடுமாறிய குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்தார். இதற்காக சிலிண்டர்களையும் சொந்தசெலவில் ஏற்பாடு செய்தார். இதனால் மக்களின் நாயகன் ஆனார். ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் இவர் மீது குற்றம் சுமத்தி சிறையில் தள்ளினார். இவரது குடும்பத்தினரையும் காவல்துறை மிரட்டத் தொடங்கியது. தற்போது சிறைவாசம் மீண்டு வந்தவர், சம்பவம் பற்றிய நூலை எழுதியுள்ளார்.  கோரக்பூர் சம்பவம் எப்படி நடந்தது? ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் அங்கு குழந்தைகள் இறந்துகொண்டே இருப்பது இயல்பானது என்கிறார்களே? புஷ்பா சேல்ஸ் என்ற நிறுவனம், முதல்வர், செயலாளர் ஆகியோருக்கு பதினான்கு கடிதங்களை எழுதியது. ஆனால் அவர்கள் யாருமே அதனை கண்டுகொள்ளவில்லை. பணத்தை சரியான நேரத்திற்கு கொடுத்திருந்தால் இப்படியொரு பிரச்னை வந்திருக்காது.  2017ஆம் ஆண்டு ஆகஸ்டில் பணம் பட்டுவாடா ஆனது. அதே ஆண்டில்தான் உ.பி மாநில அரசு சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடை 50 சதவீதமாக குறைத்தது.  குழந்தைகள் ஆண்டுதோறும் பலியாகிறார்கள் என்பதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்க ம

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தாலே குற்றங்கள் குறைந்துவிடும்! - ஆனந்த்பென் படேல், உத்தரப்பிரதேச மாநில ஆளுநர்

படம்
                    ஆனந்த்பென் படேல் உத்தரப்பிரதேச ஆளுநர் நீங்கள் பதவியேற்றபிறகு பல்கலைக்கழக கல்வி தொடர்பான உறுதியான முடிவுகளை எடுத்திருக்கிறீர்கள் . பெருந்தொற்று தொடங்கியபிறகு அனைத்து விஷயங்களும் மாறியுள்ளன என்று கூறலாமா ? நான் பொறுப்பேற்ற பிறகு பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி விசாரணை செய்தேன் . 2014 ஆம் ஆண்டு தொடங்கி 260 கோப்புகள் தேங்கி கிடப்பதை அறிந்தேன் . அவற்றை சரிசெய்யத்தொடங்கியுள்ளேன் . நாம் எதிர்பார்த்த முடிவுகள் இன்னும் இந்த விவகாரத்தில் கிடைக்கவில்லை . பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு இம்முறையில் முடிவுக்கு வந்துள்ளது . நீங்கள் பெருந்தொற்று தொடங்கியபிறகு நிறைய இடங்களை சென்று பார்வையிட்டு உள்ளீர்கள் . சட்டம் ஒழுங்கு பற்றி உங்கள் பார்வை என்ன ? நான் கிராமத்திலுள்ள பெண்களை விசிட்டின் போது சந்தித்தேன் . முன்னர் இருந்த நிலைக்கு இப்போது சட்டம் ஒழுங்கு பரவாயில்லை என்று கூறுகிறார்கள் . தொழில்துறைகளும் நிறைய வாய்ப்புகளை வழங்குவதாகும் தெரியவந்துள்ளது . பெண்களுக்கு எதிராக நிறைய குற்றங்கள் நடைபெற்று வருகிறதே ? இந்த சமூகத்தில்

சிறுமூளை கொண்டவர்கள்தான் வரலாற்றை திருத்தி எழுத முயல்கிறார்கள்! - உ.பி. மகாராஷ்ர பாடநூல்கள் மாற்றம்

படம்
                 பாடத்திட்டங்களை மாற்றினால் உலகம் மாறிவிடுமா? நவீன கால இந்தியாவில் ஆட்சியாளர்கள் தம்மை சர்வாதிகாரிகளாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள். தாங்கள் மனதில் நினைப்பதை பிறருக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் வரலாறாக்க நினைக்கிறார்கள். இதன் பொருட்டுதான் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பற்றி பாடங்கள் பாடநூல்களிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எதிர்கால மாணவர்களுக்கு பல்வேறு வரலாற்று தகவல்கள் மறைக்கப்படுகின்றன. அவர்கள் தொன்மை இந்தியாவில் என்ன நடந்தது என்று கூட தெரியாமலே படித்து பட்டம் பெறும் ஆபத்து உள்ளது. அரசியல்வாதிகள் தங்களை பிரபலப்படுத்தி, பிரமாண்டப்படுத்திக் காட்டுவதற்காக இதுபோன்ற பாடங்களை நீக்கி, வரலாற்றைத் தூய்மைப்படுத்தும் வேலைகளை செய்கிறார்கள். கடந்த மாதம் மகாராஷ்டிரா அரசு கல்வித்துறை, வரலாற்று நூல்களிலிருந்து இஸ்லாமிய மன்னர்களைப் பற்றிய செய்தியை நீக்கிவிட்டது. உத்தரப்பிரதேச அரசு இதே விஷயத்தை இப்போது செய்துவருகிறது. இப்படி இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி நீக்குவதால், இஸ்லாமியர்களுக்க் எந்த இகழ்ச்சியும் கிடையாது. வரலாற்றைப் படிப்