இடுகைகள்

ஆயுள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்கள்தொகை பெருக்கமே, கார்பன் வெளியீட்டுக்கு முக்கியக் காரணம்!

படம்
  தொழில்துறை வளர்ச்சி பெறுவதற்கு முன்னர், மக்கள் கிராமத்தில் உள்ள தங்கள் வீடுகளில் உழைத்து வந்தார்கள். பின்னாளில், தொழிற்சாலைகள் நகரத்தில் உருவாகின. அதைச் சுற்றி பல்வேறு உபதொழில்கள் தொடங்கப்பட்டன. தொழிலாளிகள் எந்திரம் போல அதிக நேரம் வேலை வாங்கப்பட்டனர். அவர்கள் வேலை செய்யும் இடத்தில் போதிய வசதிகளும் இல்லாமல் இருந்தன. தொழில்துறை வளர்ச்சி அதிகரித்தபோது வளிமண்டலத்தில் 48 சதவீத கார்பன் டை ஆக்சைடு கலந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வேளாண்மை பொருளாதாரத்தில் இருந்து பெரும் உற்பத்தி சார்ந்த தொழில்துறைக்கு மாறினர். இந்த தொழில்புரட்சி மெல்ல பிற நாடுகளுக்கும் பரவியது. இரும்பு, ஸ்டீல் ஆகியவற்றைத் தயாரிக்க அதிகளவு நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. பொருட்களை கொண்டு செல்ல உதவி நீராவி எஞ்சினுக்கு முக்கிய ஆதாரமே நிலக்கரிதான். அன்று உலக நாடுகள் ஆற்றல் தேவைக்கு நம்பியிருந்த ஒரே பொருள், நிலக்கரிதான். தொழில்புரட்சி மேற்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுத் தந்தன. அதேசமயம் அவை நிலம், நீர், காற்றை   மாசுபடுத்தவும் செய்தன. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, நாட்டின்

இறவாசக்தி பெற்ற முனிவர்களிடம் பெற்ற அதீத சக்தியால் கொலைவேட்கை கொள்ளும் நாயகன் - பிளேட் ஆப் விண்ட் அண்ட் தண்டர்

படம்
  தி   பிளேட் ஆப் விண்ட் அண்ட் தண்டர் (மங்கா காமிக்ஸ்) தொடர்கிறது… மங்கா ஃபாக்ஸ்   வலைத்தளம் முயி ஒரு அனாதை. அவன் அம்மாவைப் பார்த்ததில்லை. ஊரில் பிச்சை எடுத்து வாழ்கிறான். ஊரிலுள்ளோர் அவனை அடித்து உதைப்பது, தூங்கும் இடத்தை தீ வைத்து எரிப்பது என அவமானப்படுத்துகிறார்கள். கொடூரமாக நடந்துகொள்கிறார்கள். ஆதரவற்றவன் என்பதால் அவமானத்திற்கு பஞ்சமில்லை.   காட்டில் வேட்டையாடச் செல்பவர்களுக்கு தூண்டில் மீன் போல இரையை பொறியில் சிக்க வைக்கும் வேலையை செய்து வருகிறான். அதில் கிடைக்கும் காசுதான் அவன் சோற்றுக்கு உதவுகிறது. அப்படி ஒரு நாள் புலியை பிடிக்கப் போகும்போது ஏற்படும் விபத்தில் புலியின் தாக்குதலில் வேட்டைக்காரர்கள் அனைவரும் பலியாகிவிடுகிறார்கள். இறுதியில் முயியின் தாக்குதலில் புலி இறந்துவிடுகிறது. ஆனால், தாக்குதலின் போது, புலியால் படுகாயமடையும் முயி சாவின் விளிம்பில் இருக்கிறான். அவனைப் பார்த்து இரக்கப்படும் இறவாசக்தி பெற்ற முனிவர்கள் தங்களின் முன்னூறு ஆண்டு தற்காப்பு கலையை சக்தியை அவனுக்கு கொடுத்துவிட்டு உடல் நலிவுற்று இறக்கிறார்கள். உடல் பலவீனமாக இருக்கும் நிலையில் அதீத சக்தி கிடைத்

ஆயுளை நீட்டிக்க நாய்கள் உதவும்!

படம்
            ஆயுளை நீட்டிக்க நாய்கள் உதவும் ! சாகாவரம் என்ற வார்த்தையின் மீது ஆசைப்படாதவர்கள் யார் ? இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் . நோயின்றி இருபது ஆண்டுகள் வாழலாம் என ஒரு மாத்திரையை டிவி சேனலில் விளம்பரம் செய்தால் நொடியில் அவை விற்றுத தீர்ந்துவிடும் . காரணம் , உயிர்வாழும் ஆசைதான் . தற்போது , ஆயுளை நீட்டிப்பதற்கான ஆராய்ச்சியில் மனிதர்களோடு நெருக்கமாக வாழும் நாய்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் . பல்லாயிரம் ஆண்டுகளாக நாய் இனம் , நம்முடன் இணைந்து வாழ்ந்து வருகின்றன . அவற்றுக்கு வயதாவது மனிதர்களை விட வேகமாக நடக்கிறது . இந்த ஆராய்ச்சி மூலம் அவற்றுக்கும் , மனிதர்களுக்கும் வயதாவது பற்றிய வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகிறார்கள் . அமெரிக்காவில் நாய்களின் வயது பற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது . இதில் 80 ஆயிரம் நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன . ” நோய்களை குணப்படுத்துவதற்கு நாம் முயற்சிப்பது நமது ஒட்டுமொத்த ஆயுளைக் குறைத்துவிடுகிறது . புற்றுநோய் , இதயநோய் , ஆகிய நோய்கள் ஏற்பட்டால் ஒருவர் அதிக நாட்கள் வாழ்வது கடினம் . நாம் வயதாவதைத் தடுக்க உடலின் மூ

ரத்தசோதனை மூலம் ஆயுளைக் கணிக்கலாமா?

படம்
pixabay ரத்தசோதனை மூலம் இறப்பை அறியலாம்! இறப்பை அறிவது ஜோசியம் மூலம் நடந்தாலோ அல்லது யாராவது சொன்னாலோ நமக்கு உபயோகமாகவே இருக்கும்.அதுவும் உடலின் செல்களின் மூலம் தெரிய வந்தால் நன்றாகத்தானே இருக்கும்? இது மனிதர்களுக்கு மகிழ்ச்சி தருமா என்று தெரியவில்லை. ஆனால் வணிக நிறுவனங்களுக்கு லாபம் தரும். இதுபற்றிய ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களின் உயிரியல் தடத்தை ஆராய்ந்து அவர்களின வாழ்நாளை கணிக்க முயன்றுவருகின்றனர். பதினெட்டு வயதிலிருந்து தொடங்கி 100 வயது வரையிலானவர்களிடம்  ரத்த மாதிரிகளைப் பெற்றுள்ளனர். மொத்தம் ஆய்வுக்கு இசைந்தவர்களின் எண்ணிக்கை 44,168 பேர். இதில் 5, 512 பேர் ஆய்வு முடிவடையும் முன்னரே இறந்து போய்விட்டனர். பதினேழு ஆண்டுகள் நடைபெற்ற ஆய்வு இது. 226 உயிரியல் அடையாளங்களை வைத்து சிலர் 5 அல்லது 10 ஆண்டுகளில் இறப்பது உறுதி செய்யப்பட்டது.  1997 ஆம் ஆண்டு தொடங்கிய ஆராய்ச்சியில் 7,603 பேர்களிடம் ரத்த மாதிரிகள் பெறப்பட்டன. இதில் 83 சதவீதம் அவர்களின் இறப்பை கணிக்க முடிந்தது.  ரத்த மாதிரி மூலம் ஒரு மனிதனின்

புத்திசாலிகளுக்கு ஆயுள் அதிகமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி புத்திசாலி விஞ்ஞானிகள் அதிக நாட்கள் வாழ வழி இருக்கிறதா? ஸ்மார்ட்டான ஆட்கள் அதிக காலம் வாழ்ந்துள்ளனர். 1727 ஆம் ஆண்டு வாழ்ந்த நியூட்டன் 84 வயது வரை வாழ்ந்தார். த த்துவ வாதியும், கணிதவியலாளருமான பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் 97 வயது வரை வாழ்ந்தார். நரம்பு உயிரியலாளர் ரீடா லெவி மாண்டல்சினி 103 வயது வரை வாழ்ந்தார். இதற்கு காரணம், இவர்களின் வசதிதான். ஆபத்தான பணிகளைச் செய்யவில்லை. இதனால் அதிக காலம் வாழ்ந்தனர். 2017 ஆம் ஆண்டு உளவியலாளரும் பேராசிரியருமான இயான் டியரி இதுகுறித்த ஆய்வை 65 ஆயிரம் பேர்களைக் கொண்டு நடத்தினார். புத்திசாலித்தனம் என்பதை விட ஆயுள் அதிகமாக இருப்பதற்கு முக்கியம், உடல் ஆரோக்கியம்தான். குழந்தையாக இருக்கும்போது அவர்களுக்கு கிடைத்த தாய்ப்பால், எடுத்துக்கொண்ட உணவு, வாழ்க்கை முறைதான் ஆயுளைத் தீர்மானிக்கும். நன்றி: பிபிசி