இடுகைகள்

வாராக்கடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாராக்கடன் வசூலிப்பில் பேட் பேங்க் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது!

படம்
        பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்து வருகிறது . இதனை சமாளிக்க ரிசர்வ் வங்கி தற்போது பேட் பேங்க் என்ற கான்செப்டை கையில் எடுத்துள்ளது . இத்தனை ஆண்டுகளாக இதனை பலர் கூறியபோதும் மறுத்து வந்த ரிசர்வ் வங்கி தற்போது இதனை செயல்படுத்த என்ன காரணம் என்று பார்ப்போம் . பேட் பேங்க் என்பது வணிக வங்கிகள் வழங்கிய வாராக்கடன்களை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை செய்வதற்காக அமைக்கப்படும் வங்கி . இந்த வங்கி யாருக்கும் கடன்களை வழங்காது . யாரிடமும் டெபாசிட்களைப் பெறாது . கடன்களை குறிப்பிட்ட கால அளவில் திரும்ப பெறும் நடவடிக்கைகளை செய்யக்கூடியது . வணிக வங்கிகளின் இருப்பில் உள்ள வாராக்கடன்களை திரும்பப் பெற்றுத்தர பேட் பேங்க் உதவுகிறது . வாராக்கடன்களை வாங்கிய அளவுக்கு குறைந்தாலும் முடிந்தவரை வேகமாக மீட்க முயல்கிறது . முன்னார் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் , பேட் பேங்க் முறைக்கு தனது நூலில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் . பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து வாராக்கடன்களை இன்னுமொரு நிறுவனம் அமைத்து அதற்கு மாற்றிவிட்டால் எப்படி நிலைமை முன்னேறும் என்று எழுதியிருந்தார் . அமெரிக

சிறுகுறு தொழில்துறைக்கு என்னாச்சு? - அரசின் பாதகமான நிதி,பணக்கொள்கை!

 இந்தியாவிலுள்ள 6.3 கோடி சிறுதொழிலாளர்கள் ஆட்டோமேஷன், அல்காரிதம் என தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்றபடி தொழில்களை மேம்படுத்தி, வருகிறார்கள். நாட்டின் நாற்பது சதவீத ஏற்றுமதிக்கும், 28 சதவீத உள்நாட்டு உற்பத்திக்கும் உதவுவது இவர்கள்தான். தோராயமாக 11 கோடிப்பேருக்கும் மேலாக வேலைவாய்ப்புகளை வழங்கும் சிறுகுறுகுறுந்தொழில் துறை, விவசாயத்துறைக்கு அடுத்து வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்குகிறது. மத்திய அரசு பதிவு செய்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக 350 கோடியை இரு சதவீத வட்டியுடன் வழங்குகிறது. கூடவே முத்ரா கடன் வசதியும் உள்ளது. ஆனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்காக இந்திய அரசு செய்த பணமதிப்பு நீக்க முயற்சியில் இத்துறையின் வளர்ச்சி முடங்கியது. இதன்விளைவாக, தொழில்துறை உற்பத்தி இண்டெக்ஸில் (IIP) 3.6 சதவீத வளர்ச்சி மட்டுமே இந்த ஆண்டில் பதிவாகியுள்ளது. இக்காலகட்டத்தில் வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்து வந்தது. இதைக் குறைக்க, ரிசர்வ் வங்கி கடன் தரும் முறைகளையும் மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதனால், சிறுகுறு தொழிலாளர்கள் வங்கிக் கடன் கிடைக்காமல் தடுமாறினர்.  இதற்காகவே இந்திய அரசு, செபியின்