இடுகைகள்

பசுமை அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமை அரசியலுக்கான செயல்திட்டம்

பசுமை அரசியலுக்கான செயல்திட்டம் எஸ்.பி உதயகுமார் தமிழில்: ஜீவா ‘’அரசியல்வாதியையும் மாதவிலக்கு பட்டையையும் அவ்வப்போது விலக்கிவைக்க வேண்டும்’’ என்று ஒரு ஆட்டோ வாசகம் அறிவித்துச் செல்கிறது. மாற்றவில்லை என்றால் அவற்றால் நோய் வரக்கூடும். நடக்கவும் முடியாத தாத்தாக்கள் அதிகாரமையமாக நகர்கிறார்கள். ஊழல் நாயகர்கள் புரட்சி வீரர்களாக முழங்குகிறார்கள். அசிங்கமான அகவாழ்வு, மேடையில் கண்ணகி வேஷம் போடுகிறது. இந்தியா மாற்றம் வேண்டி எதிர்பார்த்து நிற்கிறது. அவர்களை மாற்றலாம்; ஆனால் அவர்களுக்கு மாற்றாக யார் உள்ளார்கள்? புதிய தூய அரசியல்வாதிகளை உடனே மந்திரத்தினால் உருவாக்கிவிட முடியுமா? மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அலங்காரமாக அன்றி ஆத்மார்த்தமாகச் சொல்லும் அரசியல்வாதி யார்? அவர்களின் தகுதி, பண்பு, அர்ப்பணிப்பு, உழைப்பு எப்படி இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட தலைவர்களை உருவாக்குவது, பயிற்றுவிப்பது, அரசியல் தத்துவம் சொல்லிக்கொடுப்பது, நாடுபற்றி, மக்கள் பற்றி, உலகம் பற்றிச் சிந்திக்கச் செய்வது எப்படி? நாம் நாட்டின் நிலை என்ன? கிழக்கிந்தியக் கம்பெனிக் கொள்ளையர்களிடம் சிக்கிய நாட்டைப் போராடி விடுவித்த