இடுகைகள்

நேபாளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எவரெஸ்ட் பயணத்திற்கு வயது 100! - மலையேற்ற பயணத்தின் வரலாறு

படம்
  எவரெஸ்ட் பயணத்திற்கு வயது 100! நூற்றாண்டு கண்ட இமயமலை பயணம் ! கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம், இமயமலைக்கு மக்கள் பயணம் செல்லத் தொடங்கி நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. இமயமலை 8,849 மீட்டர்கள் உயரமானது. உலகின் உயரமான மலை இது. 1921ஆம் ஆண்டு முதலே இமயமலையில் மக்கள் ஏறி சாதித்து வருகிறார்கள். இன்று, ஆண்டிற்கு 500 பேர் இமயமலையை எட்டிப்பிடிக்கும் லட்சியத்துடன் பயணித்து வருகிறார்கள்.  இமயமலையின் எல்லைப்பகுதியில் நேபாளமும், திபெத்தும் அமைந்துள்ளன. இமயமலையின் திபெத்திய பெயர் கோமொலாங்மா (qomolangma). இதன் பொருள் புனித அன்னை. இந்த மலை, 2414 கி.மீ. தொலைவில்  ஐந்து ஆசிய நாடுகளைச் சுற்றிலும்  அமைந்துள்ளது. தொடக்கத்தில் நேபாளமும், திபெத்தும் அந்நியர்களை இமயமலை பயணத்திற்கு அனுமதிக்கவில்லை. 1921ஆம் ஆண்டு திபெத்  பகுதியினர், பிரிட்டிஷ் வீரர்களை இமயமலை ஏற அனுமதித்தது. இவர்கள் மலையை ஆராய சென்றனர். இக்குழுவை சார்லஸ் ஹோவர்ட் பரி (charles howard bury) என்பவர் வழிநடத்தினார். புவியியலாளர்கள், வரைபட ஆய்வாளர்கள் குழுவில் இருந்தனர்.   இப்பயணத்தைப் பற்றி கார்டியன் பத்திரிக்கை ”சார்லஸ் எவரெஸ்டில் ஏறியது மகத்தான சாதனை. து

குறுகிய தேசியவாத நோக்கில் கலை வரலாற்றைப் பார்க்க கூடாது! - பிரதாம் ஆதித்யபால், எழுத்தாளர்

படம்
  பிரதாப் ஆதித்ய பால் பிரதாப் ஆதித்ய பால் கல்வியாளர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, பிஹெச்டி படித்தவர். 1967ஆம் ஆண்டு போஸ்டனில் உள்ள கலை அருங்காட்சியகத்தை நிர்வகிக்குமாறு பணிக்கப்பட்டார். சிகாகோவில் உள்ள கலை கழகத்திற்கு வருகை தரும் ஆசிரியராக 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் கலை தொடர்பானவைதான்.  2009ஆம் ஆண்டு இவருக்கு ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருதுகொடுத்து கௌரவித்தது.  கலை வரலாறு பற்றிய படிப்பில் ஏன் இந்தியா பின்தங்கியுள்ளது? இந்தியாவில் கலை வரலாறு பற்றி படிப்பது பொருளாதார ரீதியாக பயன் கொடுக்குமாறு இல்லை. வசீகரமானதாகவும், பொருளாதார ரீதியாகவும் கலை வரலாறு சிறப்பாக இருந்திருக்குமானால், அசல் எது, போலி எது என அறிந்து சொல்லக்கூட கலை வல்லுநர்கள் யாரேனும் இருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி யாரும் உருவாகவில்லை. கலை தொடர்பாக பட்டம் பெற்றிருந்தாலும் புத்திசாலியாக இருந்தாலும் கூட கலை தொடர்பான அத்தனை விஷயங்களிலும் திறமை பெற்றவராக சாதித்துவிட முடியாது. இந்தியா மட்டுமல்ல. இங்கு நிறைய வேறுபாடுகள் கொண்ட கலைத்தன்மை வடிவங்கள் இருப்ப