இடுகைகள்

கிரண் மஜூம்தார் ஷா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உயிரிவேதியியல் துறையில் இந்தியாவை உயரத்துக்கு கொண்டு சென்ற பெண்மணி! - கிரண் மஜூம்தார் ஷா

படம்
  கிரண் மஜூம்தார் ஷா கிரண் மஜூம்தார் ஷா தொழிலதிபர் தனது வாழ்க்கையை தானே செதுக்கி தொழிலதிபர் ஆனவர் என்று சொல்லலாம்.  1953ஆம்ஆண்டு மார்ச் 23 அன்று பிறந்தவர், கிரண். பெங்களூரில் பிறந்தவரின் அப்பா, யுனைடெட் ப்ரீவர்ஸ் நிறுவனத்தில் தலைமை பொறுப்பாளராள இருந்தார். இவரது அம்மா,  யாமினி மஜூம்தார் சலவைத்தொழிலை நடத்தி வந்தார். கிரணுக்கு தொடக்கத்தில தனது அப்பாவின் தொழிலை அப்படியே பின்தொடர்ந்து செய்யலாம் என்று எண்ணம் இருந்தது. தனது மதுபான தயாரிப்பு தொடர்பான படிப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் பல்லாரட் பல்கலையில் முடித்தார். ஆனால் இந்தியாவில் நிலைமை வேறாக இருந்தது. பெண்களுக்கு மதுபானத் தயாரிப்பில் பெரிய வேலைகள் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு ஐரிஷ் கம்பெனியான பயோகான் பயோகெமிக்கல்  வேலை தருவதாக கூறியது. அதனை உருவாக்கி நிறுவியர் லெஸ்லி ஆசின்குளோஸ்.  1978ஆம் ஆண்டு ஆசின்குளோஸ், கிரணை தனது பயோகான் இந்தியா நிறுவனத்தில் கூட்டாளியாக சேர அழைப்பு விடுத்தார்.  பயோகான் நிறுவனம் பாபெய்ன், இசின்கிளாஸ் எனும் என்சைம்களை பப்பாளி, மீனிலிருந்து பிரித்தெடுத்துக்கொண்டிருந்தது. இந்தியாவில் தொடங்கிய பயோகான் நிறுவன