இடுகைகள்

சிற்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காகிதத்தில் கலைப்பொருட்களை செய்து அசத்தும் கிருஷ்ணா!

படம்
  பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர், கிருஷ்ணா. இவர் செய்தித்தாள், பழைய காகிதங்கள் என எதையும் விட்டு வைக்காமல் அதில் கலைப்பொருட்களை செய்வதில் தேர்ந்தவர். தனது கலைப்பொருட்களை பல்வேறு அரசியல் பிரபலங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். அண்மையில் டெல்லிக்குச் சென்ற தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், கிருஷ்ணாவின் காகித கலைபொருட்களை வாங்கிக்கொண்டுதான் சென்றார். இதற்காக அவர் விமானநிலையத்தில் பொறுமையாக காத்திருந்தார் என்பதுதான் முக்கியமானது.  கிருஷ்ணா புதிய தூரிகை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் கிராம பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரது குரு அன்பழகன் மூலம் காகிதத்தில் சிற்பங்களை செய்யத் தொடங்கியுள்ளார். பிறகு அதனை பல்வேறு அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தர தொடங்கினார். காகிதத்தில் சிற்பங்களை செய்து அதற்கு வண்ணம் தீட்டி சோதிக்கத் தொடங்கினார். இப்போது அதில் உலோக வண்ணங்களை தீட்டி வருகிறார்.  பார்க்க எளிதாக இருந்தாலும் செய்வது கடினமானதுதான். குறிப்பிட்ட சிலை மாடலை பார்த்து, காகிதத்தை வளைத்து சிற்பங்களை செய்கிறார். இதில், சிலை அமைப்பை கச்சிதமாக செயத மூங்கில்

குறுகிய தேசியவாத நோக்கில் கலை வரலாற்றைப் பார்க்க கூடாது! - பிரதாம் ஆதித்யபால், எழுத்தாளர்

படம்
  பிரதாப் ஆதித்ய பால் பிரதாப் ஆதித்ய பால் கல்வியாளர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, பிஹெச்டி படித்தவர். 1967ஆம் ஆண்டு போஸ்டனில் உள்ள கலை அருங்காட்சியகத்தை நிர்வகிக்குமாறு பணிக்கப்பட்டார். சிகாகோவில் உள்ள கலை கழகத்திற்கு வருகை தரும் ஆசிரியராக 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் கலை தொடர்பானவைதான்.  2009ஆம் ஆண்டு இவருக்கு ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருதுகொடுத்து கௌரவித்தது.  கலை வரலாறு பற்றிய படிப்பில் ஏன் இந்தியா பின்தங்கியுள்ளது? இந்தியாவில் கலை வரலாறு பற்றி படிப்பது பொருளாதார ரீதியாக பயன் கொடுக்குமாறு இல்லை. வசீகரமானதாகவும், பொருளாதார ரீதியாகவும் கலை வரலாறு சிறப்பாக இருந்திருக்குமானால், அசல் எது, போலி எது என அறிந்து சொல்லக்கூட கலை வல்லுநர்கள் யாரேனும் இருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி யாரும் உருவாகவில்லை. கலை தொடர்பாக பட்டம் பெற்றிருந்தாலும் புத்திசாலியாக இருந்தாலும் கூட கலை தொடர்பான அத்தனை விஷயங்களிலும் திறமை பெற்றவராக சாதித்துவிட முடியாது. இந்தியா மட்டுமல்ல. இங்கு நிறைய வேறுபாடுகள் கொண்ட கலைத்தன்மை வடிவங்கள் இருப்ப

அவமானச்சின்னத்தை அகற்ற முயலும் சீன அரசு!

படம்
  அவமானத்தின் தூண்- ஹாங்காங் சீன கம்யூனிஸ்ட் கட்சி, வரலாற்று ரீதியான களங்கத்தை மறைக்கும் முயற்சியை எப்போதும் செய்துவந்திருக்கிறது. அண்மையில்  ஹாங்காங் பல்கலைக்கழகத்தில்  டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சிற்பி ஜென்ஸ் கல்சியோட் தியான்மென் சதுக்க படுகொலைகளை சுட்டும் சிற்பத்தை வடிவமைத்தார். இப்போது சீன அரசு அந்த சிற்பத்தை அகற்ற வலியுறுத்தி வருகிறது.  சீனாவில் அனுமதிக்கப்படாத தியான்மென் அடையாளம், ஹாங்காங்கில் மட்டுமே உள்ளது. சீனாவில் இருக்கும் ஜனநாயகத்தை முடக்கும் பிரச்னைகள் ஹாங்காங்கில் எதிரொலிக்க, அங்கு போராட்டங்கள் தொடங்கின. இப்போராட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள்.  தியான்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அரசு ராணுவம் கொண்டு அடக்கியது. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டங்கள் தொடங்கின. இதனை நினைவுறுத்தவே சிற்பி அவமானத்தின் சின்னம் என்ற பெயரில் சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார்.  தியான்மென் சதுக்கத்தில் மொத்தம் 7 ஆயிரம் பேர் காயம்பட்டனர். இதில் போராட்டக்கார ர்கள், காவல்துறையினரும் உள்ளடங்குவார்கள்.  36 மாணவர்கள் கொல்லப்பட்டனர். பத்து ராணுவ வீர ர