இடுகைகள்

சிறுகதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முருகேசன்களின் வாழ்வில் நிறைந்துள்ள பல்வேறு உணர்ச்சிப்போராட்டங்கள் - மாயம் - பெருமாள் முருகன்

படம்
  பெருமாள் முருகன் மாயம் பெருமாள் முருகன் மாயம் - பெருமாள் முருகன் சிறுகதைகள்  காலச்சுவடு நூலின் தலைப்பை முருகேசனின் கதைகள் என்றே கூட சொல்லிவிடலாம். தவறில்லை. அனைத்து கதைகளிலும் நாயகன், கதை நாயகன் முருகேசுதான். பெரும்பான்மையான கதைகள் திருமணமாகும் முயற்சி, திருமணம், திருமணமான பிறகு வாழ்க்கை என திருமணத்தை மையமாக கொண்டுள்ளது.   மொத்தம் இருபது கதைகள், மாயம் என்ற நூல்தொகுப்பில் உள்ளன. பரிகாரம் என்பது, மாயவாத கதை என்றால் இதுமட்டுமே. மற்ற கதைகள் அனைத்துமே எளிமையான வாசகங்களால் அமைந்த கதைகள். அதன் முடிவு கூட பெரியளவு அதிர்ச்சி, மகிழ்ச்சி என முடிவதில்லை. சீரான தன்மையில் உணர்ச்சிகளையும் மெல்ல பரப்பி காவிரி நீர் போல சலசலத்து செல்கிறது. பரிகாரம் கதை, ஜோதிடத்தால் மனதுக்குள் ஏற்பட்ட பதற்றம், பீதி எப்படி ஒருவனை பித்தாக்குகிறது என்பதை கூறுகிறது. இந்தக் கதை அதன் வார்த்தைகள், கதையின் போக்கு என்ற வகையில் ஈர்ப்பானதாக உள்ளது. காதல், காமம், குற்றவுணர்ச்சி, பொறாமை, இரக்கம், விரக்தி ஆகிய உணர்வுகளை இக்கதைகளில் ஆசிரியர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். பெரும்பாலான பாத்திரங்கள் மேற்சொன்ன உணர்ச்சிகளை கதைகளில் வெள

கிராமத்து நினைவுகளை உயிர்ப்புடன் நினைவுகூர உதவும் கதைகள் - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - கி.ரா

படம்
  கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் நூல் தொகுப்பு மா ஞானபாரதி ( பாரதி மார்க்ஸ்) கி ரா அவர்களின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு. டிஸ்கவரி ப ப்ளிகேஷன்ஸ்   கரிசல் எழுத்தாளர் என அன்புடன் அழைக்கப்படும் கி ராவின் நூல்தொகுப்பு. மொத்தம் 23 கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதைகள் எவையும் வாசிப்பதற்கு சலிப்போ, அயர்வோ ஊட்டுவன அல்ல. அனைத்து கதைகளும் அதற்கேயான இயல்பில் ஆற்றொழுக்கு போன்ற போக்கில் செல்கின்றன. சொந்த சீப்பு, ஜடாயு, சுப்பன்னா, கோடாங்கிப் பேய், அங்கணம், சாவஞ்செத்த சாதிகள் ஆகிய கதைகள் எனக்கு பிடித்தமானவையாக தோன்றின. சொந்த சீப்பு என்பது, ஒரு பொருளை வாங்கி அதன் மீது வளர்த்துக் கொள்ளும் பற்று பற்றியது. ஒரே அறையில் தங்கும் நண்பர்கள் இருந்தால், அங்குள்ள அனைத்து பொருட்களுமே எந்த கேள்வி பதிலுமின்றி பகிரப்படும். அப்படி பகீரப்படும் சீப்பு காரணமாக அதை வாங்கியவர் மனதில் ஏற்படும் கோபமும், அலுப்பும்தான் கதை. நகர வாழ்க்கையில் முதலில் நாம் வாங்கும் பொருள் பெரிய ஈர்ப்பு கொண்டிருக்கும். அதாவது, அதற்கு மனதில் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூறலாம். பிறகு, நிறை

வாழ்வின் அவலத்தை, துயரத்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கதைகள் - பஷீர் - 40 கதைகள் - சுகுமாரன் - காலச்சுவடு

            பஷீர் - தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது சிறுகதைகள் தொகுப்பு - சுகுமாரன் காலச்சுவடு பதிப்பகம் மின்னூல் கேரளத்தின் புகழ்பெற்ற இலக்கியவாதியான பஷீர் எழுதிய கதைகளில் நாற்பது கதைகள் இந்த நூல் தொகுப்பில் உள்ளன. பஷீர் எழுதிய முக்கியமான படைப்புகளை நான்கு வெவ்வேறு படைப்புகளாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பஷீரின் தரமான நூல்களை வாங்க நினைத்தால் வாசகர்கள் காலச்சுவட்டை அணுகலாம். பஷீரின் கதைகள் அனைத்துமே வாழ்க்கையின் பல்வேறு காலகட்ட அனுபவங்களைக் கொண்டவைதான். மகிழ்ச்சி, துயரம், லட்சியவாதம் துன்பங்கள், காதல், எழுத்தாளனின் எழுத்து அனுபவங்கள், அரசு பயங்கரவாதம், இந்து, முஸ்லீம் மத வேறுபாடுகள் என பலவற்றையும் நாற்பது கதைகளில் வாசகர்கள் படித்து உணர முடியும். திரு. இரா. முருகானந்தம் ஒருமுறை பேசும்போது சொன்னார். வாழ்க்கையில் எந்தளவு மோசமான நிலை வந்தாலும் கூட அதை எதிர்கொள்ளும் தைரியத்தை பஷீரின் எழுத்துகள் தருகின்றன என்றார். அதை வாசிக்கும்போது வாசகர்கள் எளிதாக உணரலாம். முதல் இரண்டு கதைகள் சற்று துன்பியல் நிகழ்வுகளைக் கொண்டவை. அதாவது ஜென்ம தினம், டைகர். தொகுப்பில் உள்ள இந்த இரு கதைகளில் டைகர் சற்