முருகேசன்களின் வாழ்வில் நிறைந்துள்ள பல்வேறு உணர்ச்சிப்போராட்டங்கள் - மாயம் - பெருமாள் முருகன்
பெருமாள் முருகன் மாயம் பெருமாள் முருகன் மாயம் - பெருமாள் முருகன் சிறுகதைகள் காலச்சுவடு நூலின் தலைப்பை முருகேசனின் கதைகள் என்றே கூட சொல்லிவிடலாம். தவறில்லை. அனைத்து கதைகளிலும் நாயகன், கதை நாயகன் முருகேசுதான். பெரும்பான்மையான கதைகள் திருமணமாகும் முயற்சி, திருமணம், திருமணமான பிறகு வாழ்க்கை என திருமணத்தை மையமாக கொண்டுள்ளது. மொத்தம் இருபது கதைகள், மாயம் என்ற நூல்தொகுப்பில் உள்ளன. பரிகாரம் என்பது, மாயவாத கதை என்றால் இதுமட்டுமே. மற்ற கதைகள் அனைத்துமே எளிமையான வாசகங்களால் அமைந்த கதைகள். அதன் முடிவு கூட பெரியளவு அதிர்ச்சி, மகிழ்ச்சி என முடிவதில்லை. சீரான தன்மையில் உணர்ச்சிகளையும் மெல்ல பரப்பி காவிரி நீர் போல சலசலத்து செல்கிறது. பரிகாரம் கதை, ஜோதிடத்தால் மனதுக்குள் ஏற்பட்ட பதற்றம், பீதி எப்படி ஒருவனை பித்தாக்குகிறது என்பதை கூறுகிறது. இந்தக் கதை அதன் வார்த்தைகள், கதையின் போக்கு என்ற வகையில் ஈர்ப்பானதாக உள்ளது. காதல், காமம், குற்றவுணர்ச்சி, பொறாமை, இரக்கம், விரக்தி ஆகிய உணர்வுகளை இக்கதைகளில் ஆசிரியர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். பெரும்பாலான பாத்திரங்கள் மேற்சொன்ன உணர்ச்சிகளை கதைகளில் வெள