இடுகைகள்

பெற்றோர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுற்றுலா போன இடத்தில் காணாமல் போன குழந்தை

படம்
  அமெரிக்காவில் இடா மாகாணத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவம். 2015ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதி டியோர் கன்ஸ் என்ற இரண்டு வயது குழந்தை காணாமல் போகிறது. என்னவானது என்பதை இன்றுவரைக்கும் க்ளூ ஏதாவது கிடைக்குமா என காவல்துறை தேடி வருகிறது. ஆனால் எதிர்பார்த்த எந்த தடயங்களும் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம். சால்மன் சாலிஸ் தேசிய வனப்பகுதிக்கு அருகில் ஜெசிகா மிட்செல் அவரது கணவர் டியோர் கன்ஸ் சீனியர் ஆகியோர் சுற்றுலாவுக்காக வந்திருந்தனர். டியோர் கன்ஸ் சீனியரின் தாத்தாவும் அவரது நண்பருடன் அங்கே இருந்தார். அவரிடம்தான் குழந்தை டியோர் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவர் தனது நண்பருடன் சேர்ந்து மீன் பிடிப்பதில் தீவிரமாக இருக்கும்போது, லிட்டில் மேன் எனும் குழந்தை டியோர் காணாமல் போயிருந்தது. குழந்தையின் பெற்றோர் அருகில் இருந்த பாருக்கு மதுபானம் அருந்த சென்றிருந்தனர். குழந்தையை தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். வந்து பார்த்தால் ஒருவருக்கொருவர் நீ பார்த்தாயா என கைகாட்டிக்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி போல நின்றார்களே ஒழிய பதில் கிடைக்கவில்லை. இருநூறுக்கும் மேலான காவல்துறையினர், தன்னார்வலர்கள் இரண்டு கி.மீ. தொ

தனது பெற்றோரின் இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்கத் துடிக்கும் மாவீரனின் வலிமிகுந்த பயணம்- மார்ஷியல் ரெய்ன்ஸ்

படம்
  மார்ஷியல் ரெய்ன்ஸ் மங்கா காமிக்ஸ் 550 (ஆன் கோயிங்) ரீட்எம்.ஆர்க் யே மிங், சூ லான் என்ற ஜோடிதான் இந்த காமிக்ஸின் அட்டகாசமான ஜோடி. இதைப் பார்க்கும் முன்னர் யே மிங்கின் வாழ்க்கையைப் பார்த்துவிடுவோம். யே மிங்கின் அப்பா, ஐந்து அரசுகளாலும் எதிரியாக பார்க்கப்பட்ட ஹவோசியன் செக்ட் எனும் அமைப்பில் இணைந்தவர் என வதந்தி பரப்பப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அம்மா, யே குடும்பத்தைச் சேர்ந்தவரால் வல்லுறவு செய்யப்பட்டு இறந்துபோகிறார். தேசதுரோகி என்ற பெயரால் யே மிங்கின் அப்பா கொல்லப்படுவதில் யே குடும்பத்தில் சிலர் பயன் அடைகிறார்கள். அதேநேரம் யே மிங், தற்காப்புக் கலை கற்றால் நம்மை பழிவாங்குவான் என நினைத்து அவனது தற்காப்பு கலைத் திறன்களை முழுக்க ஊனமாக்குகிறார்கள் சக்தி வாய்ந்த யே குடும்ப உறுப்பினர்கள் சிலர். பெற்றோர் இல்லை. கற்ற தற்காப்புக் கலையும் அழிந்துவிட்டது. உண்ண ஒரு பருக்கை அரிசி கூட இல்லை. இந்த நிலையில் யே மிங் ஒரு பிச்சைக்காரரை சந்திக்கிறார். அவர் அவனுக்கு   உடலில் ஊனமாகிப் போன தற்காப்புக்கலை சக்தியை மீண்டும் உருவாக்கித் தருவதாக சொல்கிறார். ஆனால், அவனைக் கொன்று அவனது உடலில் தனது ஆன

குழந்தைகளே லட்சியம், விற்பனை நிச்சயம்!

படம்
  வீட்டுக்குத் தேவையான சோப்பு. தரையைத் துடைக்கும் பொருட்கள், சலவைததூள், சலவை சோப்பு ஆகியவற்றை வீட்டின் மூத்தவர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் சாப்பிடும் பொருட்களைப் பொறுத்தவரை ஒரு வீட்டில் குழந்தைதான் முடிவு செய்யும். டிவிகளில் ஏராளமான விளம்பரங்களைப் பார்த்து, சாக்லெட் என்றால் கேண்டிமேன், கிண்டர் ஜாய், குவாக்கர் ஓட்ஸ், டோமினோ பீட்ஸா, சாண்ட்விட்ச் பிஸ்கெட்டுகள், ட்ராபிகானா ஜூஸ் என பலதையும் அவர்களே தீர்மானிப்பார்கள். அவர்களுக்கு வீட்டில் செல்வாக்கு அதிகம். பெற்றோர், தாத்தா, பாட்டி, உறவினர்கள் என நிறையப் பேரிடம் அவர்கள் பொருட்களைக் கேட்டுப் பெற முடியும். பொதுவாக குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே சில பிராண்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டால் ஒருவரை எளிதாக மாற்ற முடியாது. சில குடும்பங்களில் அவர்களின் கலாசார இயல்புப்படி, பேஸ்ட் என்றால் கோல்கேட்தான், பிரஷ் என்றால் சென்சோடைன், குளியல் சோப்பு என்றால் சின்தால் என முடிவே செய்திருப்பார்கள். இந்த சூழலில் வளரும் ஒரு குழந்தை தனது தேர்வை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ள முடியாது. உணவுப்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளை கவருவதற்கு ஜூனியர் என

சுயத்தை அழித்து காதலை அடையாளம் காண்போம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
        தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம்   குழந்தைகளின் வளர்ப்புக்கு நிறைய பெற்றோர் பொறுப்பேற்று கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பொறுப்பை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பது மாறுபடுகிறது. குழந்தைகள் எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது, அவர்கள் என்ன வேலையை செய்யவேண்டும் என பெற்றோர் தீர்மானித்துக் கூறுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் முக்கியமான இடத்தை அந்தஸ்தை அடைய வேண்டுமென நினைக்கிறார்கள். இதற்குள்தான் அவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஒரு பகுதியாக வைத்திருக்கிறார்கள். சமூகத்திற்கு பொருத்தமான மனிதர்களாக்க அவர்களை உருவாக்கி போர், முரண்பாடு, கொடூரங்களை செய்யும் விதமாக மாற்றுகிறார்கள். இப்படி பிள்ளைகளை வளர்ப்பதை அக்கறை, அன்பு என்று கூறமுடியுமா? ஒரு செடியை, விதையூன்றி வளர்க்க நாம் நிறைய விஷயங்களை செய்கிறோம். மண்ணைச் சோதித்து, மரக்கன்றை நட்டுவைத்து அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால் பிள்ளைகளை வளர்க்கும்போது, அம்முறையின் வழியாக  அவர்களை மெல்ல கொல்கிறோம். உண்மையில் நீங்கள் பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்கள் என்றால், உலகில் போர் நடைபெறக் கூடாது. நீங்கள் நேசிக

சரியான கல்விமுறையே மனிதகுலத்திற்கான பேருதவி! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  மனிதர்களை மாறுபட்டவர்களாக்கும் கல்வி பிள்ளைகளை நீங்கள் கவனமாக பார்த்தால் விளையாடும்போது, படிக்கும்போது பார்த்தால் அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளலாம். அவர்களின் மீது பெற்றோர்கள் தமது முன்முடிவுகளை, பயத்தை, ஆசைகளை, நிறைவேறாமல் போன கனவுகளை திணிக்க கூடாது. பெற்றோர்கள் அவர்களின் பிடித்த, பிடிக்காத விஷயங்களை பிள்ளைகளிடம் திணித்து அவர்களை குறிப்பிட்ட வகையில் தீர்மானிக்க முயல்வது தவறு. பிள்ளைகளின் மீது வேலியைப் போட்டு உலகத்தோடு அவர்கள் கொண்டுள்ள உறவைத் தடுக்க கூடாது. நம்மில் பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் சொந்த மகிழ்ச்சிக்காக பல்வேறு லட்சியங்களை அடைவதற்காக பயிற்சி கொடுத்து வளர்க்கிறார்கள். திருப்தி, சுகமான சூழ்நிலை ஆகியவற்றை உரிமை, ஆதிக்கம் செலுத்தும் குணங்களின் மூலம் பெற்றோர் அடைகின்றனர். பெற்றோர் பிள்ளைகளுடன் கொண்டுள்ள உறவு என்பது மெல்ல தண்டனையாக மாறுகிறது. ஆசை, ஆதிக்கம் என இரண்டையும் தெளிவாக புரிந்துகொள்வது குழப்பமான செயல்பாடாக உள்ளது. ஆசை, ஆதிக்கம் என இரண்டு செயல்பாடுகளுக்கும் பல்வேறு வடிவங்கள் உண்டு. ஆதிக்கமாக உள்ளவருக்கு அடிமையாக சேவை செய்வது என்பது புரிந்துகொள்ள கடினமான ஒன்று

பெற்றோர்களின் தவறான வளர்ப்பால் சிலுவை சுமக்கும் இரட்டையர்கள்! இரட்டா - ஜோஜூ ஜார்ஜ்

படம்
  இரட்டா -ஜோஜூ ஜார்ஜ், அஞ்சலி இரட்டா ஜோஜூ ஜார்ஜ் இடுக்கி மாவட்டத்திலுள்ள வாகாமன் காவல்நிலையம். அங்கு, பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து அதை ஒப்படைக்க விழா ஒன்றை நடத்துகிறார்கள். வனத்துறை அமைச்சர் வருவதாக இருக்கிறது. அந்த நேரத்தில் காவல்நிலையத்தின் உள்ளே ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தவர்கள் என அங்கு நிற்கும் மூன்று போலீஸ்கார்களைப் பிடிக்கிறார்கள். சந்தேகப்படுகிறார்கள். உண்மையில் யார் குற்றவாளி என கண்டறிவதே படம். இறந்துபோனவரான வினோத், வாகாமனில் உதவி ஆய்வாளர். அவருக்கு சகோதரரான பிரமோத், அதே காவல்துறையில் டிஎஸ்பியாக இருக்கிறார். இறந்தவரான வினோத், கொலையை விசாரிக்கும் பிரமோத் இருவருமே இரட்டையர்கள். ஆனால், 17 ஆண்டுகளுக்கு மேலாக துவேஷமாக வன்மத்தோடு வாழ்கிறார்கள். வினோத் கொல்லப்பட என்ன காரணம் என்பதை எஸ்பி விசாரிக்க, மூன்று போலீஸ்காரர்களின் வாக்குமூலம் வழியாக கதை நகர்கிறது. இறந்துபோன வினோத் பற்றிய காட்சிகள் படத்தில் அதிகம். அவர், மனதில் சகோதரர் பிரமோத் பற்றிய ஒரு தீராத கோபம் இருந்துகொண்டே இருக்கிறது. அதை காவல்நிலையத்தில் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில், விசாரணையில் பிரமோத்தைக் கூட

பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரிக்க நினைக்கும் எதிரியைத் தடுக்கும் சகோதரர்கள்! பாஸ் பேபி - ஃபேமிலி பிஸினஸ்

படம்
  பாஸ் பேபி ஃபேமிலி பிஸினஸ் ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனத்தின் அனிமேஷன் படைப்பு. இந்த படத்தின் கதையை சரியாக உள்வாங்க பாஸ் பேபி பார்ப்பது அவசியம். அந்த படத்தின் தொடர்ச்சியாக வரும் கதைதான் ஃபேமிலி பிஸினஸ். இந்த அனிமேஷன் படத்தில் சகோதர ர்கள் இருவர் இருக்கிறார்கள். இதில் ஒருவர் தொழிலதிபர். பணத்தாலேயே கொழிக்கிறார். அவருக்கு குடும்பம் என்றால் பெற்றோர், மூத்த சகோதரர் இருக்கிறார். ஆனால் அவர்களை விட்டு தொழில் பரபரப்பு என தள்ளியே இருக்கிறார். இதற்கு மூத்தசகோதரர், அவரது தொழிலதிபர் தம்பி என இருவர் வாழ்க்கையிலும் நிறைய சங்கடங்கள் காரணங்களாக உள்ளன. அதை தீர்த்து இருவரும் எப்படி ஒன்றாக சேர்கிறார்கள் என்பதே கதை.   குழந்தையாக இருப்பவர்கள் சேர்ந்து பேபி கார்ப் என்ற நிறுவனத்தை நடத்துகிறார்கள். இதை ரகசியமாக செய்து வருகிறார்கள். இதில் சாதனை குழந்தையாக ஒரு காலத்தில் இருந்தவர்தான், இப்போது தொழிலதிபராக இருக்கும் தம்பி. மூத்த சகோதரர் தொழிலில் சிறக்கவில்லை. ஆனால் அவர் மணம் செய்துகொண்டு இரு பெண் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத் தந்து வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார். அவரது மனைவிதான் வெளியில் சென்று

பெற்றோரை கவனித்துக்கொள்ளும் கடமை, கனவுக்கு தடையாகுமா? ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் நாம் வெற்றி பெற்றதும்   பெருமை என்ற உணர்வு உருவாகிறதே ஏன்? வெற்றி பெறும்போது பெருமை என்ற உணர்வு ஏற்படுகிறதா? வெற்றி என்பது என்ன? வெற்றிகரமான எழுத்தாளர், கவிஞர், ஓவியர்,   தொழிலதிபர் என்று கூறுகிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன?   நீங்கள் உள்முகமாக குறிப்பிட்ட கட்டுப்பாட்டைப் பெற்று சாதித்திருக்கிறீர்கள். பிறர் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியாமல் தோற்றுவிட்டார்கள் என்பதுதானே? நீங்கள் பிறரை விட சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதுதான் இதன் அர்த்தம். நீங்கள் வெற்றி பெற்றவராக, பிறருக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் இடத்தை அடைந்துவிட்டீர்கள். இப்படி நினைக்கும்போது மனதில் உருவாகும் உணர்வுதான் பெருமை என்பது. நான் சிறப்பானவன். நான் என்ற உணர்வுதான் பெருமைக்கு முக்கியமான காரணம். வெற்றிகள் பெறும்போது பெருமை உணர்வு வளருகிறது. ஒருவர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து சிறப்பானவன் என்ற எண்ணதை பெறுகிறார். குறிக்கோள் கொண்டுள்ளவர் என்பது, ஒருவரின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதுதான் வலிமை, எதை நோக்கி செல்கிறோம், ஊக்கம் அளிக்கிறது. பிறரை விட நான் முக்கி

தான் பார்த்த பெண்ணா, பெற்றோர் பார்த்த பெண்ணா- தெல்லவாரித்தே குருவாரம் - ஸ்ரீ சிம்கா, சித்ரா சுக்லா, மிஷா நரங்

படம்
  Director: Manikanth Gelli Music by: Kaala Bhairava Written by: Nagendra Pilla தமிழில் - விடிஞ்சா வியாழக்கிழமை தமிழ்ப்படம்  யூட்யூப் சேனல் வீரு, தனது வாழ்க்கைத்துணையை தானே தேடிய காதலில்  கண்டுபிடிக்கிறாரா அல்லது அவரது அப்பா தேடி வைக்கும் வரன் மூலம் கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் கதை.  வீரு, கட்டுமானத்தொழிலில் வேலை செய்து வருகிறார். நன்றாகத்தான் வாழ்க்கை  போகிறது. அவர் சிங்கிள் இல்லையா, அதனால் காதல் தேடி மது, நண்பர்கள் என  அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார். ஒருநாள் பப்பில் குடித்துவிட்டு ஒரு  க்ரூப் மீது வாந்தி எடுக்க அவர்கள் வீருவோடு  சேர்த்து அவர்களின் நண்பர்களையும் புரட்டி எடுக்கிறார்கள். காயங்களுக்கு டிங்க்சர் வைக்க மருத்துவமனைக்கு சென்றால், அங்கு  மருத்துவர் கிருஷ்ணவேணி என்கிற கிருஷ்ணாவை பார்க்கிறார்கள். மூன்றுபேரும்தான். ஆனால் வீரு காதலித்தால் அது டாக்டர் கிருஷ்ணாதான் என உறுதியாக இருக்கிறார்.  கிருஷ்ணாவும் கல்யாணம் செஞ்சுப்பியா என தந்திரமாக கேட்டு பதில் வந்தபிறகுதான், இருவரும்  காசை கரைக்க பல்வேறு உணவகங்கள், பப், சினிமா என திரிகிறார்கள். இந்த நேரத்தில் வீருவின் அப்பா அவனுக்கு கல்யாண

புகையிலையாய் சுருங்கும் பெற்றோர்! - கடிதங்கள்

படம்
          புகையிலை இலையாய் சுருங்குகிற வாழ்க்கை! அன்புத்தோழர் சபாபதிக்கு , வணக்கம் . கையில் எலும்பில் ஏற்பட்ட காயம் குணமாகி இருக்கும் என்று நினைக்கிறேன் . எனக்கு அலுவலகத்தில் இருந்து ஓலை வந்துவிட்டது . நான் 8.2..21 அன்று அலுவலகத்தில் இருக்க வேண்டும் . இனிமேல் பரபர வாழ்க்கை தொடங்கிவிடும் . வீட்டில் நான் இத்தனை நாட்கள் இருக்க வாய்ப்பு கிடைத்ததே ஆண்டவனின் அருள்தான் காரணம் . அப்பாவுக்கு 68 வயது ஆகிவிட்டது . சர்க்கரை , ரத்த அழுத்தம் , கண்பார்வை மங்கல் என தடுமாறுகிறார் . ஆனால் என்னால் வேலை காரணமாக வீட்டில் இருக்க முடியவில்லை . இருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான் . ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை . நம்மை பெற்றவர்கள் , வளர்த்தவர்கள் கண் முன்னே காய்ந்து சுருங்கி புகையிலை போல மாறுவது மனதைப் பிழிவது போலவே உள்ளது . வீட்டில் இருந்த நாட்களில் அம்மாவுக்கு சமைக்க தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தேன் . அம்மாவுடன் நிறைய பேசினேன் என்று நினைக்கிறேன் . அவள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதால் நான் பேசியது அவளது காதில் விழுந்திருக்குமா என்றே தெரியவில்லை . திருமண விஷயங்களுக்கு கூட கா