இடுகைகள்

தொழிலாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூகப் புரட்சியில் அறிவுஜீவிகளுக்கு உள்ள பங்கு!

படம்
  அரசியல் ரீதியான புரட்சிக்கும் சமூகத்தை அடிப்படையாக மாற்றும் புரட்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அரசியல் புரட்சியை ஒருவகையில் ரகசியமாக ஏகபோகமாக கூட நடத்திக் காட்டிவிட முடியும். தொழிற்சாலை தொழிலாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள் என இருதரப்பும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும். பொருளாதாரம், வாழ்க்கை என்ற இரண்டு அம்சங்களிலும் கூட இருபிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும் முக்கியம். இவர்கள் இல்லாமல் எந்த சமூக மாற்றங்களும் நடைபெறாது. இணையம் வந்தபிறகு போராட்டங்களை ஒருங்கிணைப்பு வேறு ஒரு தளத்திற்கு மாறியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களை நிர்வகிப்பவர்கள், போராட்டங்களை எளிதாக தடுத்து நீக்க முடியும். எனவே, அவை இல்லாமலும் மக்கள் ஒன்றாக இணைந்து களத்தில் செயல்பட முயலவேண்டும். முதலாளிகளைப் பொறுத்தவரை லாபம் வந்தால்தான் ஒரு பொருளை நிர்வாகம் செய்வார். அரசு எதிர்த்தால், தொழில் இழப்பை சந்தித்தால், அதை எதிர்கொள்ளும்படி நிறைய கட்டுப்பாடுகள், விதிகளை உருவாக்கிக்கொள்வார். அரசுகளின் கருத்தியலுக்கு ஏற்றபடி அல்காரிதங்களை கூட தொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்றியமைப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம். உடல் உழைப்பு, மூளை உழைப்பு என...

அரசு, தொழிலாளர் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நூல்!

படம்
        அரசும் புரட்சியும் புரட்சியாளர் லெனின் தமிழில் ரா கிருஷ்ணய்யா சோவியத் யூனியனை மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக ஆண்ட லெனின் எழுதிய நூல். இந்த நூலை கிருஷ்ணய்யா சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நூல் முழுக்க அரசு என்றால் என்ன, அதன் நோக்கம், யாருக்காக செயல்படுகிறது, அதை தொழிலாளர்கள் எப்படி கைபற்றி மக்களுக்காக இயங்க வைப்பது என நிறைய உதாரணங்களோடு எழுதியுள்ளார். நூலில் கூடுதலாக சந்தர்ப்பவாதிகள் பற்றியும் விரிவாக விமர்சனங்களை எடுத்து வைத்து விவாதித்துள்ளார். நூல் எளிதாக வாசித்து யோசித்து புரிந்துகொள்ளக்கூடியதல்ல. மொத்தம் 570 பக்கங்களைக் கொண்டது. மார்க்சிய தத்துவம் சார்ந்த நூல் என்பதால், நூலை அனைவருக்கும் பொதுவான நூலாக கூற முடியாது. நிதானமாகவே படிக்க முடியும். நூலை வாசிப்பதற்கு முன்னர், அதன் பின்னே உள்ள பல்வேறு சம்பவங்களை படித்துவிட்டு வந்தால் நூலை முழுவதுமாக வாசிக்க எளிதாக இருக்கும். ஏராளமான சம்பவங்களை நூல் சுருக்கமாக கூறிச்செல்வதால் சற்று குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. லெனின் எழுதியுள்ள இந்த நூல் முழுக்க மார்க்ஸ், எங்கல்சின் பல்வேறு கூற்றுகள், ஏராளமான நூல்களில் ...

கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி!

படம்
  கொத்தடிமையாக வேலை செய்தவர்களை மீட்கும் செய்திகளை நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் அதற்குப் பிறகு என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிவதில்லை. அதுதான் ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றிவிட்டாரல்லவா அப்புறம் என்ன என நினைத்து விடுகிறோம். அதற்குப் பிறகுதான் அவர்களது வாழ்க்கையில் முக்கியமான பகுதி தொடங்குகிறது. இனி பிழைப்பிற்கு என்ன செய்வார்கள் என்பது.  திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், எஸ்ஆர்எல்எம் எனும் திட்டத்தின்படி, கொத்தடிமை தொழிலாளர்களுக்கு சில பயிற்சிகளை கற்றுத் தந்து அவர்களது பொருட்களை சிறகுகள் என்ற பிராண்டில் அமேசானில் சந்தைப்படுத்தி வருகின்றது.  மூங்கில் பொருட்களை கொத்தடிமை தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். இதில் மொபைல் போன் ஸ்டாண்ட், பிரஷ்களை வைக்கும் ஸ்டாண்ட் என பல்வேறு பொருட்களை உருவாக்கி வருகிறார்கள்.  வேலூர் காட்பாடியில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்து வந்தவர் சண்முகம். 2013ஆம் ஆண்டு இவர் அங்கிருந்து மீட்கப்பட்டார். பிறகு ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வேலைகளை செய்து வந்தாலும் குடும்பத்தை வைத்து காப்பாற்றும் அளவுக்கு சம்பாத்தியம் கிடைக்கவில்லை. ...