இடுகைகள்

கியோசி ஒகுபோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களே சொர்க்கம்! அதில் நான் கடவுள்!

படம்
அசுரகுலம் கியோசி ஒகுபோ 1935  ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று ஜப்பானில் பிறந்த கியோசி, பெண்களை வல்லுறவு செய்து கொன்று போடுவதில் வித்தகர். 1971 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மட்டும் ஓவர் டைம் பார்த்து 8 பெண்களை ருசி பார்த்து கொன்று போட்டார். அரசு என்ன செய்யும்? அதேதான். 1976 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி கியோசி ஒகுபோவை தூக்கிலிட்டு கொன்று குற்றத்தின் அறிகுறியை மறைத்து மூடியது. நாற்பத்தொரு நாட்களில் அரசை நடுங்க வைக்க முடியுமா? தனிகா இவன் எனும் புனைப்பெயரைக் கொண்ட கியோசி அதனைச் சாதித்தார். கூர்மையான ரசனை கொண்டவர் கியோசி, 16 முதல் 21 வயது கொண்ட பெண்களை மட்டுமே தன் பசிக்கு ருசி பார்த்தார் கியோசி. ஜப்பானின் டகாசாகி எனும் இடத்தில் பிறந்தவர் கியோசி. அம்மா, பாதி ரஷ்யர், பாதி ஜப்பானியர். வளர்ந்த பருவத்தை பயத்திலேயே ஓட்டும்படி ஆனது. காரணம் அமெரிக்கா - ஜப்பான் போர் அப்போதுதான் நடைபெற்றது. ஆண்டு 1941. 1955 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று கியோசி ஒரு பெண்ணை வல்லுறவு செய்தார். அதே கனவில் டிச. 26 அன்று மற்றொரு பெண்ணை முயற்சித்தார். ஆனால் தேர்வில் தோல்வியுற்றார். அதோடு கைதான அவமானமும் சேர்ந்தது. சிறையில்