இடுகைகள்

அர்ச்சகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அனைத்து சாதியினரும் அர்ச்சகரான தடையாக இருக்கும் பார்ப்பனர்கள்! - 13 ஆண்டுகளாக காத்திருக்கும் மாணவர்கள்

படம்
            காத்திருக்கும் முப்புரிநூல் உரிமை ! தமிழ்நாட்டில் சுவரில் என்னென்ன வரையலாம் என்று சிலர் யோசித்துக்கொண்டிருக்கின்றனர் . சிலர் நாளைக்கு யாருக்கு பூஜை என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர் . ஒருவகையில் தேசிய கட்சியான பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கான பல்வேறு வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது . ஆனால் பதிமூன்று ஆண்டுகளாக பூணூல் தரித்து தமிழக கோவில்களில் அர்ச்சராவதற்கு காத்திருக்கும் 207 பேர்களை யாருமே கண்டுகொள்வதாக தெரியவில்லை . இதில் இரண்டே இரண்டு பேருக்கு மட்டும் அர்ச்சகர் வேலை தரப்பட்டுள்ளது . இப்பட்டியலிலுள்ள இரண்டு பேர் இறந்துவிட்டனர் . எனவே , தற்போது 203 பேர் காத்துக்கிடக்கின்றனர் . தேர்வான மாரிச்சாமி , தியாகராஜன் இருவரும் மதுரையில் பணிபுரிந்துவருகின்றனர் . இவர்கள் விநாயகர் , அய்யப்பன் என இரு தெய்வங்களுக்கு பணிவிடைகள் செய்து வருகின்றனர் . இவர்களுக்கு பதினொருமணி நேர வேலை . மாதம் 9500 சம்பளம் வழங்கப்படுகிறது . பிற வேலைகளைப் போலவே இதில் சாதியைவிட அர்ச்சகரின் தகுதிதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது என அரசு பயிற்சி அர்ச்சகர் சங்க தலைவர் ரங்கநாதன் கூறுகிறார்