இடுகைகள்

மருத்துவர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென்கொரியாவில் மருத்துவர்கள் போராட்டம்!

படம்
  தென்கொரிய மருத்துவர்கள் போராட்டம் எதற்கு? தென்கொரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் காரணமாக நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு, மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க முயன்று வருகிறது. இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். என்ன காரணம்? வேலை செய்யும் சூழ்நிலை மேம்படவில்லை. ஏற்கெனவே கொடுக்கும் ஊதியம் பற்றாக்குறையாக உள்ளது. இதில் கூடுதலாக மருத்துவர்களை கொண்டு வந்து இதே சூழ்நிலையில் தள்ளினால் அது தவறு என்பதுதான் மருத்துவர்களின் வாதம். சீனியர், ஜூனியர் என அனைத்து மருத்துவர்களும் இப்போது போராட்டத்திற்கு வந்துவிட்டனர்.  சியோலில் உள்ள ஐந்து பெரிய மருத்துவமனைகளில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள் 39 சதவீதம் பேர் போராட்டத்தில் உட்கார்ந்துவிட்டனர். இதனால், அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போடப்பட்டு உள்ளன. அவசரசிகிச்சை பிரிவுகளில் உள்ள நோயாளிகளை திரும்ப அனுப்பி வருகின்றனர். அரசு,  இந்த விவகாரத்தில், கிராமப்புறங்களில் மருத்துவர்கள் இல்லை. அவர்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்றால் மருத்துவர்களின் எண்ணிக்கை கூடவேண்ட

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மனிதர்களின் ஏற்றமும், வீழ்ச்சியும்! மருந்து - புனத்தில் குஞ்ஞப்துல்லா

படம்
  எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா மருந்து - நாவல் மருந்து புனத்தில் குஞ்ஞப்துல்லா தமிழில் சு.ராமன் வாரணாசியில் உள்ள மருத்துவமனைக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை. அங்கு பணியாற்றும் பல்வேறு மனிதர்களின் கதை. கதையின் தொடக்கத்தில் தேவதாஸ் என்ற இளைஞர், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக வருகிறார். இப்படி தொடங்கும் கதை பிறகு, லெஷ்மி, டி குமார், ஹஸன், க்வாஜா, தனுஜா, மேட்ரன் ஹெலன், மேரி, குஞ்சம்மா, பியாரோலால் என நிறைய பாத்திரங்களைக் கொண்டதாக மாறுகிறது. இதில், குறிப்பிட்ட பாத்திரங்களை மையப்படுத்தி நகர்கிறது என எதையும் சொல்ல முடியாது. ஆனாலும் மேரிக்கான இடமும், அவளுக்கான விவரணைகளும் நன்றாக உள்ளன. பிறருக்கான வலி, வேதனைகளை அறிந்து மருந்து கொடுத்து அவர்கள் வாழ்வதற்கு தைரியம் தருபவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள். அதேசமயம் அவர்களது தனிப்பட்ட தொழில் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்னைகள், சீர்கேடுகள், மன உளைச்சல்கள் எழுகின்றன. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை புனத்தில் தனது வசீகரமான மொழியில் கூறியுள்ளார். தேவதாஸ் –லெஷ்மி கதை, எப்போதும் போலான காதல் கதையாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்

கிராமங்களுக்கு டாக்டர்கள் தேவை!

படம்
Education Medical Dialogues மகாராஷ்டிரத்தில் எம்பிபிஎஸ் படிக்கவும், முதுநிலைப்படிப்பான எம்டி படித்தவர்களுக்கும் சிறப்பு இட ஒதுக்கீடு உண்டு. இதனை அரசு வழங்குவது, இதில் படிக்கும் மாணவர்கள் ஏழு ஆண்டுகள் கிராமத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற கருத்தில்தான். இந்த இட ஒதுக்கீட்டில் படிப்பவர்கள் கட்டாயமாக ஏழு ஆண்டுகள் பழங்குடி மக்களின் கிராமத்தில் மருத்துவ சேவை செய்வது கட்டாயம். கிராமங்களில் ஏற்படும் தொற்றுநோய் கவனிக்காமல் விட்டால், அந்த இனத்தையே அழித்துவிடும் அபாயம் உள்ளது. இதற்காகவே அரசு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் உள்ள கிராம ப்புற மருத்துவநிலைமை சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதன் பொருள், அங்கு மருத்துவமனைகள் இல்லை என்பதில்லை. சரியான மருத்துவர்கள், செவிலியர்கள் கிடையாது என்கிறார் மருத்துவத்துறையைச் சேர்ந்த தன்னார்வலரான டாக்டர் அமோல் அன்னடேட்.  400 மருத்துவமனைகள், 76 துணை மாவட்ட மருத்துவமனைகள், 26 நகர மருத்துவமனைகள் இருந்துமே இந்த அவலநிலைமை. இந்நிலைமை ஒடிசாவில் உச்சம் தொட்டு நிற்கிறது. இங்கு மருத்துவர்கள் வி0, வி4 என்று தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத