புயல்களுக்குள் புகுந்து ஆராயும் ஆராய்ச்சியாளர்கள்! - பதில் சொல்லுங்க ப்ரோ?
பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ புயல்களை பின்தொடர்ந்து எப்படி தகவல்களை சேகரிக்கிறார்கள்? இதற்கென பயிற்றுவிக்கப்பட்ட வல்லுநர்கள் படை உண்டு. அந்த விமானத்தில் என்னென்ன சமாச்சாரங்கள் இருக்கும் என்று பார்த்துவிடுவோம். புரோப் பாராசூட் இந்த பாராசூட் மெல்ல கீழே விழும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதுவே புயலின் பல்வேறு தகவல்களை சேகரிக்கிறது. ஆறு கி.மீ. தூரத்தை கடக்க ஏழு நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று கடலில் செலுத்தப்படுவது, மற்றவை காற்றின் அழுத்தம் ஈரப்பதம் வேகம், திசை ஆகியவற்றை கணக்கிட உதவுவது. ஜிபிஎஸ் ஆன்டெனா இருக்கும் இதன் மூலம் ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களிலிருந்து தகவல்களை சேகரிக்கிறார்கள். புயலின் வேகம். திசை ஆகியவை இதில் தெரிய வருகிறது. மைக்ரோபுரோச்சர் இந்த சிறு கருவி மூலம் சென்சார்களில் உள்ள தகவல்களை பெற்று அதனை டிஜிட்டல் வடிவிலாக்க முடியும். ரேடியோ டிரான்ஸ்மிட்டர் 0.5 நொடிகளுக்கு ஒருமுறை தட்பவெப்பநிலை, ஈரப்பதம் அழுத்தம். புயலின் தகவல்கள் ஆகியவற்றை விமானத்தின் கணினிகளுக்கு அனுப்பி வைக்கும். புயலின் நடுப்பகுதிக்கு விமானம் சென்றபிறகுதான் பாராசூட்டை கீ