இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேட்டன் பகத்: வரி கொடுக்கும் மக்கள் குற்றவாளிகள் அல்ல!

படம்
2016 ஆம் ஆண்டு வருமான வரி கட்டிய இந்தியர்களின் எண்ணிக்கை 1.2 கோடி. இந்திய மக்கள் தொகை 120 கோடி எனும்போது இந்த வேறுபாட்டை நம்மால் உணர முடியும். இந்த வரி வருவாய் என்பது முழுக்க அலுவலக பணியாளர்களுடையது. ஆண்டு வருமானம் 50 இலட்சத்திற்கு மேலுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1,50,000 என்று வருமானவரித்துறை கூறியுள்ளது ஆச்சரியமளிக்கிறது. மும்பையின் புறநகர் கட்டிடங்களை வாங்கி வசிப்பவர்கள் அப்போது யார்? அவர்கள் இந்த வரி வரம்பிற்குள் வருவார்களா? மாட்டார்களா என்று தெரியவில்லை. நிச்சயம் இந்த வரி ஏய்ப்பை மக்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் செய்திருக்க முடியும் என்றால் குழந்தை கூட நம்பாது. அதேசமயம் முன்கூட்டியவரி, முறையாக வரி கட்டுபவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம் என்பது மிக மோசமானது. உலகில் வேறெங்கும் இதுபோல மோசமான காட்சிகளை நாம் கண்டிருக்க முடியாது. காரணம், அதிகாரிகள் இந்தியாவில் வரி கட்டுபவர்களை குற்றவாளிகளைப் போல கருதுகிறார்கள். இது முறையாக வரி கட்டும் எண்ணமுடையவர்களுக்கு இன்றும் அச்சுறுத்தி வருகிறது. இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்தியா போன்ற நாட்டில் பணக்கார ர்களாக இரு

இந்தியர்களுக்கு டிஜிட்டல் யுகத்திலும் வேலைவாய்ப்புகள் இருக்கிறது!

படம்
ஆனந்த் கோபால் மகிந்திரா...இன்று ட்விட்டரில் யார் இருக்கிறார்களோ இல்லையோ. இந்தியா மற்றும் உலகில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் ஆனந்த் கவனிக்கிறார். நிறுவன முதலாளிக்கு இதற்கெல்லாம் நேரமிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஆனால் அதற்கும் அவர் பதில் வைத்திருக்கிறார். உங்களுடைய நிறுவனத்தில் எந்த பதவி எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்? சீஃப் பீப்பிள் ஆபீசர் என்ற பதவிதான். அல்லது சீஃப் கவர்னன்ஸ் ஆபீசர் என்ற பதவி. காரணம், இன்று நிறுவனம் உலகளவில் உயர அந்நிறுவனத்தின் மதிப்பு, பிராண் ட் முக்கியம். என் வாழ்க்கையில் நான் ஃபெராரி கார் வாங்குவேன். அதுதான் என லட்சியம் என்று ஒருவர் சொன்னால், அவர் எப்படி நேர் வழியில் பயணிப்பார். அப்படி ஒருவர் நிறுவன அதிகாரி என்ற முறையில் தேர்ந்தெடுத்தால் நிறுவனத்தின் மதிப்பு என்னாகும்? நோக்கம் என்னாகும்? சொல்லுங்கள் 20.7 பில்லியன் டாலர்களைக் கொண்ட நிறுவனத்தின் இயக்குநர் நீங்கள். ஆனால் உங்களை வேறெங்கும் பார்ப்பதைவிட ட்விட்டரில் பார்க்க முடிகிறதே? நான் சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசாப்ட் மற்றும் சில மென்பொருள் நிறுவனங்களிடம், அனைத்து நிறுவனங்களையும்

அரசு மருத்துவமனைகளின் அவலம் தீர மோடிகேர் உதவும் - சேட்டன் பகத்

படம்
கடமையைச் செய்ய கையூட்டா? அரசு மருத்துவமனை அவலம்! உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற சாபகேட்டின் விளைவாக 72க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துபோயுள்ளன. இதற்கு தனிநபர் பணிமாற்றம் எந்தளவு சாத்தியமான மாற்றத்தை, விழிப்புணர்வை அங்கு கொண்டுவரும் என்று எனக்குப் புரியவில்லை. இந்திய அரசு இந்தியாவில் ஏராளமான மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதாரநிலையங்களை நடத்தி வருகிறது. மேலும் இவை மட்டுமன்றி எல்ஐசி போன்ற லாபத்தில் இயங்கும் நிதிநிறுவனங்களும் கூட கையில் இருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு தேவையான ஆக்சிஜனுக்கு மட்டும் அரசிடம் பணம் இல்லை என்றால் நாம் இந்த நிலைக்கு வெட்கப்படவேண்டாமா?  இந்தியாவில் அரசுத்துறையில் அலங்கோலத்திற்கு அரசு ஹோட்டல்கள் மற்றும் எம்டிஎன்எல், ஏர் இந்தியா சாட்சியாக இருக்கின்றன. உலகில் வேலை செய்யாமலிருக்கு லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால் மருத்துவமனையில் தன் பணியைக் கடமையைச் செய்யவே காசு கேட்கிறார்கள். காந்தி காலத்து தர்மம் இதுதான்.  இந்த நிலையில் மருத்துவத்துறையை தனியாருக்கு கொடுப்பது சேவையை மேம்படுத்த உதவும். சேவையை க

வங்கிகள் தேசியமயமாக்கம் - உதவிய வங்கிச்சட்டம்!

படம்
வங்கிகள் தேசியமயமாக்கல்! தனியார் நிறுவனங்களாக செயற்பட்டு வரும் வங்கிகளை அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் மசோதாவை சட்டமாக்கி, அதனை அரசின் நிர்வாகத்திற்குள் கொண்டுவருவதே, தேசியமயமாக்குதல் எனப்படும். வங்கி மற்றும் வங்கி சார்ந்த சொத்துக்களும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்தியாவில் இதுவரை 20 வங்கிகள் இம்முறையில் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகள் வங்கி நிறுவனங்கள் சட்டப்படி (“Banking Companies (Acquisition and Transfer of Undertaking) Bill) அரசு நிறுவனங்களாக மாற்றப்பட்டன. 1969ஆம் ஆண்டு பதினான்கு வங்கிகளும், 1980 ஆம் ஆண்டில் 6 வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன. 1894 ஆம் ஆண்டு பஞ்சாப் தேசிய வங்கி கம்பெனிகள் சட்டப்படி உருவாக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரான லாலா லஜபதி ராய் இந்த வங்கியை உருவாக்கிய நிறுவனர்களில் ஒருவர். இந்த வங்கி 1969ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. அதேசமயம் இது பொதுத்துறை வங்கியும் கூட. 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதிய மகிளா வங்கி, பொதுத்துறை வங்கி. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்ல. குறிப்பு: தேசியமயமாக்கம் என்றால், அந்த வங்கி பெருநகரம்,சிறு

சேட்டன் பகத் - வரி கட்டுப்பாட்டை விட தொழில்வளர்ச்சி முக்கியம்

படம்
2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முக்கியக் காரணம், காங்கிரஸ் முந்தைய காலத்தில் செய்த ஊழல்கள் முக்கியக்காரணம். ஆட்சிக்கு வந்த அரசு, உருவாக்கிய முக்கிய சீர்த்திருத்தங்களில் ஒன்று ஜிஎஸ்டி. ஆனால் ஒரே வரியாக இல்லாமல் ஜிஎஸ்டி5 எனும் ஐந்து வரி முறையாக சுழன்றடித்ததில், வணிகப்பட்டப்படிப்பு படித்த எனக்கே தலை சுற்றி போய்விட்டது. இத்தனைக்கும் வணிகப்படிப்பு படித்துவிட்டு வெளிநாடுகளில் முதலீட்டு வங்கியாளராகவும் பணியாற்றிவன். இந்திய அரசு அமல்படுத்திய 0,5,18,28 என சதவீத அளவுகளில் வரியை விதித்ததில் தொழில்துறைகளே பீதியடைந்து கிடக்கின்றன. அதிலும் சினிமா துறைக்கு 28 சதவீதம், டிடிஹெச் செட்டாப் பாக்ஸ்களுக்கு 18 சதவீத வரி என்பதில் என்ன நியாயம் உள்ளதோ? இதில் திருட்டுத்தனமாக இணையதளத்தில் தரவிறக்கிப் பார்ப்பவர்களுக்கு எந்த வரியும் இல்லை என்பது எப்படி சரியானதாக இருக்கும்? அதிலும் மாதந்தோறும் மூன்றுமுறை ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் விண்ணப்பங்களைப் பார்த்தாலே தலை கிறுகிறுக்கிறது. எனக்கே இப்படி என்றால் இதுபற்றி ஏதும் அறியாத தொழில்முனைவோர்களுக்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவில் தொழில்முயற்சிகள் தொ

இராணுவ அதிகாரியின் உயிரைப் பறிக்கும் பேராசை! -

படம்
ஜேம்ஸ்  ஹாட்லி சேஸ் எழுதிய  ஆறாவது அறிவு கண்ணதாசன் பதிப்பகம் திரு.பென்சன் திருமதி பென்சன் திருமணம் முடித்து ஆறு மாதங்கள் ஆகியிருக்கின்றன. பென்சன், பத்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர். வியட்நாம் போரில் தொண்ணூறு பேர்களுக்கு மேல் சுட்டுக்கொன்றவர். துப்பாக்கியைச் சுடும் திறனை தன் வாழ்வாதாரமாக மாற்ற நினைத்து துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளியை வாங்கி புதிய பொலிவாக மாற்றுகிறார். அதுதான் அவருக்கு சிக்கலைக் கொண்டு வருகிறது. அங்கு அவரைச் சந்திக்கும் பணக்காரர், ஐம்பதாயிரம் டாலர்களுக்கு ஒரு டீல் பேசுகிறார். தன் மகனுக்கு ஒன்பதே நாட்களில் குறிபார்த்து சுடக்கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. ஆனால் அவரது மகனுக்கு இருக்கும் மனநலப் பிரச்னைகள் பற்றி பென்சன் தெரிந்துகொள்ளாதது, அவரின் உயிரைப் பறிக்கும் பிரச்னையாக மாறுகிறது. அவரது மனைவி லூசி, பணக்காரர் சவாண்டோ, அவரது அடிமை வேலைக்கார ர்கள் ரேய்முண்டோ, கார்லோ ஆகியோர் பென்சனின் தினசரி வாழ்க்கையை தலைகீழாக்குகிறார்கள். நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்களுடன் கதை நகர்கிறது. கிளைமேக்ஸ் பணம் எல்லாவற்றையும்

சமூக பொறுப்பு சட்டம் செயல்படுகிறதா? - இந்திய அரசு கண்காணிக்கிறதா?

படம்
இந்திய அரசின் சமூகநலப்பொறுப்பு (CSR Act) சட்டம் (2013 ) அமலானபிறகு, இதுதொடர்பாக செயற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா போன்ற பல்வேறு நிலப்பரப்பு மற்றும் கலாசாரம் சார்ந்த நாட்டில் அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்று சேர்வது மிகச்சிரமம். இதனைச் சாத்தியப்படுத்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உருவாயின.  இவை அரசின் திட்டங்களை பல்வேறு அடிப்படை வசதிகளற்ற தொலைதூரக் கிராமங்களிலும் கொண்டு சென்று சேர்க்கும் பணியைச் செய்கின்றன. உலக நாடுகளில் தொழில்நிறுவனங்கள் தம் வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சமூகநலத் திட்டங்களுக்கு செலவிடவேண்டும் என்பது சட்டமாகவே உள்ளது. இந்திய அரசு சமூகப்பொறுப்பு திட்டத்தை, 2013 ஆம் ஆண்டு மேம்படுத்தி உருவாக்கியது. இதன் விளைவாக சூழல், கல்வி, வாழ்க்கைத்தரம், சம்பளப் பற்றாக்குறை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் உழைக்கும் தன்னார்வலர்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இம்முறையில் இந்தியாவில் கேட்ஸ் பவுண்டேஷன், டாடா டிரஸ்ட், அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர். 1980 -90 களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருமளவில்

முகமறியும் சோதனை - இந்திய அரசின் புதிய முயற்சி!

படம்
முகமறியும் சோதனையை ஆதரிக்கலாமா?  இந்தியாவில் முகமறியும் சோதனை ஆந்திரத்திலுள்ள ஹைதராபாத் நகரில் அறிமுகமாகி உள்ளது. விமானநிலைய பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜூலை 1 முதல் ராஜீவ்காந்தி சர்வதேச விமானநிலையத்தில் முகமறியும் சோதனை பரிசோதனை முறையில் தொடங்கியுள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்துவதில் தன்னார்வமாக 250 பேர் இணைந்துள்ளனர். பெங்களூருவிலுள்ள கெம்பகௌடா விமானநிலையம், போர்ச்சுகீசிய நிறுவனமான விஷன் பாக்ஸூடன் முகமறியும் சோதனை தொழில்நுட்பத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அரசின் டிஜி யாத்ரா கொள்கைக்கேற்ப இப்புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. 2018ஆம் ஆண்டு உருவான இச்சட்டப்படி, இவ்வசதியைப் பயன்படுத்த பாஸ்போர்ட், பான் கார்டு அல்லது பயோமெட்ரிக் வசதிகளைக் கொண்ட ஆதார் இருந்தால் கூட போதும்.  காவல்துறை, தேசிய குற்றப்பதிவு ஆணையம்  முகமறியும் சோதனைகளைப் பயன்படுத்த ஒப்பந்தங்களைக் கோரியுள்ளது.  அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், மக்களின் பாதுகாப்புக்காக முகமறியும் சோதனைகளை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.  வேலை செய்யும் விதம்! பயணிகள் தம் விமான ந

ஃபேஸ்புக்கின் லிப்ரா புகழ்பெறுமா? - புதிய கிரிப்டோகரன்சி!

படம்
லிப்ரா கிரிப்டோ கரன்சி மக்களை ஈர்க்குமா?  சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், லிப்ரா எனும் புதிய கிரிப்ட்டோ கரன்சியை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.  நவீன உலகில் அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இணையத்தையே நம்பியுள்ளன. இதில் மக்கள் செய்யும் பணப்பரிமாற்றமும் கூட பல்வேறு வகையில் பாதுகாப்பானதாகவும் நவீனமாகவும் மாறிவருகிறது. இணையத்தில் கட்டற்ற வணிகம் செய்வதற்காக உருவானதுதான் கிரிப்டோகரன்சி. இதிலுள்ள பலமும் பலவீனமும் இதனை அரசும், மத்திய வங்கிகளும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான். பிளாக்செயின் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கிரிப்டோகரன்சிகள் இயங்கிவருகின்றன. இந்தியாவில் வணிகத்திற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை. இதனால், கிரிப்டோகரன்சிகளின் புழக்கம் குறையவெல்லாம் இல்லை. சட்டத்திற்கு புறம்பாகவும் பிட்காயின் கரன்சிகள், இணையம் வழியாக வணிகத்தில் புழங்கி வருகின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவிருக்கும் லிப்ரா கரன்சி, கட்டற்றதல்ல. இதனை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள தன்னார்வ அமைப்பு கட்டுப்படுத்துகிறது. உலகெங்கும் உள்ள லிப்ரா அசோச

கணினி புரோகிராமிங் அறிவு தேவை!

படம்
 இந்தியாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய கல்வி வாரியங்கள் கணினிபுரோகிராமிங்கை பாடமாக கல்வித்திட்டத்தில் சேர்த்துள்ளன. இன்று வீட்டு ஹாலில் உள்ள ஸ்மார்ட் டிவிகள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் கார்டூன் தொடர்களை ஒரம்கட்டியுள்ளன. வீட்டில் விளையாடும் செஸ் போன்ற விளையாட்டுகளும் கூட அந்த காலத்தில் விளையாடிய விளையாட்டுகளாகிவிட்டன. வீட்டினுள்ளே அல்லது வெளியே விளையாடும் விளையாட்டுகளை விட இணைய விளையாட்டுகள், புதிர்களையே சிறுவர்கள் இன்று விரும்புகின்றனர். எனவேதான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 6,7, 8 ஆம் வகுப்புகளில் விசுவல் பேசிக் மற்றும் ஹெச்டிஎம்எல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.  ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில், 9, 10ஆம் வகுப்புகளில் ஜாவா, சி மொழி ஆகிய பாடங்கள் கற்றுத்தருகின்றனர். ஆனால் இது கட்டாயமல்ல: மாணவர்களின் தேர்வாகவே இருக்கிறது. தற்போது தொடக்கப் பள்ளியில் படிக்கும் 65 சதவீத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, தற்போதுள்ளவற்றை விட மாறுபட்டதாக இருக்கும் என்று வேர்ல்டு எகனாமிக் ஃபாரம் தன் எதிர்கால வேலைவாய்ப்புகள் என்ற அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. எதிர்கால வாய்ப்புகள் கணினி புரோகிராமிங் ம

துப்பாக்கி விதிகள் மாற்றவேண்டுமா? - கலிஃபோர்னியாவில் புதிய பிரச்னை!

படம்
வடக்கு கலிஃபோர்னியாவிலுள்ள கில்ராய் எனுமிடத்தில் உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் வெள்ளை இனவெறியர் துப்பாக்கியில் சுட்டதில் 12 பேர் காயமடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2014 ஆம் ஆண்டிலிருந்து கலிஃபோர்னியாவில் நடைபெறும் ஏழாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது. டெக்சாஸ் மாநிலம் இவ்வகையில் நான்கு துப்பாக்கிச்சூடுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச்சூட்டை செய்தவருக்கு வயது 19 தான். சான்டினோ வில்லியம் லீகன் என்பவர் போலீசாரால் உணவுத்திருவிழா இடத்திலேயே கொல்லப்பட்டார். இவர் இன்ஸ்டாகிராம் கணக்கில் துப்பாக்கிச்சூட்டிற்கு சில மணிநேரம் முன்பு மைட் ஈஸ் ரைட் எனும் ராக்னர் ரெட்பியர்டு 1890 ஆண்டு எழுதிய நூலை பகிர்ந்துள்ளார். இது வெள்ளையர்களின் இனமேன்மையை தூக்கி பிடிக்கும் நூல். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடுகள் நடைபெறும் சமயம் மட்டும் பேசப்படும் சமாச்சாரமாக மாறிவிட்டது. தேசிய ரைபிள் அசோசியேஷனின் பணம் பெற்று பிரசாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் நிச்சயம் துப்பாக்கிகளை இளைஞர்கள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பில்லை. வெள்ளை இனவாதம் என்பதை போலியாக உருவாக்கி தேர்தலில் வெல்ல

அரசு தன் கடமைகளை ஒழுங்காக செய்தாலே போதும்! - சேட்டன் பகத்

படம்
ஹைதரபாத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை உயர்கல்வி நிறுவனங்கள் எப்படி அரசியல் முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது எடுத்துக்காட்டாக உள்ளது. அம்மாணவர், கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, கல்விக்கட்டணம் கட்டாததற்கு மனிதவளத்துறையின் தூண்டுதல் மூலம் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரோஹித்தின் அரசியல் செயல்பாடுகள் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது கல்லூரி நிர்வாகமே ஒழிய மனித வளத்துறை அல்ல. பண்டாரு தத்தாத்ரேயாவிடம், ஏபிவிபி மாணவர் அணி புகார் கொடுக்க அவர் உடனே மனித வளத்துறை அமைச்சரான ஸ்மிருதி ராணியிடம் தொடர்புகொண்டார். மனிதவளத்துறை கொடுத்த அழுத்தத்தால், கல்லூரி நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட ஐவரை விடுதியிலிருந்து நீக்கியிருக்கிறது. இந்த நடவடிக்கை ஏற்படுத்திய அழுத்த த்தால் மாணவர் ரோஹித்தின் உயிர் பறிபோயிருக்கிறது. இதில் அவர் தலித் என்பது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. இதில் நாம் பேச ஏதுமில்லை. அரசு, தரவேண்டிய உதவித்தொகையை தாமதமின்றி அனுப்பி வைத்திருக்கலாம் என்பது பற்றி இந்த விவகாரத்தில் யாரும் பேசவில்லை. அரசு தன் தரப்பிலான பிரச்னைகளை சரி செய்திருந்தால் போதுமானத

சேட்டன் பகத் - படிக்கும்போது கட்சிகளுக்கு உழைக்காதீர்கள்!

படம்
டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கும், ஐஐடி ஆகிய இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஐஐடியில் வகுப்புகளை பங்க் செய்வது, கலாட்டா செய்வது, தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என ஜாலியாக இருப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது, அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றுக்கு வேலையே கிடையாது.  அப்படி உள்ள மாணவர்கள் உடனே அந்நிறுவனத்திலிருந்து வெளியே தள்ளப்படுவார்கள். நாங்கள் படிக்கும்போது டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை ஏக்கமாக பார்ப்பது இதற்காகத்தான். எங்களுக்கு அப்படியே எதிர்மறையாக இருப்பார்கள். அவர்களும்  அங்கு படிக்கத்தான் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அனுபவித்த சுதந்திரம் எங்களுக்கு பொறாமையாக இருந்தது. அரசியல் சினிமா என அவர்களுக்கு அனைத்திலும் சுதந்திரம், தனித்தனி கருத்துகள் இருந்தன. அதனை பகிரங்கமாக அவர்கள் கூறவும் முடிந்தது. ஆனால் அதேசமயம் அவர்கள் வளாகத்தில் செய்யும் அரசியல் ரீதியான போராட்டங்களை நான் ரசிக்கவில்லை. காரணம், மாணவர்கள் கல்லூரிக்கு வருவது தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவே. இதில் அரசியல் கட்சிகளுக்கு உதவும்படியான நடவடிக்கைகள் எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. கருத்து சுதந்திரத்தை

துரியோதனின் கதை! - கௌரவன் சொல்லும் தர்மத்தின் கதை!

படம்
கௌரவன் ஆனந்த் நீலகண்டன் எதிர்நாயகர்களைப் பற்றி கதைவரிசையில் ராவணனை அடுத்து கௌரவர்களில் ஒருவரான துரியோதனின் கதை. முதல்பாகத்தில் துரியோதனின் இளமைப் பருவம், பெற்றோரின் அன்பு கிடைக்காத வாழ்க்கையில் நண்பர்களே ஆதரவாக அமைகிறார்கள். ஏழைமக்கள் பற்றி கவலைப்படுபவனுக்கு பலராமனின் கதாயுதம் மூலம் கிடைக்கும் பலம், பீமனைப் பற்றிய பயத்தை நொறுக்குகிறது. இதன் விளைவாக பலம் பெறுபவன் சாதிமுறைக்கு எதிர்ப்பாக கர்ணன், அஸ்வத்தாமன், ஜயத்ரன் என நண்பர்களை சேர்த்து அஸ்தினாபுரத்தில் வாழ்கிறான். ஆனால் காந்தார இளவரசன் சகுனியில் மனதில் தன் பெற்றோரை பீஷ்மர் கொன்ற வன்மம் குறையாமல் உள்ளது. இதற்காக சிறு கொள்ளையனான துர்ஜயன் மற்றும் கட்டிடக் கலைஞனான ஊழல் மனிதர் புரோச்சனன் ஆகியோரைப் பயன்படுத்துகிறான். பரதகண்டம், தென்னக மன்னர்கள் கூட்டமைப்பு என சாதிமுறைகளால் பிளவுபட்டு கிடக்கிறது. இதற்கு பரசுராமன் காரணமாக இருக்கிறார். அவருடன் செய்யும் உடன்பாட்டை நினைத்து பீஷ்மர் மருகுகிறார். அதேசமயம் இவர் தன் இளம் வயதை துரியோதனுடன் ஒப்பிட்டு ஒன்றுபோலவே இருக்கிறது என ஆறுதல் கொள்கிறார். பட்டத்து இளவரசராக துரியோதனன் கவனமாக ச

காதல் மன்னன் கல்யாண மாலைக்கு ரெடியாவதுதான் இந்த ஹிப்பி!

படம்
ஹிப்பி - தெலுங்கு டிஎன் கிருஷ்ணா ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர் இசை: நிவாஸ் கே பிரசன்னா ஆஹா பொங்கி வழியும் இளமை, திகங்கனாவின் அழகு பார்த்துக்கொண்டே இருக்கலாம். பாடல்களும் படமாக்கப்பட்ட விதமும் பிரமாதம். நிவாஸின் இசை காதில் தென்றலாக ஒலிக்கிறது. நவீன காதலர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும், லிவ் இன் உறவையும் காட்டியிருக்கிறார்கள். நாயகிக்கு நிகராக சட்டையே வேண்டாம், என நாயகன் கார்த்திகேயா அடிக்கடை வெற்று மேலாக சுற்றுகிறார். சிக்ஸ்பேக் உடம்பு வைத்திருக்கிறார். அதற்காக சட்டையை கழற்றிப்போட்டுக்கொண்டே இருந்தால் எப்படி ப்ரோ? நாங்க ஹீரோயினைப் பார்ப்போமா இல்லை உங்களைப் பார்ப்போமா? ஹிப்பியாக தெருவில் சண்டை போட்டு கிடைக்கும் காசை பெண்களுக்குச் செலவு செய்த மஜாவாக இருக்கும் தேவா, எப்படி அமுல்யதாவிடம் காதல் சொல்லி கைமா ஆகிறார் என்பதுதான் கதை. கதையிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் நீங்கள் இதில் என்ன எதிர்பார்க்க முடியும் என்று. அதை மட்டுமே இயக்குநர் தர முயற்சி செய்திருக்கிறார். வெண்ணிலா கிஷோரின் காமெடி கச்சிதமாக வேலை செய்கிறது. படம் இளைஞர்களுக்கானது என்பதால், பத்தாவது படிக

அறிவியல் நூல்கள் விமர்சனம்!

படம்
புத்தக அறிமுகம் இன்று உலகில் மைக்ரோசாஃப்ட், லினக்ஸ், ஆப்பிள் ஆகிய இயக்க முறைகள் எப்படி தங்கள் பாதுகாப்பை ஒழுங்கு படுத்திக்கொள்கின்றன. சைபர் குழுக்களின் பல்வேறு தாக்குதல்கள்தான் இவற்றை சாதிக்கின்றன. பொதுவாக வணிக நிறுவனங்கள், தங்கள் நிறுவனப் பொருட்களை விற்றவுடன் மற்ற மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மறந்துவிடுகிறார்கள். இதனை நினைவுபடுத்தும் பல்வேறு சைபர் குழுக்கள் உலகம் முழுக்க தீவிரமாக வேலை செய்கின்றனர். கல்ட் ஆப் டெட் கவ் அப்படி ஒரு சைபர் குழுதான். பெயர் தெரிந்தளவு உறுப்பினர்கள் வெளியே தெரியாமல் செயற்பட்டு பல்வேறு டெக் நிறுவனங்கள் தம் பாதுகாப்பை சரி செய்துகொள்ள இடைவிடாமல் தொந்தரவு கொடுத்த தன்னார்வலர்கள் குழு இது. இந்நூல் இவர்களைப் பற்றித்தான் கூறுகிறது. உக்ரைனின் செர்னோபிலில் நடந்த அணுஉலை விபத்தை நீங்கள் மறக்கவே முடியாது. காரணம், இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சு இன்றுவரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று சுற்றுலாவுக்கான இடமாக மாறினாலும், கதிர்வீச்சு, அணு உலை பற்றிய கவனத்தை ஏற்படுத்திய வகையில் செர்னோபில் மிக முக்கியமானது. இந்நூல் விபத்து ஏற்பட்ட மணிநேரத்தை

சுயநல உலகில் நட்புக்கு என்ன அவசியம்?

படம்
மயிலாப்பூர் டைம்ஸ் - நட்புக்கு என்ன அவசியம்? நீங்கள் கிராமத்தில் வசித்தாலும் சரி, நகரத்தில் வசித்தாலும் சரி உங்களுக்கென நட்புகள் உருவாகும். இதில் நீங்கள் மோசமாக நடந்துகொள்கிறவர் என்றால் உங்களுக்கு கிடைக்கும் நட்பும் அதுபோல அமைவது விதி. சரியாக நடந்துகொண்டால், இயல்பாகவே அந்த ரேஞ்சில், ஜென்டில் மேனாக லினன் ஷர்ட் போட்டு பைக்கை செகண்ட் ஹேண்டில் வாங்கினால் கூட கற்பகாம்பாள் கபாலியில் வெங்காய பக்கோடா வாங்கி கொடு என கேட்டுத் தின்னும் நட்புகளும் அமையலாம். எனக்கு இந்த வகையில் அமைந்த நட்புகள் எல்லாமே குறிப்பிட்ட லட்சியப்போக்கு கொண்டவர்கள்தான். அதேசமயம் அமைதியைப் பார்த்து என்ன சொன்னாலும் கேட்பான், வம்பு தும்பு இல்லாத ஆத்மா என கடைவிரித்து நட்பு பாராட்டிய ஆட்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம். அனைத்திலும் தொட்டும் தொடாத பிராணியாகவே இருந்து வந்திருக்கிறேன். காரணம், நான் எந்த நட்பையும் தேடிப்போய் அமைத்துக்கொள்வதில்லை. தானாகவே அமைந்தால் சரி. இல்லையென்றால் ரயில் பயண நட்பு போல அமைந்தாலும் சரி, காலகட்டத்திற்குள் கட்டுப்பட்டதுதானே அப்படியே இறங்கிப் போய்விடுவேன். பத்திரிகை வேலையில் இருக்கும்போது

வீல்சேரில் ஆர்ட் - கலக்கும் ஐரிஷ் சகோதரிகள்!

படம்
வீல்சேரில் ஆர்ட்! அய்ல்பே கீன், தன்னுடைய மாற்றுத்திறனாளி தங்கையின் வீல்சேரையே கலைப்படைப்பாக மாற்றியிருக்கிறார். ஸ்பினை பைஃபிடா எனும் குறைபாட்டால் கீனின் சகோதரி பாதிக்கப்பட்டார். இதன்விளைவாக சக்கர நாற்காலியை நம்பியுள்ளார். இவரது சக்கர நாற்காலியை வண்ணமாக்கியுள்ளார் கீன். இது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. ஆனால் இது தற்காலிகமானதுதான். டப்ளினைச் சேர்ந்த இஸ்ஸி வீல்ஸ் எனும் அமைப்பை இச்சகோதரிகள் தொடங்கியுள்ளனர். இவர்கள் சக்கர நாற்காலியில் பயன்படுத்தும் வண்ணச் சக்கரங்களை தயாரித்து விற்று வருகின்றனர். இதனை விற்க இவர் விளம்பரம் ஏதும் செய்வதில்லை. இன்ஸ்டாகிராம் பதிவுகள் மட்டும் விளம்பரத்தின் பணியை செவ்வனே செய்கின்றன. 2016 ஆம் ஆண்டு இஸ்ஸி வீல்ஸ் என்ற திட்டத்தை கல்லூரி புராஜெக்டாக தொடங்கினார் கீன். இவர் ஓராண்டாக தன் சகோதரியின் சக்கர நாற்காலியை எப்படி மேம்படுத்துவது என யோசித்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். கீன் மற்றும் இசபெல் இருவரும் இந்த அமைப்பு மூலம் வரும் விற்பனை வருமானத்தின் ஒரு பகுதியை அயர்லாந்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுடைய அமைப்புக்கு வழங்கி வருகின்றனர். 35 நாடுகள

கூலிக்கு வேலை செய்யும் அறவீரன் டியுராங்கோ! - வன்முறை பூமியின் ரணகளம்!

படம்
டியுராங்கோ அதிரடிக்கும்  சத்தமின்றி யுத்தம் செய் தீதும் நன்றும் பிறர் தர வாரா - 3 வது அத்தியாயம் டியுராங்கோ, ஆலன் என்ற சுரங்க முதலாளிக்கு உதவி செய்ய வருகிறார். ஆனால் அங்கு ஆலன் முதலிலேயே டீல் என்ற போட்டி தொழிலதிபரால் கொலைசெய்யப்பட்டு கிடக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் டியுராங்கோ என நகரில் அறிவிக்கப்படுகிறது. இதனால் கொலைப்பழியுடன் அரசு கைதியாகும் பிரசனை சேர, அப்பழியைத் துடைத்து ஆலனின் மனைவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்படும் சதியை உடைக்கிறார் டியுராங்கோ என்பதுதான் இந்த பரபர காமிக்ஸ் கதை. இதில் முழுக்க டீல் எனும் தொழிலதிபர், ஷெரீப் ஜென்கின்ஸ் ஆகியரோர் கதாபாத்திரம் வலுவாக இருக்கிறது. இதில் டியுராங்கோவின் கதாபாத்திரம் மிக வலுவாக இல்லை. முழுக்க தன்னை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றிக்கொள்வதோடு, ஆலனின் மனைவியை நேக்காக எப்படி காப்பாற்றினார் என்பதோடு கதை முடிந்தது. அதேசமயம் டியுராங்கோவுக்கு உதவும் போட்டி நிறுவன ஆள் அவருக்கே துரோகம் செய்வது என மாறாத மனித குணங்கள், நீதி நெறிகளுகுக சவால்விடும் நகரங்கள், ஊழல் அரசியல்வாதிகள் என மனிதநேயத்தை தேடும் அவசியத்தை ஏற்படுத்த

நான் கரடியா, மனிதனா? - கரடிக்கே குழப்பம் - பிராங்க் தாஷ்லின் நூல்

படம்
நீ கரடி என்று யார் சொன்னது? - The bear That Wasnot ஃபிராங்க் தாஷ்லின் மொழிபெயர்ப்பு - ஆதி வள்ளியப்பன் தொழில்யுகத்தில் மனிதர்களை எப்படியெல்லாம் கூலி உயர்வு, உழைப்பு உயர்வானது என்று சொல்லி கசக்கிப் பிழிகிறார்கள் என்பதை அங்கதமாக சொல்லியிருக்கிறார்கள். எழுத்தாளர் ஃபிராங்க் தாஷ்லின் எழுதி வரைந்த நூல் இது. கரடி இரை கிடைக்காத பனிக்காலத்தில் தூங்குவதையும், அப்போது காட்டுக்குள் புகும் மனிதர்களை காடுகளை அழித்து தொழிற்சாலைக்கான மூலப்பொருட்களாக்குகிறார்கள். இதன் விளைவாக கரடி இரைக்கு உணவு இன்றி தவித்துப்போகிறது. பின் வேறு வழியின்றி தொழிற்சாலையில் நுழைய, அவர்கள் கரடியையும் வேலையாள் என நம்ப வைத்து வேலை செய்ய வைக்கிறார்கள். உண்மையில் கரடிக்கே ஒரு நிமிடம் நான் ரோம போர்வை போர்த்திய மனிதன்தானோ என எண்ணத் தொடங்கிவிடுகிறது. பிரமாதமான கதையை தமிழில் அமெரிக்க நூலின் வடிவமைப்பிலேயே செய்திருக்கிறார்கள். வள்ளியப்பனின் மொழி கதையின் போக்குக்கு பேருதவி செய்கிறது. வடிவமைப்பு குணசேகரன். படிக்க வசதியாக இருக்கிறது. நன்றி -பாலகிருஷ்ணன்

காமிக்ஸ் எழுத்தாளர் ஆலன் மூர் ஓய்வு - டிசி காமிக்ஸ் சாதனையாளர்.

படம்
டிசி காமிக்ஸ் மேட் இதழை நிறுத்துவது பற்றிய செய்தியைப் படித்திருப்பீர்கள். அதோடு வரவேற்பு குறைந்த தால் வயது வந்தோருக்கான வெர்டிகோ எனும் காமிக்சையும் அடுத்து டிசி காமிக்ஸ் நிறுத்தவிருக்கிறது. முக்கியமானது காமிக்ஸ் இல்லாமல் போவது அல்ல. வாட்ச்மேன்(1987), வி ஃபார் வென்டெட்டா(1989) உள்ளிட்ட காமிக்ஸ்களை எழுதிய எழுத்தாளர் ஆலன் மூர் விரைவில் ஓய்வு பெறவிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு லீக் ஆப் தி எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மேன் எனும் காமிக்ஸின் நான்காவது பாகத்தை எழுதியவர், இனி எழுதுவதற்கு எனக்கு ஏதுமில்லை. ஏறத்தாழ என்னால் என்ன செய்ய முடியுமோ அந்த விஷயங்களை நான் செய்துவிட்டேன் என்று தி கார்டியன் பத்திரிகையில் கூறியிருந்தார். டிசி நாயகர்கள் சற்று மனிதர்களோடு புழங்கும்படி மனித த்தன்மையோடு இருந்தனர். மேலும் இவரது படத்தின் எதிர் நாயகர்களும் அப்படியே. இந்த வேறுபாட்டை தொண்ணூறுகளிலிருந்து மூரின் படைப்புகளில் உணரலாம். இவர் காலத்தில் எழுதி வந்த கைமன், மோரிசன் ஆகியோரோடு ஒப்பிடும் போது வேறுபாட்டை எளிதாக உணர முடியும்.   1982 - 85 இல் மிராக்கிள்மேன் என்ற காமிக்ஸ் கதைத் தொகுதியைத் தொடங்கினார் மூர். இதில்

சோதனைகளுக்கான சரியான நூல்!

படம்
வண்ண வண்ணச் சோதனைகள் பேரா. பி.கே . ரவீந்திரன் தமிழில் பேரா. பி.ஆர். ரமணி  அறிவியல் வெளியீடு விலை. ரூ. 25  மாணவர்களுக்கு தியரிகளை விட சிக்கலானதாக உள்ளது சோதனைச் சாலைகளில் செய்யும் சோதனைகள்தான். வேதிப்பொருட்களின் தன்மைகளை முழுமையாக அறிந்தால்தான் அதனை எப்படி பயன்படுத்துவது என புரிந்துகொள்ள முடியும். இந்த நூலில் ஆசிரியர் ரவீந்திரன் அதனை எளிமையாக வகுப்பறையில் நடப்பது போல எழுதியுள்ளார். படிக்கவும் புரிந்துகொள்ளவும் இது எளிமையாக உள்ளது. பள்ளிகளுக்கு வழங்குவதற்கான சரியான நூல்.  நன்றி - பாலகிருஷ்ணன்

கார்கில் போர் நினைவு தினம் - 20 ஆம் ஆண்டு

படம்
1999 ஆம் ஆண்டு வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் கார்கில் போர் நடைபெற்றது. பாக்.இராணுவத்தை விரட்டி அடித்து நாட்டைக் காப்பாற்றியது இந்திய இராணுவம் என ஊடகங்கள் அலறின. ஆனால் அரசுக்கு பெருமை என்றாலும் பலியான இராணுவ வீர ர்களின் எண்ணிக்கை கணிசமானது. கார்கில் போர் பற்றிய தகவல் தொகுப்பு இதோ! கார்கிலில் பாக். இராணுவம் பல்வேறு தடைகளையும் அரண்களையும் உருவாக்கியதமு இதன் எண்ணிக்கை 140. இந்திய நிலப்பரப்பில் பாக் இராணுவம் 8 கி.மீ முன்னேறி வந்தது. ஏப்ரல் 1999 அன்று 7 பட்டாலியன்கள் கார்கிலின் வடக்குப்பகுதியில் குவிந்தன. 23 நாட்கள் போரில் பாகிஸ்தான் இராணுவத்தை, இந்தியப்படை அடித்து விரட்டி சாதித்தது. இப்போரில் மேஜர் ராஜேஷ் அதிகாரி, கேப்டன் விவேக் குப்தா, லியோடனன்ட் கர்னல் ஜி.விஸ்வநாதன் ஆகியோர் பலியானார்கள். டைகர் ஹில்ஸ் பகுதியில் போர் நடைபெற்றது. இதன் உயரம் 16 ஆயிரம் அடி உயரம். இப்போரில் பாகிஸ்தான் இராணுவம் 772 வீர ர்களையும் 69 அதிகாரிகளையும் பலி கொடுத்தது. முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானியர்கள், நூறு தோட்டாக்களை சுட்டனர். இதில் இந்திய விமானப்படையின் ஒரு விமானம் கூட பாதிக்கப்படவில்லை. 1

அமெரிக்காவில் மரணதண்டனை திரும்ப வருகிறது!

ஏறத்தாழ மரண தண்டனை என்பது பல்வேறு நாடுகளில் கைவிடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப் தலைமையிலான அரசு மீண்டும் மரண தண்டனையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். அரசு அட்டர்னியான வில்லியம் பர் , இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளையும் , பெண்களையும் கற்பழித்து கொலை செய்து சமூக அமைதியைக் கெடுத்தவர்கள் இவர்கள் என மரணதண்டனையை நியாயப்படுத்தியுள்ளது அரசு. சமூகத்தைக் குலைக்கும் மக்களை அச்சுறுத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக அரசு செயல்படும். மேலும் மரண தண்டனை என்பது மாநிலங்களின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க மாநிலங்களில் 29 இல் மட்டுமே மரண தண்டனை அமலில் உள்ளது. மரணதண்டனை விதிப்பதில் அரசுக்குச் செலவு, தவறான தீர்ப்பு இழப்பீடு, இனவெறுப்பு என பல்வேறு பிரச்னைகள் மறைந்துள்ளன. இத்தனையையும் இனி ட்ரம்ப் அரசு சமாளிக்கவேண்டும்.  நன்றி - சிஎன்என்

சார்பியல் விதிக்கு வயது 100!

படம்
சார்பியல் தியரிக்கு வயது 100! 1919 ஆம் ஆண்டு பிரபல இயற்பியலாளர் ஐன்ஸ்டீனால் கூறப்பட்ட சார்பியல் தியரிக்கு இந்த ஆண்டு நூறு வயதாகிறது. 1919 ஆம் மே 29 அன்று ஏற்பட்ட சூரிய கிரகணம், ஐன்ஸ்டீனின் சார்பியல் தியரியை அறிவியலாளர்  மட்டுமல்ல மக்களுக்கும் புரிய வைத்தது. சிறப்பு சார்பியல் விதி, பொது சார்பியல் விதி என இருவிதிகள் உண்டு. இங்கு கூறப்படுவது பொது சார்பியல் விதி. இதன் அடிப்படையில்தான் இன்று விண்வெளி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இப்போது சார்பியல் விதி எளிய வடிவில்: எழுபது கி.மீ வேகத்தில் செல்லும் பேருந்தில்  சென்று கொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்கள் கையிலுள்ள பந்தை முன்னோக்கி பத்து கி.மீ. வேகத்தில் எறிகிறீர்கள். பந்தின் வேகம் என்ன என்று உங்களைக் கேட்டால், பத்து கி.மீ. என்று கூறுவீர்கள். பேருந்துக்கு வெளியே நிற்பவர், எண்பது கி.மீ. வேகத்தில் பந்தை எறிந்தீர்கள் என்பார். ஒருவர் இருக்கும் இடம் சார்ந்து பொருளின் வேகத்தைப் புரிந்துகொள்கிறார். வேகம் என்ற இடத்தில் ஒளியைப் பொறுத்துங்கள். இங்கு வேறுபாடு, ஒளியின் வேகம் மாறாது என்பதுதான். இதுதான் பொது சார்பியல் விதி.  சூரியன் போன்ற

பிளாஸ்டிக்கில் உணவுப்பொருட்கள்! - ஆபத்தா?

படம்
பிளாஸ்டிக்கின் சேர்மானத்தில் நீக்கமற கலந்துள்ள பொருள் பிஸ்பெனால் - பிபிஏ. தற்போது உணவுப்பொருட்கள் மற்றும் நீர் வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்கும் பிளாஸ்டிக்குகளில் பிஸ்பெனால் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இதிலும் ஆபத்து இல்லாமல் இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில்,  பிஸ்பெனால் எஸ் மற்றும் பிஸ்பெனால் எஃப் எனும் இரு பொருட்கள் உள்ள பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் உடல் பருமன் பிரச்னை ஏற்படும் என ஜர்னல் ஆஃப் தி எண்டோகிரைன் சொசைட்டி இதழ் கூறியுள்ளது. பிபிஏக்கும் மேற்சொன்ன இருபொருட்களுக்குமான அமைப்பு பெரிதும் வேறுபடவில்லை. இவை பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்கள் மற்றும் பிற பொருட்களில் காணப்படுகின்றன. எண்டோகிரைன் சொசைட்டி பத்திரிகை 2012 ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, பிபிஏ வேதிப்பொருள் குழந்தைகளுக்கு உடல் பருமனை ஏற்படுத்துவதாக கண்டுபிடித்து கூறியிருந்தது. பிபிஎஸ், பிபிஎஃப் ஆகிய பொருட்கள் உடல் பருமனை நேரடியாக அதிகரிப்பதில்லை. இவை உடல் பருமனால் அவதிப்படுபவர்களை பாதிக்கிறது என்கிறது இந்த ஆராய்ச்சி. இதனால் பிபிஏக்கு மாற்று இல்லையா என வேதனைப்பட அவசியமில்லை. அம

பேஸ் ஆப்பின் நிறுவனர் பேட்டி!

படம்
உலகமெங்கும் சக்கைப்போடு போடும் பேஸ் ஆப்பின் நிறுவனர் யாரோஸ்லேவ் கொன்சரோவ், மைக்ரோசாப்டில் பணியாற்றியவர். இன்று நாற்பது வயதில் உலகம் முழுக்க தன் பேஸ் ஆப் மூலம் பிரபலமாகி இருக்கிறார். இத்தனைக்கு இந்த ஆப் செய்வது உங்கள் தற்போதைய புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் வயதாக்கி காட்டுவது மட்டுமே. இக்கம்பெனியில் பணியாற்றுவது பனிரெண்டு பேர்கள்தான். ரஷ்ய தயாரிப்பு என்றால் அமெரிக்கா சும்மாயிருக்குமா உடனே பேஸ் ஆப் பயனர்களின் தகவல்களை திருடுகிறது என கட்டுரைகள் எழுதுவதோடு அங்குள்ள அரசு சட்டமன்ற உறுப்பினர்களும் இதுபற்றி வாய்க்கு வந்ததை பேசத் தொடங்கிவிட்டனர். இற்கு யாரோஸ்லோவ் என்ன பதில் சொல்லுகிறார்? இரண்டு மணிநேரத்தில் எனக்கு 300 போன் அழைப்புகள் வந்துவிட்டன. என்னால் தினசரி வேலைகளைக் கூட செய்யமுடியவில்லை. பேஸ் ஆப்பின் பிரைவசியை மேம்படுத்தும் பணியில்தான் இருக்கிறோம். எங்களுடைய ஆப் இன்று ஆண்ட்ராய்டு, ஐஸ்டோர் என அனைத்திலும் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் இதில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என பகிர்ந்து மகிழ்கின்றனர். காரணம், யாருக்குமே பத்து வரு

டீப் நியூட் ஆப்புக்கு என்ன இன்ஸ்பிரேஷன்?

படம்
எழுபது எண்பதுகளில் கண்ணாடி மூலம் பிறரின் ஆடை தாண்டி பார்க்குற கலாசாரம் இருந்துச்சு. டீப் நியூட் லோகோ கூட அதைத்தான் சொல்லுது. நான் பல பத்திரிகைகள், இதழ்கள் பார்த்துத்தான் இதை டிசைன் பண்ணினேன். இரண்டு, மூணு ஸ்டார்ட் அப் பண்ணினேன். எல்லாமே தோல்வி. அந்த நஷ்டத்தை இதில் ஈடுகட்ட முடியும்னு நம்பினேன். இந்த ஆப்பை செஞ்சதால நான் வாயேரிச ஆள்னு நினைச்சுராதீங்க. ஜஸ்ட் எனக்கு டெக்னாலஜின்னா புடிக்கும். அவ்வளவுதான். இப்போ நீங்க பார்த்த து பெண்களுக்கானது. அடுத்த ஆண்களுக்கானதை ரெடி செஞ்சு வருவேன். நீங்க பாத்த இந்த ஆப் ரெண்டு வருஷ உழைப்பில் ரெடியானது. பகல்ல பாக்குற போட்டோவை இரவுக்கு மாத்தும் டெக்னிக் பத்தி நிறைய படித்து கான் நெட்வொர்க்ஸ் மூலம் இதை செஞ்சேன். நிறையப் பேரு என்கிட்ட கேக்குறாங்க. இது தப்பில்லையா? பெண்களை நிர்வாணமாக காட்டுறதுன்னு... இதை நான் செய்யலீன்னா இன்னொருத்தர் செய்வார். இதை நீங்க தொழில்நுட்பமா பாக்கணும். டீப் நியூட் மட்டுமல்ல இதில் செய்யுறத நீங்க 30 நிமிஷ டுட்டோரியலைப் படிச்சா போட்டோஷாப் மூலமாக செய்யலாமே? Add caption நீங்க எந்த எண்ணத்துல இதில் இணைஞ்சிருக்கீங்களோ அது

டீப் நியூட் ஆப்பின் ஜெகஜால வேலை - பெண்ணை நிர்வாணமாக்கும் முறை!

படம்
டீப் நியூட் ஆப் எப்படி செயல்படுகிறது? பெண்களின் படங்களை அப்லோடு செய்தால் மிகச்சிறப்பாக செயல்பட்டு அவர்களின் ஆடைகளை விலக்கி முழு நிர்வாணமாக காட்டும் விதமாக உருவாகி இருக்கிறது டீப் நியூட் ஆப். ஆண்களின் படங்களுக்கும் பெண்களுக்கான உறுப்புகளைப் பொருத்திக் காட்டுகிறது. மிக குறைந்த உடைகள் இருந்தால் இந்த ஆப் குஷியாக செயல்படுகிறது. இணைய உலகில் காதலித்த பெண்களை பழிவாங்க ரிவென்ச் பார்ன் முறையில் அவர்களை பழிவாங்கி வருகின்றனர். இந்த லட்சணத்தில் டீப் நியூட் அவர்களுக்கு வசதியான ஆயுதமாகிவிடும். இது தவறு. என்கிறார் ரிவென்ஞ் பார்ன் முறைகளுக்கு எதிராக செயல்படும் கேட்லின் பௌடன். ஆனால் அதேசமயம் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த ஆப், பதிவேற்றப்படும் படங்களை தானாகவே துகிலுரித்துக் காட்டினாலும் அது ஊகப்படம்தான். நிஜமல்ல. ஆனால் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் நீங்கள் அதை விளக்க முடியாது. நினைத்து பார்க்க முடியாத நொடிகளில் உங்கள் மானம் கான்கார்டு விமானம் ஏறி செவ்வாய்க்கு சென்றுவிடும் என்பதும் சரியான வாதம்தான். மேலும் இந்த ஆப்பை பல்வேறு படங்களில் சோதித்த தில் நீச்சலுடை பெண்களின் படங

ஏஐ உருவாக்கும் ஆபாச படங்கள்!

படம்
செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் ஆபாச படங்கள்! இணையத்தில் பிரபல நடிகைகளின் முகங்களைப் பொருத்தி ஆபாச படங்கள் முதலில் வெளியானபோது யாரும் அதனைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவை அனைத்தும் வக்கிர கும்பல்கள் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களைப் பயன்படுத்தி செய்தவை என்றால் அது செய்திதானே? அதைத்தான் குளோபல் டைம்ஸ் மற்றும் தி பெய்ஜிங் டைம்ஸ் ஆகிய நாளிதழ்கள் செய்திகளாக்கி வெளியிட்டுள்ளன. படங்கள் மட்டுமல்ல வீடியோக்களையும் போலியாக தயாரித்து வெளியிடத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக பராக் ஒபாமா மற்றும் மார்க் ஸூக்கர்பெர்க் தான் சொல்லாத விஷயங்களையும் செயற்கை நுண்ணறிவு மூலம் பேசத் தொடங்கியுள்ளனர். மேலும் ஸ்கார்லெட் ஜோகன்சன் மற்றும கல் கடோட் ஆகியோரின் புகைப்படங்களும் ஆபாச அழகிகளின் உடல்களைப் பெற்று உலகமெங்கும் ஆபாசப்பட ரசிகர்களை சந்தோஷப்பட வைத்து அல்லது அதிர்ச்சியடைய வைத்து வருகின்றனர். சமூக வலைத்தளமான வெய்போவில் டிவி நடிகை தொடர்பான வீடியோதான் பலருக்கும் போலி வீடியோக்கள் பற்றிய செய்தியை தீவிரமாக்கியது. அலிபாபாவின் வலைத்தளத்திலும் கூட பல்வேறு போலி செலிபிரிட்டிகளின் படங்கள், வீடியோக்கள் இடம்பெற்றுள

இதயத்தை எகிறவைக்கும் செக்ஸ்! - கிரான்க் - ஜேசன் ஆடும் ஆட்டம்!

படம்
கற்புக்கரசியான நாயகி! கிரான்க் இயக்குநர் - மார்க் நெவால்டைன், பிரையன் டெய்லர் ஒளிப்பதிவு - ஆடம் பிடில் இசை - பால் ஹஸ்லிங்கர் ஹீரோவின் ஆன்ம நண்பர்! கூலிக்கொலை செய்யறவரு, எதிரிகளோடு சதியால  தன் இதயத்தை இழந்து விட்டு லோலாய் படுவதாம்ப்பா கதை. கதை, ஹீரோவோட பேரு, நாயகி யாருங்கிறதையெல்லாம் ஒத்தி வெச்சிட்டு ஜாலியாக சீனு வைட்லா படம் பாக்குற ஃபீல்ல படம் பார்த்தா படம் ஜாலி அதிர்வேட்டு. ஹீரோவுக்கு சுயநினைவு இல்லாதபோது அவரோட ஹார்ட்டு, கிட்னி, கடைசியாக அந்தரங்க மேட்டர் உட்பட வெட்டி எடுக்க ஜப்பான் கூட்டம் திட்டம் போடுது. அங்கதான் ட்விஸ்ட். அவரை ரிவென்ஞ் எடுக்க பேட்டரி இதயத்தை பொருத்துறாங்க. அது இயங்க அவர் ஓடிக்கிட்டே இருக்கணும். ஆச்சா? அதோட ஒரிஜினல் இதயத்தையும் தேடிப் பிடுங்கணும்னு ஓவர் டைம் வேலை. இதயத்தை ஓடவைக்க செக்ஸூம் ஒரு வழிதான்! ஜேசன் ஆக்சன் அதிர்ச்சி என அத்தனையிலும் ஒரே ரியாக்ஷன் காட்டி பின்னி எடுக்கிறாரு. இதயத்திருடனை தேடி குஜால் கிளப்புக்கு ஜேசன் வர்றாரு. அங்க,  மார்ல எலக்ட்ரிக் டேப் ஒட்டி ஆடுற ஏமி ஸ்மார்ட்டின் டான்ஸ் செம சூடு ஏத்துது. பதறிப்போற

இந்தவார புத்தக வாசிப்பு!

படம்
ரஷ்யாதான் 1959 ஆம் ஆண்டு விண்கலனை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அந்நாட்டை முந்தும் வேகத்தில் அமெரிக்கா, மனிதர்களை தயாரித்து நிலவுக்கு அனுப்பியது மிகப்பெரும் சாதனை. இன்றும் நாம் பிஎஸ்எல்வியா, ஜிஎஸ்எல்வியா என தடுமாறும் நிலையில் 1969 ஆம் ஆண்டு துணிச்சலாக கருவிகளோடு மனிதர்களையும் அனுப்பிய அதிபர்  ஜான் எஃப் கென்னடி மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் முயற்சிகள், பிரச்னைகள் ஆகியவற்றை அனுபவக்கட்டுரைகளாக பகிர்கிற நூல் இது. வயதாவது என்பது பலவீனமாக பார்க்கும் சமூகம் மேற்கத்தியது. ஆசியாவில் அதனை பெரும் பலமாக, பல்வேறு பொறுப்புகளை கொடுக்க நரைத்த முடி உதவுகிறது. இன்னும் ஐந்தே ஆண்டுகளில் 50 வயது தொடங்கினாலே ஏன், 40 தொடங்கினாலே பெருசு என்று கூறத் தொடங்விடுவார்கள். நிலைமை அந்தளவு மாறியுள்ளது. இச்சூழலில் நாற்பது வயது ஆட்களின் சூழல், மனநிலைமை, அவர்களின் பிரச்னைகள் ஆகியவற்றைக் குறித்து இந்த நூல் பேசுகிறது. உலகில் அதிக விலைக்கு விற்கப்படும் உணவுப்பொருள் ட்ரஃபிள். இது ஒரு பூஞ்சை என்றால் நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள். நூல் முழுக்க பூஞ்சை ஏன் அதிக வில

குழந்தை தொழிலாளர் முறைக்கு ஆதரவாக பிரேசில் அதிபர்!

படம்
பிரேசில் வலதுசாரி அதிபர் பொல்சனாரோ, குழந்தை தொழிலாளராக வேலை செய்வது தவறில்லை என்று தன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்து அங்கு தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரேசில் நாட்டில் பதிமூன்று வயதுக்கு குறைந்தவர்கள் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என்பது சட்டமாக உள்ளது. பதினான்கு வயதானவர்கள் வேலைக்கான ஒப்பந்த த்தில் கையொப்பமிடலாம்.  இதற்கு ஆதரவாக ஃபெடரல் நீதிபதி மெர்சிலஸ் பிரெசிலஸ், தானும் பனிரெண்டு வயதில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி பணத்தின் மதிப்பை தெரிந்துகொண்டதாக பதிவிட்டிருக்கிறார். இம்முறையில் அதிபர் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவும் வாய்ப்பு உள்ளது. உலக தொழிலாளர் அமைப்பு, குழந்தை தொழிலாளர்கள் இளம் வயதில் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களின் மனம், உடல் பாதிக்கப்படுவதாக கூறுகிறது. பிரேசிலில் தற்போது, 2.5 மில்லியன் பேர் 5 லிருந்து 17 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர் என்று அங்கு எடுக்கப்பட்ட புள்ளியியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் குழந்தை தொழிலாளர் தொடர்பாக அங்கு ஆண்டுதோறும் 43 ஆயிரம் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. குடும்ப வறுமை காரணமாக தொழிலி

தெரசா மேக்கு விடைகொடுக்கும் நேரம் !

படம்
போரிஸ் ஜான்சன் அடுத்த இங்கிலாந்து பிரதமராகிறார். இப்போதே அவரை இங்கிலாந்தின் அடுத்த டிரம்ப் என்று ஒரு கூட்டமும், மற்றொரு கூட்டம் அவர்தான் அடுத்த சர்ச்சில் என்றும் பேசிக்கொண்டிருக்கிறது. தெரசா மேக்கு இது பிரிவு உபசார நேரம். இன்னும் சிறிது நேரத்தில் டௌனிங் தெருவில் தன் கணவர் பிலிப்புடன் விருந்தில் பங்கேற்று தன்னுடன் பணியாற்றிய அலுவலக ஊழியர்களுக்கு விடை சொல்லுவார். இது தெரசா மேவின் இறுதி சொற்பொழிவுக்கு முன்னாடி நடைபெறும். இவர் பக்கிங்காம் பேலஸ் சென்று ராணி முன்னே தன் பதவியை விட்டு விலகியதைக் கூறுவார். மந்திரிசபையை ஜான்சன் மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. அடுத்து பிரெக்ஸிட் திட்டத்தை அனைவரும் ஏற்கச் செய்யும் பெரும் பொறுப்பு இவரின் தோள் மீது ஏறுகிறது. தெரசா மே, ராணியின் முன் பதவி விலகுவதோடு போரிஸ் ஜான்சன் பதவியேற்பதையும் பார்க்கும் அவலம் வேறு உள்ளது. இது பழங்கால நெறிமுறைப்படி நடைபெறும் சடங்கு. தெரசா மே பதவி விலகினாலும் அவர் மூன்றாண்டுகளாக பிரதமராக பதவி வகித்திருக்கிறார். பிரிட்டனின் வரலாற்றில் இரண்டாவது பெண்மணி இவர். நன்றி: சிஎன்என்

சாலையில் சில கதாபாத்திரங்கள்- இதுதாங்க சென்னை

படம்
சாலையில் சில கதாபாத்திரங்கள்... தினசரி சாலையில் நீங்கள் பயணிக்கும்போது, பல்வேறு மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் சில குறிப்பிட்ட மனிதர்களை மறக்கவே முடியாது. காரணம், அவர்கள் சாலையில் நடந்து கொள்ளும் விதம்தான். வெரைட்டி கதாபாத்திரங்கள் இதோ! ஹெலிகாப்டர் ஆட்டோ! தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு தனி அடையாளம் உண்டு. அது என்ன? ஹெலிகாப்டர் போல எந்த இடத்திலும் லேண்ட் ஆகும் வசதிதான் அது. பின்னே வருபவர்கள் இதனைக் கவனிக்காவிட்டால் புத்தூர் கட்டு நிச்சயம். இடதுபக்கம் இன்டிகேட்டர் போட்டு வலது பக்கம் கைகாட்டி நேரே செல்லும் பாணியை உருவாக்கியது நம்ம ஆட்டோஜிக்கள்தான். இன்று இவர்களையும் லெஃப்டில் ஓவர்டேக் செய்து பறக்கிறது உணவு டெலிவரிப் படை. ஸ்கூட்டி ராணி! ஸ்கூட்டர் கம்பெனியே, காம்போ பிரேக் வைத்து தந்தாலும், நம்பிக்கையின்றி கால்களை  ஊன்றலாமா என்ற கேள்வியுடன் பயணிப்பவர்கள்தான் இவர்கள். இடதா, வலதா என அவர்களுக்குமே புரியாமல் சாலையில் உத்தேசமாக ஒரு திசையில் நிற்பார்கள். ஸ்கூட்டி பெண்கள், பச்சை விழுந்ததும் எஃப் 1 வேகத்தில் பறப்பதைப் பார்த்து இளம் பைக்கர்களுக்கே புரையேறுகிறது. சாலைச்