"பிரதமர் பற்றி கவலையாக இருக்கிறது!" - சஷிதரூர்
முத்தாரம் Mini சஷிதரூர் அண்மையில் why iam a hindu என்ற நூலை எழுதியுள்ளார். இதில் ஆளும் கட்சியின் இந்துத்துவா அரசியலைப் பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். நூலுக்கு ஏன் இந்த தலைப்பு ? ஆளும் சக்திகளின் இந்து நம்பிக்கை நெருக்கடிகளைப் பற்றிக்குறிப்பிட வேறு தலைப்பு பொருத்தமாக இருக்காது . விவேகானந்தவர் வழியிலான சகிப்புத்தன்மை கொண்ட இந்துகள் , இன்னொருவர் ஆங்கிலமுறை போக்கிரி இந்துகள் என இருவருக்குமான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இந்துத்துவா மற்றும் இந்துயிஸம் ஆகியவற்றை குறிப்பிடுகிறதா ? இந்துத்துவா என்பது அரசியல் கருத்தியல் . இது மதத்தை குறிப்பதல்ல . மதம் எனும் சுவரில் தங்கள் கருத்தியல் எனும் ஆணியை அடித்து மக்களை அலைகழிக்கிறார்கள் . வரலாற்றை திருத்தி எழுதும் காலமிது . இது படைப்பாளிகள் , அறிஞர்களை எப்படி பாதிக்கிறது ? வரலாற்றை மாற்றி எழுதுவது இறந்தகாலத்தை மறுப்பதும் கூடத்தான் . தங்கள் நேர்மை மூலம் காரணங்களை அறிந்து வரலாற்றை காப்பாற்றுவதே இந்திய அறிஞர்களின் அர்ப்பணிப்பான பணி .