குற்றங்களை கணக்கீடு செய்வதில் ஏற்படும் தடுமாற்றங்கள், ஆய்வறிக்கை செயல்பாடு
பொதுவாக காவல்துறையில் வழக்குகளை எளிதாக பதிய மாட்டார்கள். பதிந்தால் அதை விசாரிக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என நிறைய நடைமுறை பிரச்னைகளை உண்டு. அதேநேரத்தில் பதிவாகும் வழக்குகளை வைத்துதான் குறிப்பிட்ட வட்டாரத்தில் குற்றங்கள் நடைபெறுகின்றனவா, அதன் சதவீதம் என்ன, குற்றத்தை குறைக்க என்னென்ன விஷயங்களைச் செய்யலாம் என்று அரசு யோசித்து திட்டமிடுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டத்தில் இதற்கென தனி அறிக்கைகளை வெளியிடுகிறது. 1970ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஹூட், ஸ்பார்க்ஸ் ஆகியோர் செய்த ஆய்வில் மூன்றில் இருபங்கு குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தங்களது அறிக்கையில் கூறினர். அதே சமயம் இங்கிலாந்தில் பதிவான குற்றங்களை ஆராய்ந்தபோது, அதில் கொள்ளை சார்ந்த குற்றச்செயல்கள் எழுபது சதவீதமும், 27 சதவீத குற்றங்கள் சைக்கிள் திருட்டாகவும் இருந்தது. மோசடி, பாலியல் குற்றங்கள், மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. செல்வாக்கு மிக்க குடும்பங்கள், சாதி, மதம் சார்ந்த பிரச்னைகள் எல்லாம் பெரும்பாலும் ஆவணங்களில் பதிவு செய்யப்படாமலேயே தீர்த்து வைக்கப்படுகின்றன. சாதாரணமா