இடுகைகள்

புலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - பூனைக்குடும்பம்

படம்
  தெரிஞ்சுக்கோ - பூனைக்குடும்பம் காட்டுவிலங்குகளில் அதாவது நிலத்தில் வேட்டையாடுவதில் சிறந்தவை பூனைக்குடும்ப விலங்குகள்தான். சிங்கம், புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை, சீட்டா ஆகியவை வலிமையும் அபாரமான வேட்டைத்திறனும் கொண்டவை. காட்டில் வாழும் சிங்கத்தின் ஆயுள் 13-15 ஆண்டுகளாகும். சிங்கத்தின் கர்ஜனை முழக்கம் 5-8 கி.மீ தொலைவு வரை கேட்கும்.   பனிச்சிறுத்தை, 5,859 மீட்டர் உயரத்தில் வாழக்கூடிய திறன் பெற்றது. இரவில் வேட்டையாடும் புலியின கண்பார்வை திறன், மனிதர்களை விட ஆறுமடங்கு ஆற்றல் வாய்ந்தது. அமெரிக்காவில் வாழும் பூனை குடும்ப விலங்குகளில் பெரியது ஜாகுவார்தான். 1.7 மீட்டர் நீளத்தில், 120 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இரவில் உணவுக்காக மட்டும் ஜாகுவார் பத்து கி.மீ. தொலைவுக்கு பயணிக்கிறது. ஜாகுவாரின் குட்டிகள் பிறக்கையில் கண்பார்வை இல்லாமல் பிறந்து, பதினான்கு நாட்களுக்குப் பிறகு பார்க்கும் திறன் பெறுகின்றன. பூனை குடும்ப விலங்குகளில் இது பொதுவான அம்சம். புலிகளில் ஒன்பது துணைப்பிரிவுகள் உள்ளன. பலி, காஸ்பியன், ஜாவன் ஆகிய பிரிவுகள் ஏறத்தாழ அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 150 ஆண்டுகளில் ப

இயற்கைப் பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த வலிமையான அரசியல் தலைமை தேவை - பெலிண்டா ரைட் , சூழலியலாளர்

படம்
  பெலிண்டா ரைட், சூழலியலாளர் பெலிண்டா ரைட், சூழலியலாளர்  பெலிண்டா ரைட் தலைவர், வைல்ட்லைஃப் புரடக்‌ஷன் சொசைட்டி ஆஃப் இந்தியா இந்தியா, புலிகள் பாதுகாப்பில்,   50 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? இத்தனை ஆண்டுகள் கழித்தும் காடுகள் அழியாமல் இருக்கின்றன. அதில் வாழ்ந்த புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்ற செய்தி அதிசயமாகவே உள்ளது. புலிகளின் வாழிடத்திற்கு அருகில் வாழ்ந்து வந்த மக்களின் சகிப்புத்தன்மை, புலிப்பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பான அணுகுமுறை ஆகியவற்றை பற்றி இந்தியா நிச்சயமாக பெருமைப்படலாம். ஆனால், எதிர்காலத்தில் இந்தியா மனிதர் விலங்கு மோதல் என்ற பெரிய சவாலை சந்திக்கவேண்டியுள்ளது. மக்களிடம், காடுகளில் உள்ள புலிகளைப் பாதுகாப்பதில் முன்னர் காட்டிய சகிப்புத்தன்மை மெல்ல மறைந்து வருகிறது. அரசின் எரிவாயுவிற்கான மானியம் குறையும்போது காட்டில் உள்ள விறகுகளைத் தேடி மக்கள் வருவார்கள், நகர கட்டுமானத்திற்கான சட்டவிரோத மணல் குவாரிகள், காட்டு விலங்குகளைத் தடுக்கும் சட்டவிரோத மின்சார வேலிகள் ஆகியவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். காட்டுத்தீ மற்றும் காட்டில்

வன உரிமைச் சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை - எம் கே ரஞ்சித் சிங், இயற்கைச்சூழல் செயல்பாட்டாளர்

படம்
  எம் கே ரஞ்சித் சிங் வனப்பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட அடிப்படையான விஷயங்களை செய்தவர், திரு. எம் கே ரஞ்சித் சிங். இவர் புலிகளைக் காப்பதற்கான பல்வேறு செயல்பாடுகளை செய்வதோடு, காப்பகங்களை உருவாக்கவும் உதவியுள்ளார். குஜராத்தின் வங்கானர் எனும் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர், ரஞ்சித் சிங். தனது செயல்பாடுகளின் விளைவாக இந்தியாவின் முக்கியமான வனப்பாதுகாப்பு செயல்பாட்டாளராக அறியப்பட்டு வருகிறார். பதினொரு வனப்பாதுகாப்பு சரணாலயங்கள், எட்டு தேசியப் பூங்காங்களை உருவாக்குவதில் பங்களித்துள்ளார். அவரிடம் புலிகளின் பாதுகாப்பு பற்றி பேசினோம். புலிகளின் பாதுகாப்பு திட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? 1972ஆம் ஆண்டு, புராஜெக்ட் டைகர் குழுவில் செயலாளராக இருந்தேன். அடுத்த ஆண்டு கைலாஷ் சங்கலா இந்த பதவிக்கு வந்தார். புலிகளை பாதுகாத்து அதன் எண்ணிக்கையை பெருக்குவதே எங்கள் குழுவின் நோக்கமாக இருந்த து. எங்கள் குழுவின் லட்சியத்தை எட்டியதாகவே நினைக்கிறேன். இந்த திட்டம் மட்டும் உருவாக்கப்படாமல் இருந்திருந்தால்   நிறைய துணை விலங்கினங்களைக் காப்பாற்ற முடியாமலேயே போயிருக்க

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் நேரும் உயிரிழப்புகளை தடுத்து புலிகளை காக்க முயல்கிறோம் - வீரேந்திர திவாரி

படம்
  வீரேந்திர திவாரி வீரேந்திர திவாரி தலைவர், வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா திவாரி, மகாராஷ்டிராவில் பணியாற்றி வருகிறார். காடுகளின் பாதுகாப்பு, அதில் வாழும் புலிகளின் அழிவு, அதை தடுக்க அமைப்பு செய்யும் முயற்சிகள் பற்றி பேசினோம். உங்கள் அமைப்பின் பங்களிப்பு பற்றி கூறுங்கள். நாட்டின் காடுகளிலுள்ள புலிகளைப் பாதுகாப்பது, அதன் எண்ணிக்கை பற்றிய ஆய்வுகளை செய்வது. இதன் அடிப்படையில் பல்வேறு கொள்கைகளை வகுப்பது ஆகியவற்றை வைல்ட் லைஃப் ஆஃப் இந்தியா அமைப்பு செய்கிறது. அடுத்து, புலிகள் வாழும் நிலப்பரப்பு, அதன் வரைபடம், அழிந்த புலிகளை மீட்பது, அதன் மரபணு சார்ந்த அடையாளம், தேவையான வனத்துறை ஊழியர்களை நியமிப்பது ஆகியவற்றையும் செய்து வருகிறோம். உங்களது பார்வையில் இந்திய மாநிலங்களில் எவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன? கடந்த 50 ஆண்டுகளாக, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் புலிகளைக் காப்பது தொடர்பாக பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார்கள். புலிகளைக் காப்பதில் உள்ள சவால்கள் என்னென்ன?   சட்டவிரோத வேட்டை, மின்சார வேலி, பாதுகாப்ப

முதலில் காதலியைக் காப்பாற்றிவிட்டு பிறகு காட்டைக் காப்பாற்ற முயலும் வன அதிகாரி - கொண்டா பொலம் - கிரிஷ்

படம்
  கொண்டா பொலம்   இயக்குநர் கிரிஷ்   குடிமைத் தேர்வுகள் எழுதிய பிற்படுத்தப்பட்ட பழங்குடியை ஒத்த சாதி இளைஞர், தனது கதையை அதிகாரிகளிடம் சொல்லுகிறார். அவரது நினைவுகளின் வழியே கதை பயணிக்கிறது. வைஷ்ணவ் தேஜின் –( சின்னவன்) வாழும் ஊரின் வேலையே ஆடு மேய்த்து பிழைப்பதுதான். ஆனால் அவனது அப்பா, ஆடுகளை விற்று அவனை பட்டப்படிப்பு படிக்க வைக்கிறார். இதன்மூலம் அவன் நகரத்தில் போய் பிழைத்துக் கொள்வான் என நினைக்கிறார். ஆனால் படித்த ஐடி படிப்பும், வாயில் நுழையாத ஆங்கிலமும் சின்னவனை வேலையில்லாத பட்டதாரியாக்குகிறது. இந்த நிலையில் அவன் திரும்ப கிராமத்துக்கு வருகிறான். ஆடுகளை மேய்க்கப் போவதற்கு ஆட்கள்   குறைய,   அவனும் ஆட்களோடு மலைக்கு செல்கிறான். அங்கு சென்று சில மாதங்கள் தங்கி ஆடுகளை மேய்த்து கூட்டி வர வேண்டும். இந்த பயணத்தில் அவன் விலங்குகளை மேய்ப்பதோடு காட்டுக்குள் உள்ள பல்வேறு சதிகார மனிதர்களையும், ஆடுகளை தின்னும் புலியையும் சந்திக்கிறான். பள்ளித்தோழி ஓபுலம்மா மூலம் சின்னவன் நிறைய விஷயங்களைக் கற்கிறான். அதில் காதலும் ஒன்று. அவனுக்கு காதலை விட முக்கியமானதாக காடுகளில் மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்ட

காடுகளை பாதுகாக்க அதை நேசிக்கும் பளியன் செய்யும் கொலை - கானகன் - லஷ்மி சரவணக்குமார்

படம்
  கானகன் (நாவல்) லஷ்மி சரவணக்குமார்   பளியர்களின் வாழ்க்கையை பேசும் நாவல். பளியக்குடிகள் காடுகளை நேசித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு வேலை என்பது விவசாயம் சார்ந்த்துதான். அதுவும் கூட காட்டின் இயல்பறிந்து நடப்பதுதான். அதை அழித்து தன் வழிக்கு கொண்டு வருவது அல்ல. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்காமலா இருக்கும்? அப்படியான அழிவுகளை தொடங்கி வைப்பவனாக இருக்கிறான் தங்கப்பன். நாவல் முழுக்க வரும் பாத்திரம் வேட்டைக்காரரான தங்கப்பன்தான். இவன்தான் வேட்டை என்பதை வாழ்நாள் முழுக்க தொடரும் தன்னை மறக்கும் நிலையாக, பாலுறவு போன்று பார்க்கும் மனிதன். இதனால்தான் தங்கப்பனுக்கு வேட்டை என்பது முக்கியமான ஒன்று. இந்த வேட்டையாடும் வெறியான மனநிலையை கஞ்சா தோட்ட முதலாளிகள், விவசாய பண்ணைக்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நாவலின் முதல் காட்சியே காட்டின் அழிவைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுதான். காட்டின் உணவுச்சங்கிலியை பாதுகாக்கும் குட்டி ஈன்ற பெண் புலியை வேட்டையாடி கொல்கிறார்கள். அதில் தங்கப்பன், மாட்டுப் பண்ணை நடத்தும் அன்சாரிக்காக புலியை வேட்டையாடுகிறான். இதில் ஏற்படும் வினை அதற்கான விளை

இந்தியாவின் பசுமைப்பரப்பை காக்க இந்திராகாந்தி எடுத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும்! - இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

படம்
              இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு முடவன் குட்டி முகமது காலச்சுவடு மூல ஆசிரியர் - ஜெய்ராம் ரமேஷ் நூல் மொத்தம் 500 பக்கங்களைக் கொண்டது. அத்தனையிலும் நாம் அறிவது முழுக்க எதிர்மறையாக கூறப்படும் அரசியல் தலைவரைப் பற்றி.. இந்திரா பிரியதர்ஷினி எனும் நேருவின் மகளைப் பற்றியதுதான் நூல். நூலில் அவர் அதிகாரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்படி சூழலியல் பற்றி கவனம் கொண்டிருந்தார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த விஷயங்களை செய்யாமல், மாநில முதல்வர்களுக்கு இயற்கை சூழலியல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வைத்தது பற்றி நூலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எமர்ஜென்சி நிலையை உருவாக்கியவர் என்று மட்டுமே இந்திராவை ஊடகங்கள் அடையாளப்படுத்தி அவரது பிற செயல்களை மறைத்துவிட்டனர். ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் எழுதிய இந்திரா பற்றிய இந்த நூல் சூழலியல் பல்வே்று ஆபத்துக்குள்ளாகி வரும் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. நூலில் இந்திரா எழுதிய பல்வேறு கடிதங்கள் இயற்கை அமைப்புகள், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், ஆவணக் காப்பகங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு

மின்சார வேலியால் கொல்லப்படும் யானைகள்!

படம்
  அதிகரிக்கும் மனிதர், விலங்குகள் மோதல்! கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 222 யானைகள் இறந்துள்ளன. இவற்றின் இறப்புக்கு முக்கியக் காரணம் மின்சார வேலி ஆகும். நச்சு, ரயில் மோதல், சட்டவிரோத வேட்டை ஆகியவையும் பிற காரணங்களாகும். 2019 - 2021 காலகட்டத்தில் 197 புலிகள் இறந்துள்ளன. இதில் சட்டவிரோத வேட்டை மூலம் 29 புலிகள் கொல்லப்பட்டன என மத்திய வனம், சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அஸ்வின் சௌபே தகவல் தெரிவித்துள்ளார்.  அதேநேரம், விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதன்படி, 2019-2022 காலகட்டத்தில் 1,579 மனிதர்கள் விலங்குகளால் தாக்கப்பட்டு பலியாகியிருக்கிறார்கள். அதிக மனிதர்கள் பலியான மாநிலங்களில் ஒடிஷா முதல் இடத்திலும், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சட்டீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட புலி காப்பகங்களில், மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 125 பேர், புலிகளால் தாக்கப்பட்டு மரணித்துள்ளனர். இந்த பிரிவில் மகாராஷ்டிரம் 61 இறப்புகள் என அதிகளவிலான இறப்பு எண்ணிக்கையைக்

பனிச்சிறுத்தையை லடாக்கில் படம் பிடித்தது சவாலான சம்பவம்! - ஆதித்ய டிக்கி சிங்

படம்
  ஆதித்ய டிக்கி சிங் காட்டுயிர் புகைப்படக்கலைஞர் புகைப்படத்துறைக்குள் எப்போது நுழைந்தீர்கள்? 1999ஆம் ஆண்டு. இந்தியாவின் ரந்தம்பூரில் பிபிசிக்கான ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அதற்கான நான்கு பேர் கொண்ட குழுவில் நானும் ஒருவன். ஒளிப்பதிவாளர்கள் தங்கள் பணியில் தீவிரமாக இருந்தனர். நான் பணியின்போது புகைப்படம் எடுக்கும் தேவை இருந்தது. அங்கிருந்தவர்களில் என்னால் மட்டும்தான் கேமராவின் கையேட்டை ஆங்கிலத்தில் படிக்க முடிந்தது. இப்படித்தான் அந்த வேலையை செய்து புகைப்படக்காரனானேன்.  கேமராவை எப்போதாவது சேதப்படுத்தி உள்ளீர்களா? நிச்சயமாக. இரண்டு லென்ஸ்கள், இரண்டு கேமராக்களை சேதப்படுத்தியுள்ளேன். அதை நினைத்து அப்போது பெரிய வருத்தம்... புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்ல நினைக்கிறீர்களா? பல்லாயிரக்கணக்கான மணி நேரங்கள் நீங்கள் உழைத்தாக வேண்டும். எனவே, தயாராக இருங்கள். உழையுங்கள்.  புலிகளை புகைப்படம் எடுப்பதில் நீங்கள் புகழ்பெற்றவர். அப்படி புகைப்படம் எடுத்ததில் எது சிறந்த விஷயம்? நிலத்தில் வாழும் வேட்டையாடிகளை படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. ரந்தம்பூரில் உள்ள பல தலைமுறை புலிக

புலிகள் சரணாலயத்தை சுற்றி வளைக்கும் மாவோயிஸ்டுகள்!

படம்
  மத்தியப் பிரதேசத்தில் புலிகள் காப்பகம் ஒன்றுள்ளது. அதன்பெயர், கன்ஹா. 2,162 சதுர கி.மீ. பரப்பு கொண்ட நிலம். இங்கு புலி, காட்டெருமை கரடி, காட்டு நாய் என நிறைய விலங்குகள் உண்டு. இதைத்தாண்டி அதை இந்தியளவில் கவனப்படுத்தும் அம்சம் ஒன்று இருக்கிறது. அதுதான், மாவோயிஸ்ட்டுகள். இந்த புலிகள் காப்பகத்தில் நூற்றுக்கும் அதிகமாக புலிகள் வாழ்க்கின்றன. இங்கு தங்கள் கூடாரத்தை விரித்துள்ள மாவோயிஸ்ட்கள் அங்கு பணியாற்றும் வனக்காவலர்களை சுட்டுக்கொன்று வருகின்றனர்.  பாலகாட், மண்ட்லா என இரு மாவட்டங்களுக்குள் புலிகள் காப்பகம் வருகிறது. இங்கு வனத்துறை பணியாளர்களாக காவல் காத்தவர்கள் ஒவ்வொருவராக மாவோயிஸ்ட்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். பிறகுதான் இது காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது. அண்மையில் சுக்தியோ என்ற வனக்காவலர் போலீஸ் உளவாளி என கண்டறியப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். மார்ச் 23 அன்று பாலகாட்டிலுள்ள விடுதி ஒன்றில் சுக்தியோவின் உடல் கண்டறியப்பட்டது.  பிறகு இதில் சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் காதில் விழுந்து அரசு மரபுப்படி ஏராளமான கலந்துரையாடல்கள் சந்திப்பு நடத்தப்பட்டு புலிகள் காப்பகத்திற்கு வெளிய

புலிகளைப் பாதுகாக்கும் லத்திகா நாத்!

படம்
  புலிகளின் பாதுகாப்பில் அணுகுமுறை மாறவேண்டும்! சூழலியலாளர் லத்திகா நாத், புது டில்லியில் உள்ள அனைந்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) முன்னாள் இயக்குநர். கடந்த 30 ஆண்டுகளாக புலிகளைப் பற்றி ஆய்வுகளைச் செய்து வருகிறார். 1970ஆம் ஆண்டு தொடங்கி ஊடகங்களில் வனப் பாதுகாப்பு பற்றி பேசியும், எழுதியும் பங்களித்து வருகிறார்.  சிறுவயதில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு காடுகளுக்கு பயணித்துள்ளார். தனது ஆறு வயதில் சூழலியலாளர் என்ற வார்த்தையைக் காதில் கேட்டார். அத்துறையில் வல்லுநராகவேண்டும் என்ற ஆசை அப்போதே மனதில் முளைவிட்டிருக்கிறது. இந்தியாவில் முனைவர் பட்டம் வென்ற முதல் பெண் உயிரியலாளர் லத்திகா நாத் தான்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் புலிகளின் பாதுகாப்பு தொடர்பாக படித்து பட்டம் பெற்றார்.  பெண் என்பதால் கல்வி கற்றும் கூட பல நிறுவனங்களில் புறக்கணிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது. எனவே தனது ஆராய்ச்சிகளை சுயமாகவே முடிவு செய்து செய்யத் தொடங்கியிருக்கிறார்.  மத்தியப் பிரதேசத்தில் கன்ஹா காட்டுப்பகுதியில் புலிகள் பாதுகாப்புக்காக பணிகளை செய்தார். புலி, பனிச்சிறுத்தை, சிறுத்தை, ஜாகுவார், யானை, டால்பின்கள்

மத்தியப் பிரதேசத்தில் மட்டும் புலிகளின் இறப்பு அதிகரிப்பது ஏன்? - சுற்றுலா கொடூரம்

படம்
  மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு மட்டும் 39 புலிகள் இறந்துள்ளன. கடந்த ஆண்டில் புலிகளின் இறப்பு 32 ஆக இருந்தது. இப்போது இன்னும் ஒருமாதம் இருக்கும் நிலையில் புலிகளின் இறப்பு கூடியுள்ளது. இப்படியே புலிகள் இறந்துகொண்டிருந்தால் மத்தியப் பிரதேசத்தில் புலிகளின் இருப்பே இனி இருக்காது என சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர்.  2019ஆம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 526 ஆக இருந்தது. கர்நாடகாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை விட இதில் இரண்டுதான் கூடுதலாக உள்ளது.  நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் பதினைந்து புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. மொத்த இந்தியாவில் 113 புலிகள் இறந்துள்ளன. அதில் மத்திய பிரதேசத்தின் பங்கு 39 ஆகும். அதாவது, 34.5 சதவீத பங்கு.  கடந்த நவ. 22 அன்று காட்டுயிர் செயல்பாட்டாளர் அஜய் துபே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை பதிவு செய்தார். இதில் புலிகளின் இறப்பு பற்றி அரசிடமும், புலிகளின் பாதுகாப்பு ஆணையத்திடமும் கேள்விகளைக் கேட்டிருந்தார்.  நவம்பர் 17 அன்றுதான் அனைத்திந்திய புலிகள் எண்ணிக்கை ஆய்வு தொடங்கியது. 2023ஆம் ஆண்டு இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.  புலிகள் பெரும்பாலும் பாதுகாக

இந்தியாவின் முக்கியமான தருணங்கள்! இந்தியா 75

படம்
  இந்தியாவின் முக்கியமான தருணங்கள்  இந்தியா 75 அமைதியான மாநிலங்கள்  பிரிவினை நடந்து ரத்த ஆறு ஓடிய பிறகு, இந்திய மாநிலங்களில் நடைபெற்று முக்கியமான மாற்றம், குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் அதிகம் இருந்தால் அதனை தனியாக பிரிக்கலாம் என்று எழுந்த போராட்டம்தான். ஆனால் பிரதமர் நேரு இதனை ஏற்கவில்லை. தீர ஆலோசித்து மொழி சார்ந்து மாநிலங்களை பிரித்து எல்லைகளை அமைத்தார். எல்லை சார்ந்த பிரச்னைகள் மாநிலங்களுக்குள் ஏற்பட்டால் இந்திய ஒன்றியம் உடையாமல் காப்பாற்றப்பட்டது. இன்று பிரிவினை வாத சக்திகள் அதிகாரத்தைப் பெற்று தேர்தல் ஆதாயங்களுக்காக மாநிலங்களை உடைத்து பிரிக்க முயன்று வருகின்றனர். ஆனால் அன்று நேரு எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் மக்களையும், நாட்டையும் பற்றி மட்டுமே யோசித்தார். அதனால்தான் நாட்டிலுள்ள மாநிலங்கள் அமைதியாக வளர்ச்சியை நோக்கி திரும்பின.  பால் உற்பத்தியில் புரட்சி! வெண்மை புரட்சி என்றுதான் கூறவேண்டும். வர்கீஸ் குரியனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரு, இந்திராகாந்தி என பல்வேறு தலைவர்கள் தந்த ஆதரவு காரணமாக ஆனந்த் நிறுவனம் குஜராத்தில் உருவானது. இந்த கூட்டுறவு நிறுவனத்தினால் அங்கு வறுமையில் வ

காடுகள் அழிவதை மக்களுக்கு சொல்லவே படம் எடுத்தேன்! - அமித் வி மஸ்துர்கார்

படம்
                        அமித் வி மஸ்துர்கார் இந்தி திரைப்பட இயக்குநர்     ஒரு இயக்குநராக உங்களை எப்படி வரையறுப்பீர்கள் ? நான் எண்ணிக்கை அடிப்படையில் பெரிய இயக்குநர் கிடையாது . நான் திரைப்படம் உருவாகும் முறையை ரசித்து செய்கிறேன் . அதில் அனைத்துமே எனக்கு முக்கியம்தான் . எனக்கு படத்தின் கதைக்கரு பற்றி ஆராய்ச்சி செய்வது பிடிக்கும் . நிறைய விஷயங்களை தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் . படத்தின் ஒளிப்பதிவு , இசை , படத்தொகுப்பு ஆகியவற்றை நான் விரும்பியே செய்கிறேன் . ஒரு படத்தை உருவாக்க தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டே உருவாக்க நினைக்கிறேன் . திரைப்படம் என்பது காதலுடன் செய்யப்பட வேண்டியது அவசியம் . நியூட்டன் படத்தை உருவாக்கியபிறகு அடுத்து உடனே படம் செய்ய அழுத்தம் இருந்ததா ? ஆமாம் . நியூட்டன் படம் உருவாக்கி வெளியிட்டபிறகு ஓராண்டுக்குப் பிறகு அந்த அழுத்தத்தை எடுத்துக்கொண்டேன் . நிறைய பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வா்ய்ப்பு கிடைத்தது . ஆனால் நான் அவற்றைத் தேர்ந்தெடுக்கவில்லை . நா்ன் அடுத்து எடுக்கப்போகும் படம் ஆழமாக இருக்கவேண்டும் என நினைத்தேன் . எனவே , வ

விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்துகிறதா கொரில்லா?

படம்
கொரில்லா ஷோபா சக்தி கருப்பு பிரதிகள் இலங்கையில் நடப்பது என்ன? அங்கு அமைதிப்படை தமிழ் மக்களுக்கு வழங்கியது என்ன? இதில் அரசியலின் பங்கு பற்றி எண்ணற்ற கேள்விகளை கொண்டுள்ள மக்களுக்கு இதில் பதில் கிடைக்கிறது. நூல் யாகோப்பு அந்தோணி தாசன் பிரான்ஸ் அரசுக்கு அகதி விண்ணப்பத்தை எழுதி அளிப்பது போல தொடங்குகிறது. அதிலே பகடி தொடங்கிவிடுகிறது. அதில் எளிமையாக வாழ நினைக்கும் ஒருவனுக்கு புலிகள் இயக்கம் எப்படி சாவுமணி அடிக்கிறது என்று பல்வேறு சம்பவங்கள் வழியாக கூறும் சம்பவங்கள் பீதியூட்டுகிறது. ரொக்கிராஜ் என்பவரின் முழு வாழ்க்கைதான் கதை. அவர் எப்படி குஞ்சன் வயலிலிருந்து இயக்கத்திற்கு செல்கிறார், அங்கு பயிற்சி எடுப்பது, பின் ஊருக்கு காவலாக வருவது, இயக்கத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறை ஆகியவற்றை இந்த நாவல் அப்பட்டமாக பேசுகிறது. இதனால்தான் நூலை விமர்சிக்கையில் சாருநிவேதிதா விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் நூல் என்று கூறியிருக்கிறார். அதை அவர் படித்துவிட்டு சொல்லியிருக்கும் தன்மைக்கு மதிப்புக்கொடுத்து அதனை பிரசுரித்திருக்கிறார்கள். இந்த த