இடுகைகள்

ஆசிரமம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்மிக குருவின் பாலியல் இச்சையை தீர்ப்பது கூட பெண் துறவிகளுக்கான சேவைதான்!

படம்
         ஆன்மிக குருவின் பாலியல் இச்சையை தீர்ப்பது கூட சேவைதான்! இந்தியத் தலைநகரில் நடந்த சம்பவங்களைப் பார்க்கப்போகிறோம். அத்ஹியாத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆசிரமம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வட இந்தியாவில் இந்த ஆசிரமங்கள் இன்றும் செயல்பாட்டில் உள்ளன. அண்மையில் கோவையில் இருந்து கூட பதினாறு வயது சிறுமி, ஒருவர் ஏவிவி எனும் இந்த ஆசிரம கிளைக்கு ஓடிப்போனார். ஆம். நகைகளுடன் சென்று துறவியானார். இப்போது அந்த இளம்பெண்ணின் அம்மா, மகளை மீட்க சட்ட உதவியை நாடியிருக்கிறார். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை ஆசிரமத்தை நடத்தும் வழக்குரைஞர் அமோல் கோகனேவை ஒன்றும் செய்யவில்லை. மாறாக, துறவியான மகளை தினசரி நாற்பத்து ஐந்து நிமிடங்கள் சந்தித்துக்கொள்ளலாம் என கருணை காட்டியது. நீதிமன்றத்தில் கூட மாட்டு மூத்திரத்தை குடிக்கும் ஆட்கள்தானே நியமிக்கப்படுகிறார்கள். பெரிதாக பயன் ஒன்றும் இருக்காது. மக்களே ஒன்று திரண்டு ஏதாவது செய்தால்தான் பயனுண்டு. ஏவிவி என்ற ஆசிரமம் எப்படி இருக்கும் என்பதை கவனிப்போம். நான்கு மாடி கட்டிடங்களைக் கட்டி அதில் கன்னி கழியாத பெண்களை நேர்காணல் வைத்து குரு தீக்சித் தேர...