இடுகைகள்

பேச்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குப்பை என அவமானப்படுத்தப்படும் நாயகனின் எழுச்சியும், போராட்டமும்!

படம்
  காட் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ்  ரீட்மாங்காபேட்.காம் ஜின் ஃபேன் என்பதுதான் நாயகன் பெயர். ஆனால் அதை விட அதிகமாக ட்ராஷ் என அவரை வசைபாடும் சொல்தான் கதையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஜின்னுக்கு அவரது தாய் மூலமாக சிறு பாம்பு ஒன்று ஆன்ம ஆற்றல் விலங்காக மாறுகிறது. ஆனால், அதன் சக்தி என்ன அதை எப்படி வளர்ப்பது என அவருக்கும் தெரிவதில்லை. அவரது அப்பாவுக்கும் தெரிவதில்லை. ஜின்னின் அண்ணன் முறை உறவுகள் கூட தற்காப்புக்கலை சக்தியில் தளர்ச்சியில் உள்ளவனை அடித்து உதைக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென அவனின் ஆன்மாவை அழுத்தி இன்னொரு ஆன்மா உள்ளே வருகிறது. அதுதான் நவீனகாலத்தில் உள்ள இளைஞன் ஒருவனின் ஆன்மா. விபத்தில் இறந்தவன், தொன்மைக் காலத்தில் உள்ள ஜின் ஃபேனின் உடலுக்குள் புகுகிறான். சொல்லும்போது இருக்கும் ஆச்சரியம். கதையாக படிக்கும் போது வற்றிவிடுகிறது.  எதிர்கால உலகில் இருந்து வருபவன், தொன்மைக்காலத்தில் உள்ளவர்களை விட நவீனமாக யோசிக்கவேண்டும். திட்டமிடவேண்டும் அல்லவா? ஆனால் அப்படியான ஐடியா ஏதுமின்றி தற்காப்புக்கலை கற்று மெல்ல முன்னேறுகிறான். அதுதான் கதையை சாதாரண கதையாக மாற்றுகிறது. லின் ஃபேனின் அப்பா சிறந்

இந்திய வெளியுறவுக் கொள்கையின் தவிர்க்க முடியாத ஏழு அம்சங்கள்!

படம்
  இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஏழு தூண்கள் வெளிநாட்டுப் பயணம் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் அப்ரைசல் பெறுவதற்கான முக்கியமான தகுதி, அவர்களுடைய முதலாளி அதாவது, தலைவர் வெளிநாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறாரா இல்லையா என்பதுதான். அதிகமுறை வெளிநாடுகளுக்கு செல்ல உதவியிருந்தால் அவருக்கு நிச்சயமாக பதவி உயர்வு உண்டு. அதிக நாட்கள் தலைவர் வெளிநாட்டு மண்ணில் இருந்தால், வெளியுறவு அமைச்சகத்தில் அத்றகு உதவிய அதிகாரிகளுக்கு விரைவான வளர்ச்சி சாத்தியம். கட்டி அணைப்பேன் உன்னையே… நாட்டின் தலைவர், உலகின் வலிமையான தலைவர்களைக் கட்டிப்பிடிக்கும்போது அதை புகைப்படமாக, வீடியோ வழியாக பார்க்கும் அனைத்து இந்தியர்களின் நெஞ்சமும் பெருமையால் விம்மும். ஆனால் அப்படி உணர்ச்சி பொங்காதபோது நீங்கள் உடனே அருகிலுள்ள தேசிய புலனாய்வு முகமைக்கு சென்று உங்கள் இதயத்தில் தேசதுரோக கருத்துகள் உள்ளதாக என சோதித்துக்கொள்வது நல்லது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் தலைவர்களைக் கட்டிப் பிடிப்பது முக்கியமான அம்சம். இதை நீண்ட காலமாக முக்கியமான கொள்கையாக கடைபிடித்து வருகிறார்கள். இதன் மூலம் ஐ.நா பாதுகாப்பு கௌன்சிலில் நிர

மாலையில் வீசும் காற்று சற்று ஆறுதலாக உள்ளது!

படம்
  நரசிங்கபுரம் 28/3/2023 அன்பரசு சாருக்கு   அன்பு வணக்கம். நேற்று பேசிய உரையாடல் மகிழ்ச்சி தந்தது. அதில், கடிதமாக எழுதவேண்டியதை பேசிவிட்டேன். பேசத் தவறியதை கடிதத்தில் எழுதுகிறேன். சமீபத்தில் மெகா ஸ்டாரின் இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று, கிரிஸ்டோபர். காம எண்ணமே ஒருவனை அழிக்கிறது. சாதாரண மனிதன் தவறான ஆசைகளை வெளிப்படுத்தினால் மரணமே வழி என்பதாக கதை அமைந்துள்ளது. மம்மூட்டியின் தர்ம செயல் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருந்தது. கொடூரமான காட்சிகள் நெஞ்சை உலுக்கின. இரண்டாவது படம், ஒன். 2021இல் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சில காட்சிகளை யூட்யூபில் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். பார்க்க வேண்டிய படம். நான் ஃபேஸ்புக்கில் வங்கி மேலாளரைப் பற்றி புகார் எழுதியது நினைவுக்கு வந்தது. ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்டுக்கு எவ்வளவு மதிப்பு உள்ளதென வியந்தேன். இந்தப்படத்திலும் மம்மூட்டியின் நடிப்பு சிறப்பாகவே இருந்தது. நிதானமான பேச்சு, அதிரடி முடிவு என முதலமைச்சராக வலம் வந்து நம்மைத் தேர்ந்தெடுக்கும் மக்கள்தான் நம்பர் ஒன் என சொல்லி படத்தை முடிக்கிறார். முதலமைச்சர்கள் பார்க்க வேண்டிய படம். இன்று பிளாக்க

உதயமாகும் பேரரசன் - ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  ஆனந்த் மகிந்திரா வாகனத்துறையில் வேகமாக முன்னேறி வரும் தொழிலதிபர். தொடக்கத்தில் இரும்பு உற்பத்தி ஆலையாக தொடங்கப்பட்ட மகிந்திரா இன்று 20க்கும் மேற்பட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. உள்நாடு, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் வருமானத்தை பெருக்கும் பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இதற்கு பின்னால் உள்ளவர்தான், ஆனந்த் மகிந்திரா. ட்விட்டரில் தொடர்ச்சியாக மக்களிடம் உரையாடி அவர்களின் எண்ணங்களை தெரிந்துகொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார். அவரின் சிந்தனைகள் எப்படியானவை, நோக்கம் என்ன, வெற்றி சூத்திரங்கள் என்ன என்பதை அறிய நீங்கள் இந்த நூலை வாசித்தே ஆகவேண்டும்.. அமேசான் வலைத்தளம் https://www.amazon.in/dp/B0BSLYLGBB

பழைய நண்பரோடு நடந்த உரையாடல் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பழைய நண்பரோடு பேச்சு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? வீட்டில் உள்ளவர்களையும் கேட்டதாகச் சொல்லுங்கள் . நான் இன்றுதான் நெல்சனின் டாக்டர் தமிழ்ப்படம் பார்த்தேன் . சீரியசான பிரச்னை தான் ; அதை அணுகுகிற முறை காமெடியாக இருந்தது . நிறைய இடங்களில் வசனமாக இல்லாமல் காட்சி ரீதியாகவே காமெடி செய்திருக்கிறார்கள் . நடித்த எஸ்கேவுக்கு மட்டுமல்லாமல் பார்க்கும் நமக்கே புதிய அனுபவத்தை படம் தருகிறது . இதை எழுதும்போது நீங்கள் ஜெய்பீம் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன் . சூர்யா தனது தொண்டு நிறுவனம் மூலம் செய்யும் சமூக சேவைகளில் திரைப்படங்களையும் புதிதாக இணைத்திருக்கிறார் . துணிச்சலான முயற்சி . தியேட்டரை விட ஓடிடி இதற்கு சரியான தளம் . இப்போதைக்கு தமிழில் அமேசான் நிறுவனத்திற்கு சூர்யா மட்டுமே அம்பாசிடராக இருக்கிறார் . அந்திமழையில் பெண்கள் மனதைப் புரிந்துகொள்வது பற்றி பலரும் தங்கள் கருத்தை எழுதியிருந்தனர் . சிறப்பிதழ் வாசிக்க நன்றாகவே இருந்தது . தீபாவளி அன்றும் இங்கு மழை பெய்தது . துவைத்துப் போட்ட துணிகள் முழுமையாக காயவில்லை . நாளை அலுவலக வேலை உள்ளது . உடுத்திச்செல்ல த

என்றென்றைக்கும் உலகிற்கு தேவைப்படும் காந்தி! - உரையாடும் காந்தி - ஜெயமோகன்

படம்
  காந்தி நன்றி -டைம்ஸ் ஆப் இந்தியா உரையாடும் காந்தி ஜெயமோகன் என்றைக்கும் இல்லாதபடி காந்தி இன்று மக்களுக்கு தேவைப்படுகிறார். அவரின் கொள்கைகள், ஆளுமை, ஊடக வெளிப்பாடு என அனைத்துமே இன்றுமே மக்களை வசீகரிக்கின்றன.  நிறைய ஊடக ஆளுமைகள், வலதுசாரி கருத்தாளர்கள் காந்தியை அவதூறு, வசை செய்வதற்காக அவரது தனிப்பட்ட ஆன்மிக பரிசோதனைகளைப் பற்றி பேசுவார்கள். ஆனால் அப்படியும் கூட அன்றைய காங்கிரசிலும் இன்றும் கூட யாரையும் விட செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தது காந்தி மட்டுமே.  இதை ஒத்துக்கொள்ள இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு கூட சங்கடங்கள் தயக்கங்கள் இருக்கலாம்.  உரையாடும் காந்தி நூலில் ஜெயமோகன், காந்தி மீது மக்களுக்கு உள்ள பல்வேறு சங்கடங்கள், தயக்கங்கள், கேள்விகள், அவதூறுகள், வசைகள் என அனைத்துக்கும் பதில் அளிக்கிறார்.  இந்த நூல் ஜெயமோகனின் வலைத்தளத்தில் எழுதப்பட்ட கருத்துக்களைக் கொண்டதே.  காந்தியைப் பற்றி எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என ஜெயமோகன் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இதன்படி காந்தியைப் பற்றி பல்வேறு ஊடகங்களில் அறிய வந்த பொய், வதந்தி, அவதூறு, வசைகளுக்கு சலிப்பே இல்லாமல் பதில் சொல்லுகிறார்.  காந்திய

ஓவர் பேச்சு கணவனைப் பிரிய வித்தியாசமாக யோசிக்கும் மனைவி! ஹே சினாமிகா - பிருந்தா

படம்
  ஹே சினாமிகா இயக்கம் பிருந்தா இசை  கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு  ப்ரீத்தா கதை - திரைக்கதை - பாடல்கள் -வசனம்  மதன் கார்க்கி நவீன கால திருமண உறவு பற்றி பேச முயலும் படம். மனைவிக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கும் கணவரின் ஓயாத பேச்சு பிடிக்கவில்லை. இதனால் அவரை எப்படி கழற்றிவிடுவது என யோசிக்கிறார். இதற்காக உளவியல் வல்லுநர் ஒருவரின் உதவியை நாட அதன் விளைவு என்னாகிறது என்பதே கதை.. மௌனாவை பார்த்ததும் யாழனுக்குப் பிடித்துப்போய் விடுகிறது. காதலைச் சொல்லுகிறார். மௌனாவுக்கும் சம்மதம்தான். மணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெடிகுண்டு வெடிக்கிறது. யாழன் வீட்டில் சமையல், தோட்ட வேலைகளை செய்கிறான். மௌனா கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.  மனைவியின் சம்பளத்தில்தான் யாழன் பொருட்களை வாங்குகிறான். அவனிடம் உள்ள கெட்ட பழக்கம் என மௌனா நினைப்பது, பேசுவது. நாம் எப்படி தன்னியல்பாக சுவாசிக்கிறோமோ அதுபோல பேசுபவன் என காட்சிகளாக காட்டுகிறார்கள். அது அந்தளவு ஒட்டவில்லை. யாழன் பேசுவது குறிப்பிட்ட மனிதர்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும், பேசும் விஷயங்களில் நியாயமான தன்மை உள்ளது.  ஆனால் மௌனாவுக்

கடல்பேச்சு- மீன்கள் தகவல் பரிமாறிக்கொள்ளும் ரகசியம்!

படம்
  pinterest நீருக்கடியில் மீன்களின் பேச்சு!  கடலின் நீருக்கடியில் நீந்தும்போது, ஆய்வாளர்கள் பல்வேறு வித ஒலிகளைக் கேட்டுள்ளனர். ஆனால் அவற்றை பல்வேறு உயிரினங்கள் ஏற்படுத்துகின்றன என நினைத்தனர்.  இந்த உயிரினங்களில் மீன்கள் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தரலாம்.   ”பல்லாண்டுகளாக  சிலவகை மீன்கள் ஒலியை எழுப்பி வந்துள்ளன. ஆனால் இப்படி மீன்கள் ஒலியெழுப்பது அரிதான ஒன்று” என்றார்  அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஆரோன் ரைஸ். மீன்களின் தகவல் தொடர்பு எனும்போது பலரும் நினைப்பது அதன் உடல்மொழியும், தோல் நிறத்தின் வழியாக பிறருக்கு உணர்த்தும் குறிப்புகளும்தான். ஆனால் இவையல்லாமல் மீன்கள் பல்வேறு ஒலிகளை எழுப்பி தங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்துள்ளன.  விலங்குகளும், பறவைகளும் இந்த முறையில் தகவல் தொடர்புகொள்வது பலரும் அறிந்த செய்தி தான்.  மீன்களைப் பற்றிய ஆராய்ச்சி என்றால் திமிங்கிலமும், டால்பினும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். உண்மையில் அதிகளவு ஆராய்ச்சி செய்யப்பட்ட உயிரினம் என்றால், அது இவை இரண்டும்தான்.  பிற மீன் இனங்களின் தகவல்தொடர்பு பற்றி பெரியளவு ஆராய்ச்சி செய்யப்படவில்லை

மத மோதல்களை போக்கும் உரையாடலுக்கு ரெடி - விபின்குமார் திரிபாதி

படம்
  ஐஐடி டெல்லியில் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்றபிறகு என்ன செய்வார்? இருக்கும் தொடர்புகளை வைத்து வெளிநாடுகளுக்கு செல்வார், தனது சொந்த விஷயங்களை செய்வார். ஆனால் டெல்லியைச் சேர்ந்த விபின்குமார் திரிபாதி, நாடெங்கும் சென்று மதமோதல்களை தடுக்கும் முயற்சியை செய்து வருகிறார்.  ஏறத்தாழ இது வங்கப் பிரிவினையின்போது நடந்த மத மோதல்களை தடுக்க காந்தி தொடர்புடைய இடங்களுக்கு சென்ற சம்பவம் போல இருக்கிறதா? அதேதான். அதே வழியைத்தான் பின்பற்றுகிறார். அகிம்சை வழியில் முடிந்தளவு மக்களிடம் பேசி வன்முறை உணர்வை மட்டுபடுத்த நினைக்கிறார்.  பத்து பேரிடம் பேசினால் கோபமாக இருப்பவர்களில் ஒருவர் மட்டுமே என் பேச்சை கேட்கிறார். இந்த அளவில் எனது பணி இருக்கிறது. இந்தியா உயிர்வாழ்வது இப்படி பட்ட சிலரால்தான் என்கிறார்.  திரிபாதியின் உறவினர்கள் இவரையும் குடும்பத்தையும் பார்த்தாலே பதற்றமாகி வேறுபக்கம் திரும்பிக்கொண்டு வருகிறார்கள். நலம் விசாரித்தலைத் தாண்டி வேறு எதையும் அவர்கள் பேசுவதில்லை. ஆனாலும் திரிபாதி எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார். அதை நோக்கி போய்க்கொண்டே இருக்கிறார்.  வி

உணர்வுகளை வெளிப்படுத்தும் குரல்வழிச்செய்திகள்!

படம்
  உணர்வுகளைச் சொல்லும் குரல்வழிச்செய்தி!   இன்று பெரும்பாலும் குறுஞ்செய்திகளை எழுதி அனுப்புவதை விடகுரல் வழியே செய்தி அனுப்புவதே புகழ்பெற்றுள்ளது. பொதுமுடக்கம் பலரையும் வெளியிடங்களில்  சந்திப்பதைத் தடுத்திருக்கிறது. இதன் காரணமாக குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்களில் கூட குரல்வழிச் செய்திகள் அதிகம் அனுப்பப்படுகின்றன.  2013ஆம் ஆண்டு  இந்த வசதி வா்ட்ஸ்அப்பில் நடைமுறைக்கு வந்தாலும், புகழ்பெற்றது பொதுமுடக்க காலகட்டத்தில்தான்.  இன்று போனில் வரும் அழைப்பே, மிகவும் அவசரம் என்றால் மட்டும்தான் என்பதாக மாறியிருக்கிறது. புதிய தலைமுறையினர் பெரும்பாலும் குரல்வழிச் செய்தியை உரையாட அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் அப்படி என்ன சிறப்பு?  ஒருவர் தன்னுடைய குரலில் தான் நினைப்பதை நண்பரிடம் பகிர்ந்துகொள்ளலாம். ஒருவர் வேண்டும்போது இந்த செய்தியைக் கேட்டுக்கொள்ளலாம். உடனடியாக பதில் சொல்ல வேண்டியதில்லை. மேலும், ஒருவர் தனது குரல் வழியாக பிறரிடம் பேசும்போது நேரடியாக பேசுவது போன்ற நெருக்கம் உருவாகிறது.  எதையும் படிக்க அவசியமில்லாமல் காதில் கேட்டுக்கொண்டு செய்தியை அறிந்துகொள்ளலாம். பதில் அளிக்க விரும்பினால் கூட அந்த நேரத்

கிளப் ஹவுஸ் வரவால் அதிகரிக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்கள்! - கட்டுப்பாடுகள் கூடுகிறதா? குறைகிறதா?

படம்
              கிளப் ஹவுஸ் என்பது வெறும் கேன்வாஸ்தான் . இதில் பயனர்கள் இல்லையென்றால் அதன் பயன் ஒன்றுமே இல்லை என்று அதன் துணை நிறுவனர் பால் டேவிட்சன் கூறினார் . கடந்த ஆண்டு மார்ச்சில் ஆப்பிள் ஐஓஎஸ்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட கிளப்ஹவுஸ் பின்னர் ஆண்ட்ராய்டிலும் வெளியானது . கடந்த மேயில் அறிமுகமாகி மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது . உலகம் முழுக்க இருபத்தைந்து மில்லியன் பேர் இந்த ஆப்பில் இணைந்துள்ளனர் . இந்த ஆப்பில் ஒருவர் இணைந்து தனக்கென ஒரு அறையை உருவாக்கிக்கொண்டு என்ன வேண்டுமோ அதனைப் பேசலாம் . பிறர் பேசும் விஷயங்களை பின்பற்றலாம் . அரசியல் , சினிமா , செக்ஸ் , ஆன்மிகம் என எதையும் இங்கே பேசலாம் . பல்வேறு துறை ஆட்களும் இங்கே குழுமி தங்களது துறை சார்ந்த விஷயங்களை பகிரலாம் . பத்திரிகையாளர்கள் இதிலுள்ள அறைகளைப் பயன்படுத்தி செய்திகளைக் கூட திரட்ட முடியும் . கிளப் ஹவுஸ் மட்டுமே ஆடியோரூம் வசதியைக் கொண்டிருக்கவில்லை . வேறு நிறுவனங்களும் இதேபோல வசதியை தங்களது சேவையில் கொண்டு வரவிருக்கின்றன . பேஸ்புக்கில் லைவ் ஆடியோ ரூம் வசதி வரவிருக்கிறது . ட்விட்டரில் ஸ்பேசஸ் எனும் வசதி உள்ளது .