இடுகைகள்

சீல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - கரடிகள்

படம்
  தெரிஞ்சுக்கோ – பழுப்பு நிற கரடிகள்   கரடிகள் தனிமையாக வாழ்பவை. மரம் ஏறும் திறன் பெற்றவை. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா தவிர பிற பகுதிகளில் கரடிகளைப் பார்க்கலாம். கரடிகளில் 8 இனங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கரடி இனம் ஒன்பதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கரடி இனம் அழிந்து போனது. துருவக்கரடிகள் வேட்டையாடுவதில் வெற்றிபெறும் சதவீதம் இரண்டு சதவீதத்திற்கும் குறைவு. தென் அமெரிக்காவில் வாழும் ஸ்பெக்டேக்ல்டு பியர் எனும் கரடி இனம், பழம், தாவரங்களை மட்டுமே சாப்பிட்டு வாழ்கிறது. இதன் உணவில் 5 சதவீதம் மட்டுமே இறைச்சி உண்டு. ஜெயண்ட் பாண்டா, தனது உடல் எடையில் 38 சதவீத அளவுக்கு மூங்கில்களை உண்கிறது. இப்படி சாப்பிடுவதை ஒரு நாளில் 10-16 மணிநேரம் செய்கிறது. உலகில் தற்போது 26 ஆயிரம் துருவக்கரடிகள்தான் உயிரோடு உள்ளன. ஸ்லாத் கரடி இனம், இந்தியா, இலங்கையில் வாழ்கிறது. இந்த கரடி இனம், தனது குட்டிகளை ஒன்பது மாதம் வரையில் தனது முதுகில் சுமந்து பராமரிக்கிறது. சன் பியர் எனும் கரடி இனம், 25 செ.மீ நீள நாக்கைக் கொண்டது. எதற்கு இந்தளவு நீளமான நாக்கு? தேன்கூட்டிலிருந்து தேனை

ஜாம், ஊறுகாய், கெட்ச்அப் தயாரிப்புகள் தூய்மையானவைதானா? - தூயவை போன்ற வேடமே விற்பனையை அதிகரிக்கும்

படம்
  ஒரு பொருள் சுத்தமாக கைபடாமல் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்வீர்கள்? அந்த பொருளின் மேல் அலுமினிய பாயில், ஒட்டப்பட்டிருக்கும். அதாவது, தயாரிக்கும் இடத்தில் கூட கைபடவில்லை. இலையின் மீதுள்ள பனித்துளி போல பரிசுத்தமானது. அம்மாவின் அன்பைப் போன்றது என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்கள். இப்படித்தான் ஊறுகாய், பீநட் பட்டர், ஜாம் ஏன் இப்போது டீத்தூளுக்குக் கூட மணம் வெளியே கசியாமல் இருக்க அலுமினிய பாயில் சீல் ஒன்றை ஒட்டுகிறார்கள். இப்படி சீல் செய்யப்பட்டிருந்தால் வாங்குங்கள். சீல் கிழிந்திருந்தால் வாங்காதீர்கள் என்றெல்லாம் பொருளின் மீது எழுதியிருப்பார்கள். ஆனால் அதை கண்டுபிடிப்பது எளிதான சங்கதி கிடையாது. எதற்கு இந்த முயற்சி? இதெல்லாம் ஓசிடி வந்தவர்களாக சுத்தம் பற்றி கவலைப்படும் ஒரு பிரிவினரகளுக்காகத்தான். இவர்கள் நல்ல வேலையில் இருப்பார்கள். நறுவிசமாக உடுத்துவார்கள்.   இவர்களிடம் நிறைந்து வழியும் பணத்தை பிடுங்கவே இத்தனை மெனக்கெட்டு பொருட்களுக்கு சீல் குத்துகிறார்கள். இதெல்லாம் மனதளவில் ஒரு பொருள் சுத்தமாக இருக்கிறது. கைபடாதபொருள் என நிரூபித்துக் காட்டுவதற்குத்தான். மற்றபடி, அந்த பொருள் அ

ஜாலி பிட்ஸ்! - இந்திய ரூபாய்களை சீல் வைத்து வைத்து பயன்படுத்திய பாக் அரசு

படம்
பிட்ஸ்! இந்தியாவில் 1954 முதல் 1978 ஆம்  ஆண்டுவரையிலான காலகட்டத்தில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட பணத்தாட்கள் புழக்கத்தில் இருந்தன.  சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தான் அரசு, இந்திய ரூபாய்களில் பாகிஸ்தான் அரசு என்று சீல் வைத்து சில காலம் பயன்படுத்தியது.  ஒரு ரூபாய் நோட்டு மட்டும் நிதித்துறை செயலாளரின் கையொப்பத்தோடு வெளியாகிறது.  பத்து ரூபாய் மதிப்பிலான நாணயங்களைத் தயாரிக்க அரசுக்கு 6.10 ரூபாய் செலவாகிறது.  நாணயங்கள் அச்சிடும் இடங்களைக் கண்டறியும் விதமாக  டயமண்ட் (மும்பை), நட்சத்திரம் (ஹைதராபாத்), புள்ளி (நொய்டா) ஆகிய வடிவங்கள் பதிக்கப்படுகின்றன.