இடுகைகள்

தன்னறம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒன்றை உயர்த்த பிறிதொன்றை தாழ்த்த வேண்டியதில்லை! - வினோத் பாலுசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மதிப்பிற்குரிய வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக உள்ளீர்களா? அலர்ஜி பற்றிய நூலை மீண்டும் எழுத முயன்று வருகிறேன். சிறு புத்தகம்தான். அதிகமாக எழுத நேரமும் இல்லை ஆர்வமும் இல்லை. மார்ச் மாத இதழ் வேலைகளை ஓரளவுக்கு முடித்துவிட்டேன். எதுவுமே தெரியாத பிறவி பைத்தியங்களுடன் சேர்ந்து வேலை செய்வது கடினமாக மாறிவருகிறது. இருந்தாலும் பொருள் இருந்தால்தான் தானே அறம் செய்யமுடியும்?  எனவே, பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் சொன்னபடி ரமேஷ் வைத்யா சார், அதை கஷ்டப்பட்டு எழுதியதாக சொன்னார். நன்றாக எழுதக்கூடியவர் என எனது எடிட்டர் சொல்லுவார்.  மனம் ஒன்றினால்தான் வேலை செய்வார். இல்லையெனில் கீழிறங்கி டீ குடிக்கப் போய்விடுவார்.  அம்மாவுக்கு தைராய்டு சுரப்பி வேலை செய்யவில்லை. இத்தனை தொல்லைகள் இருந்தாலும், அவள் உளவியல் பிரச்னைகளால் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இனி கட்டாய ஓய்வு எடுத்தேயாகவேண்டும். மார்ச் மாதம் தொடங்கிவிட்டது. நான் திருவண்ணாமலை வர நினைத்தேன். ஆலிவர் அண்ணாவின் நூலையும் உங்களது நூல்களையும் திரும்ப கொடுத்துவிட்டால் கடன் முடிந்தது.  உங்களது ஆபீசில் - ஸ்டூடியோவில் சிறிதுநேரம்

உலக வாழ்க்கையை செயலூக்கத்துடன் வாழக் கற்றுத்தரும் நூல்!

படம்
  தன் மீட்சி ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி pinterest இந்த நூல் இளைஞர்களின் சமகால பிரச்னைகளையும், அதற்கு ஜெயமோகன் என்ன தீர்வுகளைச் சொல்லுகிறார் என்பதையும் கொண்டுள்ளது.  இலக்கிய வாசிப்பு தொழில் வாழ்க்கையை பாதிக்குமா? ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்யவேண்டுமா என்றால் அதற்கான பதில்களை தெளிவாக தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பதில்களை தேடி எடுத்து சொல்கிறார்.  இது பதில் கேட்பவர்களுக்கும், தொகுப்பாக நூலை வாசிப்பவர்களுக்கும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.  நூலின் இறுதியில் ஆசான் என்று தன்னை அழைப்பவர்கள் பற்றியும், குக்கூ அமைப்பின் மூலம் தங்களது தொழில் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு தங்களுக்கு மனநிறைவு தரும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இதனை வாசிக்கும் யாருக்கும் தடுமாறாமல் முடிவெடுப்பதற்கான திறன் கிடைக்கும் என நம்பலாம்.  ஜெயமோகனின் வலைத்தளத்தில் இளைஞர்கள் வாசிப்பு பற்றியும், சொந்த வாழ்க்கையில் உள்ள தேக்க நிலை பற்றியும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். கேள்விகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கூற விரும்புவது என்று பார்த்தால், ஒரே