அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை!
அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை! உலகமெங்கும் நடந்துவரும் உள்நாட்டுப்போர், மத அடிப்படைவாதம் காரணமாக பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் வாழ வழியின்றி பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2010-15 காலகட்டத்தில் தீவிரமாக அதிகரித்து வருகிறது. அண்மையில் வெளியான Proceedings of the National Academy of Sciences ஆய்விதழில் அகதிகளின் எண்ணிக்கையை கணிப்பது குறித்து துல்லியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அகதிகளின் எண்ணிக்கையை பெரும்பாலான நாடுகள் கணிப்பது தோராயமான அளவீடுகள் மூலமாகத்தான். வாஷிங்டன் பல்கலைக்கழக(UW) ஆராய்ச்சியாளர்கள் சூடோ பேய்ஸ்(Pseudo bayes) முறை மூலம் கணிக்கின்றனர். இதன்படி தொண்ணூறுகளிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையில் 1.3 சதவிகிதம் என அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம் அகதிமக்களில் 45 சதவிகிதம் பேர் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளதும் முக்கியமான ஆய்வறிக்கைத் தகவல். "இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையை துல்லியமாக ஆய்ந்தறிவது சாதாரணமான காரியம் அல்ல. அரசு இம்முயற்சியில் இறங்காதபோது அகதிகளுக்கான வசதிகளை முழுமையாக வழங்கமுடியாது" என்கிறார் புள்ள