தடுப்பூசி இழப்பீடு தருகிறார்களா?
தடுப்பூசிகள் நல்லது என பல்வேறு அமைப்புகள் சொன்னாலும் அமெரிக்காவில் தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள், மரணத்திற்கான இழப்பீட்டை அரசு வழங்கி வருகிறது. ஆயிரமோ, லட்சமோ அல்ல கோடிகளில்.. இதுவரையில் 4 பில்லியன் டாலர்களுக்கு மேல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க அரசு இழப்பீட்டை வழங்கியுள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கைப்படி, 2013-17 ஆண்டுகளில் மட்டுமே 229 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது அரசு. தோராய இழப்பீட்டுத்தொகை 4, 30,000 டாலர்கள். இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பூசி அவசியம் என்று சொல்லும்போது அதற்கு எதிராக இழப்பீட்டு அமைப்பையும் அரசு நடத்தி வருவதோடு, இழப்பீட்டையும் வழங்கிவருவது மக்களுக்கு தடுப்பூசி மீதான சந்தேகத்தையும் ஏற்படுத்தாதா? தடுப்பூசிகளைத் தயாரிப்பது தனியார் மருந்து நிறுவனங்கள்தான். ஆனால் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு இழப்பீடு அளிப்பது அமெரிக்க அரசு. இதனால் மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் வீணாகிறது. லாபம் தனியார் நிறுவனங்களுக்கு, நஷ்டம் மக்களுக்கு எனும் லாபமுறையை அமெரிக்க அரசு வணிக நிறுவனங்களோடு