இடுகைகள்

அவசரநிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொடர்ச்சியாக கொல்லப்படும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் !

படம்
  பூட் சவுண்ட் சுரேஷ் கோபி, பாலா, ஹனி ரோஸ் மலையாளம் பிரிவு உபசார விழா நடத்தப்பட்ட போலீஸ் அதிகாரி, வீட்டுக்கு போகும் வழியில் கழுத்து அறுத்து கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க நாயகன் வருகிறார். கூடுதலாக, ஓய்வு பெற்ற இன்னொரு போலீஸ்காரரின் மகள் காணாமல் போகிறாள். இந்த வழக்கையும் நாயகனே விசாரிக்கிறார். அதில் அவருக்கு நிறைய உண்மைகள் தெரிய வருகிறது. கேரளத்தில் அவசரநிலை காலகட்டத்தில் காவல்துறை செய்த வல்லுறவு, கொலைகளை பின்னணியாக கொண்ட கதை. அவசர நிலையை சாதகமாக பயன்படுத்தி, காவல்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர் குடும்பத்தை அழிக்கிறார்கள். பத்திரிக்கை நடத்துபவரின் மனைவியை வல்லுறவு செய்கிறார்கள். அவரது மகள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு காவல்நிலையத்தில் கொல்லப்படுகிறாள். பத்திரிகையாளர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு பல்வேறு போலி வழக்குகள் வழியாக இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. கல்லூரி படிக்கும் மகள் காணாமல் போன செய்தியை ஒய்வுபெற்ற அதிகாரி, நாயகனுக்கு கூறுகிறார். நாயகனும் அதை ஏற்று மகளை தேடித்தருவதாக குறிப்பாக உயிரோடு... என்று கூறுகிறார். மகளைப் பற்றிய தகவல்களை விசாரித்தால், எந்த துப...

இதயத்தை மீண்டும் இயங்க வைக்கும் சிபிஆர் முறையைக் கண்டறிந்தவர் - மிஸ்டர் ரோனி

படம்
                      அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி திடீரென நின்றுபோன இதயத்தை துடிக்க வைக்கும் சிபிஆர் முறையை கண்டறிந்தது யார்? சிபிஆர் என்றால், கார்டியோபல்மொனரி ரீசஸ்டிகேஷன் என்பது விரிவாக்கம். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அறுவை சிகிச்சை வல்லுநரான வில்லியம் டோசாக், வாய் வழியாக பிராணவாயுவை செலுத்தி ஒருவரைக் காப்பாற்ற முயலும் முறையைக் கண்டுபிடித்தார். அக்காலகட்டத்தில் இம்முறை, பெரிதாக மேம்படுத்தப்படவில்லை. பின்னாளில், எட்வர்ட் ஸ்காஃபர், மூச்சு விடுவதற்கு மார்பில் அழுத்தம் கொடுக்கும் முறையை உருவாக்கினார். 1910ஆம் ஆண்டு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், எட்வர்டின் மார்பில் கைகளை வைத்து அழுத்தம் கொடுக்கும் முறையை செயல்படுத்த முன்வந்தது. ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தெல்லோ ஆர் லாங்வொர்த்தி, ஆர் டி ஹூக்கர், வில்லியம் பி குவென்ஹோவன் ஆகியோர் இணைந்து மார்பில் அழுத்தம் கொடுக்கும் இதயத்தை இயங்கச் செய்யும் முறையை மேம்படுத்தினர். இதயத்தில் நின்றுபோன ரத்த ஓட்டத்தை மார்பில் அழுத்தம் கொடுப்பது, மீண்டும் தடையை நீக்கி சீராக ஓடவைக்...

இந்தியாவை உருவாக்கிய 5 விஷயங்கள்! - இந்தியா 75

படம்
  இந்தியாவின் அரசியலமைப்பு குறிப்பிட்ட மதிப்புகளை அடிப்படையாக கொண்டதாக கட்டமைக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக இந்த மதிப்புகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இந்தியா என்று கூறப்படுவதன் அர்த்தமே கீழ்க்காணும் மதிப்புகள்தான்.  ஜனநாயகம் பிரிவினை நடைபெற்று வந்த காலத்திலேயே இந்தியா தனது முதல் தேர்தலை நடத்துவதற்கு தயாராகி வந்தது. வாக்காளர் பட்டியலில் அனைத்து மக்களையும் சேர்க்கும் பணி தொடங்க வேண்டியிருந்தது. நாடாளுமன்ற செயலகம் மூலம் இதற்கான ஏற்பாடுகளை அரசியலமைப்பு ஆலோசகர் பிஎன் ராவ் செய்து வந்தார். 1950ஆம் ஆண்டு மார்ச் மாதம்,  தேர்தல் ஆணையத் தலைவர் சுகுமார் சென்னுக்கு இப்பணி ஒதுக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சேர்த்து தொகுக்கும் பணி நிறைவடைந்த ஆண்டு 1949. முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. ஜனநாயகத்தன்மை கொண்ட நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கியபிறகு வயது வந்தோருக்கான வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டது.  கூட்டாட்சி  1970 தொடங்கி 80 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் கடுமையான முரண்பாடுகள் எழுந்தன. 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்ச...

சாதனைப் பெண்கள்- ஆட்சியிலும் சமூக முன்னேற்றத்திலும் பங்களித்த பெண்கள்

படம்
        மரியா க்யுட்டெரா டி ஜீசஸ் பிரேசில் நாட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு உழைத்த துணிச்சல் நாயகி மரியா , அவருடைய அப்பாவின் பண்ணையில்தான் வளர்க்கப்பட்டார் . இதனால் அவருக்கு குதிரை சவாரி , விலங்குகளை வேட்டையாடுவது எளிதாக கைவரப்பெற்றது . மேலும் ஆயுதப்பயிற்சியும் எடுத்தார் . பிறகுதான் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார் . இப்போராட்டம் 1822 – 1824 ஆம் ஆண்டு நடைபெற்றது . அன்றைய காலத்தில் ராணுவத்தில் இணைந்து போரிட்ட முதல் பெண் இவர்தான் . போர்ச்சூகீசியர்களுக்கு எதிராக போரிட்டவர் , அவர்கள் பதுங்கும் இடங்களை கண்டுபிடித்து துணிச்சலாக தாக்கினார் . இவரை பிரேசிலின் ஜோன் ஆப் ஆர்க் என்று அழைத்தனர் . ஆண்களைப்போலவே ஆடை அணிவது இவரது பாணி . இவர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரேசில் ராணுவத்தில் மரியா பெயரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது . ராணுவ சேவைக்காக இம்பீரியல் ஆர்டர் எனும் விருது வழங்கப்பட்டது . 1825 ஆம் ஆண்டு பிரிட்டன் , போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளும் இணைந்து பிரேசிலுக்கு சுதந்திரத்தை வழங்கின . 2   டோலரெஸ் இபாருரி சமூக ...