இடுகைகள்

கட்சி நன்கொடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல் பத்திரத்தில் ஜெயித்த பாஜக!

படம்
அரசியல் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை ஆதரிக்கின்றன என்றால் அது நிச்சயம் மக்களுக்கு எதிரானதாகவே இருக்கும். அப்படி ஒரு திட்டம்தான், தேர்தல் பத்திரம். அரசு வங்கிகளில் இதனைப் பெற்று அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம் என்பதை பாஜக அரசு சட்டமாக்கியது. இதில் குறிப்பிட்ட கணக்கு எண் என்பதைத் தவிர வங்கியிடம் தேர்தல் பத்திரத்தை கொடுப்பவர் பற்றிய விவரங்கள் ஏதும் இருக்காது. இதில் பெரும்பாலும் பயன் பெற்றது பாஜகவே.  கடந்த ஆண்டில் யார் கொடுத்தது என்றே கணக்கின்றி 221 கோடி ரூபாய்களை லவட்டியது இக்கட்சி. இதில் காங்கிரஸ் பரிதாபமாக ஐந்து கோடி ரூபாயும் பிற கட்சிகள் மொத்தமாக சேர்த்தே 6 கோடி ரூபாயும் பெற்றன. மொத்தம் விற்ற தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கை 520 .  இதில் பாஜக பெற்ற நிதி அடிப்படையில் அதன் சதவீதம் 21.5%, காங்கிரஸ் 3.5% என்று உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் அமரும்போது இத்தொகை அதிகரிக்க ஆண்டவனை வேண்டுவோம். பாரத வங்கி, இதுவரை விற்ற பத்திரங்களின் மதிப்பு 1,716 கோடி. இதில் பத்து லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான மதிப்பிலான பத்திரங்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. மொத்த மதிப்பில்