இடுகைகள்

குருசோமசுந்தரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேவனின் நீரோட்டம் போன்ற எழுத்து கொடுத்த ஆச்சரியம்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று முழுக்க அறையில்தான் இருந்தேன். நீரெல்லாம் கங்கை - கடித நூலை எழுதி தொகுத்து அமேசானில் வெளியிட்டேன். உங்களிடம் உள்ள கடிதங்களை மறுமுறை வரும்போது பெற்றுக்கொள்கிறேன். நான் வடிவமைத்த அட்டைப்படத்தை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்.  ஃபேஸ்புக்கில் உள்ள உங்களது படங்களை எனது பிளாக்கில் பயன்படுத்தியுள்ளேன். இதற்கான தொகையை பிறகு தீர்ப்பேன். மிஸ்டர் வேதாந்தம் - தேவன் நாவலைப் படித்தேன். 44 வயதில் இறந்துபோன தேவனின் எழுத்து நீரோட்டம் போல செல்கிறது. கதை தஞ்சாவூரில் தொடங்கி, கும்பகோணம் சென்று பிறகு சென்னையில் மையம் கொள்கிறது.  தேசிகாச்சாரி என்பவரின் மகன் வேதாந்தத்தின் வாழ்க்கைப்பாடுதான் கதை. அரவிந்த் குப்தா அவர்களின் வலைத்தளத்தை அண்மையில் பார்வையிட்டேன். அதில் ஏராளமான நூல்கள் உள்ளன. ஆச்சரியமாக இருந்தது.  போனில் தரவிறக்கி வைத்திருந்த மின்னல் முரளி மலையாளப்படத்தை பார்த்தேன். பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோ படத்தை இயல்பான முறையில் எடுக்க முயன்றிருக்கிறார்கள். ஷிபு பாத்திரத்தில் நடித்த குரு சோமசுந்தரம்தான் ஈர்க்கிறார். ஜெய்ஷன், ஷிபு என இரு நபர்களுக்கு கி