இடுகைகள்

மதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியவரலாறு - காந்திக்கு பிறகான காலகட்டம்

இந்த நூலை காங்.கின் வீழ்ச்சி பற்றிய வரலாறு அல்லது பார்ப்பன பாசிச கட்சியின் வரலாறு என்றும் கூறலாம். இனப்படுகொலை என தில்லி சீக்கியர்கள் படுகொலை -ராஜிவ் காந்தி மற்றும் முஸ்லீம் படுகொலை - நடப்பு பாசிச இயக்க இந்திய ஆட்சித்தலைவர் என துணிச்சலாக எழுதி உள்ளார். அடிப்படையில் இந்திராகாந்தி பற்றிய சம்பவங்களே அதிகம். வட இந்தியாவையே முழுக்க மையப்படுத்தி உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பாளர் சாரதி சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

காதல் மீட்டர் - சமூக தகுதிகள் திருமணத்தை தீர்மானிப்பதில் தோற்றுப்போவது ஏன்?

படம்
  காதல் மீட்டர் 3 ஒருவரை மணம் செய்து வைக்க இந்துமதம் சார்ந்து நிறைய தகுதிகள் பார்க்கிறார்கள், பிற மதங்களிலும் இதுபோன்ற தகுதிகள் பொருந்தும்.  அவையெல்லாம் பொதுவானவைதான். அடிப்படையாக மனப்பொருத்தம் தவிர அனைத்தையும் பார்க்கிறார்கள். உடல் தோற்றம், சமூக அந்தஸ்து, புத்திசாலித்தனம், பொருளாதார தகுதி. இதுதான் சமூக தகுதிகள். இந்த நான்கு விஷயங்களை சமூகம் கவனிக்கிறது. இதன் அடிப்படையில்தான் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் நடைபெறுகின்றன.  பெரும்பாலான திருமணங்கள், விவாகரத்தில் வந்து நிற்கும்போதுதான் பொதுவான சமூக தகுதிகள் வேலைக்கு ஆகவில்லை என பெற்றோருக்கு உறைக்கும். சில சமயங்களில் திருமணங்கள் காசு பறிக்கும் செயலாக மாற, மணமகனோ, மணமகளோ தற்கொலை செய்துகொள்வது அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவது கூட நடைபெறுகிறது. அரசியல் வணிக திருமணங்களில் புகார்கள் எழுவதில்லை. அவர்களே சமாதானம் பேசிக்கொண்டுவிடுகிறார்கள். யார் தரப்பு அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக இருக்கிறதோ, அவர்கள் நடைபெற்ற தவறுக்கு காரணகர்த்தா.  இன்று எழுச்சி பெற்றுள்ள பார்ப்பன பாசிச மதவாத அமைப்புகள், அதிகாரத்தை குறிவ...

பௌத்த மத வேட்கையால் நேபாளம், இலங்கை, பர்மா சுற்றியலையும் பார்ப்பனரின் இடையறாத அலைச்சல்!

 பௌத்த வேட்கை தர்மானந்த கோசம்பி தமிழில் தி.அ.ஶ்ரீனிவாசன் காலச்சுவடு வெளியீடு தன் வரலாற்று நூல். NIVEDAN by Dharmanand Kosambi First published in English as ‘Nivedan’ by PERMANENT BLACK © 2011 Meera Kosambi பௌத்த வேட்கை என்ற நூல், தர்மானந்த கோசம்பி என்ற சரஸ்வத் பார்ப்பனரின் பௌத்த தேடுதலைப் பற்றிப் பேசுகிறது. கோசம்பி, பௌத்தம் கற்க கோவாவில் இருந்து நேபாளம், இலங்கை, மியான்மர் என பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். இறுதியாக இந்தியாவுக்கு திரும்பி தான் கற்ற பௌத்தத்தை கல்லூரியில் போதித்திருக்கிறார். பிறகு, உயிர்வாழும் ஆசை அற்றுப்போய், வார்தா ஆசிரமத்தில் உண்ணா நோன்பிருந்து உடலை உகுத்திருக்கிறார்.  இந்த நூல் நிவேதன் என்ற பெயரில் மராத்தி மொழியில் வெளியானது. அதை கோசம்பியின் பேத்தி மீரா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியாக ஶ்ரீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்து உதவியிருக்கிறார். நூலில், பௌத்தம் கற்க எத்தகைய சவாலையும் சந்திக்க தயார் என்ற கிளம்பிய மனிதனின் அலைச்சலை எழுத்து வழியாக உணர முடிகிறது. அதை வாசகர்களின் மனதில் பதிவு செய்த வகையில் மொழிபெயர்ப்பாளர் ஶ்ரீனிவாசன் வெ...

ஆரிய இந்துமதம் எப்படி போலியாக பௌத்த மத கருத்துகளை நூல்களை நகலெடுத்து உருவாக்கப்பட்டது என விளக்கும் நூல்!

படம்
  ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல்  ப மருத நாயகம் 237 பக்கம் இந்த நூலில் அயோத்திதாசரின் எழுத்துகளின் வழியாக அவர் பார்ப்பன இந்து மதத்தை போலியானது என்று எப்படி ஆதாரத்தோடு கூறுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். அதற்கான ஆதாரங்களை தாசர் எப்படி கூறுகிறார் என்பதை நூலாசிரியர் மருதநாயகம் விளக்கியிருக்கிறார். இதற்காக அயோத்திதாசர் எழுதிய நூல்கள் பலவற்றையும் படித்து சான்றுகளை எடுத்து தொகுத்திருக்கிறார்.  இந்துமதம் என்பதே போலியானது, பௌத்த மத கருத்துகளை எடுத்து வடமொழியில் மொழிபெயர்த்து, இடைச்செருகல்களை செய்து, ஆபாச கதைகளை உள்ளே வைத்து உருவானது என அயோத்திதாசர் பல்வேறு பாடல்கள் வழியாக நிறுவுகிறார். அதோடு இடைச்செருகல் பற்றி தனியாக எட்டாவது அத்தியாயத்திலும் விளக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை எதிர்கொள்ள முடியாமல் சைவ, வைணவ மதங்கள் போலியான கதைகளை உருவாக்கியது பற்றிய கருத்துகளும் எடுத்து வைக்கும் வாதங்களும் பொருத்தமானவையாக தோன்றுகின்றன.  நூலில் மொத்தம் எட்டு அத்தியாயங்கள் உள்ளன.  அதில் அத்தனையிலும் பௌத்த மதம், புத்தர் எப்படியானவர், அவரது பெயர்கள் என்னென்ன, அவரது கரு...

தலித் - உயிர் வாழும் பிணம் இலவச மின்னூல் வெளியீடு

படம்
\    நூலை இலவசமாக வாசிக்கலாம். தரவிறக்கி கொள்ளலாம். நூலை தமிழ் வாசிப்பு வலைதளங்கள், குறுஞ்செய்தி தளங்கள் தரவிறக்கி பதிவிட்டு பயன்படுத்துவது அவர்களது முழுப்பொறுப்பு. இதுதொடர்பாக வரும் புகார்களுக்கு கோமாளிமேடை குழு பொறுப்பல்ல.     https://www.academia.edu/129854276/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE_

இந்து என்பதன் அர்த்தம் அனைத்தையும் தனித்தனியாக பிரிப்பது!

படம்
    இந்து மத அதிசய கொள்கை - ஒற்றுமை அல்ல பிரிவினையை ஊக்குவிக்கிறது! வெளிநாட்டிலுள்ள தோழர்களுக்கு, இந்தியா ஏன் இப்படி இருக்கிறது என்று மனதில் கேள்வி எழலாம். எதனால் இப்படி வினோதமாக நடந்துகொள்கிறார்கள், எதனால் இந்த நாடு அழிந்துகொண்டே வருகிறது என பல்வேறு கேள்விகள் எழலாம். அதற்கு எல்லாம் இந்து மதத்தில் பதில் இருக்கிறது இந்து மனம் அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்துமதம் ஒற்றுமையை விட பிரிவினையை உருவாக்குகிறது. இந்து என்பதன் அர்த்தம், ஒன்றாக கலப்பது அல்ல, அனைத்தையும் தனியாக பிரிப்பது. அதன் முக்கியமான கொள்கையே பிரிப்பதுதான். பிரிவினைக்கு உதவுவதுதான் சாதி, தீண்டாமை ஆகியவை. பிரிவினையை தீவிரப்படுத்த தீண்டாமை உதவுகிறது. இந்த வகையில் பல்வேறு இனக்குழு மக்களையும் உள்ளுக்குள்ளேயே நாம் பிரித்து வைத்துவிட முடியும். இந்து இந்தியா என்பது ஒரே நாடு கிடையாது. அப்படி இருந்ததும் இல்லை. இனிமேலும் ஒரே நாடாக இருக்கவும் முடியாது. சாதி அல்லது அதன் துணைப்பிரிவு என்பது தனிப்பட்ட நாடாக மாறுகிறது. தேசியவாதிகளின் சிறை என்று கூட கூறலாம். மொழி மக்களை பிரிக்கிறது. இந்துக்கள், தீண்டத்தகாதவர்கள் கம்பி வேலியால் ...

மதக்கலவர, பேரிடர் சூழலில் உங்களை தற்காத்துக்கொள்வதே முக்கியம்!

படம்
  உலகளவில் வல்லுறவு, கொலை, கொள்ளை வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படும் நபர்களாக பெண்களே உள்ளனர். எழுபத்து மூன்று சதவீதம். தற்காப்புக்கலையில் பெல்ட்டுகள் வாங்கித்தள்ளாவிட்டாலும் அடிப்படையாக சில முறைகளைக் கற்றுக்கொண்டால் நல்லதுதான். மதவாத நாடான இந்தியாவில் தலித்துகள் திருமணத்தின்போது கூட தாக்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத இயக்கத்தின் கீழ் ஏராளமான சகோதர குண்டர்கள் அமைப்பு உண்டு. இவர்கள் வேலையே தாழ்த்தப்பட்டவர்களை, சிறுபான்மையினரை தாக்கி சொத்தை கொள்ளையடிப்பதுதான். எனவே, தற்காப்புக்கலை கற்பது ஏழை நாட்டில் மட்டுமல்ல வளர்ந்த நாட்டிலும் நல்ல விஷயம்தான். உயிர்பிழைக்க சண்டைபோடும்போது ஆயுதம் என தனியாக பிரித்துச் சொல்ல ஏதுமில்லை, அனைத்துமே ஆயுதங்கள்தான். கல், மண், குச்சி, செங்கல், ஆணி, சுத்தி, என அனைத்தையும் பயன்படுத்தலாம். உடலையும் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.   கைகளை வைத்து ஒருவரை முதுகில் முன்புறமாக மார்பில் வைத்து பின்புறமாக எப்படி வேண்டுமானாலும் தள்ளலாம். உங்கள் ஆற்றலைப் பொறுத்து எதிரிக்கு மார்பு எலும்புகள் கூட உடையும். கையிலுள்ள மூட்டு காயமடையாமல் இருந்தால...

அசைவம் உண்ணுபவர்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டுமா?

படம்
 சைவர்களின் பெருமையும், ஆணவமும்! சைவம், அசைவம் இரண்டில் எது உயர்ந்தது? இன்றைய இந்தியாவில் இது முக்கியமான விவாதப்பொருள். இதுபோன்ற விவாதங்களை சைவ உணவுபழக்கத்தினர்தான் உருவாக்கி வாதிட்டு வருகிறார்கள். சைவ உணவுமுறைதான் மனிதர்களுக்கானது என்று அவர்களே வாதிட்டு வென்று வருகிறார்கள். அவர்களுக்கு எதிர்தரப்பே தேவையில்லை என்று கூறலாம். அசைவ உணவுப்பழக்கத்திற்கு சைவ உணவுப்பழக்கத்திற்கு உள்ளது போன்ற விவாதம் செய்யும் நபர்கள் இல்லை. ஆனாலும் கூட அசைவம் உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைவர்கள், அதிகரித்து வரும் அசைவர்கள் பற்றி அக்கறையோடு நிறைய கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான நாளிதழ்கள், மாத இதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள், இணைய வலைதளங்கள் மதம், ஆன்மிகம் பற்றிய நிகழ்ச்சிகளை எழுதி ஒளி(லி)பரப்பிவழங்கி வருகின்றன. இவற்றிலும் சைவ உணவு கோஷம் தீவிரமாக உள்ளது. அதை பாராட்டியும் பேசி வருகிறார்கள். சைவ உணவுப்பழக்கம் அந்தளவு புகழ்மிக்கது, பயன்மிக்கது என்றால் எந்த விளம்பரம், பிரசாரம் இன்றியே அசைவ உணவுப்பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருவது எப்படி? பல்வேறு சாதி, ம...

சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை கூறும் நூல்!

படம்
 ஆன் டைரனி டிமோத்தி ஸ்னைடர் இந்த நூல், சர்வாதிகாரம் எப்படி தொடங்குகிறது, அதற்கு ஆதரவு கிடைப்பது எங்கிருந்து, மக்கள் அதை ஏன் ஏற்கிறார்கள் என்பதை இரு உலகப்போர்கள் பின்னணியில் இருந்து ஆராய்கிறது. சர்வாதிகாரம் பற்றிய அடிப்படைக் கருத்து ஒன்றைக் கூறிவிட்டு வரலாற்று சம்பவங்களுக்கு நூல் செல்கிறது. இது படிக்க சற்று ஆறுதலைக் கொடுக்கிறது. எழுத்தாளர் டிமோத்தி, வரலாற்றை மட்டும் எடுத்துக்கொண்டு கட்டுரை எழுதினால், அது நூலை பலநூறு பக்கங்கள் கொண்டதாக எளிதாக மாற்றியிருக்கும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. சர்வாதிகாரம் வளர்ந்து வரும் நாடாக இந்தியாவையும் எழுத்தாளர் டிமோத்தி குறிப்பிட்டிருப்பது அவரது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. அவர் வரலாற்று ரீதியாக ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு நிறைய சம்பவங்களை விளக்குகிறார். அவற்றைப் படிக்கும்போதே நமக்கு திகைப்பாக உள்ளது. ஒரு போர் நடைபெறுகிறது. அதற்கு ஆதரவாக, எதிராக அணி திரள்வோருக்கு பல திட்டங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதைப்பற்றிய விவரிப்பு யூதர்களின் இனப்படுகொலையை எப்படி வல்லரசு நாடுகள் கண்டும் காணாமலும் இருந்தன என்பதை விளக்கிக் ...

ஊழலால், அநீதியால் இழிந்த நிலைக்கு தள்ளப்படும் மூடநம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் கிராமம்! - தர்பாரி ராகம் - ஶ்ரீலால் சுக்ல

படம்
            மறுவாசிப்பு- தர்பாரி ராகம் ஶ்ரீலால் சுக்ல தமிழ் மொழிபெயர்ப்பு - சரஸ்வதி ராம்னாத் நேஷனல் புக் ட்ரஸ்ட் அரசு மீது அங்கத தன்மையோடு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் இந்தி இலக்கிய நூலை வெளியிட்டதற்காகவே அரசு வெளியீட்டு நிறுவனத்திற்கு நன்றி கூறவேண்டும். புண்பட்ட மனங்கள் அதிகரித்துவிட்ட காலத்தில், இந்த நூலெல்லாம் மறுபதிப்பு கண்டு வெளியானால் அதுவே பெரிய ஆச்சரியம். நூலாசிரியர், ஶ்ரீலால் சுக்ல. இவரது வேறு எந்த நூல்களையும் நான் படித்தது இல்லை. இந்த நூலும் வாசிப்பில் ஆர்வம் கொண்ட பிறரையும் வாசிக்க வைக்கும் நோக்கில் உள்ள சகோதரர் முருகு மூலமாகவே வாங்கினேன். அந்த வகையில் அவருக்கு நன்றி. முந்நூறு பக்கங்களுக்கும் அதிகம் கொண்ட நூலின் அச்சிடப்பட்ட விலை ரூ.28. புத்தக திருவிழா தள்ளுபடியில் ரூ.14க்கு வாங்கினேன். இந்நூலில் உள்ள கருத்துகளை காங்கிரஸ் அனுமதித்து அரசு நிறுவனம் மூலம் வெளியிட்டது.  தற்போதுள்ள வலதுசாரி மதவாத அரசு, இத்தகைய நூலை நிச்சயம் ஏற்காது. புறக்கணிக்கவே செய்யும். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் நூலில் ஏராளம் உள்ளன. சிவபால்கஞ்ச் எனும் கிராமம்...

வன்முறையைப் பயன்படுத்தி மக்களை பணிய வைக்கும் சாமர்த்தியம்!

படம்
    மேலாதிக்க சாதியினர், கையில் பத்திரிகைகளை கொண்டிருக்கிறார்கள். டிவி சேனல்களை நடத்துகிறார்கள். அரசிடம் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மக்கள் அதிகாரத்தை வலியுறுத்துபவர்களை வெடிகுண்டு வீசுபவர்கள், ஒழுங்கின்மை கொண்டவர்கள், பேரிடரை விளைவிப்பவர்கள் என வசைபாடி தவறான கருத்துகளை முன்முடிவுகளை ஏற்படுத்துகிறார்கள். முதலாளித்துவத்தைக் கொண்டுள்ள அரசு, தன்னைக் காத்துக்கொள்ள பேரிடரை ஏற்படுத்துகிறது. வன்முறையை கைக்கொள்கிறது. மக்கள் அதிகாரம், இதற்கு எதிரான இயல்பைக் கொண்டுள்ளது. அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி என இரண்டையும் உருவாக்க முனைகிறது. ஜனநாயகவாதி, முடியரசு விசுவாசி, சோசலிசவாதி, போல்ஸ்விக், மக்கள் அதிகாரர்கள் என எவரும் கூட வெடிகுண்டுகளை வீசலாம். வன்முறையைக் கையில் எடுக்கலாம். இன்றைய சூழலில் வன்முறை ஒருவரின் கையில் திணிக்கப்படுகிறது. அதை மக்கள் எவரும் வேண்டுமென தேர்ந்தெடுக்கவில்லை. ப்ரூடஸ் தனது நண்பனான அரசன் சீசரைக் கொன்றான். அவனுக்கு தனது நண்பன் குடியரசுக்கு துரோகம் செய்துவிடுவானோ என்ற பயம் இருந்தது. ப்ரூடஸ் நண்பனை விட ரோமை அதிகம் நேசித்தான் என்று கூறமுடியாது. வி...

அறிவால் பகை வெல்வோம் - பாயும் பொருளாதாரம்

படம்
      பாயும் பொருளாதாரம் 7 அறிவால் பகை வெல்வோம் கையில் நிறைய ஆயுதங்களை வைத்திருப்பவர்கள், அதை எங்காவது பயன்படுத்திப் பார்க்க முயல்வார்கள். அதை தவிர்க்கமுடியது. மனித குண இயல்பே அப்படித்தான். இந்த வகையில் அமெரிக்கா, தனது பொருளாதார வளர்ச்சிக்கு பலிகடாவாக மாற்ற கனடாவை, கிரீன்லாந்தை நிர்பந்தித்து வருகிறது. பெரிய பொருளாதாரத்திற்கு அதிகளவு இயற்கை வளங்கள் தேவை. அதை அடைய பிற நாடுகளை விலைக்கு வாங்கி, நேரடியாக அல்லது மறைமுகமாக காலனியாக்கினால் மட்டுமே பெறமுடியும். பெரிய அரசு, சிறிய அரசு என இரண்டுக்குமே சேவை வரி செயல்பாடு என அனைத்திலும் வேறுபாடுகள் உண்டு. அரசு இயங்குவதில் கருத்தியல் முக்கியத்துவம் பெறுகின்றன. வலதுசாரிகள், அரசு தனிப்பட்ட வணிகம், தொழிலதிபர்கள், தொழில்கள் எதிலும் அரசு தலையிடாது பார்த்துக்கொள்கிறார்கள். மக்களை உயிரோடு பாதுகாப்பது மட்டுமே அரசின் கடமை. என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுவதல்ல. தொழிலதிபர்களுக்கு குறைந்தளவு வரியே அரசு விதிக்கும். இதெல்லாம் வலது கருத்தியல். இதில் மதம் சேர்ந்தால் புல்டோசர்கள் பிரதமர் கட்டித்தந்த வீட்டைக்கூட இடிக்கும். ஊழல்கள், கொலை, கொள்ளை மன்...

நான்கு ஆண்டுகளில் அப்பாவை ஏமாற்றிய தாய்மாமனை பழிவாங்கும் நாயகனின் வெற்றிக்கதை!

படம்
               ஜெயித்துக் காட்டுவேன் இயக்கம் கே ராகவேந்திர ராவ் இசை ஜே சக்கிரவர்த்தி நடிப்பு வெங்கடேஷ், ஸ்வேதா, ஜெயசுதா படிப்பில்லாமல் கிடைக்கிற கூலி வேலை செய்யும் ராஜா என்பவன், சுந்தரராமன் என்ற பணக்கார தொழிலதிபரின் மகளோடு பந்தயம் போட்டு தொழில் செய்து முன்னேறுகிற கதை. ஏழை நாயகன், பணக்கார நாயகி என்ற அதே கதை. தெலுங்கு ஆட்களைப் பொறுத்தவரை எதிரியாக இருந்தாலும் அவன் நாயகனுக்கு தாய்மாமனாக, அப்பாவாக, பெரியப்பாவாக இருக்கவேண்டும். நாயகி யாரோ ஒருவரைக் காதலித்தால் எப்படி? அவள் நிச்சயம் தனது தாய்மாமனையே காதலிக்கவேண்டும். கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். இதெல்லாம் இயக்குநர் உள்நோக்கத்துடன் செய்யும் விஷயங்கள். அப்போதுதான் தெலுங்கு கலாசாரம் வானளவு புகழோடு வளர்ந்தோங்கும். உதவாக்கரையான இயக்குநர் எழுதிக்கொடுப்பதை ஒப்பிக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூட மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அந்தளவு மழுமட்டையாக மக்களை மாற்ற திரைப்படங்கள்தான் ஒரே வழி. கே ராகவேந்திர ராவ், பெண்கள் உடற்பயிற்சி செய்வதை கீழிருந்து கேமராவில் பதிவு செய்து அவர்களை காட்சி ரீதியாக கண்ணியப்...

ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் உதவ காங்கிரஸ் தவிர்த்தும் ஏராளமான கூட்டணி கட்சிகள் உள்ளன! - அகா மெக்தி

படம்
        அகா சையத் ருஹூல்லா மெக்தி ஶ்ரீநகர் நாடாளுமன்ற உறுப்பினர் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் பற்றி காங்கிரஸ் கட்சி மௌனம் காக்கிறதே? அச்சட்டப்பிரிவை திரும்ப கொண்டுவருவதாக காங்கிரஸ் கூறிவிட்டதே போதுமானது. அக்கட்சியின் நிலைப்பாட்டிற்கு நாடு முழுக்க ஆதரவான மனநிலை இல்லை என்பதால், அதைபற்றி அதிகம் பேசவில்லை என நினைக்கிறேன். மதவாத சக்திகளுக்கு எதிராக நாடு முழுக்க போராடி வருகிறோம். அந்த சமயத்தில் காங்கிரஸ் 370ஆவது பிரிவு பற்றி பேசவில்லையென்றால் பார்த்துக்கொள்ளலாம். காங்கிரஸ் கடந்து திமுக, திரிணாமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளிடம் பேசி வருகிறோம். கூட்டாட்சி முறையை உறுதிப்படுத்த அக்கட்சிகள் ஆதரவு தந்துள்ளன. எனவே, கூட்டாட்சி முறையை ஆதரிக்கும் நிறைய கட்சிகள் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவாக உள்ளன. பிடிபி ஏன் உங்களோடு இணையவில்லை? பாஜகவிற்கு எதிராக நிற்க பிடிபியை அழைத்தும் அவர்கள் வரவில்லை. பழைய விவகாரங்களை மனதில் வைத்துக்கொண்டு எங்களை வசைபாடத்தொடங்கியது. மெக்பூபா முஹ்தியின் மகள் , என்சி கட்சியை, கடுமையான விமர்சித்தார். முன்னாள் பிரதமரான ஷேக் அப்துல்லாவையும் விட்டு வைக்காமல் வசைப...

பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் - சமூகநீதி நாள்

படம்
               சேரன்மாதேவியில் வ வே சு அய்யர் நடத்திய குருகுலம் மாணவர்களிடையே ஏற்படுத்திய பாதிப்பு சாதி பேதத்தை ஏற்படுத்தியது குருகுலத்தை ஒழிக்க பெரியார் கையாண்ட முறை என்ன? தமிழ் மக்கள் அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தச் செய்தார். காங்கிரசிலிருந்து பெரியார் விலக காரணம் வகுப்புவாரி உரிமைக் கொள்கையை ஏற்காமை வைக்கம் போராட்டம் என்பது கோயிலைச் சுற்றி இருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்க உரிமை வேண்டி நடத்தப்பட்ட போராட்டம் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள் கண்ணம்மாள் - நாகம்மையார் எங்களது நோக்கம் பதவிக்கோ - பெருமைக்கோ ஆட்சி பீடத்தில் அமரவோ அல்ல. காங்கிரசாரே ஆளட்டும். அவர்களே சட்டசபைக்குப் போகட்டும். ஆனால், வடநாட்டானுக்கு அடிமைப்பட்டிருந்தால் நாங்கள் அவ்வாட்சியை எதிர்த்தே தீருவோம் - தந்தை பெரியார் எப்பொழுது ஒருவனுக்கு அவனுக்கு என்று தனி மதம், தனி சாதி, தனி வகுப்பு என்பதாக பிரிக்கப்பட்ட பின்பு அவன் தனது மதம், தனது சாதி, தனது வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்? -குடி அரசு 8.11.193...

மக்களை வகை பிரிப்பதும், இவர்கள் இப்படி என முடிவு செய்வதும் வன்முறையை ஊக்குவிக்கிறது

படம்
              அகிம்சை வழி மக்களை வகை பிரிப்பதும், இவர்கள் இப்படி என முடிவு செய்வதும் வன்முறையை ஊக்குவிக்கிறது பொதுவாக நாம் அனைவரும் வணிக திரைப்படங்களைப் பார்த்து வருகிறோம். அதில் படம் முடியும் இறுதியில் நாயகர்கள், சிலரை அடித்து உதைக்கிறார்கள். அல்லது கொன்றுவிடுகிறார்கள். அடித்து உதைக்கப்படுபவர்கள், கொல்லப்படுபவர்கள் மோசமானவர்கள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என திரைப்படம் சித்திரிக்கிறது. பெரும்பாலான படங்களில் இதுவேதான் இறுதிக்காட்சியாக இருந்த காலமுண்டு. இதைப் பார்க்கும் பார்வையாளர்கள், நாயகர்கள் செய்யும் வன்முறையை, கொலையை நன்மைக்காகத்தான், நன்மையைக் காக்க இப்படித்தான் செய்தாக வேண்டும் என ஒருவாறு ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். இப்படியான மனநிலை சமூகத்தில் வன்முறையை இயல்பான ஒன்றாக கருத வைக்கிறது. பேச்சாக, உளவியல் ரீதியாக, குடும்ப உறுப்பினர்கள் மூலமாக, இனக்குழுக்கள் இடையே, நாடுகள் இடையே மாறுபட்ட கருத்துகள், செயல்கள் வழியாக வன்முறை உருவாகிறது. வன்முறையை பாராட்டி ஏற்றுக்கொண்ட சமூகத்தில் முரண்பாடுகள் வழியாக எளிதாக வன்முறை உருவாகி வளர்கிறது. இதில் பயம்,...

இளைஞர்களின் இந்தியா - சேட்டன் பகத் - கட்டுரைத்தொகுப்பின் அட்டைப்படம் வெளியீடு

படம்
        விரைவில், இளைஞர்களின் இந்தியா நூலின் அரசியல் பகுதி - திருத்தப்பட்ட பிரதியாக இன்டர்நெட் ஆர்ச்சீவில் கிடைக்கும். இந்த நூல் சேட்டன் பகத்தின் கட்டுரைகளை அடிப்படையாக கொண்டது.   

அரசுக்கும், டெக் நிறுவனங்களுக்குமான மேலாதிக்க போட்டி!

படம்
          அதிகாரப் பந்தயம் - அரசு, சமூக வலைத்தளங்களின் மேலாதிக்க மோதல் போக்கு! இணையத்தில் உள்ள பல்வேறு சமூக வலைத்தளங்கள் மீது நெருக்கடிகள் திணிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் டெலிகிராம் குறுஞ்செய்தி நிறுவனத்தின் தலைவர் பாவெல் மீது குற்றச்சாட்டு பதிவாக, அவர் பிரான்சில் கைதானார். பிரேசில் நாட்டில் எக்ஸ் வலைத்தளம் நீதிமன்ற பிரதிநிதியை நியமிக்காத காரணத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மெட்டா நிறுவனம், பைடன் ஹாரிஸ் ஆகியோரின் நிர்வாகத்தால் சமூக வலைத்தள தணிக்கையை செய்யுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறது. டெலிகிராம் நிறுவனம், போதைப்பொருட்கள் கடத்தல், சட்டவிரோத பரிவர்த்தனைகள், குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், ஆபாச வீடியோக்கள் பகிரல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. இதுபற்றிய தகவல்களை அரசு அமைப்புகளுக்கு தருவதில் டெலிகிராம் ஆர்வம் காட்டவில்லை. பிரேசில் நாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதி எக்ஸ் தளத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நீதிபதி டீ மோரஸ், எக்ஸ் தளம் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தும் பிரதிநிதிகளை நீக்கியதால் இப்படியான தடை உத்தரவ...

அதீதசுயமோக வெறியால் துண்டாடப்படும் குடியரசு!

படம்
        வினோதரச மஞ்சரி ஐந்தாம் வரிசை இருக்கையும், அதீத சுயமோகமும் கூலிப்படை ஊடகங்களில் வேலை செய்து பிறகு, அவை தொழிலதிபர்களின் கைகளுக்கு போனபிறகு வெளியே வந்த பத்திரிகையாளர்களில் பர்கா தத், ரவீஷ் குமார் ஆகியோர் முக்கியமானவர்கள். ரவீஷ் குமார், யூட்யூபில் தனி சேனல் ஒன்றைத் தொடங்கி இந்தியில் அரசியல் விவகாரங்களை அவருடைய அனுபவங்கள் வழியாக அலசி பேசிக்கொண்டிருக்கிறார். பர்காதத் மோஜோ எனும் யூட்யூப் சேனலைத்தொடங்கி நடத்தி வருகிறார். நேர்மையான, பாகுபாடற்ற செய்திகளை விரும்புவர்கள் எவரும் இந்த சேனல்களை அணுகி செய்திகளை புரிந்துகொள்ள முயலலாம். ரவீஷ்குமார் யூட்யூப் சேனலில் குடியரசு விழாவில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு ஒலிம்பிக் வீரர்களுக்கும் பின்னால் ஐந்தாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது பற்றி பேசியிருந்தார். அதில் முக்கியமானது, தற்போதைய பிராமண இந்து மதவாத கட்சியின் தலைவருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்குமான வீடியோக்கள், அதில் நாம் அறிந்துகொள்ளும் செய்தி. ஒருவர் அதிகாரத்திற்கு வந்து அதை வைத்து என்ன செய்கிறார், எப்படி நடந்துகொள்கிறார் என்பதே முக்கியம். இன்று எதிர்க்கட்சி த...