இடுகைகள்

மதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாகிரக நெருப்புப் பொறி! - 131 ஆண்டுகள்

படம்
          131 ஆண்டுகள் - சத்தியாகிரக நெருப்பு பொறி! தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவம், இந்தியாவின் சுதந்திரத்திற்கு உதவும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், வரலாற்று நிஜம் அப்படித்தான் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையம். அங்குள்ள ரயிலின் முதல் வகுப்பு வெள்ளையர்களுக்கானது. முறையாக முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி அமர்ந்த இளம் வழக்குரைஞர், வெள்ளையர்களால் ரயில் பெட்டியிலிருந்து வெளியே இழுத்து வீசப்பட்டார். அவர் பெயரை தனியாக நான் கூறவேண்டியதில்லை. அவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆம் தேசத்தந்தையான மகாத்மா காந்திதான். அந்த சம்பவமே காந்தியை சட்டமறுப்பு அதாவது சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுக்க வைத்தது. அப்போராட்டம் தொடங்கி இந்த ஆண்டோடு 131 ஆண்டுகள் ஆகிறது. 1893ஆம் ஆண்டு, ஜூன் ஏழாம் தேதி மகாத்மா காந்தி ரயிலில் டர்பனிலிருந்து பிரிடோரியா சென்றுகொண்டிருந்தார். அப்போதுதான், ரயில் நிலைய அதிகாரி அவரிடம் தகராறு செய்தார். காந்தி, முதல் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்புக்கு செல்லவேண்டும் என மிரட்டினார். காந்தி மறுக்கவே காவலர் ஒருவரின் துணையுடன் அவரை வெ

சொத்துக்களை எரி, சிறையில் அடை, வணிகத்தை தடு - இந்து தேசியவாதத்தின் பரிசோதனைக்கூடமான உத்தர்கண்ட் மாநிலம்!

படம்
  அதீத இந்து தேசியவாதத்தின் பரிசோதனைக்கூடம்! இந்தியாவிலுள்ள உத்தர்கண்ட் மாநிலம் கடவுளின் நிலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பல நூறு கடவுள்கள் இருக்கிறார்கள் எந்த கடவுளுக்கு சொந்தமான நிலம் என்றால், இந்துக்கடவுள்களுக்கான நிலம் என பல நூற்றாண்டுகளாக கூறி வருகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இந்து கோவில்களும், புனிதப்பயணம் செய்வதற்கான இடங்களும் உள்ளன.  கடந்த பத்தாண்டுகளாக வலதுசாரி மத அடிப்படைவாதிகள், உத்தர்கண்ட் மாநிலத்தை அதீத தேசியவாதத்தை அரசியல் சக்தியாக பயன்படுத்தி வருகிறார்கள். அங்குள்ள முஸ்லீம் சிறுபான்மையினரை பகிரங்கமாக மிரட்டியும், இனப்படுகொலை செய்வோம் என சூளுரைக்கவும் தொடங்கியுள்ளனர். கடந்த ஏப்ரல் பத்தொன்பதாம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. மூன்றாவது முறையும் வெறுப்பு, பிரிவினை கருத்துகள், முஸ்லீம்களை அடிப்போம், துரத்துவோம், 400 இடங்கள் வென்றால் அரசியலமைப்பை மாற்றுவோம், மசூதியை இடிப்போம் என ஆக்கப்பூர்வமான பல்வேறு வாக்குறுதிகளை பாரதீயன்கள் வெளிப்படையாக அளித்து வருகிறார்கள்.  கல்வி அறிவு இல்லாத மூடநம்பிக்கையில் ஊறிய, தனது வாழ்க்கையை முன்னேற்ற வானத்தில்

பௌத்தம் வெறும் தத்துவம்தானா? - கேள்வி பதில்கள்

படம்
  பௌத்தம் என்றால் என்ன? பௌத்தம் என்றால் விழித்தெழுவது என்று பொருள். பௌத்த மதத்தின் அடிப்படை தத்துவமே, மனிதர்களை விழித்தெழச் செய்து விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதுதான். தனது 36 வயதில் விழிப்புணர்வு பெற்ற சித்தார்த்த கௌதமர், புத்தர் என அழைக்கப்படுகிறார். உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் பின்பற்றும் மதமான பௌத்தம், உருவாகி 2500 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆசியாவில் தோன்றினாலும் இப்போது அமெரிக்கா, ஐரோப்பாவில் செல்வாக்கு பெற்றுவருகிறது.  பௌத்தம் என்பது வெறும் தத்துவம்தானா? தத்துவம் என்பதற்கு அறிவின் மீதான அன்பு என்று ஆங்கிலச் சொற்களை பிரித்தால் பொருள் வரும். இதுவே பௌத்த மதத்தை சிறப்பாக சுருக்கமாக விளக்குகிறது. அறிவுசார்ந்த புரிதலை ஆழமாக்கி விரிவாக்கி அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருப்பதை பௌத்தம் வலியுறுத்துகிறது. அன்பையும் இரக்கத்தையும் அடிப்படையாக கொண்ட பௌத்தம், வெறும் தத்துவமல்ல. அது மானுடத்தின் உயர்ந்த தத்துவம்.  புத்தர் என்பவர் யார்? கி மு 563. இந்தியாவின் வடக்குப்பகுதியில் அரச குடும்ப வாரிசு பிறந்தது. அந்த குழந்தையின் பெயர்தான் சித்தார்த்தன். உலகின் சோகங்கள் தாக்காமல் அந்த குழந்தை

அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்!

படம்
  அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்! இந்தியாவில் ஆண்டுதோறும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தை தழுவுகிறார்கள் என குஜராத் மாநில பௌத்த அகாடமி செயலாளர் ரமேஷ் பேங்கர் கூறியுள்ளார். 1956ஆம் ஆண்டு, டாக்டர் பி ஆர் அம்பேத்கர், லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து பௌத்த மதத்திற்கு மாறினார். சுதந்திர இந்தியாவில் நடந்த முக்கியமான கவனம் கொள்ளப்பட்ட மதமாற்ற நிகழ்ச்சி எனலாம்.  தற்போதைய நேபாளம்தான் சாக்கிய நாடு. அங்கு, இளவரசராக இருந்த சித்தார்த்தர் உலக உண்மைகளை கண்டறிந்து துறவு மேற்கொண்டார். அவர் ஞானம் பெற்று சீடர்களுக்கு நல்வழியை உபதேசிக்க தொடங்கிய பிறகு உருவானதுதான் பௌத்த மதம். கி மு ஐந்தாம் நூற்றாண்டில் பௌத்தம் உருவாகி வளரத் தொடங்கியது.  இந்த மதம், வேதகால இந்துமதத்திற்கு எதிரான கருத்துகளை, செயல்பாடுகளைக் கொண்டிருந்தது. சிராமணி இயக்கத்தின் விளைவாக தோன்றிய பௌத்த மதம், பிராமண சடங்கு, சமூக அமைப்பிற்கு எதிரானதாக இருந்தது என வரலாற்று வல்லுநர் எல்பி கோம்ஸ் குறிப்பிட்டார்.  சமண மதம், பௌத்தத்தை விட காலத்தே சற்று முந்தியது. இதன்

ஒரே உலகம் ஒரே பாரதீயன் - அனுபவக்கதை - 1

படம்
அன்று நல்ல நாளா என்று பழனிசாமிக்கு தெரியவில்லை. ஆனால், அன்றுதான் ஈரோட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள் முன்னதாகத்தான் 420 சரணுக்கு போன் செய்திருந்தான். முதலில் ஏர்செல் அலுவலகம் திறந்திருந்தவன். அரிசிக்கடைக்காரரின் ஊனமான பெண்ணை நோட்டம் விட்டு திரிந்தான். பிறகு என்னவானதோ, தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிருபராகி கலெக்டர் ஆபீஸ் உள்ளே பணியாற்றிய பெண்ணை கல்யாணம் செய்துகொண்டான். எப்பட்ரா கல்யாணமெல்லாம்? அது அப்படித்தான் லவ்வாயிடுச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீ எதுவும் பண்ணுலியா? நான் பண்றதுக்கு கையில் காசும் இல்ல. வேலையும் இல்ல. நான் ஈரோட்டுக்கு வர்றேன். நோக்கியா போன்ல பிரச்னை. அங்க கஸ்டமர் சர்வீஸ் சென்டர் எங்கிருக்கு? உனக்குத் தெரியுமான்னு கேட்கத்தான் போன் பண்ணேன். பெருந்துறை ரோட்டுல ஒண்ணு இருக்கு. நோக்கியா போனுங்கறேயே என்ன போனு பட்டன் போனா? பட்டன் போனா… ஆண்ட்ராய்ட்தான். டச் போனு. அங்க வந்துட்டு வேல முடிஞ்சா உன்ன பாக்க வரலாமா? நா ரொம்ப பிஸி. இருந்தாலும் உன்ன பாக்க முடியுமான்னு தெரில. நீ பன்னீர் செல்வம் பார்க்குக்கு வந்துட்டு கூப்பிடு. பார்ப்போம். சரண் சாதாரண ஆள் கிடையாது. பல ஆட்களையும்

ஆறாத ரணம் - ராமர் கோவில்

படம்
  டெல்லியிலுள்ள மசூதி இடிக்கப்பட்ட காட்சி ஆறாத புண்ணில் உப்பை பூசும் ராமர் கோவில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டது. அயோத்தியில் இருந்த நூற்றாண்டு கால மசூதியை, 1992ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பல் தாக்கி இடித்தது. இதில் திட்டமிட்டு உருவாக்கிய கலவரம் காரணமாக 2 ஆயிரம் மக்கள் இறந்தனர். புதிதாக திறந்த கோவிலின் திறப்புவிழாவில், புதிய யுகம் பிறந்துவிட்டது என இந்திய பிரதமர் மோடி கூறினார். பிறர், இதை இந்து தேசியவாதம் என்றே கருதுகிறார்கள்.  அயோத்தியா நகரம் ராமர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. அங்குள்ள மசூதியை இடித்தபோது வலதுசாரி இந்துத்துவ கட்சியான பாஜக முன்னேறத் தொடங்கியது. இப்போது ஆட்சியில் உள்ளதால், அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற இயல்பு மடைமாறி மதம் சார்பான நாடாக மாற்றப்பட்டுள்ளது பாஜகவின் வெற்றி என்று கூறலாம். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, முஸ்லீம் அகதிகளுக்கு குடியுரிமையை மறுத்தது, ராமர்கோவிலை கட்டியது ஆகிய அம்சங்கள், இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டது. இதன் கார

அரசியலில் கருவியாக பயன்படுத்தப்படும் உளவியல் பற்றி பேசி விமர்சித்ததால் கொல்லப்பட்ட உளவியலாளர்

படம்
  ignacio martin baro இக்னாசியோ மார்ட்டின் பாரோ ஸ்பெயின் நாட்டில் பிறந்தவர். 1959ஆம் ஆண்டு, மதக்கல்வியைக் கற்க தென் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஈகுவடாரின் கொய்டோவில் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். கொலம்பியாவில் உள்ள ஜாவெரியனா பல்கலையிலும் படித்தார். 1996ஆம் ஆண்டு, பாதிரியாக தேர்ச்சி பெற்றவர், எல் சால்வடோருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சான் சால்வடோரி்ல் உள்ள சென்ட்ரல் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார். உளவியல் பற்றி படித்து பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் சமூக உளவியல் படித்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் அங்கயே உள்ள உளவியல் துறையில் தலைவராக மாறினார். பிறகு, சென்ட்ரல் அமெரிக்காவிற்கு சென்றார்.  மார்ட்டின் பாரோ, எல் சால்வடோரில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பற்றி பகிரங்கமாக விமர்சனம் செய்தார். 1986ஆம் ஆண்டு, பொதுமக்களின் கருத்து என்ற பெயரில் தனி அமைப்பை உருவாக்கினார். ராணுவத்தின் படுகொலைப் பிரிவு, மார்ட்டினோடு சேர்ந்து மேலும் ஐந்துபேர்களை படுகொலை செய்தது. அரசியல் ஊழல், அநீதி என குற்றம்சாட்டி படுகொலையை நியாயப்படுத்தினர்.  முக்கி

கும்பலின் அதிகார ஆதிக்கத்திற்கு தனிமனிதர்கள் கட்டுப்பட்டு கீழ்படிவது ஏன்?

படம்
  ஒரு தலைவனுக்கு தொண்டர்கள் கட்டுப்படுகிறார்கள். ஆனால் எதற்காக? தலைவனது வலிமை தொண்டர்களை விட அதிகம். அவனால் செய்யவேண்டிய முக்கிய வேலைகளை பிறருக்கு சொல்லவும் முடியும். அதை திறம்பட செய்துகாட்டவும் முடியும். தொலைநோக்கும், புத்திசாலித்தனமும், வலிமையும் கொண்டவர்களுக்கு எப்போதுமே பின்தொடரும் கூட்டம் உண்டு. இணையத்தில் மட்டுமல்ல நிஜத்திலும்தான். மனிதர்கள் எப்படி பிறருக்கு அடிபணிகிறார்கள் என்பதை உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் ஆராய்ந்தார். இதுபற்றி, பிஹேவியரல் ஸ்டடி ஆஃப் ஒபீடியன்ஸ் என்ற ஆய்வறிக்கையை எழுதி பிரசுரித்த ஆண்டு 1963. பெரும்பான்மையான மக்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கையில் கொடுக்கும்போது, அவர்கள் அதை வைத்து மக்களுக்கு கெடுதல்களையே செய்வார்கள் என்பதும் கூட ஸ்டான்லியின் அறிக்கையில் தெரிய வந்த உண்மைகளில் ஒன்று. ஒருவகையில் ஒருவரின் அறமதிப்புகளின் எல்லையை சோதிக்கும் விதமாக நடைபெற்ற உளவியல் சோதனை என இதைக் கூறலாம்.  அன்றைய காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜிப்படையைச் சேர்ந்த அடால்ஃப் ஐக்மன் என்பவரின் விசாரணை பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருந்தது. ஸ்டான்லி இந்த விசாரணையை ஆர்வமாக கவனித்து வ

யூதர் என்ற காரணத்திற்காக வேட்டையாடப்பட்ட உளவியலாளர் செர்ஜ் மாஸ்கோவிசி

  செர்ஜ் மாஸ்கோவிசி ரோமானியாவின் பிரெய்லாவில் யூதக்குடும்பத்தில் பிறந்தார். பிறகு பள்ளியில் சேர்ந்தார். யூதர் என்ற ஒரே காரணத்திற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1941ஆம் ஆண்டு, யூதர்கள் அவர்களின் மதம் காரணமாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். செர்ஜூவும் அவரது தந்தையும் உயிர் பிழைக்க பல்வேறு நகரங்களுக்கு நகர்ந்து சென்றுகொண்டே இருந்தனர்.  இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரெஞ்சு மொழியைக் கற்றார். அப்போது 'டா 'எனும் கலை பத்திரிகையை துணை நிறுவனராக இருந்து தொடங்கி நடத்தினார். பின்னாளில் இந்த பத்திரிக்கை தணிக்கை சட்டம் காரணமாக தடை செய்யப்பட்டது.  ரோமானியாவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு முகாம்கள் வழியாக நகர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு பிரான்சிற்கு சென்றார்.  1949ஆம் ஆண்டு, உளவியலில் பட்டம் வென்றார். முனைவர் படிப்பை, டேனியல் லாகாசே என்பவரின் வழிகாட்டலில் செய்தார். இதற்கான கல்வித்தொகையை அகதி என்ற அடையாளத்தின் கீழ் பெற்றார். 1965ஆம் ஆண்டு, சமூக உளவியலுக்கான ஐரோப்பிய ஆய்வகத்தை உருவாக்கினார். அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் உளவியல் பேராசிரியர

ஒரே நேரத்தில் மூன்று இளம்பெண்களை காதலிக்கும் ரோமியோ!

படம்
  ரோமியோ மலையாளம்  திலீப்,விமலா ராமன், சம்யுக்தா,ஹனீபா சாதி,மதம் மாறி மூன்று பெண்களை காதலிக்கும் ரோமியோ ஒருவரின் கதை. உண்மையில் வதந்தி நாளிதழில் வரும் செய்தியைப் போன்றதல்ல. இங்கு நாயகன் மனு கிருஷ்ணன், தனது வேலை, அதில் வரும் சம்பளத்தையே நம்பியிருக்கிறார். அதில் பிரச்னை வரும்போது, பெயர் மாற்றி, சாதி மாற்றிக்கொண்டு ஓரிடம் செல்கிறார். அங்கு வாழும் ஒரு அய்யங்கார் பெண்,சுப்பிரமணி என்ற பெயருடைய நாயகனை விரும்பத் தொடங்குகிறாள். ஏன் என்றால் அதற்கென அவளுக்கென சில காரணங்கள் உள்ளன. அவளுக்கென பார்த்த மாப்பிள்ளை குடிநோயாளி. சுப்பிரமணிதான் அவனுடைய பெயரும் கூட.  நாயகன், அய்யங்கார் பெண்ணிடம் வாய்ப்பாட்டு கற்கவும் கூட முயல்கிறான். இப்படி சில விஷயங்கள் ஒற்றுமையாக இருக்க அந்தப்பெண் நாயகனை காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால் நாயகன் அவளை காதலிப்பதில்லை..   அடுத்து, டிவி நிகழ்ச்சி பாடகியின் அப்பாவிடம், வாங்கிய காசை அடைப்பதற்காக பாடகியை மணக்க முடிவெடுக்கிறார் மனுகிருஷ்ணன். ஆனால் இந்த சமாச்சாரம் அந்தளவு எளிதாக இல்லை. பாடகியின் அப்பா, நாயகன் மனுவை மதம் மாறச் சொல்லி நிபந்தனை விதிக்கிறார். இதனால் மானுவேல் என பெயர் மாற

இந்துத்துவா எனும் கருத்தியலை குறுகிய மனத்துடன் சுயநலனிற்கு பயன்படுத்துபவர்களைப் பற்றி விளக்கும் நூல்!

படம்
  நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர் கிழக்கு பதிப்பகம் 341 பக்கங்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் எழுதிய நூலை வலதுசாரி கருத்தியல் கொண்ட கிழக்கு பதிப்பகம் ஏன் வெளியிட்டுள்ளது என வாசகர்களுக்கு சந்தேகம் எழலாம். அதற்கான பதில் தலைப்பிலேயே உள்ளது.  இந்துமதம் எப்படிப்பட்டது, அதில் உள்ள தன்மைகள் என்ன, அதற்கு உழைத்த ஆதிசங்கரர்,ராமானுஜர் ஆகியோரின் பங்களிப்பு, சங்கரர் உருவாக்கிய மடங்கள், அதன் பணிகள், நிறுவன மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என முதல் பகுதி விளக்குகிறது. இதற்குப்பிறகு சசி தரூர் விளக்குவது இந்துத்துவா என்ற கொள்கையை உருவாக்கிய சாவர்க்கர், அதை மேம்படுத்திய கோல்வால்கர், ஹெட்கேவர் ஆகியோர் எப்படி அதை குறுகிய நோக்கத்தில் பார்த்து மக்களின் மத நம்பிக்கையை சுயநலனிற்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார்.  இங்குதான் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்பின் செயல்பாடு உள்ளே வருகிறது. கலாசார தேசியம் என்ற பெயரில் நிறுவன மதங்கள் போலவே இந்து மதத்தை எந்தெந்த வழிகளில் மாற்ற முயல்கிறார்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நூலை தொடக்கத்தில் படித்தது, இ

தாலிபன் எனும் அடிப்படை மதவாத தீவிரவாத இயக்கம் தோன்றிய வரலாறு!

படம்
  பா ராகவன் எழுத்தாளர் தாலிபன் பா ராகவன்   கிழக்கு பதிப்பகத்தின் முன்னாள் ஆசிரியரும், இந்நாள் மெட்ராஸ் பேப்பர் இணைய பத்திரிகையின் முதன்மை ஆசிரியருமான பா ரா எழுதிய நூல். நாவல்களை எழுதினாலும் கூட கட்டுரை நூல்களை திறம்பட நயமாக எழுதுவதில் சோடை போகாத எழுத்தாளர். வளரும் எழுத்தாளர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து புதிய எழுத்தாளர்களை உருவாக்கி வருகிறார். அதில் அவருக்கு வருமான நலம் இருந்தாலும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. கணபதி துதி முடிந்தது. நூலைப் பற்றி பார்ப்போமா? ஆப்கனிஸ்தான் பற்றிய நூலை படித்து முடிக்கும்போது, அங்கு மீண்டும் தாலிபன் ஆட்சி தொடங்கியிருக்கிறது. அதன் நேரடி விளைவாக மக்கள் துன்பமுற தொடங்கியிருக்கிறார்கள். இந்த அவல வாழ்க்கை ஏன் என பெண்கள் தற்கொலை செய்துகொண்டு வருகிறார்கள். மரணம் மிகப்பெரும் விடுதலை அல்லவா? ஆப்கனிஸ்தானில் ஓபியம் பயிரிட்டு அதை விற்பதன் மூலம் அந்த நாட்டிற்கு பெருமளவு பணம் கிடைக்கிறது. ஆனால் இந்த வியாபாரத்தால் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானுக்கு லாபம் என்றாலும் போதைப்பொருள் சார்ந்த நிறைய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற வகையில் இந்தியாவுக்கு பெரும் தலைவலி.   த

பெண்களை கல்வி கற்க விடாமல் முடக்கும் தாலிபன்கள்-அதிகரிக்கும் இளம்பெண்கள் தற்கொலை

படம்
  தற்கொலை செய்துகொள்வதே மேல் – ஆப்கன் தற்கொலை விவகாரம்   மோசமான மதவாத, தீவிரவாத சர்வாதிகாரத்தை மக்கள் அறியாமையால் தேர்ந்தெடுத்தாலும் கூட விளைவு ஒன்றுதான். மக்கள் மெல்ல சாவார்கள். அதுபோல தீயசக்தி கொண்ட அரசியல் தலைமை ஏற்பாடுகளை செய்யும். மக்களும் அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாதபடி வாழ்வார்கள். அரசிடம் காசு வாங்கி   பிழைக்கும் ஊடகங்கள், அரசின் தவறுகளை கேள்விகேட்கும் செயல்பாட்டாளர்களை அவதூறு செய்து செய்திகளை வெளியிட்டு ஊடக தர்மத்தை காப்பாற்றுவார்கள். 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு   வந்தபிறகு நடக்கும் அலங்கோலம் இதுதான். முழுக்க மத அடிப்படையிலான ஆட்சி என்பதால், கற்காலத்திற்கே நாட்டை கொண்டு செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.   இந்தியாவின் ஆதரவில் அமெரிக்க படைகள் இருந்தபோது பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டது. வேலைக்கு சென்றார்கள். சுய தொழில்களை தொடங்கினர். ஆனால், இன்று மேற்சொன்ன அனைத்தையும் ஆப்கன் ஆட்சியாளர்கள் தடை செய்துவிட்டனர். பெண்களை போகப்பொருளாக கருதுவதால், தொடக்கப்பள்ளிக்கு மட்டும் அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை செய்ய வைத்து உறவினர்களுக்கு திருமணம் செய்து வைத்த

தெரிஞ்சுக்கோ - மொழி, கொடி, மதம்

படம்
  தெரிஞ்சுக்கோ   - மொழி ஜிம்பாவே நாட்டில் பதினாறு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. ஒரு நாடு அங்கீகரித்துள்ள அதிகாரப்பூர்வ மொழிகளில் இதுவே அதிகம். இருபத்தொன்பது நாடுகளில் பிரெஞ்சு மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. உலகம் முழுக்க உள்ள எண்பது சதவீத பேசப்படும் மொழிகளை ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே பேசி வருகிறார்கள். உலக மக்கள்தொகையில் பாதிப்பேருக்கு இரு மொழிகளில்   எழுத, பேச தேர்ச்சி உண்டு. கத்தோலிக்க சர்ச்சின் தலைவர் போப் ஃபிரான்சிஸ் தனது செய்திகளை லத்தீன் உட்பட ஒன்பது மொழிகளில் மக்களுக்கு பகிர்கிறார். ஐ.நா அங்கீகரித்துள்ள ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் இவைதான். அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிய மொழி. விசில் ஒலிகளைக் கொண்டுள்ள மொழியை சில்போ என்று அழைக்கிறார்கள். கானரி தீவுகளில் உள்ள லா கோமெரா மக்கள்   ஐந்து கி.மீ. அளவில் விசில் ஒலியைக் கொண்டு தகவல் தொடர்பு கொள்கிறார்கள். 12.3 சதவீத மக்கள் சீனாவின் மாண்டரின் மொழியைப் பேசுகிறார்கள்.   கொடி பாரகுவே நாட்டின் தேசியக்கொடி ஓராண்டில் நான்கு முறை மாற்றப்பட்ட வரலாறு கொண்டது. 1811-1812 காலகட்டத்தில் இப்படி சீர்திருத்த