இடுகைகள்

சூழல் தாக்க மதீப்பிட்டு வரைவு 2020 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவாதம் தேவையில்லை. செயல்பாடுதான் இப்போது முக்கியம்! - ஆர்.பி குப்தா

படம்
      newsminute       கொரோனா காலத்தில் மத்திய அரசு ஏராளமான சட்ட மசோதாக்களை கொண்டு வந்தது. அவற்றில் மக்களின் கடும் கண்டனங்களை சந்தித்து வருவது, சூழல் மதிப்பீட்டு வரைவு 2020. இரண்டு லட்சம் பேரின் எதிர்ப்புகளை இம்மசோதா கண்டுள்ளது. இதுபற்றி சூழல்துறை செயலர் ஆர்.பி குப்தாவிடம் பேசினோம். நீங்கள் கொண்டு வந்த சூழல் தாக்க மதீப்பிட்டு வரைவு கடும் கண்டனங்களை சந்தித்திருக்கிறது. இதனை எப்படி சட்டமாக்க போகிறீர்கள்? எங்களுக்கு இதுவரை 18 லட்சம் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இவற்றை அனைத்தையும் படிக்க முடியாது. இவற்றில் 95 சதவீத மின்னஞ்சல்கள் திரும்ப திரும்ப அனுப்பப்பட்டவை. இதற்கென தனி கமிட்டி உள்ளது. அவர்கள் மக்களின் கருத்தை ஆராய்ந்து சட்டம் உருவாகும்போது அதில் சேர்ப்பார்கள். உங்களுடைய மசோதாவுக்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்? இதில் மக்களை பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. வேண்டுமென்றே அரசியல் நோக்கத்துடன் இம்மசோதாவை சிலர் தூண்டிவிட்டு எதிர்க்க வைக்கிறார்கள். இயற்கை சூழலைப் பொறுத்தவரை இது சரியான திட்டம்தான். அரசியல் என்ற வகையில் பார்த்தால், இதனை யாரும் தடுக்கலாம். சூழல் அமைச்சகம் இதனை ஏன் முக்க