இடுகைகள்

வேதிப்பொருள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

35 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளிக்காக, குற்றவாளிகளை நெருப்பால் கொல்லும் சீரியல் கொலைகாரன்!

படம்
  chimera k drama  16 episodes Chimera (Korean: 키마이라; RR: Kimaira) is a South Korean television series directed by Kim Do-hoon and written by Lee Jin-mae. Starring Park Hae-soo, Lee Hee-joon and Claudia Kim, the series tells the story of three leading characters who dig through secrets of the past 30 years to find ...   Wikipedia கிமேரா என்றுதான் தொடரில் உச்சரிக்கிறார்கள். எனவே அப்படியே தொடருவோம்.  1984ஆம் ஆண்டு கிமேரா என்ற கிரேக்க புராணக்கதையில் வரும் மிருகத்தின் அடையாளத்தை வைத்துக்கொண்டு கொலைகாரர், மூன்று பேர்களைக் கொல்கிறார். அந்த மூன்று பேருமே ஹான்மியாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஐந்து ஆராய்ச்சியாளர்களில் ஒரு பெண் ஆராய்ச்சியாளர் காணாமல் போகிறார். உயிர்தப்பும் மற்றொருவர் சியோரன் என்ற பெருநிறுவனத்தின் குடும்பத்தில் பெண் எடுத்து மருமகனாகிறார். எளிமையாக முதலாளி ஆகிறார்.  35 ஆண்டுகள் கழித்து ஆராய்ச்சியாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் செய்தியை பத்திரிகையில் எழுதிய  முன்னாள் ஊழல் பத்திரிக்கைகாரர் திடீரென காரில் வைத்து எரிக்கப்படுகிறார். காரில் லைட்டர் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. அதில் கி

அல்ட்ரா புரோசசஸ்ட் ஃபுட்ஸ்! - பதப்படுத்தப்பட்ட பொருட்களில் என்ன இருக்கிறது?

படம்
  நுட்பமாக பதப்படுத்தப்பட்ட பொருட்கள் குழந்தை உணவுகள், கார்பன் பானங்கள், நொறுக்குத்தீனிகள், பிஸ்க், பிரட், காலை உணவாக சாப்பிடும் உணவுகள், இனிப்புகள், உடனடியாக சூடு செய்து உண்ணும் உணவுகள்   இந்த வகைமையில் வரும். பழச்சாறு சார்ந்த பொருட்கள், மால்டோடெக்ஸ்ட்ரின், டெக்ஸ்ட்ரோஸ், கோல்டன் சிரப், சோயா புரதம், நீரேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள், குளூட்டேன், மோனோசோடியம் குளுட்டமேட், செயற்கை நிறமிகள், அடர்த்திக்காக சேர்க்கும் வேதிப்பொருட்கள், கெடாமல் வைத்திருக்கவும், செரிமானத்திற்காகவும் சேர்க்கப்படும் பொருட்களும் இதில் உண்டு. நுட்பமாக பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு, அடிமைப்படுத்தும் விதமான பொருட்கள் உள்ளன. இதன் விளைவாக ஒருவருக்கு உடல் பருமன், இரண்டாம் நிலை நீரிழிவு நோய், இதயதசை தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இந்த உணவுகளில் புரதம், ஜிங்க்,, மெக்னீசியம், வைட்டமின் ஏ, சி,டி, இ, பி12 ஆகியவை குறைவாக இருக்கும். வயிற்றில் உள்ள செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியாக்களை இந்த உணவு பாதிக்கிறது. காமில் அஹ்மது கார்டியன் வீக்லி படம் - பின்டிரெஸ்ட்

பூமியின் அடித்தட்டு மர்மம்! - பூமியின் அடித்தட்டில் இருப்பது உலோகமா, வேறு பொருட்களா?

படம்
  பூமியின் அடித்தட்டு மர்மம்! பூமியின் கீழ்ப்புறபகுதியில் நிறைய மர்மங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும் நாம் அறிந்தது, குறைவான தகவல்களைத்தான். புவியோடு பகுதி, மூடகப் பகுதியைக் (Mantle) கடந்து கண்டத்தட்டுகள், வெளிப்புற, உட்புற கருவப் பகுதிகளில் (Outer, inner core ) அழுத்தமும் வெப்பமும் அதிகம். பூமியின் கீழே 5 ஆயிரம் கி.மீ. ஆழத்திற்கு செல்லும்போது, அங்குள்ள உட்கருவத்தில்  இரும்பு, நிக்கல் உருண்டையான வடிவத்தில் உள்ளது என்பதே ஆய்வாளர்களின் எண்ணமாக இருந்தது.  நேச்சர் இதழில் வெளியாகியுள்ள அறிவியல் அறிக்கையில், உட்கருவத்தில் திட, திரவம் என இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையில் (Super ionic state) பொருட்கள் உள்ளன என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்காக, நிலநடுக்க அலைகளைப் (Seismic waves) பயன்படுத்தியுள்ளனர்.  புவி அடுக்குகளுக்கு இடையில் நிலநடுக்க அலைகள் வெவ்வேறு அலைநீளத்தில் செலுத்தப்பட்டு, அதில் உள்ள வேதியியல் பொருட்களை அறிய முயன்றனர். இதற்கு முன்னர் செய்த ஆய்வில், ஷியர் அலைகளை (Shear waves)  பயன்படுத்தினர். இதில் கிடைத்த  தகவல்களை வைத்து, புவியின் உள் கருவத்த

லிப்ஸ்டிக்கில் மீனின் உடல் பாகங்கள் பயன்படுத்தப்படுகிறதா? - உண்மையா, உடான்ஸா

படம்
  உண்மையா, உடான்ஸா? லிப்ஸ்டிக்கில் மீனின் உடல்பாகங்கள் பயன்படுகிறது! ரியல் உண்மை. லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், சோப்பு, ஷாம்பு ஆகியவற்றிலும் மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன. மீன் செதில்கள் ப்யூரின் (Purine) என்ற வேதிப்பொருளால் உருவானவை. ப்யூரின், ஒளியை பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. இதனால்தான், மீன் செதில்களைக் கொண்ட லிப்ஸ்டிக்கைப் பூசும்போது பளீரென்ற பிரகாச தன்மை கிடைக்கிறது. இதுபோலவே பிரகாசம் தரும் செயற்கை வேதிப்பொருட்களும் உள்ளன. ஆனால் அவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை.  நவீன கத்தரிக்கோலின் தந்தை, லியனார்டோ டாவின்சி! ரியல் உண்மையல்ல. டாவின்சி, தனது ஓவிய கேன்வாஸை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை பயன்படுத்தினார். இதனால் அவர்தான் கத்தரிக்கோலை உருவாக்கினார் என கூறுகின்றனர். ஆனால், கி.மு. 1500களில் தொன்மை எகிப்தியர்கள் கத்தரிக்கோலைப் பயன்படுத்தியுள்ளனர். 1761ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஷெஃபீல்டைச் சேர்ந்த ராபர்ட் ஹின்ச்லிஃப் (Robert Hinchliffe) ஸ்டீலைப் பயன்படுத்தி கத்தரிக்கோல்களை உற்பத்தி செய்தார். இவரே நவீன கத்தரிக்கோலின் தந்தை ஆவார்.  https://www.huffpost.com/entry/fish-scales-lipstick_n_

அலுமினியம் எப்படி மறுசுழற்சி செய்யப்படுகிறது?

படம்
  அலுமினியத்தின் மறுசுழற்சி! தொழில்துறையில், அலுமினியம் மதிப்பு மிக்க பொருள். அதிகளவில் இதனை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை எளிதாக பல்வேறு வடிவங்களுக்கு மாற்ற முடியும். இதனால், அலுமினிய பாயில், டின்கள், கார் பாகங்கள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்கிறார்கள். சுரங்கத்திலிருந்து பெறும் பாக்சைட்டிலிருந்து, அலுமினியத்தைப் பிரித்தெடுக்கின்றனர். இப்படி புதிதாக அலுமினியத்தை எடுப்பதை விட, அலுமினிய பொருட்களை மறுசுழற்சி செய்யும்போது குறைந்தளவு ஆற்றலே செலவாகிறது.  நாம் பயன்படுத்தும் மூன்றில் இருபங்கு குளிர்பான கேன்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் உருவாக்கப்படுகின்றன. இவற்றை அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகின்றன. மேற்கு நாடுகளில் அலுமினிய கேன்களின் மறுசுழற்சி செயல்பாடும் அதிகம்.  அலுமினியம் பிற உலோகங்களைப் போலவே மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்துகிறது.  அவ்வளவு எளிதாக அரிக்கப்படாத காரணத்தால், அதிகளவு பயன்பாட்டில் உள்ளது.  அலுமினியத்தை எளிதாக வயர்களாக்க முடியும். இப்படி வடிவம் மாறினாலும் கூட அதன் வலிமை குறையாது. இதனை எளிதாக அறுக்க முடியாது.  அலுமினியத்தின் வடி

வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வேதிப்பொருள்! - கன்னபீடியால் எனும் சிபிடி

படம்
  கன்னபீடியால் - மேல்தட்டு வீரர்களுக்கான ரெகவரி மருந்து! 2018ஆம் ஆண்டு ஆன்டி டோபிங் ஏஜன்சி, கன்னபீடியாலை தனது தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கியது. இதனை மேல்தட்டு வர்க்க பணக்கார வீரர்கள் வலிநிவாரணியாக பயன்படுத்தி வந்தனர்.  இதனை சுருக்கமாக சிபிடி என்று அழைப்பார்கள். சிபிடி - கன்னபீடியால். உடலில் சற்று வேகமாக வேலை செய்து உடல் சோர்வை குறைப்பதோடு வலி, வீக்கம் நீக்கி நல்ல தூக்கத்தை உடலுக்கு கொடுக்கிறது. மனப்பதற்றம் நீக்குகிறது.  கஞ்சா தாவரத்திலிருந்து நூற்றுக்கும் அதிகமான வேதிப்பொருட்களை தயாரித்து வருகின்றனர். அதில் சிபிடியும் ஒன்று. மனிதர்களுக்கு இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. எலிகளை வைத்து செய்த சோதனையில் மேற்சொன்ன நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. சிபிடி துறை 2025ஆம் ஆண்டில் ஒரு பில்லியன்  பவுண்டுகளாக உயரும் என எதிர்பார்க்கின்றனர்.  நீங்கள் அதிகளவு சிபிடியை உடலில் எடுத்துக்கொள்ளும்போது மூளையில் உள்ள நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் சமநிலை அடைகின்றன. இதன் விளைவாக பதற்றம் தொடர்பான பிரச்னைகள் தீர்கின்றன என்று ஊட்டச்சத்து வல்லுநர் ஜெஸ்

இந்தியாவில் அழியும் கழுகுகளின் நிலை!

படம்
  2003ஆம் ஆண்டு தொடங்கி கழுகுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. 53 சதவீத கழுகுகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.  2003 - 40,387 2007 - 32,251 2011 - 34,950 2015 - 18,645 அழிவுக்கு காரணமாக வேதிப்பொருட்கள் டைக்குளோஃபெனாக் 2006ஆம் ஆண்டு கால்நடை மருத்துவத்தில் கூட பயன்படுத்தக்கூடாது என அரசால் தடை செய்யப்பட்டது. இது கழுகுகளின் இறப்புக்கு முக்கியமான காரணம்.  ஆஸ்குளோஃபெனாக் டைக்குளோஃபெனாக்கிலிருந்து தயாரித்து கால்நடை விலங்குகளுக்காக பயன்படுத்துகிறார்கள்.  நைம்சலைட் இதை உட்கொண்ட கழுகுகளுக்கு ஆயுள் 30 மணி நேரம்தான். மெல்ல உடல் உறுப்புகள் சேதமாகும். அடுத்து சிறுநீரகம் செயலிழந்து போக மரணம் நேரிடுகிறது.  கீடோபுரோஃபென் செரிமான உறுப்புகளில் நச்சு வேகமாக பரவ, கழுகுகளுக்கு ஆயுள் 48 மணி நேரம்தான்.  பிக்கானெர், ராஜஸ்தான் 2019-2020 கால்நடைகளுக்கு பயன்படுத்தும் ஸ்டெராய்ட் அல்லாத மருந்துகளின் பாதிப்பு, மின்சாரம் பாய்ந்து இறந்துபோவது. இதன் காரணமாக 207 கழுகுகள் இறந்துபோயின.  ராய்காட், மகாராஷ்டிரா 2010 நிசார்கா எனும் புயல் பாதிப்பு ஏற்பட்டால் வாழிடம் அழிந்துபோனது. இதனால் இறந்துபோன கழுகுகளின் எண்ணிக்கை 21

எஸ்ஓஎஸ் சிக்னல்- ஆபத்தில் உள்ளவர்களை காக்கும் அடையாளம்

படம்
  எஸ்ஓஎஸ் சிக்னல் (SOS Signal) கடலில் அல்லது மலைப்பகுதியில் அவசர நிலையின்போது, ஆபத்தில் உள்ளவர்கள் தீப்பந்தம் ஒன்றை எரிய விடுகிறார்கள். இதனை ஃபிளேர்ஸ் (flares) என்று அழைக்கின்றனர். இதிலுள்ள வேதிப்பொருட்கள் பல்வேறு நிறங்களில் எரியும் என்பதால், தொலைதூரத்தில் உள்ளவர்களும் இதனைப் பார்க்கலாம். ஆபத்து சமிக்ஞையைப் பார்க்கும் விமானப்படையினர், எளிதாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறார்கள்.  ஃப்ளேர்ஸ், பெரும்பாலும் அடர்த்தியான சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. பகல் மற்றும் இரவிலும் இதனை எளிதாக காணலாம். இதில் சிலவகை ஃபிளேர்ஸ், எரியும்போது புகையை மட்டுமே வெளிவிடும். காடுகளில் இவ்வகையைப் பயன்படுத்துகிறார்கள். வானில் விமானத்திலிருந்து பார்க்கும்போது காடுகளின் பகுதிகளை  துல்லியமாக பார்க்க முடியாது. இச்சமயங்களில், நெருப்பை விட புகையை எளிதாக அடையாளம் காணலாம்.   ஒருவர் கையில் பிடித்து ஃப்ளேர்ஸை எரித்தால் அது 1 நிமிடம் முழுதாக எரியும். அதனை ஐந்து கி.மீ. தூரத்தில் இருப்பவர்கள் பார்க்கலாம்.  ஃப்ளேர்ஸில் உள்ள வேதிப்பொருட்கள் எரியும்போது, ஆக்சிஜனை வெளியேற்றுகிறது. இதன் காரணமாகவே அதில் பற்றிவைக்கப்படும்

ஒவ்வாமையை கட்டுப்படுத்துவது எப்படி? சில வழிமுறைகளை அறிவோம் - ஒவ்வாமை நூலிலிருந்து...

படம்
                ஒவ்வாமைக்கு காப்பு! என்னதான் அதிநவீன பூட்டு என்றாலும் அதனை உடைக்கும் நுட்பமான புத்தி கொண்ட திருடனும் இருப்பான்தானே? நோய்க்கும் இது பொருந்தும். என்னதான் ஒவ்வாமை நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தினாலும் மருந்தை விட உணவு மூலமே நிறைய மாற்றங்களை செய்யலாம்., சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தாலே உடல் நலமாகி தேறும். இப்போது உடல்நலம் காக்கும் சில சத்துகள், மருந்துகளைப் பார்ப்போம். கால்சியம் மெக்னீசியம் ஆகிய சத்துகள் உடலுக்கு முக்கியம். இவை தசைகளில் சேருவது அவசியம். தசைகளின் இறுக்கம், நெகிழ்வு ஆகிய இரண்டுக்கும் இந்த சத்துக்கள் தேவை. ஆஸ்துமா பாதிப்பு கொண்டவர்கள் இந்த சத்துகள் கொண்ட பொருட்களை சாப்பிடலாம். அப்படியல்லாதபோது 250 கிராம் கால்சியம், மெக்னீசியம் ஆகிய இரண்டையும் நான்கு முறை தினசரி எடுத்துக்கொண்டால் உடல் நலமாகும். இதில் ஆண்கள், பெண்களுக்கு சாப்பிடும் அளவு மாறும். எனவே மருத்துவரின் பரிந்துரை அவசியம் தேவை. ஆப்பிள், வெங்காயத்தில் உள்ள குயிர்செடின் என்ற வேதிப்பொருள்  உடலுக்கு முக்கியமானது. இது ஆன்டி ஆக்சிடன்டாக உடலில் ஒவ்வாமை பாதிப்பை கட்டுப்படுத்துகிறது. இதனை பைடோநியூட்ரியன்ட் என்று அ

டைட்டானியம் ஆக்சைடு உடல்நலனை பாதிக்குமா?

படம்
டைட்டானியம் ஆக்சைடு மணமற்ற பவுடர் ஆகும். இதனை பொருட்களுக்கு சிறப்பான நிறத்தைத் தர பற்பசை, மிட்டாய்கள், சன்ஸ்க்ரீன் க்ரீம்கள், காபி க்ரீம்கள்  ஆகியவற்றில் சேர்க்கிறார்கள். இதன் பயன்பாடு அதிகமாகும் போது தோலில் சிறியளவு எரிச்சல் ஏற்படும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பொதுவாக உணவின் நிறம், தரத்தின் மேம்பாட்டிற்காக டைட்டானியம் ஆக்சைடை தூய வடிவில் சேர்க்கிறார்கள். பொதுவாக அனைத்து சாக்லெட்டுகளிலும், சூயிங்கம்மிலும் இந்த பொருள் சேர்க்கப்படுகிறது. பொருட்களை அதிக நாட்கள் பயன்படுத்தவும் இந்த வேதிப்பொருள் உதவுகிறது. பழங்களிலுள்ள எத்திலீன் அதிகரிப்பை குறைத்து பழங்கள் வேகமாக பழுப்பதைக் குறைக்கிறது. டைட்டானிம் ஆக்சைடு முக்கியமாக பயன்படுவது அழகுசாதனப் பொருட்களில்தான். இதில் பல்வேறு பொருட்களில் நிறத்தை அதிகரிக்கவும், புற ஊதாக்கதிர்களைத் தடுக்கும் க்ரீம்களிலும் பயன்படுகிறது. உணவுத்துறையில் இதன் பங்கு குறைவு. உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை இதனை பயன்படுத்த அனுமதித்துள்ளது. ஆனால் டைட்டானியம் ஆக்சைடு புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்

பற்பசையில் எதற்கு இனிப்பு சேர்க்கிறார்கள்?

படம்
giphy மிஸ்டர் ரோனி பற்பசையில் எதற்கு இனிப்பு சேர்கிறார்கள்? காலையில் எழுந்து பல் விளக்கும்போது நிறையப்பேர் அதன் காரத்தன்மையை மட்டுமே கவனிப்பார்கள். ஆனால் அவற்றை மறைக்கும் உத்தியாக இனிப்பை சேர்த்திருப்பார்கள். இதனால் பெரும்பாலான பற்பசைகள் இனிப்பைச் சேர்த்திருப்பார்கள். சிலர் மட்டும் பரிசோதனை முயற்சியாக இனிப்பின்றி காரத்தன்மையோடு பற்பசையை உருவாக்கி இருப்பார்கள்.  இனிப்புச்சுவைக்காக சார்பிட்டால், ஸைலிட்டால் ஆகிய வேதிப்பொருட்கள் பற்பசைகளில் சேர்க்கப்படுகின்றன.இவை பற்பசையின் ஈரத்தன்மை கெடாமல் பார்த்துகொள்கிறது. இதனால்தான் பேஸ்ட் வெளியே வந்தபின்பு எளிதில் உலர்வதில்லை.  நன்றி - பிபிசி 

இ சிகரெட்டுக்கு உலக நாடுகள் தடை விதிப்பது ஏன்?

படம்
இ சிகரெட்டைத் தடை செய்வது ஏன்? அமெரிக்காவில் சாதாரண புகையிலையைக் கொண்ட இ சிகரெட்டுகளைத் தவிர பலவித வாசனைகளைக் கொண்ட இ சிகரெட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. தயாரிப்பு, இறக்குமதி, விற்பனை ஆகிய  அனைத்து செயற்பாடுகளையும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இன்றுவரை இருபது நாடுகளில் இ சிகரெட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே ஆகிய நாடுகள் புகையிலை, இ சிகரெட்டுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை விதிகளை இயற்றி அமல்படுத்தியுள்ளன.. இ சிகரெட்டுகள் தொடர்ச்சியாக சிகரெட்டுகளை புகைப்பவர்களுக்கு, அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தரும் என்கிறார்கள். ஆனால் இ சிகரெட்டுகளில் 1500க்கு மேற்பட்ட வெரைட்டியான வகைகள் உண்டு என்பதால், இளைஞர்கள் நேரடியாக இதற்கு வந்துவிடுகின்றனர். அமெரிக்காவில் 12-17 வயதில் உள்ளவர்களில் 81 சதவீதம் பேர் புகைக்கின்றது ஆபத்தான சங்கதிதானே? எண்ணிக்கையில் 3.6 மில்லியன் குழந்தைகளை இதனை புகைக்கத் தொடங்கியுள்ளன்ர. புகையிலையிலுள்ள நிகோட்டின் பாதிப்பை விட இ சிகரெட்டிலுள்ள வேதிப்பொருட்கள் இளைஞர்களை அதிகளவு பாதிக்கின்றன. இதனால் மரபான புகையிலையை விட இ சி

தெரிஞ்சுக்கோ - இணையைக் கவரும் மின்மினிப்பூச்சி!

படம்
தெரிஞ்சுக்கோ! மின்மினிப்பூச்சிகள்! அண்டார்டிக் தவிர அனைத்து கண்டங்களிலும் மின்மினிப்பூச்சிகள் காணப்படுகின்றன. எப்படி அதன் உடலில் வெளிச்சம் எப்படி ஏற்படுகிறது? தன் இணையை ஈர்க்க உருவாக்குவதுதான் இந்த வெளிச்சம். சூப்பர் ஆக்சைடு அனியன் எனும் வேதிப்பொருள்தான் உடலில் ஏற்படும் வெளிச்சத்திற்குக் காரணம். இதில் எலக்ட்ரான்களும் கால்சியமும், அடெனோசைன் ட்ரைபாஸ்பேட், லூசிஃபெரின் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. அனைத்தும் இணைந்துதான் வெளிச்சம் கிடைக்கிறது. இணைகளைக் கவர்வதற்கு என்றாலும் இதில் எதிரிகளுக்கும் எச்சரிக்கையும் உண்டு. மின்மினிப்பூச்சிகளில் 2 ஆயிரம் வகைகள் உண்டு. இதில் வெளிச்சம் தருவது மிகச்சிலவே. லார்வா நிலையைக் கடக்கவே மின்மினிப்பூச்சிகள் 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன.  முழுவளர்ச்சியடைந்த மின்மினிப்பூச்சியாக மாற 2 மாதங்கள் தேவைப்படுகிறது. பாக்டீரியா கலப்படத்தை அறிய மின்மினிப்பூச்சியின் லூசிஃபெரஸ் வேதிப்பொருள் கொண்ட கிட் உதவுகிறது. இதன் விலை 338 டாலர்கள். மின்மினிப்பூச்சியின் உடலில் வெளியாகும் வெளிச்சத்திற்கான மின் அளவு 14.1 மைக்ரோவாட்ஸ். தன் உடலில் வேதிவினையின் மூலம

அட்ரினலின் சுரப்பு ஆபத்தா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாம் பயப்படும்போது உடல் நடுங்குவது ஏன்? இஎம்ஐ கட்டாதபோது, மனைவி சொன்ன காய்கறியை வாங்காதபோது, பிறந்தநாளுக்கு பார்ட்டி என்ற சொல்லை நண்பன் சொல்லுவானோ என நினைக்கும்போது நம் உடல் நடுங்கத்தொடங்கும். இதற்கு காரணம், மூளையிலுள்ள அமைக்தலா எனும் பகுதியாகும். இந்நேரத்தில் மூளையில் அட்ரினலின் வேதிப்பொருள் அபரிமிதமாக சுரக்கும். இதன் விளைவாக காந்தியின் நோஞ்சான் உடல் கொண்டவர்களின் உடலும் கூட வேகமாக முறுக்கிக்கொண்டு வலிமை பெறும். இதற்கு காரணம், அப்போது ஏற்படும் நெருக்கடிக்கு ஏற்ப அதனை சமாளிப்பதற்குத்தான். அதிகளவிலான அட்ரினலின் சுரப்பது உடலை கட்டுப்படுத்தமுடியாதபடி மாற்றிக்கொண்டிருக்கும். இதனை அறிவிக்கும் உடல்மொழிதான் உடல் நடுங்குவது. இதன் அர்த்தம் நீங்கள் ஹெர்குலஸ் போல வலிமை பெற்றவர் ஆகிறீர்கள் என்பதல்ல. அந்த நேரத்திற்கு அப்படி இருப்பீர்கள். அம்புட்டுத்தேன். நன்றி: பிபிசி