இடுகைகள்

காகிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாய கழிவுப்பொருட்களிலிருந்து காகிதம் செய்யலாம்! - சுபாம் சிங், வேதியியல் பொறியாளர்

படம்
  விவசாய கழிவுகளிலிருந்து அற்புத பொருட்கள்! மகாராஷ்டிரத்தின் புனே நகரைச் சேர்ந்தவர், சுபாம் சிங். இவர் கிரேஸ்ட்(Craste) எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், விவசாயக் கழிவுகளைப் பெற்று அதை பேக்கேஜிங் பொருட்களாக, மேசைகளாக மாற்றி வருகின்றது.  இந்தியாவில் ஆண்டுதோறும் 80 டன்கள் விவசாயக் கழிவுகள் நெருப்பிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசுபடுகிறது. இப்பிரச்னையைத் தீர்க்கவே கிரேஸ்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டது. வேதிப்பொறியியல் படித்தவரான சுபம் சிங், சில ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து விவசாய கழிவுகளில் இருந்து மேசை, நாற்காலிகளை செய்யத் தொடங்கினார். இவற்றில் மிஞ்சும் கழிவுகளை விவசாய நிலத்திற்கு உரமாகப் பயன்படுத்தலாம். இவரது ஆராய்ச்சியைப் பார்த்த புது டில்லியியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான பைராக் (BIRAC) கிரேஸ்ட் நிறுவனத்தைத் தொடங்க நிதியுதவியை அளித்தது.   ”சர்க்குலர் ஃபைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயக்கழிவுகளை பல்வேறு பொருட்களாக மாற்றுகிறோம். இந்தியா மரப்பொருட்களுக்கு சீனா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை நம்பியுள்ளது. ஆனால், விவசாய பொருட்களிலிருந்து மேசை,

காகிதத்தில் கலைப்பொருட்களை செய்து அசத்தும் கிருஷ்ணா!

படம்
  பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர், கிருஷ்ணா. இவர் செய்தித்தாள், பழைய காகிதங்கள் என எதையும் விட்டு வைக்காமல் அதில் கலைப்பொருட்களை செய்வதில் தேர்ந்தவர். தனது கலைப்பொருட்களை பல்வேறு அரசியல் பிரபலங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். அண்மையில் டெல்லிக்குச் சென்ற தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், கிருஷ்ணாவின் காகித கலைபொருட்களை வாங்கிக்கொண்டுதான் சென்றார். இதற்காக அவர் விமானநிலையத்தில் பொறுமையாக காத்திருந்தார் என்பதுதான் முக்கியமானது.  கிருஷ்ணா புதிய தூரிகை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் கிராம பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரது குரு அன்பழகன் மூலம் காகிதத்தில் சிற்பங்களை செய்யத் தொடங்கியுள்ளார். பிறகு அதனை பல்வேறு அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தர தொடங்கினார். காகிதத்தில் சிற்பங்களை செய்து அதற்கு வண்ணம் தீட்டி சோதிக்கத் தொடங்கினார். இப்போது அதில் உலோக வண்ணங்களை தீட்டி வருகிறார்.  பார்க்க எளிதாக இருந்தாலும் செய்வது கடினமானதுதான். குறிப்பிட்ட சிலை மாடலை பார்த்து, காகிதத்தை வளைத்து சிற்பங்களை செய்கிறார். இதில், சிலை அமைப்பை கச்சிதமாக செயத மூங்கில்

பால் வருமானத்திலிருந்து விவசாயிகள் வெளியே வரவேண்டும்! - பசு சாணம், கோமியத்தில் புதிய பொருட்கள்- அசத்தும் தொழில்முனைவோர்

படம்
          மாடுகளை இறைச்சிக்காக கொல்வது கர்நாடக மாநிலத்தில் சட்டம் மூலம் தடுக்கப்பட்டுள்ளது . டிசம்பர் 9, 2020 அன்று இதற்கான அறிவிப்பு வெளியானது . அமுலின் தலைவர் வர்கீஸ் குரியன் காலத்திலிருந்தே மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் போராடி வந்துள்ளன . இதற்கு எளிமையான காரணமாக பால் வளத்தை இழந்த மாடுகளை விற்காதபோது , விவசாயி கடனாளி ஆகிவிடுவார் என குரியன் அன்றே பதிலடி கொடுத்துள்ளார் . இத்தனைக்கும் வெண்மைப் புரட்சி எப்படி சாத்தியமானது ? குரியனின் பல்வேறு திட்டங்கள் மூலமாகத்தான் . புதிய கர்நாடக அரசின் சட்டம் மூலம் ரூ .10 லட்சம் வரையில் அபராதங்களை விதிக்க முடியும் . பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று . காங்கிரஸ் கட்சி இதனை அரசியல்ரீதியான நோக்கம் கொண்டது , மக்களைப் பிரிப்பது என கருத்து சொல்லியிருக்கிறது . இச்சட்டம் மூலம் கால்நடைப்பண்ணைகளில் பசுக்களை திருடுவது குறையும் என விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் கூறியுள்ளன . விமர்சகர்கள் இது தேவையில்லாத சுமையை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் என்று கருத்து சொல்லியிருக்கின்றனர் .

குறைந்த நீரைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஸ்டேஷனரி பொருட்கள்! - சாந்தனு பிரதாப் சிங்

படம்
      சாந்தனு பிரதாப் சிங்     குறைந்த நீரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஸ்டேசனரி பொருட்கள் பொதுவாக அனைவருமே சூழல், சுத்தம், சுகாதாரம் என பேசுவார்கள். ஆனால் நடைமுறையில் அதெல்லாம் சாத்தியமில்லை என்று ஒற்றைச்சொல்லில் சொல்லிவிட்டு அவர்கள் பாட்டிற்கு நடந்து போய்க்கொண்டே இருப்பார்கள். இந்த வகையில் சாந்தனு பிரதாப் சிங் கொஞ்சம் மாறுபட்டவர். சமூகத்திற்கு என்னுடைய பங்கை செய்கிறேன் என்று சூழலுக்கு பாதிப்பில்லாத காகிதம், பென்சில் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்று வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தைச் சேர்ந்த இளைஞர் சாந்தனு. இவர் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பிடெக் படித்து முடித்தவர். அரசியல்வாதிகள், ஊடகங்கள் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பேசிக்கொண்டே இருப்பார்கள். அதனால் எந்த பிரச்னையும் தீராது. இதனை உணர்ந்து நானே களமிறங்கு என்னால் செய்ய முடியும் விஷயங்களைச் செய்து வருகிறன். என்கிறார். காகிதம், பேனா, பென்சில், ஸ்ட்ரா, மூங்கில் பிரஷ் ஆகியவற்றை சாகேஸ் என்ற பிராண்டில் விற்கிறார். காகிதங்களில் விதைகளை பதித்து சீட் பேப்பர் விற்பனையும் செய்கிறார். இதனால் காகிதங்கள் மண்

பிரட் காகிதப் பையில் கொடுக்கக் காரணம் என்ன?

படம்
மிஸ்டர் ரோனி பிரட்டுகளை ஏன் தாளில் சுற்றி அல்லது காகித பேக்கில் கொடுக்கிறார்கள்? பிரட்டை ஜாம் தடவி அல்லது ஓவனில் சுடும் கணநேரத்தில் இந்த கேள்விகள் உங்களுக்குத் தோன்றியிருக்கும். பிரட்டுகளை புத்தம் புதிதாக வைத்திருக்கவே காகித தாளில் வைத்திருக்கிறார்கள். காசு கொடுத்து வாங்குபவர்களுக்கும் அப்படியே கொடுக்கிறார்கள். மேலும் பாலிதீனில் அப்படிக் கொடுத்தால், அது விரைவில் வதவதவென போய்விடும். இதனை நீங்கள் பேக்கரி பிரெட்டுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். எனவே வாங்கி வைத்துப் பார்க்காமல் டபக்கென கிசான் ஜாம் தடவி விழுங்கிவிடுங்கள். பிரட் புத்தம் புதிதாக இருக்கும்போது, சாப்பிட நன்றாக இருக்கும். நன்றி: க்யூரியாசிட்டி

காகிதங்கள் மஞ்சள் நிறமாவது ஏன்? - மரத்தில் உள்ளது காரணம்!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாட்பட காகிதம் ஏன் மஞ்சளாக மாறுகிறது? நடிகைகளின் புளோஅப் புகைப்படத்தை வைத்து என் நண்பன் சித்தாந்த ரத்னம் செந்தில், செய்யும்  வேலைகளில் அதில் வெள்ளை நிறம் ஏற்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் மஞ்சள் நிறம் ஏற்படுவது ஏன்? கண்டுபிடிச்சாச்சு. அதில் லிக்னைன் எனும் பொருள் உள்ளது. எகனாமிக் டைம்ஸ் பேப்பரை எட்டு ரூபாய் கொடுத்து வாங்கினாலும், இந்திராகாந்தி காலத்து பேப்பர் போல மஞ்சளாக,சிவப்பாக இருக்கும். காரணம் அதிலுள்ள லிக்னைன் எனும் இந்த வேதிப்பொருள்தான். மரத்தின் வலுவை அதிகமாக்குகிற பொருள்தான் லிக்னைன். ஆனால், அது காற்றுடன் வினைபுரிந்து காகித த்தை மஞ்சளாக்குகிறது. தரமான ஜிஎஸ்எம் தாள் ப்ளீச் செய்யப்பட்டு உருவானால் சிறிது நாட்கள் தாக்குப்பிடிக்கலாம். ஆனால் மரத்தில் செய்யப்பட்ட காகித தாள்கள் அனைத்தும் மஞ்சள் ஆவதைத் தடுக்க முடியாது. நன்றி: பிபிசி

ஏ4 தாளை எத்தனை மடிப்புகள் மடிக்கலாம்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி ஏ4 தாளை எத்தனை விதமாக மடிக்க முடியும்? ஒரே ட்யூனில் பாட்டு இமான் பாட்டு போட்டாலும் கேட்கிறோம் இல்லியா? அதேபோல்தான் இந்தக்கேள்வியும். என்னடா கேள்வி என்றுதான் தோன்றியது. ஆனால் மடிப்பு என்று பேப்பரை மடித்தபோதுதான் ஆகா வசமான கேள்வி என்று தோன்றியது. தியரியாக பேப்பரை மடிப்பதில் நிறைய கணக்குகள் சொல்லுவார்கள். இந்த இடத்தில் நீங்கள் ஓரிகாமி போன்ற கலைகளை கைவிட்டு விடுங்கள். 26 முறை என்று சிலபல  கணித சூத்திரங்கள் படி சொல்லுவார்கள். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமல்ல. தற்போது சாதனையாக இருப்பது, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாணவர் பிரிட்னி கலிவன் செய்த துதான். 1.2 கி.மீ நீளமுள்ள டிஷ்யூ பேப்பரை பனிரெண்டு முறை மடித்து சாதனை செய்துள்ளார். நன்றி: பிபிசி