சிறுவயது முதலே குழந்தைகளை அடிமைத்தனத்தில் வைத்திருக்க பெருநிறுவனங்கள் விரும்புகின்றன! - டேவிட் டி கோர்ட்ரைட்
நேர்காணல் டேவிட் டி கோர்ட்ரைட் வடக்கு புளோரிடா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் அடிமையாக்குதல் பற்றி எழுதியுள்ளீர்கள். இதில் முதலாளித்துவம் எப்படி உள்ளே வருகிறது? நமது மூளையில் லிம்பிக் என்ற பகுதியில், மகிழ்ச்சி, ஊக்கம், நீண்டகால நினைவுகள் உள்ளது. இதை அடையாளம் கண்டுகொண்ட நவீன தொழிலதிபர்கள், மூளையை நேரடியாக பாதிக்கும், செல்வாக்கு செலுத்தும் விதமாக பொருட்களை வடிவமைத்து வருகிறார்கள். இந்த செயல்பாடு தனிநபர்களையும், சமூகத்தையும் கூட பாதிக்கிறது. மூளையில் அதிகளவு டோபமனை சுரக்க வைக்கும் விதமாக பொருட்களை வடிவமைக்கிறார்கள்.இந்த வேதிப்பொருள் மகிழ்ச்சி ஏற்படும்போது சுரக்கிறது. பெருமளவு முதலீட்டை, இத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்கள் அல்லவா? அதைத்தான் முதலாளித்துவம் என்று கூறினேன். இதில், பெரியளவு லாபம் உள்ளது. அடிமையாக்குதலின் சில வடிவங்களைக் கூறுங்கள். முதலில் ஒருவரை அடிமையாக்குதல் என்றால் மது, ஹெராயின், புகையிலை ஆகிய பொருட்களையே சுட்டிக்காட்டுவார்கள். இன்று, டிஜிட்டல் பொருட்களின் மீதான அடிமைத்தனம், சர்க்கரை, கொழுப்பு, காரம் சார்ந்த உணவுப்பொரு...