இடுகைகள்

அரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பின பாகுபாட்டால் உதவித்தொகையைப் பெற முடியாமல் தவித்த நீச்சல்வீரர்

படம்
  அட்ரியானா பார்போஸா adriana barbosa பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோவில் வாழும் பெண்மணி. ஒருமுறை வீட்டிற்கு வாடகை கட்ட தடுமாறும் பொருளாதார சூழ்நிலை. அவர்கள் மட்டுமல்ல, ஆப்பிரிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் வறுமையான சூழ்நிலையில் இருப்பதைக் கண்டறிந்தார். அந்த நாட்டில், கருப்பினத்தவரை விட வெள்ளையர்கள் 74 சதவீத அதிக சம்பளத்தை வாங்கிக்கொண்டிருந்தனர். ஆப்பிரிக்க - பிரேசிலியர்கள் வெள்ளையர்களைப் போல கல்வித்தகுதியைக் கொண்டிருந்தாலும் கூட சம்பள விஷயத்தில் 70 சதவீதம்தான் பெற்றுக்கொண்டிருந்தனர்.  இதையெல்லாம் அறிந்த அட்ரியானா, இருபது வயதில் கருப்பின மக்களுக்காக ஃபெய்ரா பிரேட்டா விழாவை உருவாக்கினார். இந்த விழாவில் இசை, நாடகம், இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளோடு சுயதொழில் முனைவோர் தங்களது பொருட்களையும் விற்கலாம்.  பல்வேறு தனியார் நிறுவன நன்கொடை மூலம் கருப்பினத்தவர் தொழில் செய்ய 2.2 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். இப்படி கருப்பின தொழிலதிபர்களுக்கு உதவும் பாதை எளிமையாக இல்லை. ஒருமுறை விழாவில் சேகரமான டிக்கெட் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சில வெள்ளையர்கள் தங்கள் தெருவில் விழாவை நடத்தக்கூடாத

கருப்பினத்தவர்களுக்கு மருத்துவம், வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் மனிதர்கள்!

படம்
  லியாண்ட்ரிஸ் லிபுர்ட் leandris liburd கருப்பினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் மருத்துவ வசதிகள் கிடைக்க சிடிசி அமைப்பில் ஹெல்த் ஈகுவிட்டி என்ற அமைப்பின் இயக்குநராக இருந்து செயல்பட்டு வருகிறார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக பணியில் நிறம், இனம் கடந்து அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம் சார்ந்த புரிதலை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்.  ஆரோக்கியம் என்றவுடன் உணவுமுறை, உடற்பயிற்சியுடன் பலரும் நின்றுவிடுவார்கள், லியாண்ட்ரிஸ், ஒருவர் மருத்துவரைச் சென்று பார்க்க போக்குவரத்து வசதி இருக்கிறதா என்பது வரையில் கவனிக்கிறார். அரசின் சக துறைகள், மக்களின் இனக்குழு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு செய்து வருகிறார். அலுவலக பணியில் உள்ளவருக்கு நோய் என்றால் கூட சம்பள வெட்டுடன் விடுமுறை கிடைக்கும். அதை லியாண்ட்ரிஸ் மாற்றி, சம்பளத்துடன் விடுப்பு என்பதை நடைமுறையாக்கியிருக்கிறார். நாம் நமக்குள் உள்ள வேறுபாடுகளை களைந்தால்தான் நோய்களை எளிதாக முன்னதாக கண்டறிந்து தடுக்கமுடியும் என்றார் லியாண்ட்ரிஸ்.  -அலைஸ் பார்க் டைம் வார இதழ்  இமானி எல்லிஸ்  imani ellis இமானி, கருப்பின,

டிஜிட்டல் உலகில் அடையாளங்களை மறைத்து உயிர்பிழைக்கும் வழிகள்!

படம்
  How To Disappear: Erase Your Digital Footprint, Leave False... Author: Frank M. Ahearn Publisher: Lyons Press தனிநபரால், அல்லது வேறு அமைப்பால் உயிருக்கு ஆபத்து என்றால் உங்கள் அடையாளத்தை மறைத்து வேறு இடத்திற்கு சென்று வாழ்வது உத்தமம். ஏனெனில் எல்லாவற்றையும் விட உயிர் பிழைத்திருப்பது முக்கியம். இதைத்தான் நூல் ஆசிரியர் ஃப்ராங்க் கூறுகிறார். நூலில் கூறும் கருத்துகள் அவரது சொந்த அனுபவம், தான் சந்தித்த மனிதர்கள், தனது செயல்களால் ஏற்பட்ட பிரச்னைகள், வெற்றி, தோல்வி என அனைத்தையும் வெளிப்படையாக பகிர்கிறார்.  இணையம் இல்லாதபோது அடையாளத்தை மறைத்து வாழ்வது எளிது. ஆனால் இன்று மிக கடினம். அனைத்து டெக் நிறுவனங்களும் சேவையை இலவசம் சென்று சொல்லி பயனர்களின் தகவல்களை பிறருக்கு விற்றுப் பிழைக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஒருவர் தனது அந்தரங்க தகவல்களை எப்படி மறைத்து உயிர்வாழ்வது என நூலில் ஆசிரியர் விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார்.  அரசுக்கு வரிபாக்கி வைப்பது, மோசடி செய்வது, கொள்ளை, கொலைக்குற்றங்கள் செய்பவர்களை ஃப்ராங்க் தனது நிறுவனத்தின் மூலம் காப்பாற்றுவதில்லை. அது அவரது நிறுவனத்திற்கு நிரந்

ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து அகற்றும் தொழில்நுட்பம் - அசத்தும் லிவ்விங் கார்பன் நிறுவனம்

            காடுகளை வளர்த்து அதாவது அதை செயற்கையாக கூட வளர்க்கலாம் . ஆனால் அதன் மூலம் மாசுபாடுகளை குறைக்கவேண்டும் என எண்ணும் காலம் வந்துவிட்டது . காடு , இயற்கை சூழல் என எதற்காகவும் மக்கள் தங்கள் சுகங்களை தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாது . நாளிதழ்கள் , வார இதழ்கள் எல்லாம் ஏழைகளிடம் , சாதாரண மக்களிடம் சிவப்பு இறைச்சியை சாப்பிடாதீர்கள் , மீத்தேன் அதிகரித்துவிடும் என பிரசாரம் செய்து வருகின்றன . ஆனால் இந்த பிரசாரத்தை அவர்கள் தொழிலதிபர்களிடம் செய்தால் நெஞ்சுக்கு நேர்மையாக இருக்கும் . ஆனால் அவர்கள்தான் ஊடகங்களை நடத்துகிறார்கள் . அல்லது விளம்பரங்கள் மூலம் படியளக்கிறார்கள் . அவர்களை எதிர்க்க த் துணிவார்களா கடினம் தான் . குறிப்பிட்ட மண் சார்ந்த மர வகைகளை கண்டறிந்து அதை மண்ணில் ஊன்றிவைத்து கார்பனை உறிஞ்சுகிறதா என பார்த்துவந்தது கடந்த காலம் . இப்போது காற்றிலுள்ள கார்பனை உறிஞ்சுவதற்காகவே நூறுக்கும் மேற்பட்ட மர வகைகளை ஆய்வகத்தில் உருவாக்கி அதை மண்ணில் ஊன்றி வருகிறார்கள் . இதை வணிகமாகவே சில நிறுவனங்கள் செய்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டு லிவ்விங் கார்பன் என்ற நிறுவனம் தொடங்கப்பட

செயற்கை நுண்ணறிவை எப்படி புரிந்துகொள்வது?

படம்
  ஹியூமன் கம்பாட்டிபிள் ஸ்டூவர்ட் ரஸ்ஸல் வைகிங் செயற்கை நுண்ணறிவு நம் வாழ்க்கையில் பயன்பாட்டுக்கு வந்தால் என்ன விதமான நல்லவை, அல்லவை நடைபெறும் என்பதை விளக்கி எழுதப்பட்ட நூல். பயப்பட வேண்டியதில்லை. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அதன் வகைகள், செயல்பாட்டு வரம்புகள், அதைப்பற்றிய நூல்கள், நுண்ணறிவை மேம்படுத்த உதவிய கணிதவியலாளர்கள், அவர்களது தத்துவங்கள், கோட்பாடுகள், எழுதிய நூல்கள் என ஏராளமான தகவல்களை ஆசிரியர் விவரிக்கிறார். அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையை தெரிந்துகொண்டால் போதும் என்று நினைப்பவர்களுக்கான நூல் இதுதான். அந்த பிரிவிலேயே ஏராளமான தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறார். கூகுளின் டீப் மைண்ட் தயாரிப்புகள் என்னவிதமான கணித திறன் கொண்டவை என விவரிக்கும் பகுதி இதற்கு உதாரணம். செயற்கை நுண்ணறிவை அரசு கையில் எடுத்து பயன்படுத்தினால் நன்மை என்ன, தீமைகள் என்ன என்று ஆராய்ந்த விதம் முக்கியமானது.. இந்த வகையில் சீனா மக்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க என்று அரசு சொன்னாலும், தனக்கு எதிரி என்று தோன்றுபவர்களை எளிதாக பிடித்து ஒழித்துக்கட்ட

பட்டியல் - விநோதரச மஞ்சரி

படம்
  பட்டியல் தியோடர் சியஸ் கெய்சென் என அழைக்கப்படும் டாக்டர் சியஸ், தனது லோரக்ஸ் நாவலை கென்யன் ஹோட்டலின் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்து யானைக்கூட்டத்தை பார்த்தபடியே எழுதி முடித்தார். எழுத பயன்படுத்திய காகிதம், சலவை துணிகளின் பட்டியல் காகிதம்.   1907ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி எழுத்தாளர் எட்மண்ட் மோரிஸ், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு விருந்து உண்ண வரும் விருந்தினர் பட்டியலைக் கவனித்தார். அதில்   நோபல் பரிசு வென்றவர், கலாசாரவாதி, வரலாற்று அறிஞர், கட்டுரையாளர், சுயசரிதையாளர், மானுடவியலாளர், குடிமைச்சமூக சீர்திருத்தவாதி, சமூக செயல்பாட்டாளர், நியூயார்க் நகர முன்னாள் ஆளுநர் என பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டிருந்த ஒரே பெயர் தியோடர் ரூஸ்வெல்ட். அமெரிக்கா வியட்நாம் போரில் தோற்றுப்போனது. அதில் இறந்துபோனவர்களுக்கான நினைவகம் வாஷிங்டனில் உள்ளது. அதில், இறந்து அல்லது காணாமல் போனவர்கள் என 58 ஆயிரம் ராணுவ வீரர்களின் பெயர்கள் உள்ளன. அதற்கான நிதியகத்தில் 38 வீரர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் அமெரிக்காவில் முதன்முதலில் சிகாகோவில்தான் வெளியிடப்பட்டது. இத

வாழ்க்கையின் நம்பிக்கையின்மை, உலகின் கொடூர முகத்தை பேசும் கவிதைகள் - கோ யுன் - கவிதை நூல்

படம்
  தென்கொரிய கவிஞர் கோ யுன் 24  சிறிய பாடல்கள் கோ யுன் கவிதை நூல் காவிரி சிற்றிதழ் தமிழ் மொழிபெயர்ப்பு விவேக் ஆனந்தன்  சிறுநூல்வரிசை இணையத்தில் கொரிய நாட்டு கவிஞர்களைப் பற்றி தேடியபோது காவிரி சிற்றிதழ் வலைத்தளம் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்த்ததில் கொரிய நாட்டு கவிஞர் கோ யுன் எழுதிய சிறு நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க முடிந்தது. கோ யுன் எழுதியுள்ள கவிதைகள் அனைத்துமே வாழ்க்கை சார்ந்த சலிப்பு, வேதனை, வலி, அரசியலின் கீழ்மை, போரால் அழியும் மக்களின் வாழ்க்கை என சற்று தீவிரமான தன்மை கொண்டவை. இதனால், இவை கவித்துவ அழகை இழந்துவிட்டன என்று கூற முடியாது. கவிதைகள் அனைத்துமே மறக்க முடியாத அனுபவங்களை தருவனவாக உள்ளன. இதற்கு காரணம், தனது கருத்தை சொல்ல அவர் பயன்படுத்தும் சொற்கள் துல்லியமாக அமைந்ததே காரணம். கூடவே எளிமையான வடிவமும் முக்கியமான அம்சம் எனலாம். விவேக் ஆனந்தனின் மொழிபெயர்ப்பில் கவிதைகள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. ‘ஃபர்ஸ்ட் பர்சன்’ என்ற கவிதை நூலில் இருந்து   கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன. மரத்தில் இருந்து இலைகள் கீழே விழுவதை ஒரு கவிதையாக கோ யுன் எழுதியுள்ளார். இந்த கவிதை, வாழ்

ரஷ்யாவின் கிரெம்ளினுக்கு பணிந்து மக்களைக் காட்டிக்கொடுக்கும் டெலிகிராம் ஆப்!

படம்
  டெலிகிராம் ஆப் - ரஷ்யா அரசின் உறவு டெலிகிராமை வளைக்கும் ரஷ்யா ரஷ்யாவுக்கு பணிந்துபோகும் டெலிகிராம் நிறுவனம்! டெலிகிராம் என்றில்லை. எந்த ஒரு டெக் நிறுவனமும் குறிப்பிட்ட நிலப்பரப்பிலுள்ள அரசுகளின் விருப்பத்திற்கு, விதிகளுக்கு பணிய வில்லை என்றால் சுதந்திரமாக செயல்பட முடியாது. அதை தடை செய்வார்கள். வருமான இழப்பை டெக் நிறுவனத்தை நிலைகுலைய வைக்கும். இந்த நிலையில் நிறுவனம் அரசுடன் பரஸ்பர சகாய ஒப்பந்தத்திற்கு வந்தே ஆக வேண்டும். டெலிகிராம் கூட பரவாயில்லை. நெருக்கடி கொடுத்து அதை கீழே வீழ்த்தினார்கள். ஆனால், மெட்டாவின் குறுஞ்செய்தி, சமூக வலைத்தள நிறுவனங்கள் உலகமெங்கும் சர்வாதிகார அரசுகளிடம் மண்டியிட்டு காசு வாங்கிக்கொண்டு இயங்கி வருகிறார்கள். மெட்டா அதிக பயனர்களைக் கொண்டுள்ள நாடுகளில் கலவரம், போராட்டம், இனவெறி என அமைதி இல்லாத நிலையே நிலவுகிறது. இதை எந்த ஊடகங்களும் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.   ரஷ்யாவில் உள்ள அரசியல் சமநிலை குலைவைப் பற்றிய செய்திகளை நாளிதழில் படித்திருப்பீர்கள். டிவி சேனல்களில் செய்தித்தொகுப்புகளையும் பார்த்திருப்பீர்கள். அங்குள்ள தனியார் கூ லிப்படை ராணுவமே, அரசின் நகரங்க

சூழல் போராட்டங்களால் பாதுகாக்கப்படும் இயற்கை சூழல்!

படம்
  புத்துயிர்ப்பு தொழில்வளர்ச்சிக்காக மரங்களை வெட்டுவது இடையறாமல் நடந்து வருகிறது. இதோடு ஒப்பிடும்போது, மரக்கன்றுகளை நடும் செயல் சற்றுவேகம் குறைவானதாகவே உள்ளது. காடுகள் வளர்க்கப்பட்டால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவு குறையும். மண் அரிப்பு மெல்ல குறையும். இதெல்லாம் தாண்டி இயற்கை வளம் சீரானால் வேலைவாய்ப்புகள் கூடும். மரங்கள், கார்பனை உறிஞ்சி தனது வேர்ப்பகுதியில் சேமிக்கிறது. 20-30 சதவீத அளவுக்கு மரத்தின் உயிரியல் பகுதி, கார்பனை உறிஞ்சும் ஸ்பான்ஞ்ச் போல செயல்படுகிறது. இறந்த அழுகிய மரத்தின் வேர்கள் கார்பனை வெளியிடுகின்றன. ஒளிச்சேர்க்கை செய்யும் மரங்கள், கழிவுப்பொருளாக ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. காடுகள் அழிந்தாலும் அதனை செயற்கையாக முறையில் மரக்கன்றுகளை நட்டு நகர்ப்புறங்களில் உருவாக்க முயல்கிறார்கள். இந்தவகையில் நகர்ப்புற கட்டுமானங்களுக்கு புகழ்பெற்ற சிங்கப்பூரில் கூட செயற்கையான பசுமைப்பரப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இயற்கை சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டால் அதை மறுகட்டுமானம் செய்வதற்கு சிறிது காலம் தேவை. மனிதர்கள் தங்களது தலையீட்டாலும், மாசுபாடுகளை உருவாக்குவதாலும் இயற்கை தனது

மதவாதம் சார்ந்து உருவாகும் அரசதிகாரம் அச்சமூட்டும் ஒன்று! - வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர்

படம்
  ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர் இந்துத்துவா அரசியலை விமர்சனம் செய்பவர்களில் முக்கியமானவர், வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர். இந்தியாவின் பன்மைத்துவ தன்மைக்காக குரல் கொடுத்து இந்துத்துவ சிந்தனைகளுக்கு எதிரான குரலாக ஒலித்து வருகிறார். தற்போது, ‘தி ஃப்யூச்சர் இன் தி பாஸ்ட்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். வரலாற்று ஆய்வாளராக அவரை மாற்றிய விவகாரங்கள், பல்வேறு பிரச்னைகள் பற்றிய தனது கருத்துகளை கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளின் தொகுப்புதான் மேற்சொன்ன நூலாக வெளிவந்திருக்கிறது. வரலாற்றை இந்துத்துவா எப்படி அணுகுவதாக நினைக்கிறீர்கள்? வரலாற்றை அணுகுவது என்பது பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுப்பதுதான். ஆதாரங்களை சேகரித்து, அதை ஆய்வு செய்து, கடந்த கால நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமான விளக்கங்களை கொடுப்பது என புரிந்துகொள்ளலாம். இந்துத்துவா கருத்தியலுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய சிறு குறிப்பை வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு கருத்தியலை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வருகிறார்கள். ஆதாரங்கள் நம்பகத் தன்மை கொண்டவையா, வாதங்கள் ஏற்புடையவையா என்றெல்லாம் பா