இடுகைகள்

நியூஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நியூஸ்ரூம்: முகத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்களில் அதிகரித்துள்ள பாதரசம்!

படம்
நியூஸ்ரூம்! அட! புதிய   பலம்! இந்திய அரசின் விமானப்படைக்கு போயிங் நிறுவனம்   ஒப்பந்தப்படி 37 ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்கியுள்ளது. 2015-16 ஆண்டுகளில் அமெரிக்க நிறுவனமான போயிங்குடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 22 AH-64E Apache, 15 CH-47 Chinook வகை ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் இந்தியாவுக்கு தயாரித்து வழங்கியுள்ளது. இயற்கைப் பேரிடர் பணிகளில் இந்திய அரசுக்கு உதவக்கூடிய திறன் பெற்றது சினூக் ஹெலிகாப்டர்கள். இவை இந்திய –சீன எல்லைப்பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. யுபிஐ ஐயையோ! அழகு க்ரீம் ஆபத்து! இணைய விற்பனைத் தளங்களில் விற்கப்படும் அழகுசாதன க்ரீம்களில் பாதரசத்தின் அளவு அதிகமாக உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. பாக்.கின் கோரி, ஹாங்காங்கைச்சேர்ந்த ஸ்மைல்பான் ஆகிய நிறுவனத்தின் க்ரீம்களில் அதிகளவு பாதரசம் இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. Zmwg எனும் அமைப்பு, பாதரச அளவை ஒழிப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் வரும் ஆண்டில் இறுதிக்குள் பல்வேறு நாடுகள் க்ரீம்களுக்கு தடைவிதிக்கும் வாய்ப்பு உள்ளது. ராய்ட்டர் அப்படியா? சாதனை முறியடிப்பு! அமெரிக்காவைச் சே

நியூஸ் ரூம்: மாற்றுப்பாலினத்தவரின் வயது தளர்வை அறிவித்த தமிழக அரசு !

படம்
அட! வேலைவாய்ப்பு! தமிழகத்தின் உள்துறை அமைச்சகம், மாற்றுப்பாலினத்தவருக்கு காவல்துறை சார்ந்த பணியிடங்களில் வயது தளர்வை அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஆராதனா என்று மாற்றுப்பாலினத்தவர் தொடங்கிய வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தமிழக அரசு இம்முடிவை அறிவித்துள்ளது. ஆதி திராவிடர்கள், பட்டியலினத்தவர்களுக்கு உள்ளது போலவே மாற்றுப்பாலினத்தவர்களுக்கும் வயது தளர்வு நடைமுறைக்கு வரவிருக்கிறது. நியூஸ்மினிட் ஐயையோ! வெப்பம் அதிகரிப்பு! அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரிக வாய்ப்புள்ளது என உலக தட்பவெப்பநிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. ”தொழிற்காலத்திற்கு முந்தைய(1850-1950) காலகட்டத்தில் இருந்த வெப்பநிலை இனி, அடுத்து வரும் 20220-24 காலகட்டத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது” என்கிறார் உலக தட்பவெப்பநிலை ஆராய்ச்சி மைய செயலாளர் பெட்டெரி தாலாஸ். யுபிஐ ஆஹா! துள்ளிக்குதி! டில்லியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர், சோகம் முகர்ஜி. இவர் அளவுகோலின் இருபுறமும் 30 நொடிகளில் 101 முறை துள்ளிக்குதித்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். இதற்கு முன்னர் 97 முறை த

நியூஸ் ரூம்: புற்றுநோயை உருவாக்குகிறதா ஜான்சன் அண்ட் ஜான்சன் குழந்தைகள் பௌடர்!

படம்
அப்படியா? தேர்வு ரெடியா? பிளஸ் 2 தேர்வில் இறுதி தேர்வை எழுதாமல் விட்டவர்கள் ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மார்ச் 24 அன்று நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை, கோவிட்-19 பொதுமுடக்கம் காரணமாக மாணவர்கள் தவறவிட்டனர். வலைத்தளத்தில் இம்மாதம் 13-17ஆம் தேதி வரையில் பெறலாம். அல்லது பள்ளியில் ஹால்டிக்கெட்டைப் பெறலாம். மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே இத்தேர்வு நடைபெறவிருக்கிறது. நியூஸ்மினிட் அடடே! ஹெர்பல் மைசூர்பாகு! கோவிட் -19 நோய்த்தொற்றை குணமாக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்ட ஹெர்பல் மைசூர்பாகு கடை, அரசு மூலம் மூடப்பட்டுள்ளது. கோவையில் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான நெல்லை லாலா ஸ்வீட்ஸ் என்ற கடைதான், தவறான விளம்பரத்தால் மூடப்பட்டுள்ளது. கடையின் உரிமையாளர் ரகசியமான மூலிகைகளால் செய்யப்பட்ட மைசூர்பாகு கோவிட் -19 நோய்த்தொற்றை குணமாக்குகிறது என சமூகவலைத்தளங்களில் விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். நியூஸ்மினிட் ஆஹா அனைவருக்கும் கல்வி! கேரள அரசு, 2.42 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை

நியூஸ் ஜாம்: உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுகிறது அமெரிக்கா!

படம்
நியூஸ்ரூம்! அட! பாப்கட் செங்கமலம்! தமிழ்நாட்டிலுள்ள மன்னார்குடியில் கோபாலசாமி கோவிலுள்ள யானையைத் தான் இப்படி அழைக்கிறார்கள். வனத்துறை அதிகாரி சுதா ராமன், பதிவிட்ட செங்கமலத்தின் பாப்கட்தான் சமூக வலைத்தளங்களி அதிரிபுதிரி ஹிட்டாகியுள்ளது. 2003ஆம் ஆண்டு கேரளத்திலிருந்து கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட யானை இது. இதற்கு பாப் ஸ்டைல் முடியை, பாகன் ராஜகோபால் உருவாக்கியுள்ளார். நியூஸ்மினிட் ஐயையோ! பிரிவு! அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்திலிருந்து முறைப்படி பிரிந்துசெல்வதற்கான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. முன்னமே, அமெரிக்க அதிபர் டிரம்ப் விலகும் முடிவை அறிவித்துவிட்டார். தற்போது விலகுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கினாலும் முழுமையாக விலகுவது அடுத்த ஆண்டு ஜூலை மாதம்தான். இதற்கு அமெரிக்காவிலுள்ள பல்வேறு சுகாதார அமைப்புகள், தன்னார்வலர்கள், எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிஎன்என் அப்படியா? சீனா, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை தடாலடியாக அமல்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் அங்கு போராடி வருகின்றனர். மக்கள் பற்றிய விவரங்களை ஹாங்காங் அதிகாரிகள் கேட்பதற்