இடுகைகள்

உத்தர்காண்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உத்தர்காண்ட் இடம்பெயர்தல் - கடவுளின் பூமியில் மனிதர்களுக்கு இடமில்லை!

படம்
    கடவுளின் பூமியில் மனிதர்களுக்கு இடமில்லை 2000ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி உத்தர்காண்ட் மாநிலம் உருவானது. அதை உருவாக்கியபோது ஒன்றியத்தில் பிரதமராக வாஜ்பாய் இருந்தார். தொடக்கத்தில் மாநிலத்திற்கு உத்தராஞ்சல் என்று பெயர் வைக்கப்பட்டு பின்னர் உத்தர்காண்ட் என மாற்றப்பட்டது. காரணம், பெயர் வைத்தவர்களுக்கே தெரியும். இப்படி பெயர் மாற்றியதால் மாநிலம் முன்னேறிவிட்டதா என்றால் கிடையது. இந்த மாநிலத்திலுள்ள மக்கள் தொடர்ச்சியாக சமவெளிக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். கடவுளின் பூமி என வலதுசாரி இந்து கட்சிகள் கூறி கூப்பாடு போட்டாலும் நிலைமை பெரிதாக மாறவில்லை. வாய்ப்பேச்சு வயிற்றிலுள்ள பசித்தீயை அணைக்க உதவாது அல்லவா? அந்த யதார்த்தம் அரசியல்வாதிகளுக்கு புரியவில்லை. மக்களுக்கு புரிந்ததால் தொடர்ச்சியாக அங்கிருந்து பிழைக்க வெளியேறி வருகிறார்கள். கல்வி, மருத்துவ வசதிகள் மிக சொற்பமாக உள்ள மாநிலம். இந்த நிலையில் வேலைவாய்ப்புகளும் கூட கிடையாது என்ற நிலையில் மக்கள் எப்படி அங்கு பிழைத்திருப்பார்கள்? காங்கிரஸ், வலதுசாரி மதவாதகட்சி என இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் மக்கள் வேலையின்றி வெளி ம...

ஆற்றில் பயணிகளை முதுகில் சுமக்கும் யமராஜா! உத்தர்காண்ட்டில் புதுமை மனிதர்!

படம்
        sample picture cc       யமராஜா உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள திவானி ராமுக்கு ஐம்பது வயதாகிறது . அவர் பங்காபானி பகுதியில் வசிக்கிறார் . பருவகாலங்களில் மக்கள் ஆற்றைக் கடக்க முப்பது ஆண்டுகளாக உதவிவருகிறார் . ஊர் மக்கள் அவரை யமராஜா என்று அழைக்கின்றனர் . சிலசமயம் இந்த வேலைக்கு எருமையில் ஏறி வருவதால் இந்த பெயர் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது . ஆற்றைக்கடக்க நினைப்பவர்களை முதுகில் தூக்கிக்கொண்டு நடக்கும் துணிச்சல்காரர் இவர் . ஆற்றில் ஒருவரைத் தூக்கிக்கொண்டு நடப்பது என்பது சாதாரண பணியல்ல . வழுக்கும் பாறைகள் , நீரின் கணிக்கமுடியாத வேகம் என நிறைய பிரச்னைகள் உள்ளன . பதினான்கு வயதில் ராமுவுக்கு அவரது தந்தை ஆற்றில் நடக்க சொல்லித் தந்திருக்கிறார் . பல்வேறு பருவகாலங்களில் தனது பணியை நிறுத்தாமல் செய்துவருபவருக்கு , இப்போது அவரின் மகனும் துணையாக இருக்கிறார் . தனது சேவைக்கு குறிப்பிட்ட கட்டணம் தாண்டி அதிக பணத்தை எப்போதுமே ராம் நாடியதில்லை . பல்வேறு தொழிலாளர்கள் , அதிகாரிகள் , சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு இலவசமாகவே ஆற்றைக் கடக்க உதவுகிறார் . ...