இடுகைகள்

எண்ணெய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2015ஆம் ஆண்டு சூழல் ஒப்பந்தம் மீறப்பட்டால் என்ன விளைவுகளை சந்திக்க நேரும்?.....

படம்
  2015ஆம் ஆண்டு பாரிஸ் சூழல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்குப் பிறகு எட்டாண்டுகள் கழிந்துள்ள நிலையில், என்னென்ன மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 1.5 டிகிரி செல்சியஸ் என வரையறை செய்துகொண்டு நாடுகள் முயற்சிகளை செய்தன. ஆனால், காலப்போக்கில் பெருநிறுவனங்கள் கார்பன் வெளியீடு பற்றி கண்டுகொள்ளாமல் தங்களுடைய வருமானம் எந்தளவு பெருகியுள்ளது. பங்குச்சந்தையில் பங்கு விலை அதிகரித்துள்ளது பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். அரசும் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை.  திரைப்படத்தின் வருமானம் என்பதைவிட அதைப்பற்றிய கருத்தியல் ரீதியான விமர்சனமே முக்கியம். ஆனால் இன்று மோசமான படம் கூட வருமான சாதனை செய்கிறது. அதை வைத்தே படத்தின் கருத்து சரியில்லை என்று கூறுபவர்கள் மீது வழக்கு தொடங்குகிறார்கள். அவர்களின் பதிவுகளை நீக்க முயல்கிறார்கள். உலகம் முழுவதும் வலதுசாரி தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்தபிறகே, மாசுபாடு, கார்பன் வெளியீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்தலைவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான நிதிகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துவருகிறார்கள். போராளிகளை சிறையில் அடைத்து வருகிறார்கள். 

உடல் எடையைக் குறைக்க என்னென்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம்?

படம்
  எடை குறைப்புக்கான உணவுகள் என்னென்ன? எடை குறைப்புக்கு உதவும் உணவுகள் க்ரீன் டீ க்ரீன் டீயை சர்க்கரையோடு போட்டுக் குடித்தால் உடல் எடை குறையாது. இப்படி டீ குடிப்பதை நீங்கள் பழக்கமும் ஆக்கிக்கொள்ளக்கூடாது.   சர்க்கரை அல்லது க்ரீம் என ஏதுமில்லாமல் க்ரீன் டீயை வெந்நீரில் போட்டுக் குடித்தால் நல்லது. மாவுச்சத்தை உடல் உட்கிரகிக்க க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உதவுகின்றன. இதிலுள்ள காஃபீன் உங்களை உற்சாகப்படுத்துகிறது. உடற்பயிற்சியோடு க்ரீன் டீயை இணைத்துக்கொள்வது நல்லது.   ஆப்பிள் சிடார் வினிகர் உணவில் சர்க்கரை, எண்ணெய் இல்லாமல் சிடார் வினிகரைப் பயன்படுத்தினால் கலோரி கூடாது. உடல் எடைக் குறைப்பில் பங்கம் ஒன்றும் நேராது. உணவு உண்ணும் முன்னர் சிடார் வினிகரை நீங்கள் சாப்பிட்டால் ரத்த அழுத்த உயர்வைக் குறைப்பதாக கூறுகிறார்கள். ஆதாரம் என்று கேட்டால் ஆய்வாளர்கள் அதைப்பற்றித்தான் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க நினைத்தால் ஃபில்டர் செய்யப்படாத சிடார் வினிகரைப் பயன்படுத்துங்கள். பிஸ்தா ஒவ்வொரு கவளம் சோற்றுக்கும் கலோரி கணக்குப் பார்ப்பவர்களுக்கு பிஸ்தா பருப்பு ச

வயிற்றுக்குள் ஓர் புயல்! கடிதங்கள் - கதிரவன்

படம்
  10.2.2022 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் நெருக்கிக்கொண்டு இருக்கும். தங்களுக்கும் வேலைகள் அதிகரிக்கும்.  கட்டுரைகளை எழுதும் வேலைகள் ஓரளவுக்கு முடிந்துவிட்டன. முன்னமே இதற்கான கட்டுரைகளை எழுதி வைத்துவிட்டேன். அதற்கான தேதிகளை மட்டும் மாற்றினால் போதும். மாதத்திற்கு எழுதியதால் பதிப்பிக்கும் தேதியை எடிட்டர் மாற்றிச் சொன்னார். இதனால் வேலை செய்யாமல் இருக்க முயலும் கோ ஆர்டினேட்டர் கட்டுரைகளை மாற்றத் தடுமாறிவிட்டார்.  கட்டுரைகளை அழிப்பேன் என மிரட்டுவதால், உதவி ஆசிரியர்களே அவர் செய்யும் வேலையை செய்து கட்டுரைகளை வேறு தேதிகளுக்கு மாற்றினோம்.  எண்ணெய் பலகாரங்கள் எதைச் சாப்பிட்டாலும் வயிற்றுக்குள் தட்டு முட்டு சாமான்களை உருட்டுவது போல சத்தம் எழுகிறது. சிலசமயம் பலகாரங்களின் வாசனையைப் பொறுக்க முடியாமல் சாப்பிட்டால் இரவில் வயிற்று உப்புசம், வாந்தி, பேதி ஆகிறது. உடலை பராமரிப்பதில் அதிக கவனம் தேவைப்படுகிறது.  எங்கள் நாளிதழ் பள்ளிகளுக்கு போகிறதா என்று தெரியவில்லை. குறைந்த பிரதிகள்தான் அச்சிடுகிறார்கள் என சீஃப் டிசைனர் சொன்னார். தகவல்படம் இனி நான் தான்

உண்மையா? உடான்ஸா? - விமான எரிபொருளாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்!

படம்
  உண்மையா? உடான்ஸா? சுவாசிக்கும்போது, ஒரு நேரத்தில் நாசித்துவாரங்களில் இரண்டில் ஒன்று மட்டுமே வேலை செய்யும்! உண்மை. மூச்சை இழுப்பதும், வெளியே விடுவதையும் சரியாக கவனித்துப் பார்த்தால் இந்த வேறுபாட்டை நீங்கள் உணர முடியும். குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு ஒருமுறை இப்படி மூச்சுத்துளைகளில் காற்று உள்ளிழுக்கப்படுவது இடது, வலது என மாறும். இந்த மாற்றம் உடலில் தன்னியல்பாக நடைபெறுகிறது.  பேக்கேஜிங்கில் பயன்படும் பபுள் ரேப், சுவர்களில் ஒட்டவே தயாரிக்கப்பட்டது! உண்மை. இதனை உருவாக்கியவர்கள் பொறியாளர் அல் ஃபீல்டிங், மார்க் சாவென்னஸ் ஆகியோர்தான். இவர்கள் இதனை சுவர்களில் தாள் போல அலங்காரமாக ஒட்டலாம் என நினைத்தனர். 1957ஆம் ஆண்டு,  தாம் தயாரித்த பபுள்ரேப், பொருட்களை உடையாமல் கொண்டு செல்ல பயன்படும் என்பதை நடைமுறைரீதியாக உணர்ந்தனர். அதனால்தான், அதனை நாம் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்.  நத்தைகளுக்கு கூர்மையான பற்கள் உண்டு!  உண்மை. நத்தை இனங்களில் சிலவற்றுக்கு ரிப்பன் போன்ற நாக்கும், சிறு பற்களும் கொண்ட தாடையும் உண்டு. இதற்கு ராடுலா (Radula) என்று பெயர். உணவுப்பொருட்களை குறிப்பிட்ட அளவில் கத்தரித்து சாப்பிட இப

எண்ணெய் வளத்தைப் பற்றி அறிந்த ஆய்வாளர்! ரால்ப் அர்னால்ட்

படம்
  ரால்ப் அர்னால்ட் ( 1875-1961) அர்னால்ட், ஐயோவா மாகாணத்தின் மார்ஷ்மாலோ டவுனில் பிறந்தார். பெற்றோர் டெலோஸ் அர்னால்ட் - ஹன்னா ரிச்சர்ட்சன் மெர்சர். டெலோஸ் வழக்கறிஞராக பணியாற்றியவர், பின்னாளில் செனட் சபையில் பிரதிநிதியாக செயல்பட்டார்.  அர்னால்ட், த்ரூப் பாலிடெக்னிக் பள்ளி மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். சான் பெட்ரோ எனும் பகுதியில் பிளியோசீன் காலகட்ட படிமங்களை டெலோஸூம், அர்னால்டும் சேகரித்தனர். அர்னால்ட், 1900இல் கலிஃபோர்னியா புவியியல் ஆய்வு அமைப்பில் களப்பணி உதவியாளரானார்.  இதுபற்றிய கட்டுரையையும் 1903ஆம் ஆண்டு ஜூன் 27இல் அறிவியல் கழகத்தின் வழியே எழுதி வெளியிட்டார்.  1908ஆம் ஆண்டு புவியியலாளராக அங்கீகாரம் பெற்று, கலிஃபோர்னியாவிலுள்ள 4,234 சதுர மைல்களை எண்ணெய் வளம் உள்ளது என கண்டறிந்தனர். ஸ்ட்ராடிகிராபி எனும் பாறை அடுக்குகளை ஆராயும் முறையை முறைப்படுத்தியவர், ரால்ப் அர்னால்ட்தான். கலிஃபோர்னியாவில் ஷேல் எனும் வகை பாறை அமைப்பை கண்டறிந்து எண்ணெய் வளத்தைப் பற்றிய தகவல் கொடுத்தவர் இவரே.  https://archives.datapages.com/data/bull_memorials/045/045011/pdfs/1897.htm

கடல் சூழலைக் கெடுக்கும் எண்ணெய்!

படம்
  தெரியுமா? கடலை மாசுபடுத்தும் எண்ணெய்! கடலில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பல்கள், விபத்துக்குள்ளாகி நீரில் எண்ணெய்யை சிந்துவது உண்டு. இதனை வேகமாக செயல்பட்டு சுத்தம் செய்யவேண்டும். இல்லையெனில், அது கடலில் பரவி கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. எண்ணெய் கடல் பரப்பில் நெருப்பு பற்றும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. கூடுதலாக நீரை நச்சாக மாற்றுகிறது. கடல் நீரில் மிதக்கும் எண்ணெய்யை சேகரித்து எடுக்க, ஆயில் ஸ்கிம்மர் (oil skimmer)என்ற கருவி பயன்படுகிறது. இதில் சேகரிக்கப்படும் எண்ணெய்யை எளிதாக அகற்றிவிட முடியும்.  கடலில் கொட்டும் அல்லது கசியும் எண்ணெய், கடல் பறவைகள், உயிரினங்கள் உடல் மீது படிகிறது. இதன் காரணமாக அவற்றால் பறக்க, நீந்த முடியாது. அவற்றின் உணவையும் நச்சாக்குவதால், நீண்டகால நோக்கில் உணவுச்சங்கிலியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.  1989ஆம் ஆண்டு எக்ஸான் வால்டெஸ் நிறுவனத்தின் டேங்கர், கடலில் 4 கோடியே 10 லட்சம் லிட்டர் எண்ணெய்யை சிந்தியது. இதன் காரணமாக 2,100 கி.மீ. தூர கடல் பகுதி பாதிக்கப்பட்டது. இதனை கடலிலிருந்து அகற்ற 3 ஆண்டுகள் தேவைப்பட்டது. கடல்நீரிலுள்ள எண்ணெய் பரவாதபடி கயி

அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்று சாதித்த திருபாய் அம்பானி மற்றும் அவரது மகன்களின் கதை! - முகேஷ் அம்பானி - என் . சொக்கன்

படம்
              முகேஷ் அம்பானி என் சொக்கன் கிழக்கு திருபாய் அம்பானி , முகேஷ் , அனில் ஆகியோரின் வாழ்க்கை பற்றி நூலில் சுருக்கமாக கூறியிருக்கிறார்கள் . நூலின் தலைப்பு முகேஷ் அம்பானி என்றாலும் திருபாய் அம்பானிதான் படிக்க சுவாரசியம் தருபவராக இருக்கிறார் . ஒப்பீட்டளவில் நூல் முகேஷ் அம்பானிக்கானதுதான் என்றாலும் நூல் முழுமையாக அவரைப்பற்றிய விளக்கங்களை கூறவில்லை . 1932 இல் பிறந்த திருபாய் அம்பானி பற்றிய தொடக்கம் . அவர் ஏடனுக்கு சென்று வேலை தேடுவது , அதில் சம்பாதிப்பது , பின் மும்பைக்கு வந்து புறாக்கூண்டு வீடுகளில் குடும்பம் நடத்துவது , தன் குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொடுக்க நினைத்து என அனைத்துமே சிறப்பாக உள்ளது . மக்களைப் புரிந்துகொள்ள தனி ஆசிரியரை நியமித்து எளிய வாழ்க்கை பற்றி பாடங்களை சொன்னது அனைத்து தொழிலதிபர்களும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்தான் . திருபாய் அம்பானி தனது சாதுரியத்தால் அனைத்து விஷயங்களை செய்தாலும் கல்வி பற்றிய அவரது ஏக்கம் உண்மையானது . அதேசமயம் வெறும் படிப்பும் எல்லாம் தெரியும் என்ற மனோபாவமும் ஒருவருக்கு வெற்றியைத் தராது என்பதை

பெட்ரோலிய கழிவை அகற்றுமா நுண்ணுயிரிகள்?

ஈராக்கில் பெட்ரோலியக் கழிவுகளை அகற்றி, நிலங்களை தூய்மை செய்ய நுண்ணுயிரிகளைப் பயன்படுத்த உள்ளனர். ஐ.நா அமைப்பு இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதனுடன் அரசின் எண்ணெய் நிறுவனம் நார்த் ஆயில் கோவும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் இத்திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றன. ஐஎஸ் தீவிரவாதிகள் இங்கு போர் புரிந்தபோது பனிரெண்டிற்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளை தீவைத்து அழித்தனர். இதன் விளைவாக சூரியனின் ஒளியை மக்கள் பார்க்க முடியாதபடி புகை வானை சூழ்ந்தது. ஏறத்தாழ 20 ஆயிரம் டன்கள் கச்சா எண்ணெய் இம்முறையில் வீணாக்கப்பட்டிருக்கலாம் என்கிறது அரசு. எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதில் தவறில்லை. ஆனால் தொழிலால் ஏற்படும் மாசுபாடுகளை சிறிது கவனத்தில் கொள்வது நல்லது. இல்லையெனில் இயற்கை மாசுபாட்டை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் வலீத் ஹூசைன். இவர்தான் ஈராக்கின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர். நன்றி - டவுன் டு எர்த்

சிபிடி ஆயில் நன்மை என்ன?

சிபிடி ஆயில்(CBD Oil) கஞ்சா பயிரிலிருந்து எடுக்கும் எண்ணெயைப் பல்வேறு நாடுகள் பயன்படுத்த தடை விதித்துள்ளன. அப்படி பயன்படுத்தினாலும் அதில் டிஹெச்சி - டெட்ரா ஹைட்ரோ கன்னபினோல் எனும் பொருள் இருக்க கூடாது. இதன் அளவு அரசு சொல்லும் அளவில் இருப்பது அவசியம். மற்றபடி மருத்துவப்பயன்பாடுகளுக்கு பயன்படுத்த இங்கிலாந்து அரசு அனுமதித்துள்ளது. சிபிடி எண்ணெய் , கஞ்சா விதைகளிலிருந்து பெறப்படுகிறது. இதனை உடலில் எப்படி எடுத்துக்கொண்டாலும் அது உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இந்த எண்ணெய் உணவுப் பொருட்களிலும் குளிர்பானங்களிலும் கூட சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் மருத்துவத் துறையில் எரிச்சலைத் தவிர்க்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. அல்சீமர் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிபிசி சயின்ஸ் போகஸ்

ஈராக் -2 போர் தொடக்கமா?

படம்
அமெரிக்கா - ஈரான் போரா, வணிகமா? அமெரிக்கா தொடர்ந்து எண்ணெய் வளத்திற்காக மத்தியகிழக்கு நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது ஈராக்குடன் நடந்த போரின் தொடக்க காலப்போக்கை நினைவுப்படுத்துவதாகவே ஈரானுடன் நடக்கும் வார்த்தை யுத்தங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்டகனில் ஈராக்கிலிருந்து ஆபத்தான அறிகுறிகள் தென்படுகின்றன என்பதை டொனால்டு ரம்ஸ்ஃபீல்டு பத்திரிகையாளர்களிடம் வார்த்தை விளையாட்டு மூலம் தெரிவித்தார். இப்போது ஈரானுடனான அணு ஒப்பந்தம் கைவிடல் ஆகியவையும் ஈராக் -2 ரகத்தில் அமைந்துள்ளதாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கிரெய்க் தியல்மன் கூறுகிறார். இது பற்றி காங்கிரசில் விவாதிக்காமல் எப்படி அரசு முடிவெடுக்க முடியும என்று கேட்கும் இவரது கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு, ட்ரம்ப் உடனே மறுப்பு தெரிவித்தார். அது போலிச்செய்தி. அவர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரை நாங்கள் ஈராக்குக்கு அனுப்பியுள்ளதாக கூறுகிறார்கள். எங்களுக்கு அப்படியொரு திட்டம் இல்லை. அனுப்புவதாக இருந்தாலும் இன்னும் அதிக படையி