இடுகைகள்

பயிற்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடல் எடையைக் குறைப்பது எப்படி?

படம்
  உடல் எடையைக் குறைப்பது எப்படி? பா ராகவனே இளைப்பது சுலபம் என நூல் எழுதியிருக்கிறார். அவரே பன்னீர், வெண்ணெய் என்று சாப்பிட்டு குனுக்கெனதான் இருக்கிறார். அவர் எழுதிய நூலைப் படிப்பவர்கள் மட்டுமே உடனே இளைத்து விடுவார்களா? முடியும். அதற்கு முக்கியக் காரணம், உணவுமுறை. ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு. அதைக் கட்டுப்பாட்டில் வைத்தாலே உடற்பயிற்சியைத் தொடங்கும் முன்னரே உடலில் மாற்றம் தெரியும். அதற்குப் பிறகு உடற்பயிற்சி பழக்கமானால் மெல்ல உடல்எடை சீராக குறையத் தொடங்கும்.  ஹோமியோபதியில் கூட உடல் எடையைக் குறைக்கலாம் என மருந்துகளை விற்கிறார்கள். ஆனால் அதற்கு ஒருவர் கொடுக்கவேண்டிய விலை என்னவென்று யாருக்கும் தெரியாது. எனவே, மாத்திரை, டானிக்குகள், பெல்ட் என பேசும் விஷயங்களை சரியான ஆலோசனைகளோடு அணுகுவது நல்லது.  ஃபிட்னெஸ் பேண்டுகள், வாட்சுகள், ஆப்கள் நிறைய உள்ளன. இவற்றை வாங்கிக்கொண்டு சரியான உடற்பயிற்சிமுறை, அதற்கேற்ப உணவுமுறையை திட்டமிட்டால் நிச்சயமாக எடை குறைய வாய்ப்புள்ளது. கலோரி குறைய, ஊளைச்சதை அழிய, கொழுப்பு கரைய என நிறைய பயிற்சிகள் உள்ளன. இவற்றை ரெசிஸ்டன்ஸ், ஸ்ட்ரென்தனிங், கார்டியோ என பல்வேறு பெயர்கள

நடைபயிற்சி செய்வது உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைப் பயிற்சி!

படம்
  தற்காப்புக்கலையைக் கற்கும்போது அடிப்படையான பயிற்சியாக குதிரைபோல நிற்கும் நிலையைக் குறிப்பிடுவார்கள். உடலை அடிப்படையாக பலப்படுத்தினால்தான் தற்காப்புக்கலைகளை உறுதியாக பயன்படுத்தமுடியும். மண்ணில் வேர்பிடித்தது போல ஒருவர் நின்றால் மட்டுமே போரில் வெல்ல முடியும். அந்த வகையில் சாலையில் நடைபயிற்சி செய்வது உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைப் பயிற்சி. இதற்குப் பிறகுதான் எடைப் பயிற்சிகள், கார்டியோ ஆகியவை இடம்பெறுகின்றன. எளிமையாக கூறவேண்டுமெனில் பிரமிடு போல உள்ள உடற்பயிற்சிகளின் கீழே உள்ள அடிப்படைப் பயிற்சி, நடைப்பயிற்சிதான்.  உட்கார்ந்துகொண்டே செய்யும் வேலையில் இடையிடையே பத்து நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது கூட மாற்றத்தை ஏற்படுத்த போதுமானது. பிற உடற்பயிற்சிகளைப் போல உடலை பெரிதாக கஷ்டப்படுத்தவேண்டியதில்லை. எனவே, நடைப்பயிற்சி என்பது செய்வதற்கு எளிதானது. இதை தினசரி பயிற்சியாக்கும்போது, ஒருவருக்கு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.  அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு ஆகியவற்றின் பாதிப்பை நடைப்பயிற்சி பெருமளவு குறைக்கிறது. ஓட்டப்பயிற்சியைப் போலவே பயன்களை அளிக்கிறது. 80 ஆயிரம் பெண்கள

ரிடர்ன் டு மவுண்ட்குவா செக்ட் - முற்பிறப்பில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு தீயசக்தியை வேட்டையாட வரும் முன்கோபக்கார வாள் வீரன்!

படம்
  ரிடர்ன் டு மவுண்ட்குவா செக்ட் காமிக்ஸ் ரீட்மாங்கா.காம் மவுண்ட்குவா செக்ட்டைச் சேர்ந்த பிளம் பிளாசம் வாள் துறவியின் மறுபிறப்பு பிச்சைக்காரனாக நடக்கிறது. சுயிங் மியுங் என்ற பெயரில் பிச்சைகாரர்கள் இனத்தில் பிறப்பவன் அவனது முற்பிறப்பு நினைவுகளால் வழிநடத்தப்படுகிறான். அதன் வழியாக சென்று முந்தைய தவறுகளை சரி செய்கிறான். அவனது இனக்குழுவை மேம்படுத்த முயல்கிறான். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.  பிளாசம் பிளம் பிச்சைக்காரனாக தனது வாழ்க்கையை தொடங்குகிறான். ஆனால் அதற்கு முன்னர் அவனது வாழ்க்கை மவுண்ட் குவா செக்டில் சிறந்த வாள் வீரன்தான். ஆனால் டீமன் செக்ட் தலைவனால் மொத்த இனக்குழுவுமே வீழ்த்தப்படுகிறது. ஒற்றைக் கை இழந்த நிலையில் பிளம் பிளாசம் எழுந்து பிணங்களின் மேல் கத்திக்குத்து பட்டு குற்றுயிராக உள்ள டீமன் செக்ட் தலைவன் சுன்மாவின் தலையை வெட்டி எறிகிறான். பிறகு அப்படியே நினைவிழந்து இறந்து விழுகிறான். தான் சிறந்த வாள் வீரனாக இல்லாத காரணத்தால் டீமன் செக்டால் வீழ்த்தப்பட்ட குற்றவுணர்ச்சி இறக்கும் முன்னர் அவனை சித்திரவதை செய்கிறது. இதன்பிறகுதான் அவனது ஆன்மா, பிச்சைக்கார சிறுவனின் உடலுக்கு செல்கிறது

அரசு அதிகாரி வழங்கும் இலவச அரசுத் தேர்வு பயிற்சி - கேள்வி பதிலுக்கு பணப்பரிசு, மாணவர்களுக்கும் உணவும் உண்டு

படம்
  சௌதி அரேபியாவில் மருத்துவத்துறையில் பணியாற்றியவர், நாராயண குமார். வேலையில் திடீரென சிக்கல் ஏற்பட்டு, மூன்று மாத சம்பளம் இல்லாத நிலையில் தனது ஊருக்கு திரும்பி வந்தார. அடுத்து என்ன வேலை செய்வது என்று தெரியாத நிலையில், தவித்தார். அப்போது அவருக்கு மாரிமுத்து என்பவர் அரசு வேலைக்கான பயிற்சி வழங்குவது தெரிய வந்தது. விருதுநகர் சென்று பயிற்சி வகுப்பில்   கலந்துகொண்டவர், அரசு தேர்வு எழுதி தாசில்தாராக பணியில் இயங்கி வருகிறார். இவரின் உறவினர்கள் இருவர் கூட அரசு வேலையில்தான்   உள்ளனர். இவர்களும் மாரிமுத்துவிடம் பயின்றவர்கள்தான். இங்கு செய்தி மாரிமுத்துவைப் பற்றித்தான்.   பத்தாயிரம் இளைஞர்களை அரசுத் தேர்வில் வெல்ல வைத்திருக்கிறார். இவர் ஶ்ரீவில்லிப்புத்தூரில் தாசில்தாராக செயல்பட்டு வருகிறார். வார இறுதி நாட்களில் மாணவர்களுக்கு அரசு தேர்வுகளில் வெல்ல இலவச பயிற்சி வகுப்புகளை எடுக்கிறார். மாரிமுத்து, அரசுப் பணிகளுக்கான   பயிற்சி வகுப்புகளை பதினெட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், மாரிமுத்து. அரசு அதிகாரியாவதுதான் அவரது கனவு. அதை நிஜமாக்கி 1994ஆம் ஆண்டு திருமங்கலத்தி

நாய்களை எளிதாக பழக்க முடிவதற்கான காரணம்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ! நாய்களை எளிதாக பழக்கமுடிவது எப்படி? வீட்டில் வளர்க்கும் பூனைகளை குறிப்பிட்ட கட்டளைக்கு ஏற்ப பழக்கலாம். ஆனால், அந்த முயற்சியும் கூட நாய்களோடு ஒப்பீடு செய்தால் கடினமானவையே. நாய், உரிமையாளர் கூறும் சிக்கலான ஆணைகளை கூட ஏற்று செய்யும். ஆனால் பூனை, தானே விரும்பினால் மட்டும் செயல்களை செய்யும். நாய், பாரம்பரியமாக குழுவாகவே வேட்டையாடி வாழ்ந்து வந்துள்ளது. அப்படி வாழும்போது, குழுத்தலைவர் ஆணையை ஏற்று பணியாற்றும் பண்பு நாய்க்கு உண்டு. இதனால், நாய் தன் உரிமையாளரை தனக்கும் மேலுள்ள அதிகாரம் கொண்டவராக பார்ப்பதால் கட்டளையை உடனே செய்து முடிக்கிறது. எனவே, நாய்களை பழக்குவது எளிதாக இருக்கிறது.  விஷ முறிவு மருந்து எப்படி உருவாக்கப்படுகிறது? உலகம் முழுக்க 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஷப் பாம்புகள் உள்ளன. இவை மனிதர்களை கடிப்பதால் 80 ஆயிரம் தொடங்கி 1 லட்சத்து 40 ஆயிரம் வரை மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.  பாம்பு கடித்தவரை உடனே காப்பாற்ற விஷ முறிவு மருந்து அவசியம். மருந்தைத் தயாரிக்க முதலில், பாம்பின் விஷத்தை குதிரையின் உடலில் செலுத்துகிறார்கள். இந்த விஷத்திற்கு எதிராக குதிரையின் உடல் ஆன்டிப

ஆதவற்றோரை கலைப்பாதையில் திருப்பும் கனடா நாட்டு பெண்மணி! - பைலிஸ் நோவக்

படம்
  பைலிஸ் நோவக் ஆதரவற்ற இளைஞர்களுக்கு கலைக்கல்வி இலவசம்!  1984ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பைலிஸ் நோவக், வாலஸ்பர்க்கிலிருந்து டொரன்டோவிற்கு இடம்பெயர்ந்தார். அவருக்கு திரைப்பட நடிகராகும் ஆசை இருந்தது. ஆனால் நாடக மேடை அனுபவம் இல்லாததால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வீடற்ற சிறுவர்கள் தங்கியிருக்கும் மையத்தில் தன்னார்வலராக பணிபுரியத் தொடங்கினார். அங்குள்ள சிறுவர்களுக்கு,  கலைத்திறன் பயிற்சிகளை வழங்கத் தொடங்கினார். இதுவே இன்று அவரது முக்கிய அடையாளமாகும்.  1996ஆம் ஆண்டு நோவக்கும், நாடக கலைஞரான சூ கோஹென் ஆகிய இருவரும் இணைந்து ஸ்கெட்ச் வொர்க்கிங் ஆர்ட்ஸ் (Sketch working arts) என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்பு வீடற்ற சிறுவர்களுக்கு (16-29 வயது) கலைத்திறன் பயிற்சியை இலவசமாக வழங்குகிறது.  ”கிரியேட்டிவிட்டியான பயிற்சிகள், வீடற்ற சிறுவர்களுக்கு உலகில் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. கருத்தை சுதந்திரமாக கூற உதவும் கலைகள் தான் என்னை இயக்குகின்றன” என்றார் பைலிஸ் நோவக். இவர், பெருந்தொற்று காலத்திலும் ஆன்லைனில் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கலைப் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.  Picture this -Phyll

இந்தியர்கள் அன்பான தொடுதலை அறியாதவர்கள்! - அய்லி சேகட்டி

படம்
  அய்லி சேகட்டி காதல் உறவுக்கான பயிற்சியாளர்  நீங்கள் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்தானே? இந்தியாவுக்கு வருவதற்கு என்ன காரணம்? இங்கு நீங்கள் காதல் உறவுக்கான பயிற்சியையும் வழங்குகிறீர்கள் நான் பின்லாந்து, இத்தாலி, லண்டனில் வாழ்ந்துள்ளேன். எனது பதினெட்டு வயதிலேயே லண்டனுக்கு சென்றுவிட்டேன். பிறகுதான் இந்திய தத்துவங்கள் மீது ஆர்வம் பிறந்தது. மதரீதியான படிப்புகளை படிப்பையும், இந்தி மொழியையும் கற்றேன். பிறகுதான் 2007இல் மும்பைக்கு சென்றேன். பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர் மனநிலை பற்றிய ஆராய்ச்சி செய்தேன். கூடவே, சோமாட்டிகா எனும் படிப்பைப் படித்தேன். சைக்கோதெரபி, விபாசனா ஆகியவற்றைப் பற்றி ஆழமாக கற்றேன். இதற்குப் பிறகு எனக்கு மணமானது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மணவாழ்க்கை கெட்டுப்போனது. எனவே, நான் எங்கள் வாழ்க்கையை பிறருக்கு முன் வைக்கத் தொடங்கினேன். அப்படித்தான் காதல் உறவு பயிற்சியாளராக மாறினேன்.  2012இல் உலகம் முழுக்க டேட்டிங் ஆப்களின் மீதான மோகம் பெருகத் தொடங்கியது. நானும் பிஏ இந்தி படிப்பை கைவிட்டு பாலுறவு மற்றும் காதல் உறவு பற்றிய ஆராய்ச்சிக்கு மாறினேன்.  இந்தியர்கள் தங்கள் உறவில் எந்த

ஏழை மாணவர்களுக்கு உதவும் முன்னாள் ராணுவ வீரர்

படம்
  மதுரையைச் சேர்ந்தவர் ஜிஎம் ராமச்சந்திரன். இவர் தேனி பெரியகுளத்தில் தங்கி இளைஞர்களுக்கு உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ராமச்சந்திரன்,  ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பிறகு, வருவாய்த்துறையில் வேலை செய்துள்ளார். பின்னாளில்தான் பழனிக்கு இடம் மாறி வாழ்ந்துகொண்டிருந்தார். அப்போது காலையில் ஜாக்கிங் பயிற்சிக்கு சென்றார். சாலையில் இவரைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆன சிலர், ஃபிட்னெஸ் பற்றிய அறிவுரைகளைக் கேட்டிருக்கின்றனர். ஆகா, என  புளகாங்கிதம் அடைந்த ராமசந்திரன் உலகத்திற்கு ஏதாவது சொல்ல நினைத்தார். அதை ஆரோக்கியம் தொடர்பாக அமைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறார்.  ராமச்சந்திரனுக்கு விளையாட்டில்தான் தொடக்கம் முதலே ஆர்வம். இதனால் படிப்பில் சுமாராகவே இருந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இதை வைத்துத்தான் 1976ஆம் ஆண்டு ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.  ராமச்சந்திரன் தடகளப் பயிற்சி கொடுப்பவர்கள் எல்லோருமே வறுமையான பின்புலத்தைக் கொண்டவர்கள். இவர்களுக்கு ஓடுவதற்கும், கயிற்றைப் பிடித்து ஏறுவதற்கும், நீளம் தாண்டுவதற்கும் பயிற்சி அ

படிப்பதற்கு பொருளாதாரமும், சூழலும் தடையாக இருக்க கூடாது! - ஆனந்த் குமார், பீகாரின் சூப்பர் ஆசிரியர்!

படம்
                    பொருளாதாரம் எனது படிப்பை குலைத்துவிட்டது ! ஆனந்த்குமார் . பாட்னாவில் வாடகைவீட்டில் இருந்த அந்த சிறுவனை பள்ளி செல்வதற்காக அதிகாலையில் காலைத் தொட்டு எழுப்புவது தந்தை ராஜேந்திர பிரசாத்தின் வழக்கம் . ஒருநாள் அப்படி எழுந்த சிறுவன் , எதற்கு இப்படி எழுப்புகிறீர்கள் என்று கேட்டான் . நான் நீ பிற்காலத்தில் செய்யும் சாதனையைப் பார்க்க இருப்பேனா என்று தெரியவில்லை . ஆனால் நீ அந்த உயரத்திற்கு செல்ல நான் என் பங்கினை செய்துவிடவேண்டும் . எழுந்து பள்ளிக்கு கிளம்பு என்று சொன்னார் . கணிதத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த் குமாருக்கு கேம்பிரிட்ஜில் படிக்க இடம் கிடைத்தும் கையில் பணம் இல்லாத சூழ்நிலையில் அக்கனவு கனவாகவே போய்விட்டது . இவரது பல்வேறு கட்டுரைகளை ஆய்வு இதழ்கள் வெளியிட்டுள்ளன . 1994 ஆம் ஆண்டில் இவரது தந்தை இறந்துவிட பொருளாதார சிக்கலால் படிப்பை கைவிடவேண்டிய சூழல் . நகரத்தின் தெருக்களில் அப்பளம் விற்றபடி நிலைமையை சமாளித்திருக்கிறார் . பிறகு பல்வேறு தனியார் நிறுவனங்களில் கணிதம் கற்பித்திருக்கிறார் . 1992 இல் கணிதம் தொடர்பான கிளப் ஒன்றை தொடங்கியவர் பின்னாளில்

உளவு பார்க்கும் விலங்குகள் - பயிற்சி கொடுக்கும் அமெரிக்கா!

படம்
giphy தெரிஞ்சுக்கோ! விலங்குகளை உளவு பார்க்க பயன்படுத்துவது தொன்மைக் காலத்திலிருந்து நடைபெற்று வருகிற சங்கதி. மனிதர்கள் என்றால் உடனே போட்டுத்தள்ளி விடுவார்கள். ஆனால் புறா, கிளி, மீன் என்றால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. நஷ்டம் குறைவு. எனவே, உளவு பார்க்க விலங்குகளை அனைத்து நாட்டு ராணுவங்களும் பயிற்றுவிக்கின்றன. ஐஎஸ் தீவிரவாதி தலைவரையும் இம்முறையில் உளவு பார்த்து நாயை விட்டு கண்டறிந்தது அமெரிக்கப்படை. அண்மையில் பெலுகா திமிங்கலம் நார்வேயில் பிடிபட்டது. அதில் செயின் பீட்டர்ஸ்பர்க்கின் சொத்து என எழுதப்பட்டிருந்தது. அனைவரும் ரஷ்யாவை குற்றம் சாட்ட, எங்களுக்கும் அந்த மீனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என காசை வெட்டிப்போட்டது போல ரஷ்யா பேசியது. டேட்டா அமெரிக்காவில் 2012ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஸ்பாவார் அமைப்பு,  85க்கும் மேற்பட்ட டால்பின் மீன்களை உளவு பார்க்க பயிற்றுவித்து வருகிறது. மேலும் இந்த அமைப்பு 50 கடற்சிங்கங்களை - வால்ரஸ்  கட்டுப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியா எல்லைக்குள் 4.5 கி.மீ. பறந்து வந்த புறாவை இந்திய அதிகாரிகள் கைது செய்தனர். எப்போது

வலதுசாரி தீவிரவாதம் அதிகரித்து வருகிறது! - பல்கேரிய ஆய்வாளர் அறிக்கை!

படம்
ஆய்வாளர் ரஸ்லன் ட்ரான் பல்கேரியாவில் வலதுசாரி தீவிரவாதக்குழு தோன்றி செயல்பட்டு வருகிறது. இதுபற்றிய ஆய்வை குளோபல் வாய்ஸ் கட்டுரையாளர் ரஸ்லன் ட்ரான் மற்றும் கிரில் ஆரமோவ் ஆகியோர் இணைந்து செய்து அதனை வெளியிட்டனர். அதுபற்றி அவர்களிடம் பேசினோம். நீங்கள் ஆய்வு செய்த இயக்கம் எப்படிப்பட்டது? பல்கேரிய துருக்கி எல்லையில் செயல்படும் குழு இது. பல்கேரிய தேசிய இயக்கம் (BNO) பற்றியது எங்களது ஆய்வு. 2016 ஆம்ஆண்டு இதுபற்றி குளோபல் வாய்ஸ் வலைத்தளத்தில் கட்டுரை எழுதினேன். அந்த ஆண்டுதான் இக்குழு, அகதிகளை வேட்டையாடுபவர்களாக மாறியது. இவர்களுக்கு ஐரோப்பாவிலுள்ள அனைத்து வலதுசாரி இயக்கங்களுடனும் நல்ல தகவல் தொடர்பு உண்டு. மேலும் இளம் உறுப்பினர்களை ஈர்ப்பதிலும் இவர்கள் நல்ல வேகம் காட்டுகிறார்கள். டென்மார்க், ரோமானியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் கேம்புகளை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ரஷ்ய ராணுவம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இவர்களின் செயல்பாடு எத்தகையது? நாங்கள் அகதிகள் அழிப்பு, இஸ்லாம் மயப்படுத்தல் போன்ற விஷயங்களை இதில் மையப்படுத்தவில்லை. இன்று பல்கேரியாவில் 600 அகதிகள் மட்டுமே உள