இடுகைகள்

நாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜென்ம எதிரிகளாக உள்ள விலங்குகள் காட்டும் பாசநேசத்திற்கான காரணம்- சீன உளவியல் ஆய்வாளர் குவோ

படம்
  அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவவாதி எட்வர்ட் கட்த்ரை என்பவரைப் பற்றி பார்ப்போம். இவர், உளவியல் பற்றி ஆய்வுகளைச் செய்தார். இவான் பாவ்லோவின் கிளாசிக்கல் கண்டிஷனிங் என்ற கோட்பாட்டை அடிப்படையாக எடுத்துக்கொண்டார். நாய்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மணியை ஒலிக்கவிட்டு உணவு வழங்கினால், மணி ஒலிக்கும்போது வாயில் எச்சில் சுரக்கத் தொடங்கிவிடும். இதுதான் ஆய்வின் முக்கியமான முடிவு. மனம் எப்படி பழக்கத்திற்கு அடிமையாகிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.  நாய்க்கு குறிப்பிட்ட செயலை செய்தால் உணவு கிடைக்கும் என்பதை தெரிய வைத்தால் பின்னாளில் என்ன செய்தால் உணவு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்கிறது என எட்வின் கூறினார். அதாவது ஒரே செயலை திரும்ப திரும்ப செய்வதால் அதன் குணநலன் உருவாவதில்லை. உணவுக்காக செய்யும் செயல்பாடுகள் மெல்ல உருவாகி மேம்பாடு அடைந்து குண இயல்புகளாக மாற்றம் அடைகிறது. இதற்காக ஒரே சோதனையை விலங்குகளிடம் மீள மீள செய்யவேண்டியதில்லை என்று உறுதியாக கருதினார்.  அடுத்து செய்திகளில் பார்த்த விஷயத்தைப் பார்ப்போம். உலகில் எப்போதும் பொருந்திப்போகாத விலங்குகள் உண்டு. பூனை, எலி, பூனை, நாய் ஆகியவை எப்போதும

ஆதிகாலத் தோழன் - புதிய மின்னூல் வெளியீடு - தரவிறக்க இணைய இணைப்பு

படம்
  ஆதிகாலத்தோழன் மின்னூலின் அட்டைப்படம் நாய்களைப் பற்றி நமக்கு தெரிந்தது குறைவே. காரணம் அவை நமக்கு கட்டுப்பட்டவை. உத்தரவைக் கேட்டு நடக்கும் உயிரினம் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அதன் மூளையில் என்ன நடக்கிறது, மனிதர்களோடு இணைந்து சகித்து வாழ்வது, ஏறத்தாழ குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல அதீத நட்புணர்வு காட்டுவது என இதன பின்னணியில் உள்ள விஷயங்களை ஆதிகாலத் தோழன் நூல் வெளிச்சமிட்டு காட்டுகிறது. இந்த நூலை வாசித்தவர்கள், தங்களது நாய்களை கவனித்து வளர்ப்பதோடு, அதனைப் புரிந்துகொள்ளவும் முயல்வார்கள் என்பது உறுதி. https://www.amazon.in/dp/B0CDM2JZG1 இந்த நூலின் சில அத்தியாயங்கள் சப்ஸ்டாக் வலைத்தளத்தில் கிடைக்கும். அதில் இணைந்து வாசியுங்கள்.நன்றி!

ஆதிகாலத் தோழன் - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளத்தில் விரைவில்.....

படம்
 

மனிதர்கள் இல்லாத சூழலில் உயிர்பிழைத்து வாழுமா நாய்கள்?

படம்
  மனிதர்கள் இல்லாத உலகம் ஓடிடிகளில், இணையத்தில் உள்ள மனிதர்கள் பலரும், உலகம் அழியும் சூழலில் மனிதர்கள் எப்படி பிழைப்பது என யோசித்து வருகிறார்கள். இதைப்பற்றி நாவல், சிறுகதை, குறும்படம், வெப்தொடர், திரைப்படம் என படைப்புகளை   எடுத்துவருகிறார்கள். நோயோ அல்லது அணு ஆயுதங்கள் கொண்ட போராலோ மக்கள் பேரழிவை சந்தித்து மீண்டும் உலகில் வாழத் தொடங்குவதுதான் கதை. இந்த மையப்பொருளை அப்படியே மனிதர்கள் இல்லாத உலகில் விலங்குகள் குறிப்பாக நாய்களை வைத்து யோசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும்? பல்லாண்டுகளுக்கு முன்னரே வீட்டு விலங்கான நாய், மீண்டும் காட்டுக்குத் திரும்பி உணவுக்காக வேட்டையாட முடியுமா, மனிதர்கள் துணையில்லாமல் தன்னைக் காத்துக்கொள்ளுமா என்ற கேள்வி முக்கியமானது. இதே கேள்வியை பூங்காக்களில் உள்ள மனிதர்களைக் கேட்டால், அது சாத்தியமே இல்லை என்று கூறி காரணங்களை அடுக்குவார்கள். ஆனால், அது அவர்கள் பார்வைக் கோணத்தில் சரியாக இருக்கலாம். முழுக்க உண்மையல்ல.   தொடக்கத்தில் சில நாய் இனங்கள் இப்படி தடுமாறினாலும், விரைவில் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். காட்டுக்குள

ஆட்டு மந்தைகளைக் கட்டுப்படுத்தி மேய்க்கும் புத்திசாலி நாய்!

படம்
  பார்டர் கோலி நாய் இனம் டெப் பைலே, இசைக்கலைஞராக இயங்கி வருபவர். இவரின் அப்பா, உளவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர. தனது அப்பா மூலம் பார்டர் கோலி என்ற இன நாய் ஒன்றை டெப் பெற்று வளர்த்து வந்தார். இந்த நாய், ஆட்டுக்கூட்டங்களை வழிநடத்துவதற்காக விவசாயிகளில் வளர்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்து நாட்டில் பார்டர் கோலி நாயினம் விவசாயிகளிடையே மிகவும் பிரபலம்.   இந்த நாயினம் எப்போதும் உற்சாகத்தோடு இயங்க கூடியது. அதிகம் சலிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். இதற்கென விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்து அதை உற்சாகத்தோடு வைத்திருக்கலாம். டெப் பைலே வளர்த்த பார்டர் கோலி நாய்க்கு, சேசர் என்று பெயர். இந்த நாய்க்கு ‘உட்கார்’ அல்லது ‘அமைதியாக இரு’ என்றாலோ புரிவதில்லை. ஆனால், ‘அமைதியாக இரு’, ‘ஹாலுக்குப் போ’ என்று கூறினால் புரிந்துகொள்ள முடிந்தது. அதேநேரம் சில பொருட்களை நினைவுபடுத்தி அதை எடுத்து வா என்றால், எடுத்து வந்தது. அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இரண்டரை வயது குழந்தையின் புத்திசாலித்தனத்தை சேசர் கொண்டிருந்தது. உலகிலேயே சொற்கள், வார்த்தைகள், அதற்கான பொருள் என கற்றுக்கொள்வதில் மனித இனமே தேர்

காம்பியா நாட்டில் மலேரியாவைக் கண்டறிந்த நாய்!

படம்
  நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம்.அதனுடன் மனிதர்களை ஒப்பிடக்கூட முடியாது. அந்தளவு தொலைவில் வாசனையைக் கண்டறியும் மோப்ப சக்தியின் இடைவெளி உள்ளது. இரட்டையர்களாக பிறந்தாலும் கூட ஒருவரின் உடல்மணம் வேறுபட்டிருக்கும். நாயால் அதை உடனடியாக கண்டறிய முடியும். ஒருவர் வீட்டுக்கு வரும் வழியில் குப்தா பவனில் சாப்பிட்ட குலோப்ஜாமூன், நண்பரின் செல்ல பூனையைத் தூக்கி கொஞ்சியது. யார்லி சென்ட் மணக்கும் காதலியை கட்டி அணைத்தது, பூங்கொத்துகளை பாராட்டாக நண்பரிடம் பெற்றது என மோப்பம் பிடித்தே நாயால் அனைத்தையும் அறிய முடியும். நான் லீனியராக இருந்தாலும் உண்மையை அறிந்துவிட முடியும். போதைப்பொருட்கள், வெடிகுண்டுகள், கொலை தடயங்கள் ஆகியவற்றைக் கண்டறிய அதற்கென பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் உள்ள மனநிலையை, அவரது உடலில் சுரக்கும் வேதிப்பொருட்களை வாசனையை முகர்ந்தே நாயால் உணர முடியும். தற்போது, அறிவியலாளர்கள் நாயின் மோப்பம் பிடிக்கும் திறனை அடிப்படையாக கொண்டு வேபர் டிடெக்டர் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். இப்போதைக்கு அதன் செயல்திறன் நாயின் மோப்பத் திறனை விஞ்சும் அளவுக்கு இல்லை. ஆனால் எதிர்கா

களைத் தாவரங்களை கண்டறியும் நாயின் மோப்பசக்தி!

படம்
  அமெரிக்காவில் அரிசோனா தொடங்கி வியோமிங்   வரையில ‘டையர் வோட்’   என்ற ஆக்கிரமிப்பு தாவரம்   பரவி வருகிறது. முழங்கால் அளவு உயரத்தில் மஞ்சள் நிற பூக்களைக் கொண்டது. இந்த தாவரம் வேகமாக வளர்ந்து, புதிய செடிகளை உருவாக்குவதால் அங்கு வளர்ந்து வந்த மரபான செடிகள் அழிந்து மறைந்தன.   இதைக் கட்டுப்படுத்த அரசு முயன்றது. அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே, செடியை துல்லியமாக கண்டறிய இரண்டு நாய்களை பயிற்றுவித்து பயன்படுத்துகிறார்கள். பொதுவாக, நாய்களை இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்துவது கடினமானது. ஏறத்தாழ ஆயிரம் நாய்களில் ஒன்றுதான் களைத் தாவரத்தை எளிதாக கண்டறியும் திறன்பெற்றதாக உள்ளது. மனிதர்கள் கவனிக்காமல் விட்ட தாவரத்தை நாய் தவறவிடுவதேயில்லை. ‘டையர் வோட்’ என்ற களைத் தாவரம் ரஷ்யாவை பூர்விகமாக கொண்டது. இத்தாவரத்தை அகற்றும் பணி 2011ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது. மனிதர்களால் கண்டறிய முடியாத விஷயங்களை நாய் மோப்பத்திறனால் கண்டுபிடித்து வருகிறது.வனவிலங்கு காட்சி சாலையில் உள்ள   நரிக்குட்டிகள், வெடிமருந்து, பண்ணை விலங்குகளை அழிக்கும் பாக்டீரியா, களைத்தாவரங்கள் என கூறிக்கொண்டே ச

நாயின் உளவியல் பற்றி அறிய விருப்பமா? - சப்ஸ்டாக் தளத்தில் இணையுங்கள்!

படம்
  நாம் வீட்டில் வளர்க்கும் விலங்குதான் நாய். பெரும்பாலானவர்கள் நாயை தங்கள் துணையாக வைத்துக்கொண்டு வாழ்க்கையை வாழ்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள். இந்த சூழலில், நாயின் உளவியல் பற்றி அறிவது அவசியம். என்னதான் இருந்தாலும் உயிருள்ள பிராணி அல்லவா?  இதைப்பற்றிய தகவல்களை நீங்கள் சப்ஸ்டாக் தளத்தில் வாரம்தோறும் வியாழனில் வாசிக்கலாம். தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தால் செய்தி மடல் உங்களுக்கு கிடைக்கும். நன்றி! anbarasushanmugam.substack.com

நாய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், கிடைத்த தகவல்களும்

படம்
  நாய் மனிதனுக்கு மிக நெருக்கமான வீட்டு விலங்கு. வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து தருவதோடு, அகழாய்வு பணிகளிலும் கூட பயன்படுகிறது. இதுபற்றி நார்த் கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர் பிரையன் ஹரே, அனிமல் காக்னிஷன் என்ற இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். மனிதர்களைப் போலவே நாய்களும் பரிணாம வளர்ச்சி பெற்று சமூகத்தைப் புரிந்துகொள்கின்றன என்பதே ஆய்வின் மையப்பொருள். அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் 9,200 நோய் மாதிரிகளை அடையாளம் கண்டு சோதிக்க பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் உதவின. இதுபற்றிய சோதனையை கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்தனர். பெருந்தொற்றில் மிகச்சிலர் மட்டுமே நண்பர்கள் சகிதம் இருந்தனர். பலரும் தனிமையில் இருந்தனர். சூழல் நெருக்கடியால் பல்வேறு மனநல சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால், நாய்களை வளர்த்தவர்களுக்கு அதிக பிரச்னையில்லை. பிற மனிதர்கள் இல்லாத நிலையில் பேச்சுத்துணையாகவும் விளையாடுவதற்கான இணையாகவும் இருந்தது. அறிவியலாளர்கள், நாய்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆராய்ச்சி செய்தனர். அதற்கு நன்கு அறிந்த மனிதர்களின் முகங்கள் கண்ணில் தெரிந்தபோது மூளையில் மி

நாய் எழுப்பும் ஒலிக்கு என்ன அர்த்தம்?

படம்
  நாய் எழுப்பும் குரைப்பொலி பற்றிய விளக்கங்கள் இதோ….. தொந்தரவு செய்யாதே வீட்டுக்கு முன் செல்பவர், காலிங்பெல்லை அழுத்துபவர், சைக்கிளில் செல்பவர் என யார் சென்றாலும் ஒலி, ஒளி தென்பட்டாலும் நாய் உடனே குரைக்கத் தொடங்கும். குரைக்கும் தொனி, எதிராளி வீட்டின் கதவுக்கு அண்மையில் இருக்கிறாரா, தூரத்தில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து மாறுபடும். கதவை ஒருவர் தட்டி திறக்க முயல்கிறார் என்றால் நாயின் குரைப்பொலி கடுமையாக மாறும். உரிமையாளரை தீர்க்கமாக எச்சரிக்கும் ஒலி இதுவே. வேட்டை மன்னன் தபால்காரர் வீட்டுக்கு வருகிறார் அல்லது நாயின் சக நாயினங்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ந்து ஒலி எழுப்புகின்றன என்றால் நாய் , இவ்வகையிலான ஒலியை எழுப்புகிறது. குரைப்புக்கும்,, ஊளைக்கும் இடையில் அமைந்த ஒலி. முனகல் ஒலி அப்பப்பா என முனகிக்கொண்டே வயதானவர்கள் கீழே உட்காருகிறார்கள் அல்லவா? அதுபோலவே அமைந்த முனகல் ஒலி. வயதான நாய், ஏதாவது இடத்திற்கு சென்றுவிட்டு வந்து சோபாவில் ஏறி உட்காரும்போது இப்படி முனகும். நீங்கள் நாய் தள்ளிவிட்ட பந்தை எடுக்காமல் கணினியைப் பார்க்கும்போது அல்லது அதற்கு போதிய கவனம் கொடுக்காதபோது சற்று வேறு

நாயின் குண இயல்புகள்!

படம்
  ஒரு விலங்கு இருக்கிறது என்றால் அதன் அடிப்படையான பண்பை மாற்ற முடியாது எலி வளை தோண்டுவதையோ, பாம்பு எலியை பிடித்து உண்ண வேட்டைக்கு செல்வதையோ, தவளை, நிலம் நீர் என இடம் மாறி செல்வதையோ தடுக்க முடியாது. இதைப்போலவே நாய் வாசனைகளை முகர்ந்து பார்ப்பது, புதிய இடங்களை அடையாளம் அறிவதில் ஆர்வம் காட்டுவது   ஆகியவற்றை எப்போதும் செய்துகொண்டே இருக்கும். ஆனால், இன்று தனது நாய் தனக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டுமென நாயை கட்டுப்படுத்தும் உரிமையாளர்கள் அதிகரித்துவிட்டனர். இதனால், நாய் தனது சுதந்திரமும் இயல்பும் பறிபோனதால் சாப்பிடாமல் மனச்சோர்வுக்கு உள்ளாகும். மெல்ல உரிமையாளரின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுக்கும். அதன் அடிப்படை குண இயல்புகளே மாறும்.   எனவே, நாயை அதன் இயல்புக்கு மோப்பம் பிடிக்கவோ தரையை பிறாண்டவோ அனுமதிக்கலாம். குழி தோண்டுவதை வீட்டில் தோட்டம் இருந்தால் செய்யவிடலாம். பிறரின் இடத்தில் செய்தால் நிலைமை களேபரமாகும். பொது பூங்காக்களில் நாயை சற்று சுதந்திரமாக இருக்குமாறு விடலாம். கழுத்தில் காலர் மாட்டில் சித்திரவதை செய்ய வேண்டியதில்லை. பிறரை கடிக்கும் குணம் கொண்ட நாய்கள் என்றால் அதை பூங்காக்களுக்கு அ

தான் வளர்த்த நாய் மூலம் பால்ய கால காதலியை பழிவாங்கும் நாயகன் - ரிங் மாஸ்டர் - ரஃபி

படம்
  ரிங் மாஸ்டர் - திலீப், கீர்த்திசுரேஷ், ஹனிரோஸ் ரிங் மாஸ்டர்   ரிங் மாஸ்டர் இயக்கம் – ரஃபி திலீப், ஹனிரோஸ், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் வெஞ்சரமூடு சர்க்கஸ் கூடாரத்தில் வளர்க்கப்பட்ட அப்பாவுக்கு பிடிக்காத பிள்ளையான பிரின்ஸ், நாய் மருத்துவமனையில் தனது நண்பர் முத்துவுடன் வேலை செய்கிறார். வெளிநாடு சென்று வேலை தேடிக்கொள்ள நினைப்பவருக்கு   கிடைப்பதோ, பணக்கார வீடுகளில் நாய் பராமரிப்பு வேலைதான். அந்த வேலையின் மூலமே அவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத வாய்ப்புகள் கிடைக்கின்றன அப்போது, கடந்தகாலத்தில் பிரின்ஸைப் பயன்படுத்திக்கொண்டு காதலிப்பதாக நடித்து சினிமாவில் உயர்ந்த பால்ய கால தோழியையும் சந்திக்கிறார். இருவருக்குள்ளும் உறவு உருவானதா, பிரின்ஸ் வன்மம் கூடி பழிவாங்கினாரா என்பதே கதை.   படம் முழுக்க   காமெடிதான். எனவே அதிகம் லாஜிக் பார்த்தால் ஜனப் பிரியனின் நகைச்சுவையை ரசிக்க முடியாமல் போய்விடும். எனவே, ஜாலியாக ரசியுங்கள். லிசா என்ற நாயைப் பார்த்துக்கொள்ளும் வேலை பிரின்சுக்கு கிடைக்கிறது. அதை சரியாக செய்தால், அந்த நாயின் உரிமையாளர் மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அந்த நாய்

இந்திய நாயினங்கள் பற்றி கவனிக்க கோரும் முக்கியமான நூல்! - இந்திய நாயினங்கள் - தியடோர் பாஸ்கரன்

படம்
  இந்திய  நாயினங்கள்  தியடோர் பாஸ்கரன்   காலச்சுவடு  மின்னூல்  இந்தியாவில்  உருவான 25  நாயினங்களை வரிசைக்கிரமமாக விவரித்து அதன் வரலாற்றைப் பேசும் நூல் இது. கூடுதலாக நாய்களால் ஏற்படும் ரேபீஸ் நோய்,அதற்கு செலவாகும்தொகை, தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தலையிடும் விலங்கு நல சங்கங்களின் விவகாரம், பாதிக்கப்படும் மக்கள் என இறுதிப் பக்கங்களில் பேசியுள்ளதும் முக்கியமான விவகாரம்தான்.  கோம்பை,ராஜபாளையம், பஷ்மி, சடை  நாய்கள், இமாலயன் மஸ்டிஃப் என பல்வேறு  நாய்களின் உடல் அமைப்பு, தனித்திறன்களைப்  பற்றி நூலில் விவரித்துள்ளார் ஆசிரியர். ஏறத்தாழ நாய்களைப் பற்றிய ஆய்வு நூலாக உருவாகியுள்ளது. நாய் என்ற பெயர் வந்தது எப்படி, அதன் பொருள் என்ன, இலக்கியத்தில் நாயை குறிப்பிட்டுள்ளனரா என்று தொடங்கப்பட்டிருப்பது நூலின் நோக்கத்தை  தெளிவுபடுத்துகிறது. பல்வேறு நாய்களின் புகைப்படங்களை பார்த்து அடையாளம் கொள்ள முடியும். அப்படி பார்க்க முடியாத நாய்களை ஓவியமாக நூலில்  காட்டியுள்ளார் ஆசிரியர்.  இந்திய நாயினங்களைப்பற்றி கள ஆய்வுகளை இந்திய அரசு நிறுத்தியதை வருத்தத்தோடு பதிவு செய்யும் ஆசிரியர், இந்திய  நாய் சங்கம் நாய்களை க

கெவூடில் நாயைப் பராமரிப்பது எப்படி?

படம்
  பெரும்பாலான மக்கள் இன்று  அபார்ட்மெண்ட், வில்லா என வசிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு ஏற்றதுபோலத்தான் செல்லப்பிராணிகளையும் வளர்க்கிறார்கள். அப்படியல்லாதபோது அது தனிப்பிரச்னையாக மாறிவிடும். கெவூடில், கெவாலியர் கிங் சார்லஸ் ஸ்பேனியல், பூடில் என இரு நாய் இனங்கள் சேர்ந்து உருவான நாய் இனம். சிம்பிளாக கிராஸ் ப்ரீட். சாலா கலப்பினம் ....லயன் +டைகர் = லைகர் போலத்தான்.  வீட்டுக்குள் இருந்தாலே போதும்.... கெவூடில் பெரும்பாலும்  வீட்டுக்குள் அறைக்குள் இருக்க நினைக்கும் நாய் தான். கூடவே அதன் சகாவாக மனிதர்கள் இருக்கவேண்டும். இல்லையெனில் விரைவில் ஏங்கிப்போய்விடும்.  பொதுவாக இதன் உயரம் 40 செ.மீ. எடை 5 முதல் 12 கி.கி தான். சிறியதாக இருக்கும். எளிதாக கையாளலாம். கன்றுக்குட்டி போல இருந்தால் பாசத்தால் மேலே தாவினால் ஓனரை ஐசியூவில் வைத்து காப்பாற்ற வேண்டியிருக்கும். சில கட்டளைகளை சொல்லி முதலிலேயே பழக்கினால், அதை கெவூடில் கேட்கும். பின்பற்றும். குறிப்பாக வெளியில் சென்று மலம் கழிப்பது, சிறுநீர் பெய்வது ஆகியவற்றை.... வியாபாரம் வேண்டாமே? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் குடும்பத்தொழிலே ஆடை வி

நாய்களை எளிதாக பழக்க முடிவதற்கான காரணம்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ! நாய்களை எளிதாக பழக்கமுடிவது எப்படி? வீட்டில் வளர்க்கும் பூனைகளை குறிப்பிட்ட கட்டளைக்கு ஏற்ப பழக்கலாம். ஆனால், அந்த முயற்சியும் கூட நாய்களோடு ஒப்பீடு செய்தால் கடினமானவையே. நாய், உரிமையாளர் கூறும் சிக்கலான ஆணைகளை கூட ஏற்று செய்யும். ஆனால் பூனை, தானே விரும்பினால் மட்டும் செயல்களை செய்யும். நாய், பாரம்பரியமாக குழுவாகவே வேட்டையாடி வாழ்ந்து வந்துள்ளது. அப்படி வாழும்போது, குழுத்தலைவர் ஆணையை ஏற்று பணியாற்றும் பண்பு நாய்க்கு உண்டு. இதனால், நாய் தன் உரிமையாளரை தனக்கும் மேலுள்ள அதிகாரம் கொண்டவராக பார்ப்பதால் கட்டளையை உடனே செய்து முடிக்கிறது. எனவே, நாய்களை பழக்குவது எளிதாக இருக்கிறது.  விஷ முறிவு மருந்து எப்படி உருவாக்கப்படுகிறது? உலகம் முழுக்க 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஷப் பாம்புகள் உள்ளன. இவை மனிதர்களை கடிப்பதால் 80 ஆயிரம் தொடங்கி 1 லட்சத்து 40 ஆயிரம் வரை மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.  பாம்பு கடித்தவரை உடனே காப்பாற்ற விஷ முறிவு மருந்து அவசியம். மருந்தைத் தயாரிக்க முதலில், பாம்பின் விஷத்தை குதிரையின் உடலில் செலுத்துகிறார்கள். இந்த விஷத்திற்கு எதிராக குதிரையின் உடல் ஆன்டிப

இடது, வலது பக்க மூளை ஆதிக்கம் கொண்டவர் என ஒருவரைக் கூறலாமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? நாய்கள் உணவை வேகமாக உண்டால், அதை விரும்புகின்றன என்று அர்த்தமா? அப்படி கூற முடியாது. அறிவியலாளர்கள் உணவை வேகமாக சாப்பிடும் நாய்களுக்கு மரபணு ரீதியாக பிறழ்வு இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த வகையில் லேப்ரடார் இன நாய்கள் உணவை அதிக ஆர்வத்தோடு வேகமாக சாப்பிடுவதும், உடல் பருமனால் அவதிப்படுவதையும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நாயின் நாக்கில் மனிதர்களை விட சுவை மொட்டுகள் குறைவு. அவற்றால் இனிப்பு, கசப்பு, காரம் ஆகிய சுவைகளை உணர முடியும். ஆனால் மனிதர்களை போல சுவையை முழுமையாக அனுபவித்து அறிய முடியாது.  ஒருவர் இடது அல்லது வலது மூளை ஆதிக்கம் கொண்டவர் என கூறலாமா? வலது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள், கலையார்வம் கொண்டவர்கள் ; இடது மூளையின் ஆதிக்கம் கொண்டவர்கள், ஆராயும் இயல்பும், கணித திறமையும் கொண்டவர்கள் என கூறுவார்கள். இந்த கருத்தில் உண்மை இல்லை. மூளையைப் பொறுத்தவரை இடது, வலது என இரு பகுதிகளும் இணைந்துதான் செயல்படுகின்றன. இடது, வலது என இரு மூளைப்பகுதிகளையும் இணைக்கும் நரம்பிழைகளுக்கு கார்பஸ் கலோசம் (Corpus callosum) என்று பெயர். உடலின் மோட்டார் செயல்பாடுகள், கலை, கணிதம் ஆகிய

தலைகீழாக வளரும் வாழைப்பழம்! - உண்மையா? உடான்ஸா?

படம்
  அமெரிக்க கொடியை  பள்ளி மாணவர் உருவாக்கினார்! உண்மை. 1958ஆம் ஆண்டு பாப் ஹெஃப்ட் ( Bob Heft) என்ற மாணவர், பள்ளியில் புராஜெக்ட் வேலையாக இதனைச் செய்தார். பாப், தேசியக்கொடியில் 50 மாகாணங்களை நட்சத்திரங்களாக உருவாக்கியிருந்தார். இதனை ஆசிரியர் ஏற்கவில்லை என்பதால், அவருடைய திட்ட மதிப்பெண் குறைக்கப்பட்டது. மாணவர், மனம் தளராமல் பாப் ஹெஃப்ட் அமெரிக்க அதிபரான   ட்வைட் டி ஐசன்ஹோவர் ( Dwight D. Eisenhower)தனது தேசியக்கொடி வடிவமைப்பை அனுப்பினார். இரண்டு மாகாணங்களை இதில் இணைத்துள்ளேன் என தெரிவித்தார். அதிபர், அந்த வடிவமைப்பை ஏற்றுக்கொண்டார்.  வாழைப்பழம் தலைகீழாக வளருகிறது! உண்மை. நாம் வாழைப்பழத்தை தலைகீழாகவே பிரித்து உண்கிறோம். அவை வளரும் விதத்தில், பின்புறப்பகுதி வானைப் பார்த்து அமைந்திருக்கிறது. இவை பெரிதாக வளரும்போது சூரியனைப் பார்த்து வளர்ந்து வளைவான வடிவத்தைப் பெறுகிறது.  நாய் தனது இடது மூக்கில், நறுமணத்தை முகர்கிறது!  உண்மை. நாய், முகரும்போது வலது மூக்கில் வாசனைகளை முகரும். பிறகு, அதில் ஆபத்தான சமிக்ஞைகள் தெரிந்தால், அதிலேயே நுகர்ந்து உண்மையா என ஆராயும். நறுமணம், ஆபத்தில்லாத விஷயங்கள், இணை சேர

நாயின் கண்களிலுள்ள சோக உணர்வு, நீலநிறக்கண்களைக் கொண்ட குழந்தைகள்! உண்மையா? உடான்ஸா?

படம்
  நாயின் கண்கள் சோக உணர்ச்சி கொண்டது! உண்மையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஓநாய்களிலிருந்து உருவாக்கப்பட்ட நாய்கள் மெல்ல வீட்டு விலங்காக மாறின. பரிணாம வளர்ச்சிப்படி,நாய்களுக்கு கண்களின் அருகில் தசைகள் உருவாகின. இதன் மூலம், நாய் மனிதர்களோடு எளிதாக தொடர்புகொள்ள முடிந்தது. மனிதர்களைப் பார்த்து புருவத்தை தூக்கும்போது, தசைகள் காரணமாக அதன் முகம் சோகமாக தெரிகிறது என 2019ஆம் ஆண்டு வெளியான புரோசீடிங் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸ்(Proceedings of the National Academy of Sciences)  ஆய்வு கூறியது.  பிறக்கும்போது, அனைத்து குழந்தைகளும் நீலநிற கண்களைக் கொண்டுள்ளனர்  உண்மையல்ல. ஆசிய, ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கண்கள் பழுப்பு நிறமாகவே இருக்கும். காகசியன் நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் பிறக்கும்போதே கண்கள் நீலநிறமாக இருக்கும். தோல், முடி ஆகியவற்றின் நிறத்தைத் தீர்மானிக்கும் மெலனின் என்ற நிறமியே கண்களின் நிறத்திற்கும் காரணம். இதை மெலனோசைட்ஸ் (melanocytes) என்ற செல்கள் உற்பத்தி செய்கின்றன. மெலனின் மற்றும் மரபணுக்களின் பங்கு கண்களின் நிறத்தை தீர்மானிக்கின்றன.   https://www.allabout

வனவிலங்குகளை பாதுகாக்க உதவும் நாய்!

படம்
  வன விலங்குகளை பாதுகாக்க உதவும் நாய்! மனிதர்களோடு வாழும் முக்கியமான உயிரினங்களில் நாயும் ஒன்று. ஆட்டு மந்தைகளுக்கு பாதுகாப்பு, வீடுகளுக்கு காவல், வேட்டையாடுவது என நாயின் பங்களிப்பு மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானது. தற்போது காட்டுயிர் வாழ்க்கையைப் பாதுகாப்பதிலும் நாய் உதவிவருகிறது.  சட்டவிரோத கடத்தல் 2017ஆம் ஆண்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சட்டவிரோத வேட்டையாடல் அதிகரித்து வந்தது. காட்டுயிர் பாதுகாப்புத்துறை, பென்னி என்ற லாப்ரடார் இன நாயை, கடத்தலைத் தடுக்க பணியமர்த்தினர். அப்போது, யானைத் தந்தம், சுறாமீன் துடுப்பு, காண்டாமிருக கொம்பு ஆகியவற்றை கடத்தல்காரர்கள் கடத்தி வந்தனர்.  மோப்பநாய் பென்னி, இவற்றை வேகமாக கண்டுபிடித்து தடுத்தது. ஆப்பிரிக்காவிலும்  சட்டவிரோத கடத்தலைத் தடுக்க மோப்பநாய்களையே பயன்படுத்துகின்றனர்.   கழுகுகளுக்கு விஷம் 2003ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில்,  33 கழுகுகள் (Griffon,Cinereous,Royal kites) ஆட்டிறைச்சியில் வைக்கப்பட்ட விஷத்திற்கு பலியாயின. விஷம், காட்டுநாய்களைக் கொல்ல வைக்கப்பட்டது.  ஐரோப்பிய நாடுகளில் ஓநாய், கரடிகளைக் கொல்ல இறைச்சியில் விஷம் வைக்கப

கருத்தியலை விட எப்படியாவது வெற்றிபெறுவதுதான் இன்று முக்கியமாகிவிட்டது! - சத்ருகன் சின்கா, இந்தி நடிகர்

படம்
  இன்று கருத்தியல் கடந்து வெற்றி முக்கியமானதாக மாறியுள்ளதா? அரசியலில் இன்று கருத்தியல் எல்லாம் கிடையாது. இறுதியில் வெற்றி பெறுவதே முக்கியம் என மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் அதிகாரம்தான் அனைவரும் அடைவதாக மாறியிருக்கிறது.  கோவில்களுக்கு செல்ல டிக்கெட்டுகள் அவசியமா? நான் இதை ஏற்கிறேன். கோவில்களுக்கு உள்ளே செல்ல எந்த வித சீட்டுகளும் தேவையில்லை. அவை எப்போதும் மக்களுக்காக திறந்து இருக்கவேண்டும்.  கிரிக்கெட் வீரர், நடிகர் தன்னை நிரூபிக்க சில திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அரசியல்வாதிக்கான திறன், தகுதிகள் என்னென்ன? தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெல்லவேண்டும். வெற்றிக்குப் பிறகும் நீங்கள் மக்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.  தென்னிந்திய படங்களான ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் இந்தி வட்டாரத்திலும் சிறப்பாக வெற்றி பெற்றிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? அவர்களின் படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியப் படங்களின் கதைகளோடுதான் அவர்களும் இணையாக பயணிக்கிறார்கள். நீங்கள் கூறுவது போல அவர்கள் அதிகளவு வசூல் பெற்றிருக்கலாம். நாம் அனைவரும் ஒரே நாட்டில் உள்ள தொழில்துறைகள் என்பதை