இடுகைகள்

ஆர்எஸ்எஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்துத்துவா எனும் கருத்தியலை குறுகிய மனத்துடன் சுயநலனிற்கு பயன்படுத்துபவர்களைப் பற்றி விளக்கும் நூல்!

படம்
  நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர் கிழக்கு பதிப்பகம் 341 பக்கங்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் எழுதிய நூலை வலதுசாரி கருத்தியல் கொண்ட கிழக்கு பதிப்பகம் ஏன் வெளியிட்டுள்ளது என வாசகர்களுக்கு சந்தேகம் எழலாம். அதற்கான பதில் தலைப்பிலேயே உள்ளது.  இந்துமதம் எப்படிப்பட்டது, அதில் உள்ள தன்மைகள் என்ன, அதற்கு உழைத்த ஆதிசங்கரர்,ராமானுஜர் ஆகியோரின் பங்களிப்பு, சங்கரர் உருவாக்கிய மடங்கள், அதன் பணிகள், நிறுவன மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என முதல் பகுதி விளக்குகிறது. இதற்குப்பிறகு சசி தரூர் விளக்குவது இந்துத்துவா என்ற கொள்கையை உருவாக்கிய சாவர்க்கர், அதை மேம்படுத்திய கோல்வால்கர், ஹெட்கேவர் ஆகியோர் எப்படி அதை குறுகிய நோக்கத்தில் பார்த்து மக்களின் மத நம்பிக்கையை சுயநலனிற்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார்.  இங்குதான் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்பின் செயல்பாடு உள்ளே வருகிறது. கலாசார தேசியம் என்ற பெயரில் நிறுவன மதங்கள் போலவே இந்து மதத்தை எந்தெந்த வழிகளில் மாற்ற முயல்கிறார்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நூலை தொடக்கத்தில் படித்தது, இ

சரியான கட்சியை வழிநடத்திச் சென்ற சரியான மனிதர்தான் வாஜ்பாய் - எழுத்தாளர் அபிஷேக் சௌத்ரி

படம்
  வாஜ்பாய் பற்றிய நூல்   வாஜ்பாய் தி அசன்ட் ஆஃப் தி இந்து ரைட் 1924-1977 அபிஷேக் சௌத்ரி பிகாடர் இந்தியா விலை ரூ.899 வாஜ்பாய் பற்றிய புதிய சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது. இதில், பழமைவாதம், தாராளவாதம் ஆகிய இருவித கருத்தியல்களைக் கொண்ட காலத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாய் பற்றிய பல்வேறு கருத்துகளை விவாதித்திருக்கிறார்கள். காங்கிரசும், சங் பரிவாரும் ஒரே மாதிரியாக இணைந்து கருத்தியல் அளவில் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என நூலாசிரியர் அபிஷேக் கூறுகிறார். அதைப்பற்றிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வாசிப்போம். “தவறான கட்சியில் இடம்பெற்ற சரியான மனிதர்” என வாஜ்பாயை கூறுகிறார்களே? அந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லை. சரியான கட்சியில் இருந்த   சரியான மனிதர் என்றுதான் அவரைக் கூறுவேன். அதுமட்டுமல்ல, அவர்தான் கட்சியை முன்னெடுத்துச் சென்றார். 1980ஆம் ஆண்டு ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபோது தவறான கட்சியில் இருந்த சரியான மனிதர் என்ற சுலோகன் பிரபலமாக கூறப்பட்டு வந்தது. அந்த சுலோகன் கூறப்பட காரணம் என்ன? இங்கிலாந்தில் வெளியிடப்படும் எனது நூலின் தலைப்பு தி பிலிவர் தில

காந்தியும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குமான முரண்பாடு!

படம்
  வைரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் . அறிவியல் அடிப்படையில் அது சிக்கலான கார்பன் அணுக்களைக் கொண்டது . பல்வேறு அழுத்தங்களைத் தாங்கி உருவாகிறது . அதனை பட்டை தீட்டும்போது வைரமாக மாறுகிறது . காந்தியும் கூட அப்படிப்பட்ட இயல்புகளைக் கொண்டவர்தான் . அவரும் வைரத்தை ஒத்தவர்தான் . காந்தியும் பல்வேறு வாழ்க்கைச் சூழல்களை சந்தித்து நெருக்கடியில்தான் சிறந்த மனிதராக தலைவராக மாறினார் . தனது கொள்கை , செயல்பாடுகள் , செயல்பாடுகளை செய்யும்போது நேர்ந்த தவறுகள் என அனைத்தையுமே நூலாக பதிவு செய்துள்ளார் . பழமையான இந்தியாவில் இருந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து காந்திக்கு கருத்துகள் இருந்தன . அவற்றை எதிர்தரப்பிடமும் , மக்களிடமும் முன்வைத்துக்கொண்டே இருந்தார் . இதற்காக இந்தியன் ஒப்பீனியன் , யங் இந்தியா , நவஜீவன் , ஹரிஜன் ஆகிய பத்திரிகைகளைப் பயன்படுத்திக்கொண்டார் . இதைத் தாண்டியும் அவர் உலகிற்கு கூறும் செய்தி என்ன என்று கேட்டபோது , என்னுடைய வாழ்க்கை தான் என்று பதில் சொன்னார் . பிரிவினைவாதத்தை பல்வேறு வடிவங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படுத்தி வருகிறது . ஆனால் வெளிப்படையான செய்திகளில் பார்த்தால் , இந்த அமைப்பு கல

காந்தியை குழிதோண்டி புதைக்க முயலும் இந்து தீவிரவாத அமைப்பும், அதன் அரசியல் அமைப்பும் !

படம்
          ஒருவர் நிஜத்தில் எப்படி இருக்கிறார் என்பதும் , தன்னை எப்படி வெளியே காட்டிக்கொள்கிறார் என்பதிலும் தான் வேறுபாடுகள் உள்ளன . ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரைப் பார்த்திருப்பீர்கள் . அவரது செயல்களையும் அறிந்திருப்பீர்கள் . சிறிய உருவம் கொண்ட மனிதர்தான் லட்சக்கணக்கான யூத மக்களின் அழிவுக்கு காரணமானவர் . இதை ஊடகங்களின் வழியே எளிதாக அறிய முடியாது . அவர் வைத்திருந்த ஊடக பிரசாரகர்கள் குழந்தைளள் , மாணவிகளோடு இருக்கும் புகைப்படங்களைக் காட்டுவார்கள் . சைவ உணவுப்பழக்கம் கொண்டவர் . இசையை ரசிப்பவர் . குறையாததற்கு ஓவியர் வேறு . ஆனால் அவர் புகைப்படத்தின் பின்னாலுள்ள அசுர மனதை அறிந்தவர்கள் மிகச்சிலரே . இந்தியாவில் அப்படி அரசியல் களங்களில் வேறுபட்ட காரண காரியங்கள் நடக்கும் . புள்ளிகளை இணைத்துப் பார்த்தால் யோக்கியர்களின் முகத்திரை கிழிந்துவிடும் . காவிக்கட்சி ஒருமுறை காந்தி சங்கல்ப் யாத்ரா என்ற பேரணியை தொடங்கியது . அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தொடங்கிய பேரணியில் சுத்தம் , உண்மை , சுய ராஜ்ஜியம் , அகிம்சை ஆகிய விஷயங்கள் முன்வைத்து பேசப்பட்டன . ஆனால் காந்தி வாழ்நாள் முழுக்க

முஸ்லீம்களை முழுமையாக அரசு அமைப்பு மூலம் களையெடுத்தல்! - அசாமில் பரவும் மதவாதமும் வெறுப்பு அரசியலும்!

படம்
  அசாம் நெல்லி இனப்படுகொலை அசாமில் முஸ்லீம்களின் குடியிருப்பை செப்.23 அன்று அசாம் மாநில அரசு அகற்றியது. பலவந்தமாக செய்த இந்த நடவடிக்கையால் முஸ்லீம்களோடு வங்காள இந்துகளும் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தனர். இங்கு கவனிக்கவேண்டியது அரசு, மேம்பாட்டுப் பணிகளுக்காக வீடுகளை இடித்து முஸ்லீம்களை நடுத்தெருவில் நிறுத்தவில்லை.  பூர்விக அசாம் மக்கள் முஸ்லீம்கள் ஆற்று ஓரத்தில் குடியிருக்கும் இடங்களில் விவசாயம் செய்வார்களாம். அதற்காக நிலங்களை அரசு அவர்களுக்கு அளிக்குமாம். இப்படி சொன்னாலும் அரசு நிலங்களை பூர்விக மக்களுக்கு அதாவது தகுதியுள்ளவர்களுக்கு அளிக்கும் வரையில் தனது கையில்தான் வைத்திருக்கும்.  அரசு 28 வயதான மைனல் ஹாக்கிக் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது காவல்துறை. இறந்து கிடக்கும் உடல் மீது புகைப்படக்கார ர் பிஜய் பனியா என்பவர் வெறியோடு குதிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் பலரும் பார்த்திருப்பார்கள். இப்படி அரசின் ஆதரவோடு மதவாத, இனவெறியை அங்கு பரப்பி வருகின்றனர். எதற்கு? மக்களை பிரித்தால்தானே தேர்தலில் ஜெயிக்கவேண்டும். அனைத்து மக்களுக்கும் பொதுவான எதிரியை உருவாக்கவேண்டும் என்கிற நாஜி கருத்த

முஸ்லீம் மக்களை துரத்தவே அரசு இந்துத்துவ திட்டங்களை அமல்படுத்துகிறது! - அமான் வதூத், மனித உரிமைகள் வழக்குரைஞர்

படம்
  அமான் வதூத் மனித உரிமை வழக்குரைஞர் செப்.23 அன்று சிபாஜ்கரில் நடைபெற்ற மக்களின் குடியேற்றம் அகற்றல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முதலில் நான் கூறவிரும்புவது, இப்போது அரசால் குடியிருப்புகள் அகற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவருமே பல்லாண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்தவர்கள். பலரும் 1970களிலிருந்து இங்கிருக்கிறார்கள். எனவே இதனை அரசு புதிய குடியேற்றம் என்று கூறமுடியாது. இவர்கள் ஆற்றுநீரின் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு பெர்பெடா, காம்ரூபா ஆகிய மாவட்டங்களிலிருந்து இங்கு வந்தவர்கள்.  ஆற்று வெள்ளம் காரணமாக தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்தவர்கள் இங்கு வந்து தங்கினார்கள். பலரும் கூலி வேலைகளை செய்பவர்கள்தான். நிலமற்ற மக்கள்.  இங்கு தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் ஆற்றையொட்டியுள்ள நிலங்களில் தங்கியிருந்தவர்கள்தான். பொதுவாக அசாம் மக்கள் ஆற்றையொட்டி தங்க மாட்டார்கள். இப்போது முஸ்லீம் மக்கள் உள்ள இடங்களை , அசாமின் பூர்விக மக்களுக்கு தருவதாக கூறியுள்ளது. இங்கு அவர்கள் விவசாயம் செய்வார்கள் என்று அரசு கூறுகிறது. விவசாயம் செய்ய எதற்கு ஆற்றுக்க்கு அருகில் உள்ள நிலங்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரியவி

ஏழு ஆண்டுகளில் நொறுங்கிப்போன குடியரசு நாடும், அதன் அமைப்புகளும்!

படம்
              தேசிய ஜனநாயக கூட்டணி ஏழு ஆண்டுகளை ஆட்சியில் கடந்துள்ளது . அதில் நிறைய விஷயங்களை சாதித்துள்ளதாக பெருமையாக பிரசாரம் செய்து வருகிறது . ஆனால் பணமதிப்புநீக்க செயல்பாட்டிற்கு பிறகு பொருளாதாரம் தடுமாறி வருகிறது . ஆத்மாநிர்பார் எனும் சுயசார்பு திட்டம் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளின் இறக்குமதியை சார்ந்து நிற்பது தடுக்கப்படும் என அரசு கூறியது . ஆனால் இதில் இந்தியா வெல்லவில்லை . வென்றது கொரோனாதான் . இந்தியப் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் நிற்கிறது . கடந்த ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி நான்கு சதவீதத்தில் இருக்கிறது . 2013-14 காலகட்டத்தில் பொருளாதாரம் 1.85 டிரில்லியன் டாலர்களாக இருந்தது . சீனாவை ஒப்பிட்டால் அவர்கள் 16.64 டிரில்லியன் டாலர்களாக இருந்தது . சேமிப்பு , செலவு செய்யும் அளவு வேலைவாய்ப்பு என அனைத்துமே பாதிக்கப்பட்டிருந்தது . வேலையின்மை அளவு கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருந்தது . தனிநபர் வருமான அளவும் கூட 5.4 சதவீதமாக குறைந்துவிட்டது . பொதுநிறுவனங்களை விற்கத் தொடங்கியதால் பட்ஜெட்டில் பற்றாக்குறை சதவீதம் அதிகரித்து வருகிறது . இதன

ஜெர்மனியில் இன அழிப்பை செய்த ஹிட்லர் பற்றிய ஆய்வு உண்மைகள்! ஹிட்லர் - மருதன்

படம்
                  ஹிட்லர் மருதன் கிழக்கு பதிப்பகம் ஹிட்லர் பற்றி பல்வேறு யூகங்கள் இதுவரை எழுந்துள்ளன . அவரின் இளமைப்பருவம் , வளர்ச்சி , அரசியல் கட்சியில் சேர்வது , பின்னர் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் , நாஜி கட்சி தொடங்கப்படுவது , இரண்டாம் உலகப்போரை அவர் தொடங்குவது , முதலில் கிடைக்கும் வெற்றி பின்னர் தலைகீழாகி அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு மாறுவது என நூல்கள் எழுதப்பட்டுள்ளன . ஆனால் இதில் உள்ள வேறுபாடு , அவரைப் பற்றி பிறர் எழுதியுள்ள பல்வேறு கருத்துகளையும் ஆசிரியர் கூறியுள்ளார் . இதனால் ஹிட்லர் பற்றி முன்னர் நமக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களும் உண்மையா , பொய்யா என சந்தேகம் ஏற்படுகிறது . இனவெறியுடன் யூதர்களை அழித்தவர் என்று ஹிட்லர் கூறப்பட்டாலும் , அவரின் இளமைக்காலம் , அரசியல் நுழைவு , வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது , இன அழிப்பைத் தொடங்குவது என பல்வேறு விஷயங்களை பேசுபவர்கள் மெல்ல அவரை ஆதரிக்கத் தொடங்குவது நடைபெறுகிறது . இதற்கு காரணம் , இன்றும் அவர் தொடங்கிய இன ஒழிப்பு என்பது ஏதோ ஒரு வகையில் நடந்து வருகிறது என்பதால்தான் . ஹிட்லர் என்பவர் அனைத்து வ

காவிமயப்படுத்தலையும், ஊழல்களையும் எதிர்த்ததால் தேசவிரோதி ஆகிவிட்டேன்!

படம்
brijeshkumar/edexlive நீதிவெல்லும் என்ற நம்பிக்கை எனக்குண்டு ! பிரிஜேஷ் குமார் , உதவிப் பேராசிரியர் . பிரிஜேஷ்குமார் , ஐஐடி குவகாத்தியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் . 2011 ஆம் ஆண்டிலிருந்து மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பணி . இவர் கற்பித்தலுக்காக உலகிற்கு தெரியவரவில்லை . தனது மேலதிகாரிகள் ஐஐடியில் செய்த பல்வேறு ஊழல்கள் முறைகேடுகளை வெளியே சொல்லி உலகம் அறிய வைத்தார் . அதற்காகவே பிரிஜேஷ் பெயர் அனைவராலும் கூறப்பட்டது . உண்மையைப் பேசினால் சாதாரண மனிதருக்கு என்ன ஆகும் என்பதற்கு பிரிஜேஷ் மிகச்சிறந்த உதாரணம் . நிர்வாகத்திற்கு எதிராகவும் , அதில் செல்வாக்கு உள்ள மனிதர்களைப் பகைத்துக்கொண்டதால் அவர் தான் தங்கியுள்ள இடத்தை விட்டு உடனே காலி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார் . மேலும் அவரது பணியிலிருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . இதற்கும் மேலாக அவருக்கு மன உளைச்சல் அளிக்கும்படியாக , அவர்மீது காவல்துறையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . ஐஐடியில் பெருகும் ஊழல் , அங்கு அதிகரித்து வரும் இந்துத்துவ நடவடிக்கைகள் பற்றி பேசினோம் .