இடுகைகள்

சூழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காட்டுத்தீ கற்றுத்தந்த பாடம்

 ஆஸ்திரேலியாவின் 'கருப்பு கோடை' காட்டுத்தீயில் இருந்து ஐரோப்பா என்ன கற்றுக்கொள்ள முடியும்  மில்லியன் கணக்கான ஹெக்டேர்களைச் சுட்டெரித்த 'கருப்பு கோடை' (Black Summer) தீயை எதிர்கொண்ட ஆஸ்திரேலியர்கள், நினைவில் வைத்திருக்கும் காலத்தில் மிகக் கடுமையான தீயினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அவர்களிடம் பாடங்கள் இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள தீயணைப்பு வீரர்கள், விஞ்ஞானிகள் மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்துடன் இணைக்கும் புதிய தீவிரமான தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்கின்றனர். ஆஸ்திரேலியர்களுக்கு, இத்தகைய தீ மிகவும் பரிச்சயமானது. இந்த நாடு நீண்ட காலமாக கொடூரமான காட்டுத்தீக்கு ஆளாகியுள்ளது - குறிப்பாக 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதி வரையிலான 'கருப்பு கோடை' காட்டுத்தீ, இது மில்லியன் கணக்கான ஹெக்டேர்களை அழித்தது, ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்தது மற்றும் நகரங்களை நச்சுப் புகையால் மூடியது. ஆஸ்திரேலியாவின் பரந்த, வறண்ட கண்டத்தில் காட்டுத்தீயை எதிர்த்துப் போராடிய நீண்ட அனுபவத்தில் இருந்து உலகம் என்ன கற்று...

சீனாவின் வேளாண்மை மேம்பாடு

அறுவடைக்கு அப்பால், பின்னடைவை நோக்கி CHINA POLICY --- வேளாண்-தொழில்நுட்ப ஏற்றம் வேகமாக வளர்ந்து வருகிறது, உற்பத்தி பின்னடைவை ஆதரிக்கிறது. வெள்ளம், வறட்சி, விலை ஏற்ற இறக்கங்கள் அல்லது விநியோகச் சங்கிலி அழுத்தம் ஏற்படுவதற்கு முன்பு பெய்ஜிங் விவசாயத்தின் பலவீனமான இணைப்புகளை வலுப்படுத்துகிறது. தானிய உற்பத்தி இன்னும் அடித்தளத்தை நிர்ணயிக்கிறது, ஆனால் விவசாய நிலம், நீர், உழைப்பு, உள்ளூர் சேவைகள், சேமிப்பு, தளவாடங்கள் மற்றும் சந்தைகள் ஒரு அதிர்ச்சியின் கீழ் சரிந்துவிட்டால் அதைப் பிடித்து வைத்திருப்பது சிறிதும் பயனற்றது. 2026 மத்திய ஒன்றிய ஆவண எண் 1, தானிய உற்பத்தியை சுமார் 700 மில்லியன் டன்களாக நிர்ணயித்து, அதிக தானிய மற்றும் எண்ணெய் வித்து விளைச்சல், சிறந்த விவசாய நிலம், விதை, இயந்திரங்கள் மற்றும் விவசாய முறைகளை கோருகிறது, அதே நேரத்தில் 'காய்கறி கூடை' மற்றும் பரந்த உணவு உற்பத்தியை ஒரு பரந்த உணவு விநியோக நிகழ்ச்சி நிரலில் இணைக்கிறது. விவசாய பாதுகாப்பு இப்போது அறுவடைக்கு அப்பால், பதப்படுத்துதல், வர்த்தகம், குளிர் சங்கிலி, இறக்குமதி வெளிப்பாடு, இடர் பாதுகாப்பு மற்றும் நில பராமரிப்பு வரை...

முட்டைகளுக்கு நேரும் பாதிப்பு

--- **கரிம முட்டைகள், கூண்டில் வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டைகளை விட காலநிலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன** – டாமியன் கெய்ல்   கரிம முட்டைகள், கூண்டுகளில் வாழும் கோழிகளிடமிருந்து வரும் முட்டைகளை விட காலநிலைக்கு இருமடங்கு மோசமானவை என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஆய்வின்படி, இங்கிலாந்தின் முழு முட்டை உற்பத்தியையும் கரிம கட்டற்ற-மேய்ச்சல் (organic free-range) முறைக்கு மாற்றினால், 2,316,000 டன் CO2 (tCO2e) க்கு சமமான பசுமை இல்ல வாயு வெளியேற்றம் ஏற்படும், அதே சமயம் முழுமையான கூண்டு முறையில் உற்பத்தி செய்தால் 1,184,000 tCO2e வெளியேற்றப்படும். இதற்குக் காரணம், கரிம கட்டற்ற-மேய்ச்சல் முறைகளுக்கு அதே எண்ணிக்கையிலான முட்டைகளை உற்பத்தி செய்ய அதிக கோழிகள் தேவைப்படுகின்றன, ஏனெனில் கூண்டுகளில் வாழும் பறவைகள் மிகவும் திறமையானவையாக இருக்கின்றன. கரிம கட்டற்ற-மேய்ச்சல் உற்பத்தி, நீர் அதிகப்படியான ஊட்டச்சத்து மாசு (eutrophication), அமிலமயமாக்கல் மற்றும் நில பயன்பாடு ஆகியவற்றிலும் மோசமாக மதிப்பெண் பெற்றது. கரிம கட்டற்ற மேய்ச்சல் பண்ணைகளில் கோழி இறப்பு விகிதமும் மிக அதிகமாக இருந்ததாக ஆராய்...

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’ சாண்ட்ரா டயஸ், அர்ஜென்டினாவைச் சேர்ந்த இயற்கை ஆராய்ச்சியாளர், கார்டோபா தேசிய பல்கலைக்கழக பேராசிரியர். சூழலியல் மற்றும் இயற்கை பன்மைத்தன்மை ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத ஆளுமை. 2025ஆம் ஆண்டு க்கான சுற்றுச்சூழல் அறிவியல் சாதனைக்கு வழங்கப்படும் டைலர் விருதை மானுடவியலாளரான எடுவர்டோ பிரான்டிசியோவுடன் இணைந்து பெறவுள்ளார். தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இருவர் டைலர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. டைம் வார இதழில் 2025 ஆம் ஆண்டில் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் உங்களது வாழ்க்கை எப்படி சென்றது, சூழல் ஆராய்ச்சியை உங்களது இலக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? பள்ளி, கல்லூரி காலம் இன்னும் மறக்காமல் நினைவிலிருக்கிறது. தொடக்க, உயர்கல்வியை சிறு நகரத்தில் படித்தேன். பிறகு, கார்டோபா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தேன். என்னுடைய பதினேழு வயதில் கல்விக்காக பெருநகரத்திற்கு வந்தது சாகசமாகவும், அதேசமயம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும்...

தரிசு நிலத்தை பசுமையாக்கிய சீன அரசு!

பசுமையின் திசை! சீனாவை பொருளாதார வளர்ச்சிக்கு பாராட்டுபவர்களை விட சூழல் மாசுபாட்டிற்கு கடுமையாக விமர்சிப்பவர்களே அதிகம். ஆனால், இப்போது கூறும் செய்தி பசுமை ஆர்வலர்களுக்கு நற்செய்திதான். சீனாவில் மூன்று மாகாணங்களுக்கு சேர்ந்த தரிசு நிலத்தை போராடி பாடுபட்டு, மறுபடியும் பசுமையின் திசைக்கு திருப்பியிருக்கிறது சீன அரசு. பல லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமாக மாறியுள்ள நிலப்பரப்பின் அளவு 6,40,000 சதுர கி.மீ. ஆகும். இருபதாம் நூற்றாண்டில் வேளாண்மைக்காக பயன்படுத்திய அதீத உரப்பயன்பாடு, நிலத்தை வளம் குன்றச்செய்தது என சூழலியலாளர் ஜான் டி லியு படம்பிடித்த ஆவணப்படம், பல்வேறு தகவல்களை நமக்கு தருகிறது. விளைச்சல் தந்த நிலம் மெல்ல தரிசாகி, அதில் இருந்து தூசிப்புயல் மஞ்சள் ஆற்றில் வந்து விழத்தொடங்கியது. இந்த ஆறு தலைநகரான பெய்ஜிங் வழியாக செல்கிறது. நிலம் மாசடைந்து ஆற்றையும் மாசுபடுத்துவதை அறிந்த சீன அரசு, இதற்கென கிரெய்ன் டு க்ரீன்(Grain to Green) என்ற திட்டத்தை உருவாக்கியது. உலகவங்கியின் நிதியுதவியோடு திட்டம் தொடங்கப்பட்டது. மாசுபட்ட நிலத்தை மீண்டும் பழையபடி பசுமையான வளம் நிறைந்த இயல்புக்கு...

மௌன வசந்தம் நூலின் பங்களிப்பு!

படம்
       பல்லுயிர்தன்மை என்றால் என்ன? குறிப்பிட்ட இனத்தில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட உயிரினங்கள் இருக்கும். அதாவது அவற்றின் மரபணுக்கள் வேறுபட்டவையாக இருக்கும். உலகம் முழுக்க 15 அல்லது 100 மில்லியன் உயிரினங்கள் இருக்கும் என அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் ஏக்கர் சதுப்புநிலங்கள் அழிக்கப்பட்டு வருவதால் பல்லுயிர்த்தன்மை அழிந்து வருகிறது. அமெரிக்கா காடுகள் அனைத்தும் அரசுக்கு சொந்தமா? இல்லை அரசுக்கு சொந்தமான காடுகள் இருபது சதவீதம் மட்டுமே. பெருநிறுவனங்களுக்கு பதினைந்து சதவீதங்கள் சொந்தமாக உள்ளன. ஐம்பத்தேழு சதவீத காடுகள் தனியார் சொத்துக்களாகவே உள்ளன. பருவ மழைக்காடுகளின் முக்கியத்துவம் என்ன? பருவமழைக்காடுகளில் இருந்துதான் புற்றுநோய்க்கான மருந்துகளின் மூலம் பெறப்படுகிறது. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்கு தேவையான மருந்துகளின் அடிப்படை மூலிகைகள் பருவ மழைக்காடுகளில் உள்ளன. அவற்றைப் பெறாமல் மருத்துவதுறை உயிரோடு இருக்க முடியாது. ஏகபோகமாக லாபம் ஈட்டவும் முடியாது. காடுகள் அழிவதற்கு என்ன காரணம்? வேளாண்மை, நகரங்களைக் கட்ட காடுகளை அழித்தல், காட்டுத்தீ, மழை வெள்ள...

மலமிளக்கியால் தோல்நோய் தீராது!

படம்
   மருந்து = நஞ்சு ஓமியோபதி ஒவ்வாமைக்கான மருந்துகளாக தாய் திராவகம்(பத்து சொட்டுகள்), சிறிய இனிப்பு உருண்டைகள்(சாப்பிடும் முன்/பத்து உருண்டைகள்), சப்பி சாப்பிடும் மாத்திரைகள் ஆறு(மூன்று வேளைக்கு)சாப்பிட மருத்துவர் அறிவுறுத்தினார். இதில், சித்த மருத்துவம் போல பத்தியமும் உண்டு. சித்த மருத்துவத்தில் ஒவ்வாமை பிரச்னைக்கு இடையறாது மலமிளக்கி மருந்துகளை கொடுத்தனர். அடிப்படையில் தோல் நோய்களுக்கு மூல காரணம், மலம் குடலில் இருந்து வேகமாக வெளியேறாத காரணத்தால், அதிலுள்ள கிருமிகள் உடலில் புகுந்து நோய்களை உருவாக்குகின்றன. எனவே, மலமிளக்கி மருந்துகளை இரவில் உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவிட்டு படுத்தால், காலையில் எழுந்தவுடன் கழிவறைக்கு ஓடவேண்டியிருந்தது. அப்படி ஓடாவிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எப்படி ஒருவித உணர்வு தோன்றுகிறது. அதேவித கழிந்துவிடும் உணர்வு மருந்தால் உருவாக்கப்பட்டது. இதேபோல ஓமியோபதியிலும் வெளிக்குப்போக மருந்துகள் உண்டு. ஆனால், அவை திருகலானவை. அவற்றைத் தின்றால் எதற்கு அதை தின்றோம் என யோசிக்கவைப்பவை. ஓமியோபதியில், மலமிளக்கி மருந்துகளை கொடுப்பதை சாமுவேல் எதிர்க்கிறார். நோயை என்...

சீனாவின் சூழல் பிரச்னைகளை அரசியல் பின்னணியோடு விளக்கும் நூல்!

படம்
      சீனா என்ஜின் ஆப் என்விரோன்மென்டல் கொலாப்ஸ் ரிச்சர்ட் ஸ்மித் ப்ளூடோ பிரஸ் சீனாவில் இயற்கை வளமான நிலம், நீர், காற்று பற்றிய அக்கறையுடன் எழுதப்பட்ட நூல். மொத்தம் 321 பக்கங்கள். எட்டு அத்தியாயங்களில் சீனாவின் முதலாளித்துவ கொள்கை, முன்னாள் அதிபர் டெங்கின் வளர்ச்சி உத்தரவு, ஆறுகள், ஏரி எப்படி மாசுபாடுக்குள்ளானது, பளபள கட்டிடங்களால் ஏற்படும் பாதிப்பு, விலைவாசி ஏற்றம், நிலக்கரி ஏற்படுத்தும் காற்று மாசுபாடு, அவற்றை அதிபர் ஷி ச்சின்பிங் கூட தடுத்து நிறுத்த முடியாத அரசியல் நிலைமை என நிறைய விஷயங்களை நூல் ஆழமாக ஆராய்கிறது. சீனாவில் இடதுசாரி கட்சியின் தலைவர்கள், அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து உணவுகளை இறக்குமதி செய்து உண்கிறார்கள். சீன விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுகளை, சீன தலைவர்கள் தொடுவதே இல்லை. ஏன் அப்படி என்றால், அந்தளவு காய்கறிகளில் வேதிப்பொருட்கள், நச்சுகள் உள்ளன. இப்பொருட்களை ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு பணம் நாட்டிற்கு கிடைக்கிறது. ஆனால், கலப்பட உணவுப்பொருட்களால் பாதிக்கப்படுபவர்கள் என்ன ஆவார்கள்? அதைப்பற்றி யாருக்குமே ...

வணிக சந்திப்பிற்கு உணவகங்களை தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?

படம்
        இன்று வணிக ரீதியாக கூட்டாளிகளை, ஒப்பந்தக்காரர்களை விடுதியில் சந்திப்பது இயல்பாகிவிட்டது. சிலர் எழுத்தாளர்களுக்கென தனி கபே நடத்துகிறார்கள். காபி கடைகளில் இணைய வசதியைக்கூட வழங்குகிறார்கள். வெளிநாடுகளில் நேர்காணல்களை நடத்துகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் ஓரிடத்தில் முக்கியமான நபரை சந்திக்கச் செல்கிறீர்கள். அப்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும். ஹோட்டல்களில் முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. உரிமையாக குறிப்பிட்ட மேசையைக் கேட்கலாம். அங்கே உட்கார்ந்து பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுத்துவிட்டு வரலாம். பதிவு  செய்யவில்லை என்றால் சந்திப்பை உகந்ததாக அமைய வாய்ப்பு குறைவு. ஹோட்டல்கள், உணவு, பணியாளர்களது நடத்தை பற்றிய மதிப்பீடுகளை இணையத்தில் பார்த்துவிட்டு வரலாம். சமீபத்திய விமர்சனங்களைக் கவனியுங்கள். ஓராண்டுக்கு முந்தையது வேண்டாம். குறைகள், புகார்களுக்கு எப்படி பதில் அளித்துள்ளார்கள் என பாருங்கள். நிறைய புகழ்பெற்ற உணவகங்கள் என பீற்றிக்கொள்பவர்கள் கூட குறைகளை, புகார்களை வாடிக்கையாளர் முன்வைத்தால் மௌனமாக அதை கடந்துசெல்வதை இணையத்தில் கமெண்டுகளைப் ப...

ஓநாய்களை பிடிப்பதே இப்போதைக்கு தாக்குதலை தடுக்கும் ஒரே வழி!

படம்
      உத்தரப்பிரதேசத்தில் மக்களை ஓநாய்கள் தாக்கியுள்ளதன் காரணம் என்ன? ஓநாய்கள், குழந்தைகள், சிறுவர்களைத் தாக்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஓநாய்களை அரசு நிர்வாகம் வேட்டையாடினால்,ஓநாய்கள் முற்றாக அழிந்துபோகும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே அங்கு ஓநாய்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. வாழிடம் அழிவது, உணவு தட்டுப்பாடு, இயற்கையாக கிடைக்கும் இரைகள் அழிவது, குட்டிகளுக்கு உணவிட முடியாத சிக்கல் ஆகியவை காரணமாக ஓநாய்கள் மாற்று வழிகளைத் தேடி மனிதர்களைத் தாக்குகின்றன. புல்வெளியில் தங்களை மறைத்துக்கொண்டு சரியான வாய்ப்பு தேடி காத்திருக்கும் ஓநாய்கள், வீடுகளில் உள்ள குழந்தைகளை வேட்டையாடியுள்ளன. குழந்தைகள் விலங்குகளை குறைந்தளவிலேயே எதிர்த்து போராட முடியும் என்பதை ஓநாய்கள் சாதகமாக்கிக் கொண்டுள்ளன. ஓநாய்கள் குறைந்துவரும் சூழலில் ஓநாய் - நாய் இணைந்த கலப்பினம் உருவாவது ஆரோக்கியமானதல்ல. இது மனித இனத்திற்கு எதிர்காலத்தில் அபாயத்தையே தரும். உபியில் இதுபற்றிய ஆராய்ச்சி நடைபெறுவது அவசியம். ஓநாய்களின் வாழ்விடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பது பிரச்னையாக மாறியுள்...

இயற்கை பேரிடர்களிலிருந்து இந்திய அரசு எந்த பாடங்களையும் கற்கவில்லை! - அமிதவ் கோஷ்

படம்
            அமிதவ் கோஷ், எழுத்தாளர் காலநிலை மாற்றம் பற்றிய அக்கறைக்காக எராஸ்மஸ் பரிசை நடப்பு ஆண்டில் பெற்றிருக்கிறார். வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் நாம் கற்கவேண்டியது என்ன? வயநாடு மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதுபோல பேரிடர் சம்பவங்கள் நடக்கலாம். சாலைகள் அமைப்பது, காடுகளை அழிப்பது, மணல் குவாரி, கல் குவாரி, முறையற்ற கட்டுமானங்கள் என இதில் நிறைய ஆதாரப் பிரச்னைகள் உள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு, மேக உடைப்பு பிரச்னைகள் அதிகம் நேரும். டெல்லியில் ஏற்பட்ட அதீத வெள்ளத்தால் மூன்று மாணவர்கள் இறந்துபோனதை நாம் மறந்துவிடக்கூடாது.அந்த மாணவர்கள் பயிற்சி மையத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளநீரில் சிக்கி இறந்துபோனார்கள். புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்திலும் வெள்ளம் புகுந்துவிட்டது. இதற்கு காரணம், நாம் சூழலைப் பற்றி கவலைப்படாமல் கட்டிடங்களை வடிவமைத்து வருவதுதான். இதெல்லாம் நாட்டில் என்னென்ன எப்படிப்பட்ட வி்ஷயங்கள் நடந்து வருகின்றன என்பதைக் குறியீடாக காட்டும் சமாச்சாரங்கள்தான். கோவாவைப் போலவே பிற மாநிலங்களுக்கும் அச்சுறுத்தல் உருவாகி வருகிறதா? 2011ஆம் ஆண்...

நம்பிக்கை தரும் இளையோர் - பிளாஸ்டிக்கை எதிர்க்கும் நிஞ்சா சிறுமி மாத்வி சித்தூர்

படம்
            நம்பிக்கை தரும் இளையோர் - பிளாஸ்டிக்கை எதிர்க்கும் நிஞ்சா சிறுமி மாத்வி சித்தூர் மாத்வி சித்தூரின் பெற்றோர்கள் சென்னையை பூர்விகமாக கொண்டவர்கள். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்கள். மாத்வி, தினசரி பயன்பாட்டுப் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் கலப்பை அறிந்தார். இதனால் ஏற்படும் நோய்கள், மண்ணுக்கு, நீருக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முயன்றார். இதற்காக கொலராடோவில் லிசா கட்டர் என்ற மக்களவை உறுப்பினரை சந்தித்து பேசி தனி மசோதாவை உருவாக்கி அதை சட்டமாக்குவதிலும் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்காக  ஆளுநர் போலிசின் ஆதரவையும் பெற்றார். அவர், மாத்வியின் செயல்பாட்டை பாராட்டியதோடு, மசோதா சட்டமானபோது அந்த விழாவுக்கும் அழைத்து தனது பேனாவை பரிசாக கொடுத்து கௌரவித்திருக்கிறார். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நீங்கள் கூறும் புகார்களை ஏற்க மறுக்கிறார்களா, தயங்காதீர்கள். திரும்பத் திரும்ப அவர்களைக் கேட்டுக்கொண்டே இருங்கள் என்கிறார் மாத்வி. பிஎஃப்ஏஎஸ் எனும் வேதிப்பொருட்களால் இளையோருக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை, நோய்எதிர்ப்பு சக்தி குறைவது, கெட்ட கொ...

பசுமைக் கட்சியின் வரலாறு, பின்னணி, சாதக, பாதகங்கள் - க்ரீன்பாலிடிக்ஸ் - ஜேம்ஸ் ராட்கிளிப்

படம்
      கிரீன் பாலிடிக்ஸ் டிக்டேட்டர்ஷிப் ஆர்  டெமோகிரசி ஜேம்ஸ் ராட்கிளிப் மேக்மில்லன் பிரஸ் 235 பக்கங்கள் நூலில் மொத்தம் பதினொரு அத்தியாயங்கள் உள்ளன. அவை அனைத்திலும் ஏராளமான சூழலியலாளர்கள் கருத்துகள், பசுமைக் கட்சி அரசியல் அதிகாரத்தில் நுழைந்த வரலாறு, அதன் தேவை, அரசின் இயக்கம் என நிறைய விஷயங்களைப் பேசப்பட்டுள்ளது. இவ்வளவு தகவல்களா, சிந்தனைகளா அயர்ச்சியே ஆகிவிடுகிறது. பொதுவாக இடதுசாரிகளே, மெல்ல பசுமை சார்ந்து இயங்குவார்கள். பிறகு மார்க்சியத்தை மறுத்துவிட்டு முழுமையாக பசுமை அரசியலில் ஆலோசகர் அல்லது செயல்பாட்டாளராக, சிந்தனையாளராக மாறுவார்கள். சூழலியலின் அடிப்படை மார்க்சியத்திலிருந்தே தொடங்குகிறது. அதுவும் கூட வளமான மேற்கு நாடுகளில்தான் பசுமைக் கட்சிக்கு வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் சு ப உதயகுமாரன் போன்றோர் பசுமைக்கட்சி என தொடங்கினாலும் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. சூழல் கவனத்தை இங்கு அடிப்படையில் இருந்து தொடங்கவேண்டும். அப்படி தொடங்காமல் நேரடியாக அரசியல் கட்சி தொடங்கினால், அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. சர்வாதிகாரமா, ஜனநாயகமா என கேள்வி கேட்டு நூல் எழுதப்பட்டு இருந்தா...

சூழல் போராட்டத்தில் ஜனநாயகம்!

படம்
            பாசிச அரசு ஆட்சி செய்யும்போது, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதன் ஒரே பதில் வன்முறைதான். லத்தி, துப்பாக்கிகள், புல்டோசர்கள் அரசின் சார்பாக பதில் கூறும் தரப்பாக மாறுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களைக் கூட அவையும் அகிம்சை முறையில் நேரடி நடவடிக்கை என்ற ரீதியில் அமைந்தவை. உடனே முடக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் தேச துரோகச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவர்களின் செயல்பாடுகள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களோடு இணைக்கப்படும். இணைக்கும், சேர்க்கும் வேலைகளை கால்நக்கி ஊடகங்கள் சிறப்பாக செய்யும். அதைப்பற்றி பாசிச அரசு பெரிதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. தொண்ணூறுகளில் சூழலுக்காக போராடிய மக்களின் போராட்டம் வன்முறை இல்லாமல் இருந்தது. ஆனால் போராட்டக்காரர்கள், அனைத்து பொறுப்புகளையும் அரசியல்வாதிகளிடம், அரசிடம் ஒப்படைத்துவிடவில்லை. பிரச்னை என்றால் அவர்களே சென்று நேரடியாக போராடத் தொடங்கினார்கள். இதை அன்று மேற்கத்திய நாடுகளின் அரசுகளே எதிர்பார்க்கவில்லை. ஒருவித ஹிப்பித்தன்மை கொண்ட இளைஞர் கூட்டம் இது. தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடியும் என வாழ்ந்து வந்த...

விரைவில்...அமேசான் வலைத்தளத்தில் ---- பச்சை சிவப்பு பச்சை - தீரன் சகாயமுத்து

படம்
       

பசுமைக் கட்சிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள்

படம்
ஐரோப்பாவில் தோன்றிய பசுமைக்கட்சிகள் தொடக்கம் முதலே இடதுசாரி பாதையைப் பின்பற்றத் தொடங்கின. அங்கு, இடதுசாரிகள் போல தோற்றமளித்த மார்க்சிய அமைப்புகள், சமூக ஜனநாயக கட்சிகள், மைய இடதுசாரி கட்சிகளைப் பின்தொடரவில்லை. ஜெர்மனியின் புகழ்பெற்ற சூழல் சோசலிசவாதி இருந்தார். அவர் பெயர், ரூடோல்ஃப் பாஹ்ரோ. 1981ஆம் ஆண்டு, ஆல்டர்நேட்டிவ் இன் ஈஸ்டர்ன் யூரோப் என்ற நூலை எழுதினார். பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார். அவருக்கு ஜெர்மனி நாட்டை சூழல் சோசலிச பாதையில் கொண்டு செல்ல ஆர்வம் இருந்தது என இ பி தாம்சன் குறிப்பிடுகிறார். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கோர்ஸ், இகோலஜி ஏஸ் பாலிடிக்ஸ் (1980) என்ற நூலை எழுதினார். பொருளாதார வளர்ச்சியால் சூழல் மாசுபாடு ஏற்படுவதைப் பற்றிய கவலையை நூலில் வெளிப்படுத்தியிருந்தார். 1960ஆம் ஆண்டு, டேனி கோஹ்ன் பென்டிட், அப்சொல்யூட் கம்யூனிசம்- தி லெப்ஃட் விங் ஆல்டர்நேட்டிவ் என்ற நூலை எழுதினார். 1995ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரான ஆலைன் லிபிட்ஸ் க்ரீன் ஹோப்ஸ் என்ற நூலை எழுதினார். நூலில், மரபான இடதுசாரி சிந்தனையை மறுத்து தன் கருத்துகளை எழுதியிருந்தார். சூழலியலுக்கு செல்ல இடத...

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் போதும் - ராபர்ட் புல்லார்ட், ஃபேஷன் டிசைனர் கேப்ரியல்லா, ஜான் கெர்ரி

படம்
  ராபர்ட் புல்லார்ட்  robert d bullard நான் வியட்நாம் கால கடற்படையில் பணிபுரிந்தவன். ஒருவகையில் பூமர் என்று கூறிக்கொள்வதில் பெருமைதான். 1979ஆம் ஆண்டு தொடங்கி சுற்றுச்சூழலுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறேன். அன்று செய்த வேலைகள் இன்று தலைப்புச்செய்தியாக நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நடப்புகாலத்தில் புதிய தலைமுறையினரான மில்லியனியல், ஜென் இசட், எக்ஸ், ஒய் ஆகியோர் நிறையபேர் வந்துவிட்டனர்.  எனவே, நாம் எதிர்கால தலைமுறையினருக்காக காலநிலை பாதிப்புக்கு தீர்வு தேடும் இனக்குழுவை உருவாக்கும் தேவையிருக்கிறது. மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி வீடு, போக்குவரத்து, உணவு, நீர், ஆரோக்கியம், தூய ஆற்றல் வளங்கள் கிடைக்கவேண்டும்.அதற்கான அரசு கொள்கைகளை வகுக்க நாம் ஒன்றாக சேர்ந்து வலியுறுத்த வேண்டும். காற்று மாசுபாடில்லாத சூழ்நிலை அனைவரின் உரிமை. வேதி தொழிற்சாலைகள், குப்பைகள் கொட்டப்பட்ட நிலங்கள் இல்லாத இடத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடவேண்டும் என்ற கனவு எனக்குள்ளது.  இன்றைய உலக நாடுகளில் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் தெருக்களில் களம் கண்டு போராட...