இடுகைகள்

சூழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’ சாண்ட்ரா டயஸ், அர்ஜென்டினாவைச் சேர்ந்த இயற்கை ஆராய்ச்சியாளர், கார்டோபா தேசிய பல்கலைக்கழக பேராசிரியர். சூழலியல் மற்றும் இயற்கை பன்மைத்தன்மை ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத ஆளுமை. 2025ஆம் ஆண்டு க்கான சுற்றுச்சூழல் அறிவியல் சாதனைக்கு வழங்கப்படும் டைலர் விருதை மானுடவியலாளரான எடுவர்டோ பிரான்டிசியோவுடன் இணைந்து பெறவுள்ளார். தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இருவர் டைலர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. டைம் வார இதழில் 2025 ஆம் ஆண்டில் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் உங்களது வாழ்க்கை எப்படி சென்றது, சூழல் ஆராய்ச்சியை உங்களது இலக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? பள்ளி, கல்லூரி காலம் இன்னும் மறக்காமல் நினைவிலிருக்கிறது. தொடக்க, உயர்கல்வியை சிறு நகரத்தில் படித்தேன். பிறகு, கார்டோபா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தேன். என்னுடைய பதினேழு வயதில் கல்விக்காக பெருநகரத்திற்கு வந்தது சாகசமாகவும், அதேசமயம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும்...

தரிசு நிலத்தை பசுமையாக்கிய சீன அரசு!

பசுமையின் திசை! சீனாவை பொருளாதார வளர்ச்சிக்கு பாராட்டுபவர்களை விட சூழல் மாசுபாட்டிற்கு கடுமையாக விமர்சிப்பவர்களே அதிகம். ஆனால், இப்போது கூறும் செய்தி பசுமை ஆர்வலர்களுக்கு நற்செய்திதான். சீனாவில் மூன்று மாகாணங்களுக்கு சேர்ந்த தரிசு நிலத்தை போராடி பாடுபட்டு, மறுபடியும் பசுமையின் திசைக்கு திருப்பியிருக்கிறது சீன அரசு. பல லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமாக மாறியுள்ள நிலப்பரப்பின் அளவு 6,40,000 சதுர கி.மீ. ஆகும். இருபதாம் நூற்றாண்டில் வேளாண்மைக்காக பயன்படுத்திய அதீத உரப்பயன்பாடு, நிலத்தை வளம் குன்றச்செய்தது என சூழலியலாளர் ஜான் டி லியு படம்பிடித்த ஆவணப்படம், பல்வேறு தகவல்களை நமக்கு தருகிறது. விளைச்சல் தந்த நிலம் மெல்ல தரிசாகி, அதில் இருந்து தூசிப்புயல் மஞ்சள் ஆற்றில் வந்து விழத்தொடங்கியது. இந்த ஆறு தலைநகரான பெய்ஜிங் வழியாக செல்கிறது. நிலம் மாசடைந்து ஆற்றையும் மாசுபடுத்துவதை அறிந்த சீன அரசு, இதற்கென கிரெய்ன் டு க்ரீன்(Grain to Green) என்ற திட்டத்தை உருவாக்கியது. உலகவங்கியின் நிதியுதவியோடு திட்டம் தொடங்கப்பட்டது. மாசுபட்ட நிலத்தை மீண்டும் பழையபடி பசுமையான வளம் நிறைந்த இயல்புக்கு...

மௌன வசந்தம் நூலின் பங்களிப்பு!

படம்
       பல்லுயிர்தன்மை என்றால் என்ன? குறிப்பிட்ட இனத்தில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட உயிரினங்கள் இருக்கும். அதாவது அவற்றின் மரபணுக்கள் வேறுபட்டவையாக இருக்கும். உலகம் முழுக்க 15 அல்லது 100 மில்லியன் உயிரினங்கள் இருக்கும் என அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் ஏக்கர் சதுப்புநிலங்கள் அழிக்கப்பட்டு வருவதால் பல்லுயிர்த்தன்மை அழிந்து வருகிறது. அமெரிக்கா காடுகள் அனைத்தும் அரசுக்கு சொந்தமா? இல்லை அரசுக்கு சொந்தமான காடுகள் இருபது சதவீதம் மட்டுமே. பெருநிறுவனங்களுக்கு பதினைந்து சதவீதங்கள் சொந்தமாக உள்ளன. ஐம்பத்தேழு சதவீத காடுகள் தனியார் சொத்துக்களாகவே உள்ளன. பருவ மழைக்காடுகளின் முக்கியத்துவம் என்ன? பருவமழைக்காடுகளில் இருந்துதான் புற்றுநோய்க்கான மருந்துகளின் மூலம் பெறப்படுகிறது. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்கு தேவையான மருந்துகளின் அடிப்படை மூலிகைகள் பருவ மழைக்காடுகளில் உள்ளன. அவற்றைப் பெறாமல் மருத்துவதுறை உயிரோடு இருக்க முடியாது. ஏகபோகமாக லாபம் ஈட்டவும் முடியாது. காடுகள் அழிவதற்கு என்ன காரணம்? வேளாண்மை, நகரங்களைக் கட்ட காடுகளை அழித்தல், காட்டுத்தீ, மழை வெள்ள...

மலமிளக்கியால் தோல்நோய் தீராது!

படம்
   மருந்து = நஞ்சு ஓமியோபதி ஒவ்வாமைக்கான மருந்துகளாக தாய் திராவகம்(பத்து சொட்டுகள்), சிறிய இனிப்பு உருண்டைகள்(சாப்பிடும் முன்/பத்து உருண்டைகள்), சப்பி சாப்பிடும் மாத்திரைகள் ஆறு(மூன்று வேளைக்கு)சாப்பிட மருத்துவர் அறிவுறுத்தினார். இதில், சித்த மருத்துவம் போல பத்தியமும் உண்டு. சித்த மருத்துவத்தில் ஒவ்வாமை பிரச்னைக்கு இடையறாது மலமிளக்கி மருந்துகளை கொடுத்தனர். அடிப்படையில் தோல் நோய்களுக்கு மூல காரணம், மலம் குடலில் இருந்து வேகமாக வெளியேறாத காரணத்தால், அதிலுள்ள கிருமிகள் உடலில் புகுந்து நோய்களை உருவாக்குகின்றன. எனவே, மலமிளக்கி மருந்துகளை இரவில் உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவிட்டு படுத்தால், காலையில் எழுந்தவுடன் கழிவறைக்கு ஓடவேண்டியிருந்தது. அப்படி ஓடாவிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எப்படி ஒருவித உணர்வு தோன்றுகிறது. அதேவித கழிந்துவிடும் உணர்வு மருந்தால் உருவாக்கப்பட்டது. இதேபோல ஓமியோபதியிலும் வெளிக்குப்போக மருந்துகள் உண்டு. ஆனால், அவை திருகலானவை. அவற்றைத் தின்றால் எதற்கு அதை தின்றோம் என யோசிக்கவைப்பவை. ஓமியோபதியில், மலமிளக்கி மருந்துகளை கொடுப்பதை சாமுவேல் எதிர்க்கிறார். நோயை என்...

சீனாவின் சூழல் பிரச்னைகளை அரசியல் பின்னணியோடு விளக்கும் நூல்!

படம்
      சீனா என்ஜின் ஆப் என்விரோன்மென்டல் கொலாப்ஸ் ரிச்சர்ட் ஸ்மித் ப்ளூடோ பிரஸ் சீனாவில் இயற்கை வளமான நிலம், நீர், காற்று பற்றிய அக்கறையுடன் எழுதப்பட்ட நூல். மொத்தம் 321 பக்கங்கள். எட்டு அத்தியாயங்களில் சீனாவின் முதலாளித்துவ கொள்கை, முன்னாள் அதிபர் டெங்கின் வளர்ச்சி உத்தரவு, ஆறுகள், ஏரி எப்படி மாசுபாடுக்குள்ளானது, பளபள கட்டிடங்களால் ஏற்படும் பாதிப்பு, விலைவாசி ஏற்றம், நிலக்கரி ஏற்படுத்தும் காற்று மாசுபாடு, அவற்றை அதிபர் ஷி ச்சின்பிங் கூட தடுத்து நிறுத்த முடியாத அரசியல் நிலைமை என நிறைய விஷயங்களை நூல் ஆழமாக ஆராய்கிறது. சீனாவில் இடதுசாரி கட்சியின் தலைவர்கள், அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து உணவுகளை இறக்குமதி செய்து உண்கிறார்கள். சீன விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுகளை, சீன தலைவர்கள் தொடுவதே இல்லை. ஏன் அப்படி என்றால், அந்தளவு காய்கறிகளில் வேதிப்பொருட்கள், நச்சுகள் உள்ளன. இப்பொருட்களை ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு பணம் நாட்டிற்கு கிடைக்கிறது. ஆனால், கலப்பட உணவுப்பொருட்களால் பாதிக்கப்படுபவர்கள் என்ன ஆவார்கள்? அதைப்பற்றி யாருக்குமே ...

வணிக சந்திப்பிற்கு உணவகங்களை தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?

படம்
        இன்று வணிக ரீதியாக கூட்டாளிகளை, ஒப்பந்தக்காரர்களை விடுதியில் சந்திப்பது இயல்பாகிவிட்டது. சிலர் எழுத்தாளர்களுக்கென தனி கபே நடத்துகிறார்கள். காபி கடைகளில் இணைய வசதியைக்கூட வழங்குகிறார்கள். வெளிநாடுகளில் நேர்காணல்களை நடத்துகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் ஓரிடத்தில் முக்கியமான நபரை சந்திக்கச் செல்கிறீர்கள். அப்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும். ஹோட்டல்களில் முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. உரிமையாக குறிப்பிட்ட மேசையைக் கேட்கலாம். அங்கே உட்கார்ந்து பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுத்துவிட்டு வரலாம். பதிவு  செய்யவில்லை என்றால் சந்திப்பை உகந்ததாக அமைய வாய்ப்பு குறைவு. ஹோட்டல்கள், உணவு, பணியாளர்களது நடத்தை பற்றிய மதிப்பீடுகளை இணையத்தில் பார்த்துவிட்டு வரலாம். சமீபத்திய விமர்சனங்களைக் கவனியுங்கள். ஓராண்டுக்கு முந்தையது வேண்டாம். குறைகள், புகார்களுக்கு எப்படி பதில் அளித்துள்ளார்கள் என பாருங்கள். நிறைய புகழ்பெற்ற உணவகங்கள் என பீற்றிக்கொள்பவர்கள் கூட குறைகளை, புகார்களை வாடிக்கையாளர் முன்வைத்தால் மௌனமாக அதை கடந்துசெல்வதை இணையத்தில் கமெண்டுகளைப் ப...

ஓநாய்களை பிடிப்பதே இப்போதைக்கு தாக்குதலை தடுக்கும் ஒரே வழி!

படம்
      உத்தரப்பிரதேசத்தில் மக்களை ஓநாய்கள் தாக்கியுள்ளதன் காரணம் என்ன? ஓநாய்கள், குழந்தைகள், சிறுவர்களைத் தாக்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஓநாய்களை அரசு நிர்வாகம் வேட்டையாடினால்,ஓநாய்கள் முற்றாக அழிந்துபோகும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே அங்கு ஓநாய்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. வாழிடம் அழிவது, உணவு தட்டுப்பாடு, இயற்கையாக கிடைக்கும் இரைகள் அழிவது, குட்டிகளுக்கு உணவிட முடியாத சிக்கல் ஆகியவை காரணமாக ஓநாய்கள் மாற்று வழிகளைத் தேடி மனிதர்களைத் தாக்குகின்றன. புல்வெளியில் தங்களை மறைத்துக்கொண்டு சரியான வாய்ப்பு தேடி காத்திருக்கும் ஓநாய்கள், வீடுகளில் உள்ள குழந்தைகளை வேட்டையாடியுள்ளன. குழந்தைகள் விலங்குகளை குறைந்தளவிலேயே எதிர்த்து போராட முடியும் என்பதை ஓநாய்கள் சாதகமாக்கிக் கொண்டுள்ளன. ஓநாய்கள் குறைந்துவரும் சூழலில் ஓநாய் - நாய் இணைந்த கலப்பினம் உருவாவது ஆரோக்கியமானதல்ல. இது மனித இனத்திற்கு எதிர்காலத்தில் அபாயத்தையே தரும். உபியில் இதுபற்றிய ஆராய்ச்சி நடைபெறுவது அவசியம். ஓநாய்களின் வாழ்விடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பது பிரச்னையாக மாறியுள்...

இயற்கை பேரிடர்களிலிருந்து இந்திய அரசு எந்த பாடங்களையும் கற்கவில்லை! - அமிதவ் கோஷ்

படம்
            அமிதவ் கோஷ், எழுத்தாளர் காலநிலை மாற்றம் பற்றிய அக்கறைக்காக எராஸ்மஸ் பரிசை நடப்பு ஆண்டில் பெற்றிருக்கிறார். வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் நாம் கற்கவேண்டியது என்ன? வயநாடு மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதுபோல பேரிடர் சம்பவங்கள் நடக்கலாம். சாலைகள் அமைப்பது, காடுகளை அழிப்பது, மணல் குவாரி, கல் குவாரி, முறையற்ற கட்டுமானங்கள் என இதில் நிறைய ஆதாரப் பிரச்னைகள் உள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு, மேக உடைப்பு பிரச்னைகள் அதிகம் நேரும். டெல்லியில் ஏற்பட்ட அதீத வெள்ளத்தால் மூன்று மாணவர்கள் இறந்துபோனதை நாம் மறந்துவிடக்கூடாது.அந்த மாணவர்கள் பயிற்சி மையத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளநீரில் சிக்கி இறந்துபோனார்கள். புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்திலும் வெள்ளம் புகுந்துவிட்டது. இதற்கு காரணம், நாம் சூழலைப் பற்றி கவலைப்படாமல் கட்டிடங்களை வடிவமைத்து வருவதுதான். இதெல்லாம் நாட்டில் என்னென்ன எப்படிப்பட்ட வி்ஷயங்கள் நடந்து வருகின்றன என்பதைக் குறியீடாக காட்டும் சமாச்சாரங்கள்தான். கோவாவைப் போலவே பிற மாநிலங்களுக்கும் அச்சுறுத்தல் உருவாகி வருகிறதா? 2011ஆம் ஆண்...

நம்பிக்கை தரும் இளையோர் - பிளாஸ்டிக்கை எதிர்க்கும் நிஞ்சா சிறுமி மாத்வி சித்தூர்

படம்
            நம்பிக்கை தரும் இளையோர் - பிளாஸ்டிக்கை எதிர்க்கும் நிஞ்சா சிறுமி மாத்வி சித்தூர் மாத்வி சித்தூரின் பெற்றோர்கள் சென்னையை பூர்விகமாக கொண்டவர்கள். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்கள். மாத்வி, தினசரி பயன்பாட்டுப் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் கலப்பை அறிந்தார். இதனால் ஏற்படும் நோய்கள், மண்ணுக்கு, நீருக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முயன்றார். இதற்காக கொலராடோவில் லிசா கட்டர் என்ற மக்களவை உறுப்பினரை சந்தித்து பேசி தனி மசோதாவை உருவாக்கி அதை சட்டமாக்குவதிலும் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்காக  ஆளுநர் போலிசின் ஆதரவையும் பெற்றார். அவர், மாத்வியின் செயல்பாட்டை பாராட்டியதோடு, மசோதா சட்டமானபோது அந்த விழாவுக்கும் அழைத்து தனது பேனாவை பரிசாக கொடுத்து கௌரவித்திருக்கிறார். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நீங்கள் கூறும் புகார்களை ஏற்க மறுக்கிறார்களா, தயங்காதீர்கள். திரும்பத் திரும்ப அவர்களைக் கேட்டுக்கொண்டே இருங்கள் என்கிறார் மாத்வி. பிஎஃப்ஏஎஸ் எனும் வேதிப்பொருட்களால் இளையோருக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை, நோய்எதிர்ப்பு சக்தி குறைவது, கெட்ட கொ...

பசுமைக் கட்சியின் வரலாறு, பின்னணி, சாதக, பாதகங்கள் - க்ரீன்பாலிடிக்ஸ் - ஜேம்ஸ் ராட்கிளிப்

படம்
      கிரீன் பாலிடிக்ஸ் டிக்டேட்டர்ஷிப் ஆர்  டெமோகிரசி ஜேம்ஸ் ராட்கிளிப் மேக்மில்லன் பிரஸ் 235 பக்கங்கள் நூலில் மொத்தம் பதினொரு அத்தியாயங்கள் உள்ளன. அவை அனைத்திலும் ஏராளமான சூழலியலாளர்கள் கருத்துகள், பசுமைக் கட்சி அரசியல் அதிகாரத்தில் நுழைந்த வரலாறு, அதன் தேவை, அரசின் இயக்கம் என நிறைய விஷயங்களைப் பேசப்பட்டுள்ளது. இவ்வளவு தகவல்களா, சிந்தனைகளா அயர்ச்சியே ஆகிவிடுகிறது. பொதுவாக இடதுசாரிகளே, மெல்ல பசுமை சார்ந்து இயங்குவார்கள். பிறகு மார்க்சியத்தை மறுத்துவிட்டு முழுமையாக பசுமை அரசியலில் ஆலோசகர் அல்லது செயல்பாட்டாளராக, சிந்தனையாளராக மாறுவார்கள். சூழலியலின் அடிப்படை மார்க்சியத்திலிருந்தே தொடங்குகிறது. அதுவும் கூட வளமான மேற்கு நாடுகளில்தான் பசுமைக் கட்சிக்கு வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் சு ப உதயகுமாரன் போன்றோர் பசுமைக்கட்சி என தொடங்கினாலும் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. சூழல் கவனத்தை இங்கு அடிப்படையில் இருந்து தொடங்கவேண்டும். அப்படி தொடங்காமல் நேரடியாக அரசியல் கட்சி தொடங்கினால், அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. சர்வாதிகாரமா, ஜனநாயகமா என கேள்வி கேட்டு நூல் எழுதப்பட்டு இருந்தா...

சூழல் போராட்டத்தில் ஜனநாயகம்!

படம்
            பாசிச அரசு ஆட்சி செய்யும்போது, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதன் ஒரே பதில் வன்முறைதான். லத்தி, துப்பாக்கிகள், புல்டோசர்கள் அரசின் சார்பாக பதில் கூறும் தரப்பாக மாறுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களைக் கூட அவையும் அகிம்சை முறையில் நேரடி நடவடிக்கை என்ற ரீதியில் அமைந்தவை. உடனே முடக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் தேச துரோகச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவர்களின் செயல்பாடுகள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களோடு இணைக்கப்படும். இணைக்கும், சேர்க்கும் வேலைகளை கால்நக்கி ஊடகங்கள் சிறப்பாக செய்யும். அதைப்பற்றி பாசிச அரசு பெரிதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. தொண்ணூறுகளில் சூழலுக்காக போராடிய மக்களின் போராட்டம் வன்முறை இல்லாமல் இருந்தது. ஆனால் போராட்டக்காரர்கள், அனைத்து பொறுப்புகளையும் அரசியல்வாதிகளிடம், அரசிடம் ஒப்படைத்துவிடவில்லை. பிரச்னை என்றால் அவர்களே சென்று நேரடியாக போராடத் தொடங்கினார்கள். இதை அன்று மேற்கத்திய நாடுகளின் அரசுகளே எதிர்பார்க்கவில்லை. ஒருவித ஹிப்பித்தன்மை கொண்ட இளைஞர் கூட்டம் இது. தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடியும் என வாழ்ந்து வந்த...

விரைவில்...அமேசான் வலைத்தளத்தில் ---- பச்சை சிவப்பு பச்சை - தீரன் சகாயமுத்து

படம்
       

பசுமைக் கட்சிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள்

படம்
ஐரோப்பாவில் தோன்றிய பசுமைக்கட்சிகள் தொடக்கம் முதலே இடதுசாரி பாதையைப் பின்பற்றத் தொடங்கின. அங்கு, இடதுசாரிகள் போல தோற்றமளித்த மார்க்சிய அமைப்புகள், சமூக ஜனநாயக கட்சிகள், மைய இடதுசாரி கட்சிகளைப் பின்தொடரவில்லை. ஜெர்மனியின் புகழ்பெற்ற சூழல் சோசலிசவாதி இருந்தார். அவர் பெயர், ரூடோல்ஃப் பாஹ்ரோ. 1981ஆம் ஆண்டு, ஆல்டர்நேட்டிவ் இன் ஈஸ்டர்ன் யூரோப் என்ற நூலை எழுதினார். பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார். அவருக்கு ஜெர்மனி நாட்டை சூழல் சோசலிச பாதையில் கொண்டு செல்ல ஆர்வம் இருந்தது என இ பி தாம்சன் குறிப்பிடுகிறார். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கோர்ஸ், இகோலஜி ஏஸ் பாலிடிக்ஸ் (1980) என்ற நூலை எழுதினார். பொருளாதார வளர்ச்சியால் சூழல் மாசுபாடு ஏற்படுவதைப் பற்றிய கவலையை நூலில் வெளிப்படுத்தியிருந்தார். 1960ஆம் ஆண்டு, டேனி கோஹ்ன் பென்டிட், அப்சொல்யூட் கம்யூனிசம்- தி லெப்ஃட் விங் ஆல்டர்நேட்டிவ் என்ற நூலை எழுதினார். 1995ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரான ஆலைன் லிபிட்ஸ் க்ரீன் ஹோப்ஸ் என்ற நூலை எழுதினார். நூலில், மரபான இடதுசாரி சிந்தனையை மறுத்து தன் கருத்துகளை எழுதியிருந்தார். சூழலியலுக்கு செல்ல இடத...

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் போதும் - ராபர்ட் புல்லார்ட், ஃபேஷன் டிசைனர் கேப்ரியல்லா, ஜான் கெர்ரி

படம்
  ராபர்ட் புல்லார்ட்  robert d bullard நான் வியட்நாம் கால கடற்படையில் பணிபுரிந்தவன். ஒருவகையில் பூமர் என்று கூறிக்கொள்வதில் பெருமைதான். 1979ஆம் ஆண்டு தொடங்கி சுற்றுச்சூழலுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறேன். அன்று செய்த வேலைகள் இன்று தலைப்புச்செய்தியாக நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நடப்புகாலத்தில் புதிய தலைமுறையினரான மில்லியனியல், ஜென் இசட், எக்ஸ், ஒய் ஆகியோர் நிறையபேர் வந்துவிட்டனர்.  எனவே, நாம் எதிர்கால தலைமுறையினருக்காக காலநிலை பாதிப்புக்கு தீர்வு தேடும் இனக்குழுவை உருவாக்கும் தேவையிருக்கிறது. மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி வீடு, போக்குவரத்து, உணவு, நீர், ஆரோக்கியம், தூய ஆற்றல் வளங்கள் கிடைக்கவேண்டும்.அதற்கான அரசு கொள்கைகளை வகுக்க நாம் ஒன்றாக சேர்ந்து வலியுறுத்த வேண்டும். காற்று மாசுபாடில்லாத சூழ்நிலை அனைவரின் உரிமை. வேதி தொழிற்சாலைகள், குப்பைகள் கொட்டப்பட்ட நிலங்கள் இல்லாத இடத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடவேண்டும் என்ற கனவு எனக்குள்ளது.  இன்றைய உலக நாடுகளில் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் தெருக்களில் களம் கண்டு போராட...

பசுமைக்கட்சியின் எழுச்சி

படம்
ஐரோப்பாவில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜெர்மனியில் வலுவான அரசியல்கட்சியாக பசுமைக்கட்சி உள்ளது. அறுபது எழுபதுகளில் மாணவர்கள் போராட்டம், அணுசக்தி போராட்டம் ஆகியவற்றின் அடையாளமாகவே பசுமைக்கட்சியின் எழுச்சி அமைந்தது. வலதுசாரி கட்சிகளின் தாராளவாச, அணுக்க முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக, பாப்புலிச கொள்கைகளுக்கு எதிராக பசுமைக்கட்சி நிற்கிறது. இன்றுள்ள நிலையில் யாருமே சூழலைப் பற்றிய கவலையின்றி வாழ முடியாது. அரசியல்கட்சிகளும் அதை தங்களது தேர்தல் அறிக்கையில் புறக்கணிக்க முடியாது. அகிம்சை, சூழல் கவனம், பசுமைக் கொள்கைகள், தூய ஆற்றல் ஆகியவற்றை பசுமைக்கட்சி அடிப்படையாக கொண்டுள்ளது. பசுமைக் கட்சி கூட்டமைப்பில் மொத்தம் எண்பது பசுமைக் கட்சிகள் இணைந்ததுள்ளன. இவற்றின் கொள்கைகள் குறிப்பிட்ட வரையறையில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. நிலப்பரப்பு சார்ந்து பல்வேறு கொள்கைகள், லட்சியங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றின் அடிப்படையான கொள்கைகளைப் பார்ப்போம். சூழலைப் பாதிக்காதவாறு வாழ்க்கை அடிப்படையான ஜனநாயகத்தன்மை சமூக நீதி அகிம்சை ஆதரவு என்றால் எதிர்ப்பும் இருக்கத்தானே வேண்டும்? ஆயுத தொ...

பசுமைக் கட்சியின் தொடக்கம், தேவை என்ன?

படம்
அரசியலில் சூழல் கொள்கைகளை பெரும்பாலான கட்சிகள் பேசுவதில்லை. இதற்கு காரணம், அப்படியெல்லாம் பேசினால் கட்சிக்கு நிதி, நன்கொடை கிடைக்காது. குறிப்பாக அந்நிய முதலீடு சுத்தமாக வராது. ஆனாலும் கூட உலகளவில் க்ரீன்ஸ் என்ற பசுமைக் கட்சி தனது சூழல் கருத்துகளை சொல்லி அரசில் பங்கு வகித்து தனது அதிகாரத்தை செல்வாக்க வெளிப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் முழுக்க பசுமைக்கட்சி இயங்கி வருகிறது. இந்தியாவில் கூட பசுமைக்கட்சி உள்ளது. ஆனால், அதிகளவு பிரபலம் ஆகவில்லை. எனவே, வட இந்தியாவில் அந்த கட்சியை இப்படியொரு கட்சி உள்ளதா என்ற அளவில் மட்டும் பார்த்து வருகிறார்கள். சாதி, மதம் பார்த்து வாக்களிக்கும் பின்தங்கிய இந்தியா போன்ற நாட்டில் சூழல் கொள்கைகளை கருத்தில் கொண்டு அதற்கு வாக்களிக்க அதிக காலம் தேவை. கட்சியாக தன்னை பிரபலப்படுத்தவே பசுமைக்கட்சி இன்னும் மெனக்கெட வேண்டும். சூழல் என்று சொன்னால், பெருநிறுவனங்கள் அருகில் வரமாட்டார்கள். தேர்தல் நிதி கொடுக்கமாட்டார்கள். பொதுவாக வணிக நிறுவனத்திற்கு எப்படி பணம் கிடைக்கும்? ஏனெனில் எந்த அளவுக்கு இயற்கை வளத்தை சுரண்ட முடியுமோ அப்படி செய்தால்தான் ஜிண்டால், டாடா, ரிலையன்ஸ் ஆக...

ஒருவரின் புத்திசாலித்தனம் மரபணு அல்லது கல்வி மூலம் தீர்மானிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய ஆய்வு!

படம்
  ஒருவர் பிறக்கும்போது மேதாவியாக இருக்கிறாரா, பிறந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு வஸ்தாது ஆகிறாரா என்ற பஞ்சாயத்து இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. 1900களில் மேதாவிகளாக இருந்த லியானார்டோ டாவின்சி, பீத்தோவன் பற்றி மக்கள் பல்வேறு கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். புத்திசாலித்தனம் ரத்தம் மூலம் உருவாகி வளருகிறதா, அல்லது பிறந்து சூழ்நிலையில் உள்ள அம்சங்கள் மூலம் கல்வியால் அறிவு பிரகாசிக்கிறதா என்று முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருந்தனர். அரிஸ்டாட்டில், மேதாவித்தனமும்,கிறுக்குத்தனமும் ஒன்றுக்குள் ஒன்று என்று கருத்து கூறினா். இதெல்லாம் மரபணு சார்ந்தவை, ஒன்றுடன் ஒன்று கலந்தவை என எழுதினார்.  ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர் ஹான்ஸ் ஐசென்ஸ்க், மேதாவித்தனம், கிறுக்குத்தனம் ஆகியவற்றை ஆராயாமல், முழு மனிதனை எந்த விஷயம் உருவாக்குகிறது என்பதில் மனதை செலுத்தினார். ஒருவரின் அறிவுத்திறன் 165 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தால் அவரை மேதாவி என அறிவியல் அழைக்கிறது. இதேபோல ஒருவர் செய்யும் செயல்களில் மனநல குறைபாடுகளின் அறிகுறிகள் தெரிந்தால் அவரை மன நோயாளி என முத்திரை குத்தி சிகிச்சை செய்கின்றனர். ஹான்ஸ் உருவ...

முடிவெடுப்பதை எப்படி தீர்மானிக்கிறோம்?

படம்
  இஸ்ரேலிய அமெரிக்க உளவியலாளரான டேனியல் காஹ்னெமன், அமோஸ் வெர்ஸ்கி ஆகியோர் புதிய கொள்கைகளை உருவாக்கினர். இவை எதிர்பாராத நிலையில் நாம் எப்படி முடிவெடுக்கிறோம் என்பதைப் பற்றியவை. ஜட்ஜ்மென்ட் அண்டர் அன்செர்டனிட்டி ஹியூரிஸ்டிக்ஸ் அண்ட் பயாசஸ் என்ற நூல் 1974ஆம் ஆண்டு வெளியானது. மக்கள், புள்ளியல், வாய்ப்பு அடிப்படையில் எந்த தகவலையும் யோசித்து அதன் அடிப்படையில் முடிவெடுப்பது இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் ஒருவரின் மனதில் உள்ள தகவல்கள் அடிப்படையில் அமைந்தால் அவை தவறாக மாற வாய்ப்புள்ளன. ஒரு விமானத்தில் பயணம் செய்கிறீர்கள். திடீரென அந்த விமானம்,எஞ்சின் பழுதாகி கடலில் வீழ்கிறது. விபத்துக்குள்ளாகிறது. இதை உண்மையில் யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆபத்தான நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விமானத்தில் உள்ள உதவிகளை நாடலாம். அப்படி உயிர் பிழைத்தால் பிறருக்கும் உதவ முடியும். இது எதிர்பார்க்காத நிகழ்ச்சி. இதில் எடுக்கும் முடிவு. அந்த நேரத்தில் அங்கே உள்ள சூழலைப் பொறுத்தது. இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். ஒரு காரில் நண்பரோடு பயணிக்க நினைக்கிறீர்...

பிளாஸ்டிக்குகளின் உற்பத்தியை குறைக்காமல் மறுசுழற்சி செய்வதில் பயன் உண்டா?

படம்
  விஷமாக பரவும் பிளாஸ்டிக்குகள்! இன்று உள்ளூர் தொடங்கி புகழ்பெற்ற ஆற்றுக்கரையோரங்களில் சென்று பார்த்தால் எங்கும் நிறைந்துள்ளது பரந்தாமன் மட்டுமல்ல பிளாஸ்டிக்கும் கூடத்தான் என்று தெரிந்துகொள்வீர்கள். அந்தளவுக்கு ஷாஷேக்கள், குழந்தைகளின் பொம்மைகள், பாலிதீன் கவர்கள், சோப்பு உறைகள், எண்ணெய் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், அலுமினிய பாயில்கள் ஏராளமாக கிடைக்கும். உள்ளூர் நிர்வாகங்களும் இவற்றை அள்ளுகின்றன. ஆனாலும் இதன் எண்ணிக்கை குறைவதாக இல்லை. மறுசுழற்சி செய்யும்படியான பிளாஸ்டிக்கை தயாரிக்காதபோது தொழிற்சாலைகளை மூடச்சொல்லி உத்திரவிடும் தைரியமும் நெஞ்சுரமும் அரசுக்கு இல்லை. எனவே, பிளாஸ்டிக்குகள் இன்று குடிநீரில், உணவில், காய்கறிகளில் கூட கலக்கத் தொடங்கிவிட்டன. அதைபற்றிய விரிவான கட்டுரையைப் பார்ப்போம்.  மூன்றாம் உலக நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கூட பிளாஸ்டிக் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றுவரையில் மனிதர்கள் உருவாக்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை பதினொரு பில்லியன் மெட்ரிக் டன் என நேச்சர் ஆய்விதழ் தகவல் கூறுகிறது. தற்போது உலகம் முழுவதும் ஆண்ட...

டைம் வார இதழின் சிறந்த கண்டுபிடிப்புகள் 2023!

படம்
  டைம் புதிய கண்டுபிடிப்புகள் 2023 லெனோவா  யோகா புக் 9ஐ இந்த யோகா புக்கைப் பயன்படுத்தி வீட்டில் வேலை செய்வது எளிது. 13.3 அங்குலத்தில் இரண்டு திரைகள் கொண்ட கணினி. மேசைக்கணினி, மடிக்கணினி, டேப்லட் என எப்படி வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஓஎல்இடியில் இரண்டு திரை என்பது இந்த கணினியில் புதுசு. வாங்கி பயன்படுத்துங்கள். வடிவமைப்பில் அசத்துகிற கணினி இது.  அல்காரே பாட் கடல்பாசிகள் குளம், ஏரியில் அதிகரிப்பதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. நன்மை என்றால் காற்றிலுள்ள கார்பனை அதிகம் உள்ளிழுக்கும். தீமை என்றால் அழுகிப்போன வாடையோடு நீரிலுள்ள பிற உயிரினங்களின் வாழ்வை பாதிக்கும். இதை சரி செய்ய அல்காரே ரோபோட் உதவுகிறது. பாசிகளை நீரின் அடிமட்டத்தில் கொண்டு சென்று அழுத்து கார்பனை அங்கேயே தங்கியிருக்கச் செய்கிறது. வளைகுடா நாடுகள், புளோரிடா ஆகிய பகுதிகளில் இந்தரோபோட் பல்வேறு சோதனை முயற்சிகளை செய்து வருகிறது.  ஹெய்ன்ஸ் ரீமிக்ஸ் டிஸ்பென்சர்  டீ, காபி தரும் மெஷின்களை பார்த்திருப்போம். அதைப்போலவே உணவுக்குப் பயன்படுத்தும் சாஸ்களை ஹெய்ன்ஸ் ரீமிக்ஸ் டிஸ்பென்சர் வழங்குகிறது....