இடுகைகள்

சத்தமின்றி யுத்தம் செய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூலிக்கு வேலை செய்யும் அறவீரன் டியுராங்கோ! - வன்முறை பூமியின் ரணகளம்!

படம்
டியுராங்கோ அதிரடிக்கும்  சத்தமின்றி யுத்தம் செய் தீதும் நன்றும் பிறர் தர வாரா - 3 வது அத்தியாயம் டியுராங்கோ, ஆலன் என்ற சுரங்க முதலாளிக்கு உதவி செய்ய வருகிறார். ஆனால் அங்கு ஆலன் முதலிலேயே டீல் என்ற போட்டி தொழிலதிபரால் கொலைசெய்யப்பட்டு கிடக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் டியுராங்கோ என நகரில் அறிவிக்கப்படுகிறது. இதனால் கொலைப்பழியுடன் அரசு கைதியாகும் பிரசனை சேர, அப்பழியைத் துடைத்து ஆலனின் மனைவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்படும் சதியை உடைக்கிறார் டியுராங்கோ என்பதுதான் இந்த பரபர காமிக்ஸ் கதை. இதில் முழுக்க டீல் எனும் தொழிலதிபர், ஷெரீப் ஜென்கின்ஸ் ஆகியரோர் கதாபாத்திரம் வலுவாக இருக்கிறது. இதில் டியுராங்கோவின் கதாபாத்திரம் மிக வலுவாக இல்லை. முழுக்க தன்னை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றிக்கொள்வதோடு, ஆலனின் மனைவியை நேக்காக எப்படி காப்பாற்றினார் என்பதோடு கதை முடிந்தது. அதேசமயம் டியுராங்கோவுக்கு உதவும் போட்டி நிறுவன ஆள் அவருக்கே துரோகம் செய்வது என மாறாத மனித குணங்கள், நீதி நெறிகளுகுக சவால்விடும் நகரங்கள், ஊழல் அரசியல்வாதிகள் என மனிதநேயத்தை தேடும் அவசியத்தை ஏற்படுத்த