இடுகைகள்

செயற்கை ஊட்டமேற்றப்பட்ட அரிசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாயுக்கும் சேயுக்கும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் அறக்கட்டளை!

படம்
  ஸ்ரீமதி மாலதி தனுகார் டிரஸ்ட் அஸ்வினி, மகாராஷ்டிரத்தில் வசிக்கிறார். அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள திலக்நகரில் வாழும் இவருக்கு இப்போது அவரது குழந்தையின் வளர்ச்சி பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவே நேரம் போதவில்லை. ஒரு வயதாகும் அவரது பிள்ளையின் பெயர் சிவ்தேஜ்.  அவரது வயதுக்கு தோராயமாக இருக்கவேண்டிய எடை ஒன்பதரை கிலோ. ஆனால் அஸ்வினியின் பிள்ளையோ, பதினொன்றே முக்கால் கிலோ இருக்கிறான். உயரமும் அவனது வயதுக்கு கூடுதல். இதை எல்லாவற்றையும் விட அவன் ஆரோக்கியமாக இருக்கிறான்.  குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் உணவு உண்ண முடியாமல் வாந்தி எடுத்திருக்கிறது. மருத்துவமனையில் காட்ட அவர் தாயுக்கும் சேயுக்கும் உணவுத்திட்டத்தை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். அதன்பிறகுதான் குழந்தையின் வளர்ச்சி சிறக்கத் தொடங்கியிருக்கிறது.  ஒன்றிய அரசு குழந்தைகளுக்கு உணவில் இரும்புச்சத்து குறைந்து வருவதால் செயற்கை ஊட்டமேற்றிய அரிசியை பொது விநியோக முறையில் வழங்கத் தொடங்கியது. இது வெற்றியடையாமல் தோற்றுப்போனது ஒருபுறம் இருக்க, நடப்பாண்டில் அத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த இருக்கிறார்கள்.  அஸ்வினிக்கு குழந்தையி