இடுகைகள்

செபி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதானி குழுமம் பங்கு மோசடி செய்து வளர செபி தலைவர் சிந்திய வியர்வை!

படம்
            செபியின் தலைவர் மாதபி, அதானி குழுமத்தின் வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க முடியாததற்கு, வினோத் அதானியின் நிறுவனங்களில் அவர் செய்திருந்த பங்கு முதலீடும் முக்கிய காரணம் என ஹிண்டென்பர்க் கருதுகிறது. இன்றைய தேதிவரை செபி அமைப்பு, அதானி குழுமம், அதன் பங்குதாரர்கள், இந்தியா இன்போலைன் ஆகியோர் மீது எந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதில் இஎம் ரீசர்ஜென்ட் பண்ட், எமர்ஜிங் இந்தியா போகஸ் பண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்தியா இன்போலைன் நிறுவனம் இப்போது பெயர் மாறி 360 ஒன் என செயல்பட்டு வருகிறது. இதோடு தொடர்புடைய நிறுவனங்களைத்தான் மேலே குறிப்பிட்டுள்ளோம். இந்தியா இன்போலைனின் ஆண்டு அறிக்கைப்படி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு எண்ணிக்கை, விலை அதானி குழும நிறுவனங்களால் போலியாக ஊதி பெருக்கப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. ஃபினான்சியல் டைம்ஸ் இதழ் செய்த விசாரணையில், அதானி  வணிக நிறுவனங்களை, முன்னே நிறுத்திவைத்துவிட்டு, மறைமுகமாக இந்திய சட்டவிதிகளை மீறி பங்குவிலைகளில் முறைகேடு செய்துள்ளார் என தெரிய வ...

பங்கு முறைகேட்டை விசாரிக்க வேண்டிய செபியின் தலைவரே குற்றவாளியானால்... ஹிண்டென்பர்க் அறிக்கை 2024

படம்
        ஐபிஇ பிளஸ் பண்ட் நிதி நிறுவனத்தின் முதலீட்டு அதிகாரியின் பெயர் அனில் அகுஜா. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ஒன்பது ஆண்டுகள் தலைவராக பணியாற்றியுள்ளார். பணி விலகிய ஆண்டு, 2017. அதானி பவர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். செபியின் தற்போதைய தலைவரான மாதபி புச், அவரின் கணவர் ஆகியோர், அதானியின் வெளிநாட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். அதானி, முறைகேடான பங்கு வர்த்தகத்தை செபியின் விசாரணை, தண்டனை பற்றிய பயமின்றி எப்படி செய்கிறார் என ஹிண்டென்பர்க் நிறுவனம் யோசித்தது. அதானி குழுமத்தில், செபி தலைவரான மாதபி புச்சின் பங்கு முதலீடு பற்றி தெரிய வந்ததும் விவகாரத்தை எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. பெர்முடா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள வினோத் அதானியின் போலி நிறுவனங்களில் செபியின் தலைவரான மாதபி புச், அவரின் கணவர் தாவல் புச் பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்பதை முதலில் ஹிண்டென்பர்க் சரியாக உணர்ந்துகொள்ளவில்லை.   2015ஆம் ஆண்டு, ஜூன் 5 ஆம் தேதி, சிங்கப்பூரில் ஐபிஇ பிளஸ் பண்டில் புச் தம்பதியினர் செய்த முதலீடு பற்றிய தகவல் தெரியவந்தது. பங்கு முதலீட்டிற்கான நிதி ...

பங்குச்சந்தை மோசடியின் வலைப்பின்னல் - அதானி குழும மோசடியில் செபிக்கு உள்ள கூட்டுப்பங்கு

படம்
            பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் ஹிண்டென்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளைப் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில், மொரிஷியஸ் நாட்டில் உள்ள போலி நிறுவனங்களைப் பற்றி கூறப்பட்டிருந்தது. இந்திய அரசின் பங்குச்சந்தை அமைப்பான செபி ஆச்சரியமூட்டும் விதமாக, அதானி குழும மோசடி பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. விசாரணையையும் முறையாக நடத்தவில்லை. கார்ப்பரேட் நிறுவன வரலாற்றில் மிகப்பெரும் மோசடியான அதில், மொரிஷியஸ் நாட்டில் பரிமாறிய பங்குகள், அரசிடம் தெரிவிக்கப்படாத முதலீடுகள், பங்கு முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள் இருந்தன. அதற்குப்பிறகு, அந்த விசாரணையை எங்களோடு சேர்ந்து நாற்பது தனியார் ஊடக நிறுவனங்கள் புலனாய்வு செய்து விரிவாக்கின. இந்திய அமைப்பான செபி, அதானி குழுமம் செய்த முறைகேட்டை பெரிதாக லட்சியம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக செபி நிறுவனம், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஹிண்டென்பர்க் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், 106 பக்க புலனாய்வு அறிக்கையில் எந்த தகவல் பிழையும் உள்ளதாக கூறவில்லை. பதிலாக, கொடுத்துள்ள விவரங்கள் இன்னு...

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - ராஜ் ஷெட்டி, மாதாபி, ரோகினி பாண்டே, மஞ்சுள் பார்க்கவா

படம்
  மாதாபி, தலைவர், செபி ராகுல் பாட்டியா, இண்டிகோ என் சந்திரசேகரன், டாடா குழுமம் ரோகினி பாண்டே, பொருளாதார வல்லுநர் ராஜ் ஷெட்டி, பொருளாதார வல்லுநர் ராஜ் செட்டி 43 பொருளாதா வல்லுநர் டெல்லியை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுநர். அரசின் கொள்கைகளை பொருளாதார தகவல்கள் அடிப்படையில் உருவாக்கவேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். தனது 29 வயதில் பெருமை மிக்க ஜான் பேட்ஸ் கிளார்க் விருதை வென்றவர். இந்த விருது, பேபி நோபல் பரிசு என மரியாதையாக குறிப்பிடப்படுகிறது. பொருளாதார   பாகுபாடுகள் பற்றிய ஆய்வுகளை அர்ப்பணிப்புடன் செய்தவர், ஏழை மக்களில் 30 சதவீதம்பேர்தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள் என்ற உண்மையைக் கூறியிருக்கிறார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது பொருளாதாரப் பிரிவில் பேராசிரியராக உள்ளார்.   மாதாபி பூரி புச் தலைவர்,செபி நிதி சந்தையைக் கட்டுபடுத்தும் ஒழுங்குமுறை அமைப்பின் முதல் பெண் தலைவர். ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டதாரி. கடந்த ஆண்டு செபியில் தலைவராக பதவியேற்றவர், அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முனைந்து வருகிறார். பொதுவாக அரச...

18. கௌதம் அதானி பதிலளிக்க வேண்டிய கேள்விகள் - மோசடி மன்னன் அதானி - இறுதிப்பகுதி

படம்
  26.2021ஆம் ஆண்டு, குழுமத்தின் நிதித்துறை தலைவராக ராபிசிங் பொறுப்பு வகித்தார். அப்போது குழுமத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. 2021ஆம் ஆண்டு, ஜூன் 16 அன்று,என்டிடிவியில் கொடுத்த நேர்காணலில் ராபி சிங், “மொரிஷியஸில் உள்ள நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்தில் புதிதாக நிதியை முதலீடு செய்யவில்லை. தங்களின் பிற அதானி நிறுவன பங்குகளை விலக்கிக்கொண்டனர்” என்று கூறினார். ஹிண்டன்பர்க்கின் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, அப்போது நிதி நிறுவனங்கள் அதானி க்ரீனில் புதிய முதலீடுகளைச் செய்தனர். அந்த சமயத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை விதிப்படி, தங்கள் பங்கு அளவை குறைத்துக்கொள்ள நினைத்தார்கள். இந்த செயல்பாட்டிற்கு, அதானி குழுமம் என்ன பதில் தரப்போகிறது? 27.1999-2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள், தனிநபர்கள், எழுபதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டி அவர்களை விசாரித்தது. இதுபற்றி கௌதம் அதானியின் கருத்து என்ன? 28. அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது, அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தின் பங்குகளை அதானி குழும முதலீ...