இடுகைகள்

செபி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - ராஜ் ஷெட்டி, மாதாபி, ரோகினி பாண்டே, மஞ்சுள் பார்க்கவா

படம்
  மாதாபி, தலைவர், செபி ராகுல் பாட்டியா, இண்டிகோ என் சந்திரசேகரன், டாடா குழுமம் ரோகினி பாண்டே, பொருளாதார வல்லுநர் ராஜ் ஷெட்டி, பொருளாதார வல்லுநர் ராஜ் செட்டி 43 பொருளாதா வல்லுநர் டெல்லியை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுநர். அரசின் கொள்கைகளை பொருளாதார தகவல்கள் அடிப்படையில் உருவாக்கவேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். தனது 29 வயதில் பெருமை மிக்க ஜான் பேட்ஸ் கிளார்க் விருதை வென்றவர். இந்த விருது, பேபி நோபல் பரிசு என மரியாதையாக குறிப்பிடப்படுகிறது. பொருளாதார   பாகுபாடுகள் பற்றிய ஆய்வுகளை அர்ப்பணிப்புடன் செய்தவர், ஏழை மக்களில் 30 சதவீதம்பேர்தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள் என்ற உண்மையைக் கூறியிருக்கிறார். தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது பொருளாதாரப் பிரிவில் பேராசிரியராக உள்ளார்.   மாதாபி பூரி புச் தலைவர்,செபி நிதி சந்தையைக் கட்டுபடுத்தும் ஒழுங்குமுறை அமைப்பின் முதல் பெண் தலைவர். ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டதாரி. கடந்த ஆண்டு செபியில் தலைவராக பதவியேற்றவர், அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முனைந்து வருகிறார். பொதுவாக அரசியல்வாதிகளுக்க

18. கௌதம் அதானி பதிலளிக்க வேண்டிய கேள்விகள் - மோசடி மன்னன் அதானி - இறுதிப்பகுதி

படம்
  26.2021ஆம் ஆண்டு, குழுமத்தின் நிதித்துறை தலைவராக ராபிசிங் பொறுப்பு வகித்தார். அப்போது குழுமத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. 2021ஆம் ஆண்டு, ஜூன் 16 அன்று,என்டிடிவியில் கொடுத்த நேர்காணலில் ராபி சிங், “மொரிஷியஸில் உள்ள நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்தில் புதிதாக நிதியை முதலீடு செய்யவில்லை. தங்களின் பிற அதானி நிறுவன பங்குகளை விலக்கிக்கொண்டனர்” என்று கூறினார். ஹிண்டன்பர்க்கின் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, அப்போது நிதி நிறுவனங்கள் அதானி க்ரீனில் புதிய முதலீடுகளைச் செய்தனர். அந்த சமயத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை விதிப்படி, தங்கள் பங்கு அளவை குறைத்துக்கொள்ள நினைத்தார்கள். இந்த செயல்பாட்டிற்கு, அதானி குழுமம் என்ன பதில் தரப்போகிறது? 27.1999-2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள், தனிநபர்கள், எழுபதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டி அவர்களை விசாரித்தது. இதுபற்றி கௌதம் அதானியின் கருத்து என்ன? 28. அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது, அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தின் பங்குகளை அதானி குழும முதலீட்டா