இடுகைகள்

இந்தியா-காஷ்மீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசை அச்சுறுத்தும் காஷ்மீர் அறிக்கை!

படம்
அரசை அச்சுறுத்தும் காஷ்மீர் அறிக்கை ! ஐ . நா சபை காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமைகள் குறித்து வெளியிட்ட அறிக்கையை ஏற்கமுடியாத , முரண்பாடான தவறான கருத்து என்று கூறி இவ்வறிக்கையை இந்திய அரசு ஏற்க மறுத்துள்ளது . இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான அரசியல் உறவு சீர்குலைந்ததால் பல்லாண்டுகளாக காஷ்மீர் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை ஐ . நா மனித உரிமைகள் கமிஷனர் (OHCHR) இதில் சுட்டிக்காட்டியுள்ளார் . 1989 ஆம் ஆண்டிலிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு , தொன்மை இந்து மக்களும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதையும் , ராணுவ வீரர்களின் பாலியல் அத்துமீறல்கள் , வன்முறை , ஒடுக்குமுறைகளையும் இந்த அறிக்கை கவனப்படுத்தியுள்ளது . மக்களை துன்புறுத்திய , பாலியல் வன்முறை செய்த வீரர்களுக்கு பதக்கங்களை அறிவிப்பதை விடுத்து சிறப்பு ஆயுதசட்டத்தை ரத்து செய்து பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை நேர்மையாக விசாரிப்பதே இதற்கான தீர்வு . மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உலகிற்கு கூறிய ஐ . நாவின் மனிதஉரிமைகள் அரசு பாய்வது மக்கள் நல அரசுக்கு அழகல்ல .