இடுகைகள்

நேரு கடிதங்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மை டியர் இந்திரா 2!- ஜவகர் நேரு

படம்
மை டியர் இந்திரா, உன்னுடைய  இந்த பிறந்தநாளில் பல்வேறு பரிசுகளையும் ஆசிர்வாதங்களையும் பெறுவது வழக்கம். நான் என் ஆசிர்வாதங்களை உனக்கு அளித்தாலும் நைனி சிறையில் உள்ளதால் என்ன பரிசு உனக்கென அளிக்கமுடியும்? நான் உனக்கு அளிக்க கூடிய பரிசு பருப்பொருளானதல்ல. ஆற்றல் வாய்ந்த மனதையும் வலிமையும் உனக்கு அளிக்க விரும்புகிறேன். நான் அளிக்கும் இப்பரிசை சிறையின் உயர்ந்த மதில்கள் தடுக்கமுடியாது. அறிவுரை, உபதேசங்களை என்றும் வெறுப்பவன் நான் என்பதை நீ அறிவாய். இதை கலந்துரையாடலாக கருதி பேசுவோம். இதுபோன்ற தருணங்களில்தான் உண்மையை அறியமுடியும். நான் உன்னோடு பேசிய பல்வேறு உரையாடல்களில் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறோம். இவை சலிப்பூட்டுவதாக இருக்காது என்றே நினைக்கிறோம். இதன் வழியாக நாம் சில விஷயங்களை பரஸ்பரம் கற்றிருக்கிறோம். கடிதத்தின் வழியாக உரையாடுவது நேரிடையாக பேசுவதற்கு பதிலீடு ஆகாது என்பது உண்மைதான். நாம் இருவரும் நேரிடையாக பேசுவது போலவே இந்த கடிதத்தை நீ எடுத்து்க்கொள்ளலாம்.  நாடுகளின் வரலாற்றை நாம் படிக்கும்போது, மிகச்சிறந்த காலகட்டங்களில் வாழ்ந்த  ஜோன் ஆப் ஆர்க போன்ற மனிதர்களை ச்ந்திக

மை டியர் இந்திரா! - ஜவகர்லால் நேரு

படம்
மை டியர் இந்திரா! வாழ்க்கையில் எது சரி, எது தவறு என்று முடிவு செய்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இதை தீர்க்க ஒரு வழிதான் உண்டு. எதையும் ரகசியமாக செய்யவும் எதையும் பிறரிடமிருந்து மறைக்கவும் நினைக்காதே. அது பின்னாளில் உன்னை குழப்பத்தில் ஆழ்த்தும். ஒரு விஷயத்தை பிறரிடமிருந்து மறைக்கிறாய் என்றால் நீ அது குறித்து பயத்தை மனதில் கொண்டிருக்கிறாய் என்றே அர்த்தம். அந்த பயம் மெல்ல உன் ஆளுமையை செயலிழக்க வைத்துவிடும். தைரியத்தை கைவிடாதிருந்தால் மற்றெல்லாம் உன் பின்னால் வரும். பாபுஜியின் சுத்ந்திரப்போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பாய். அதையே உதாரணமாக கொண்டால், அதில் எந்த ரகசியதிட்டமும் கிடையாது. நாங்கள் பேசுவதும் அல்லது செயல்படுவதும் குறித்த எந்தவித  அச்சமும் எங்கள் மனதில் இல்லை. நாங்கள் சூரியனின் ஒளியில் அனைத்து முடிவுகளையும் மேற்கொள்கிறோம். ரகசியமாக மேற்கொள்ள எந்த திட்டங்களும் எங்களிடமும் சரி எங்கள் நண்பர்களிடமும் இல்லை. நீ சிறுமியாக இருக்கிறாய். இச்சமயத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.இப்போதிலிருந்தே வெளிச்சத்தில் தைரியமாக வளர்ந்து வரவேண்டும்.  உனக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.