மை டியர் இந்திரா 2!- ஜவகர் நேரு
மை டியர் இந்திரா, உன்னுடைய இந்த பிறந்தநாளில் பல்வேறு பரிசுகளையும் ஆசிர்வாதங்களையும் பெறுவது வழக்கம். நான் என் ஆசிர்வாதங்களை உனக்கு அளித்தாலும் நைனி சிறையில் உள்ளதால் என்ன பரிசு உனக்கென அளிக்கமுடியும்? நான் உனக்கு அளிக்க கூடிய பரிசு பருப்பொருளானதல்ல. ஆற்றல் வாய்ந்த மனதையும் வலிமையும் உனக்கு அளிக்க விரும்புகிறேன். நான் அளிக்கும் இப்பரிசை சிறையின் உயர்ந்த மதில்கள் தடுக்கமுடியாது. அறிவுரை, உபதேசங்களை என்றும் வெறுப்பவன் நான் என்பதை நீ அறிவாய். இதை கலந்துரையாடலாக கருதி பேசுவோம். இதுபோன்ற தருணங்களில்தான் உண்மையை அறியமுடியும். நான் உன்னோடு பேசிய பல்வேறு உரையாடல்களில் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறோம். இவை சலிப்பூட்டுவதாக இருக்காது என்றே நினைக்கிறோம். இதன் வழியாக நாம் சில விஷயங்களை பரஸ்பரம் கற்றிருக்கிறோம். கடிதத்தின் வழியாக உரையாடுவது நேரிடையாக பேசுவதற்கு பதிலீடு ஆகாது என்பது உண்மைதான். நாம் இருவரும் நேரிடையாக பேசுவது போலவே இந்த கடிதத்தை நீ எடுத்து்க்கொள்ளலாம். நாடுகளின் வரலாற்றை நாம் படிக்கும்போது, மிகச்சிறந்த காலகட்டங்களில் வாழ்ந்த ஜோன் ஆப் ஆர்க போன்ற மனிதர்களை ச்ந்திக